அத்தியாயம் 9
தனது அறைக்குள் நுழைந்த சனா வேகவேகமாக மூச்சுக்களை வெளியிட்டாள். 'ஐயோ !!!! கோபமா பேசுறது எவளோ கஷ்டம்? அதுலையும் இந்த நடிப்பு இருக்கே. முடியல்லை. கிருஷ்ணா தேங்க்கியூ. நான் சிரிச்சிருவேனோ இல்லை யாராவது எதிர்த்து கேள்வி கேட்பாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை அப்படியேதும் நடக்க இல்லை. யாராவது கேள்வி கேட்டு இருந்தாங்க பேச நினைச்சதை மறந்துட்டு திரு திருன்னு முழிச்சு காரியத்தையே சொதப்பி விட்டு இருப்பேன்.
ஆரம்பத்துல எனக்கு கோபம் வந்துதான் கத்துனேன். அடுத்து என்ன பேசனும்னு டக்குன்னு வர இல்லை. அப்புறமா கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இத்தனை வருஷமா மனசுல வச்சிருந்ததை எல்லாம் கொட்டிட்டேன். ஆனாலும் முகத்தை நான் கோபமா வச்சிருக்கிறதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும். வெறுத்து போச்சு. இந்த காட்டுபையல், அண்ணா எல்லோரும் எப்படி கோபடுறாங்க?
நான் எல்லாம் டிரெயினிங் எடுக்கனும் போல இருக்கே. இந்த ஜோசியர் வேற உத்து உத்து பார்க்கும் போது எங்க நான் சிரிச்சிருவேனோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன். அவளோ டெரராவா இருந்தோம். ஒருத்தரும் எதிர்த்து ஒரு வார்த்தை நமளை பேசவே இல்லையே" என்று எண்ணியவள் தளவாடியின் முன் சென்று நின்றாள். 'உன் முகத்துக்கு இது செட்டே ஆகல்ல' என்று மனசாட்சி காரிதுப்ப, 'நான் கோபமா இருக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும்' என்று இவளும் முறுக்கிக் கொண்டாள்.
சனா பல்கனியிற்கு வருகைத் தந்து ஆசுவாசமாக மூச்சை வெளியிட அந்த நேரமே சாத்விக்கு லெப்டொப்பில் சனாவைப் பார்த்தான். அது வரையில் அவனை அவனுடைய அலுவலக வேலைகள் இழுத்துக் கொள்ள அதை முடித்து சனாவைப் பார்க்க அவளும் பல்கனியிற்கு வந்து சேர்ந்தாள்.
அதனால் சனா பேசியதோ, அஞ்சலி, நகுலின் வருகையோ அவனுக்குத் தெரியவில்லை. சாத்விக், "என்ன இவ பெரூமூச்சு எல்லாம் பலமா இருக்கே!!!! என்னமோ திருட்டுத் தனம் பண்ணி இருக்கா போல இருக்கே" என்று யோசிக்க புடேஜை பார்க்கலாம் என்று நினைக்க அதற்குள் தியா அழைத்து இருந்தாள்.
"ஹாய் அண்ணா" என்று அவள் குரல் உற்சாகமாய் எதிரொலிக்க, "ஹாய் தியா மா" என்றான் அவள் உற்சாகம் இவனைத் தொற்றிக் கொண்டு. "என்ன உங்க குரலில் வித்தியாசம் தெரியுதே" என்று சாத்விக்கின் தங்கை என நிரூபிக்க, "எனக்கு கூட உன் வொய்ஸ்ல ஏதோ சேன்ஜஸ் தெரியுதே தியாமா" என்று தமையனும் அவளிற்கு சளைத்தவன் என்பதை நிறுவினான். எதிர்புறம் அமைதியைத் தத்தெடுக்க அதை சாத்விக்கே களைத்தான். "தியா என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?" என்று நிறுத்த, "அது வந்து அண்ணா..." என்று வெகுவாய் தயங்கினாள்.
முகேஷ், "அம்மா தாயே வெட்கங்குற பேருல என்னை பயமுறுத்தாத. பச்சை குழந்தை பயந்துரும்ல..." என்று சிறு குழந்தைப் போல் கூறியவன் "அது ஒன்னும் இல்லைடா நீ மாமா ஆக போற. அதை சொல்ல தான் இத்தனை போராட்டம்" என்றான் அவசரமாக. அதற்குள் பிந்து அவனை அடித்துக் கொண்டிருந்தாள். 'நான் உன்னை பயம் காட்டுறேனா? என் வெட்கத்தை கேவலமா பேசுறியே' என்று சொல்லி அடிக்கும் சத்தம் கேட்க, இங்கே சாத்விக்கின் கண்களை பொங்கி மறைத்தது கண்ணீர். அதற்கு மாறாக இதழ்களோ அழகாய் புன்னகையை பூத்திருந்தன.
"எருமை மாடே" என்று சாத்விக் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திட்ட, "நீ எதுக்கு மச்சான் திட்ற?" என்று பாவமாய் முழித்தான் முகேஷ். "அவ எவளோ அழகா அம்மாவாக போறத சொல்ல வந்தா? நீ சொதப்பிட்டியே...!!!" என்று திட்டியவன், "மச்சான் இயர் ஃபோனை போட்டுக்கயேன்" என்று சாத்விக்கிடம் இருந்து அன்பாய் சொற்கள் ஒலிக்க, "எதுக்கு மச்சான்?" என்றான் முகேஷும் விடாமல். "போடேன்டா" என்று குரல் தாழந்து ஒலிக்க, 'இவன் பேசுற மோடிலேஷனே சரியில்லியே' என்று இயர் ஃபோனை எடுத்துக் கொண்டான்.
மனைவியை சமாளித்து இயர் போனை அணிந்துக் கொள்ள சாத்விக், "ஒகே யா மச்சான்" என்று வினவ, "ஆமாடா" என்று முகேஷ் கூறியவுடன் சாத்விக் அவனுக்கு தெரிந்த பீப் சொற்களை பறக்க விட முகேஷின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது. இயர் ஃபோனை கழற்றவும் முடியாமல் தொடர்ந்து கேட்கவும் முடியாமல் தவித்தான் அவன் தோழன். முகேஷ் கண்ணில் கண்ணீரைப் பார்த்தவள், "என்னங்க ஆச்சு" என்று பதறினாள் பிந்தியா. "மச்சான் உன் தங்கச்சி வந்துட்டாடா" என்று உரைக்க சாத்விக் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி நின்றான்.
"உன் அண்ணன் எனக்கு ரொம்ப நல்லா வாழ்த்தினான். அதுல என் கண்ணே கலங்கிருச்சுன்னா பார்த்துக்கோயேன்" என்று அவசரமாக மொபைலை அவளிடம் வழங்கிவிட்டு எழுந்தான். 'நீ வேண்ணா பாருடா.ஆசையா ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு பர்ஸ்ட் நைட் கொண்டாட முடியாமல் உனக்கு போகபோகுது. இது அப்பாவி மச்சான் உனக்கு கொடுக்குற சாபம்டா' என்று கருவிக் கொண்டே அவன் திட்டியதை நினைத்து முகம் கழுவ சென்றான்.
தியாவிற்கு மனதாற வாழ்த்துக்களை தெரிவித்தவன் அவனுக்குத் தெரிந்த சில ஆலோசணைகளையும் இலவசமாக வழங்கினான். அவளும் தமையனின் அன்பில் நெகிழந்துப் போனாள். தனக்காக சிந்திக்க தன் கணவனைத் தவிற ஒரு உயிரேனும் உள்ளதே என்று நினைக்க பொங்கி வழிந்தது பாசம் அவன் மேல். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உறவு இரத்த உறவு அல்ல. ஆனால் இழையோடும் அண்ணன் தங்கை உறவு அதை விட மகத்துவமானதாக இருக்கும்.
அவளுடைய உடன் பிறந்தவர்கள் இருந்து இருந்தால் தன் மேல் இத்தனை அக்கறை கொண்டு இருந்து இருப்பார்களா என்ற வினாவை பிந்தியா எழுப்பினால் நிச்சயமாக அதற்கு பதில் இல்லை. எத்தனை அன்பு அவள் மேல் என்று நினைக்கவே உடலே சிலிர்த்தது. அவளைப் பற்றி பேசிய பின் தியா ஆரம்பித்தாள். "உங்க குரலோட மாற்றத்தை சொல்லவே இல்லையே அண்ணா" என்று சந்தேகத்துடன் நிறுத்த ஒற்றை வார்த்தையாய் "சனா" என்று பதில் வந்தது.
அவள் ஆனந்த அதிர்ச்சியாய், "சனாவா? புரியல்லை அண்ணா. தெளிவா சொல்லுங்களேன்" என்று ஆர்வமாக வினவ, "ஆமா மா. சனாவை என் மனைவியா பார்க்குறேன். ஷி இஸ் மிஸஸ் திஸன்ஜனா சாத்விக் ப்ரவீன் னு முடிவு பண்ணிட்டேன். அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கப்போறதும் இல்லை. கஷ்டபடுத்த போறதும் இல்லை" என்றான் உறுதியான குரலில் ஆனால் நிதானமாக. "ஒ மை கோட். ஐம் ரியலீ ஹேபி. அண்ணா ஒரு வழியா அவளை காதலிக்கிறிங்கன்னு கண்டு பிடிச்சிட்டிங்களே. சோ சோ ஹேப்பி" என்று துள்ளிக் குதித்தாள்.
அவள் குதிப்பதைப் முகம் கழுவி வந்தவன் பார்த்து, "பிந்து பார்த்து இரு" என்று அதட்டி சாத்விக்குடன் பேச ஆரம்பித்தான். சாத்விக் தெளிவாக, "நான் அவளை காதலிக்க இல்லை தியா. பட் அவ எனக்கு வேணும். எனக்கு மட்டுமே வேணும்" என்று நிறுத்தினான். மற்ற இருவரும் புரியாமல் குழம்ப, "ஒரு முறை நான் காதலால் பட்ட அனுபவங்களே போதும். எனக்கு காதல் இல்லை. சனாவை நான் காதலிக்க இல்லை" என்று அவன் மனதுக்குமே சேர்த்துக் கூற, இதைப் பற்றி பேசினால் தற்போது நிச்சயமாய் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று இருவரும் அமைதியாகினர்.
பின் சாத்விக் மெல்ல கதையை மாற்ற அதை புரிந்துக் கொண்ட மற்ற இருவரும் இனி சனாவைப் பற்றிய கவலை இல்லை என்று அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். சனாவின் வீட்டிலோ மூவரும் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருக்க, விசாலாட்சி, "சனா முதன் முதலா ஒரு விஷயத்தை முடிவு எடுத்து இருக்கா. அதை தடை சொல்றது நல்லா இருக்காது" என்று தன் மனதில் பட்டதைக் கூற, கார்த்திக், "இன்னும் பத்து நாளில் கல்யாணம் சாத்தியமா? அதுக்கான வேலைகள் நிறைய இருக்கே" என்றான் கவலையாய்.
அபி, "மாமா அவ ஆசைப்பட்ட படி கல்யாணத்தை நடத்தலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருப்போம் மாமா. கோயிலில் சிம்பளா தாலி கட்டி கல்யாணத்தை நடத்திட்டு ரிசப்ஷனை இன்னும் ஒரு மாசத்துக்கு அப்பொறமா ரொம்ப கிரேன்டா வைக்கலாம்" என்று யோசணை கூற அனைவருமே அதை ஆமோதித்தனர். கார்த்திக், சனாவிடம் இதைக் கூறுவதற்காக இன்டர்கிரேமில் சனாவை அழைத்து கீழே வருமாறு கூறினான். அவளும் மறுபேச்சு இன்றி கீழே வந்தாள்.
அவர்கள் எடுத்து இருக்கும் முடிவைக் கூற அவளும் சந்தோஷமாக தலையை ஆட்டினாள். சனா, "அண்ணா கல்யாணத்தை கோயில்ல வச்சிக்கலாம். நாங்க பிரன்சை கூப்பிடுறோம். நம்ம பேமிலியில நிறைய பேர் இல்லை. கண்டிப்பா நகுல் மாமா குடும்பத்தை கூப்பிடனும்" என்று தான் நினைத்ததைக் கூற அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். கார்த்திக், "சனா இன்னைக்கு நீ கோபப்பட்டது ரொம்ப ஆச்சரியமா இருக்குடா" என்று அவள் முகம் பார்த்தான்.
'ஆத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்களே. நான் கோபப்பட இல்லைன்னு தெரிஞ்சது உடனே கல்யாணத்தை அண்ணா நிறுத்திருவான் சனா. பார்த்து சூதானமா பதில் சொல்லு' என தன்னைத் தானே ஊக்கப்படுத்தி தைரியத்தையும் வழங்கிக் கொண்டாள். "அண்ணா இதைப் பத்தி இனிமேல் பேச வேணான்னு நினைக்குறேன்" என்று எழுந்து சமையலறைக்குள் புகுந்து அனைவருக்கும் காபியைத் தயாரித்து வந்தாள். மற்றவர்கள் இவளது பதிலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காபியை எடுத்து, "நாளையில் இருந்து வேலையை ஆரம்பிக்கலாம் அண்ணா. அப்போ தான் பத்து நாளில் வேலைகளை முடிக்க முடியும்" என்று சீரயசாகப் பேச திருமணத்திற்கான வேலைகளைப் பற்றி பைச ஆரம்பித்தனர். ஆடை, நகை வாங்குதல், வீட்டு அலங்காரம், மற்றைய வேலைகள் ஒவ்வொன்றாய் நால்வரும் சேர்ந்து திட்டமிட்டு முடிய நேரம் ஆறானது.
அனைவரும் திட்டமிடலிலேயே பெரிய விடயம் முடிந்தது என்று நிம்மதியாக தங்கள் அறைகளுக்குச் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டனர். சனா குளித்து தோட்டத்திற்கு சென்று கிருஷ்ணனை வேண்டியவள் சாமி அறையில் தாய், தந்தையரின் புகைப்படத்திற்கு விளக்கை ஏற்றி அறைக்குள் நுழைந்தாள்.
~ கண்மூடினாலும் தோன்றும்
விம்பம் உனதடி
நிஜத்திலும் என் கைசேரும்
நாள் எப்போதடி ~
சனா தன் தமையனின் திருமணத்தை எண்ணி உவகையோடு சுற்றித் திரிந்தாள். அதே சந்தோஷத்துடன் தனது அறைக்கு வந்தவள் குளித்து அவசரமாகச் சென்று விளக்கு ஏற்றியதால் கூந்தலை ஒழுங்காக துவட்டவில்லை. அதனால் தன் கூந்தலை துவட்ட ஆரம்பிக்க அவள் மொபைல் தன்னிருப்பை அவளுக்கு உணர்த்தியது.
'இந்த மொபைலை கண்டுபிடிச்சவன் எனக்கு கிடைச்சான், கிருஷ்ணா உன் புல்லாங்குலாலேயே அவன் கண்ணுல குத்துவேன். எப்போ பாரு நொய்யி நொய்யினுட்டு' என்று புலம்பியவாறே அதன் திரையைப் பார்க்க, "காட்டுப் பையலே" என்ற பெயர் மின்னியது.
'ஆத்தி யாருன்னு தெரியாமல் வாயைக் கொடுத்துட்டேனே. கிருஷ்ணா நல்ல வேளை அவருக்கு நான் பேசினது கேட்க இல்லை' என்று மேலே பார்த்து தன் கண்ணனுக்கு நன்றி கூறியவள், மொபைலை எடுத்து பல்கனியில் சென்று நின்றாள். தன்னை சமன்படுத்தி தொண்டையை ஒரு முறை சரிசெய்து அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ சேர்" என்று அழைக்க, "நீ என்ன தப்பு பண்ண?" என்று அவளை லெப்டொப்பின் திரையில் குறுகுறு என பார்த்தவாறே வினவினான்.
அவள் அதிர்ந்து திருட்டு முழி முழிக்க, "என்ன திருட்டு முழி முழிக்கிற? ஏதோ சரி இல்லையே" என்று தாடையில் கை வைத்து பேச, அவள் கீழே மேலே என்று தன் தலையைச் சுழற்றி அவன் எங்கே இருக்கிறான் என்று தேடினாள். 'நான் கொடுக்குற ரியெக்ஷனை எப்படி கண்டு பிடிச்சாரு?' என்று யோசித்தவாறே தேட, "நான் அங்கே இல்லை பேபி. என்னை தேடி கழுத்துல சுளுக்கு வராமல் பார்த்துக்கோ" என்று நக்கல் தொனியில் மொழிந்தான்.
"அப்போ நான் கொடுக்குற ரியெக்ஷனை எப்படி கண்டுபிடிச்சிங்க?" என்று சிறு குழந்தைப் போல் ஆர்வமாய் கேட்க, "ம்ம்... கமெரா செட் பண்ணி இருக்கேன்" என்று கிண்டல் தொனியில் கூற, "விளையாடாமல் சொல்லுங்க சேர்" என்று அடம்பிடிக்க, "நான் பொய் சொல்ல மாட்டேன் பேபி. உன்னோட ஒவ்வொரு அசைவுமே எனக்கு தெரியனும். அதுக்காக தான் இந்த ஏற்பாடு" என்றான் அமர்த்தலாக. "என்னாது?..." என்று திடுக்கிட்டவள் அறைக்குள் ஓடி துப்பட்டாவை எடுத்து தன் மேல் போட்டவள் மீண்டும் கமெரா எங்கே என்று தேடியவாறே வெளியே வந்தாள்.
"பேபி பயப்படாத. எனக்கும் சில நல்ல பழக்கங்கள் இருக்கு. அதனால் உன் ரூம்ல வைக்க இல்லை. சோ தைரியமா இரு. என்ட், உன் துப்பட்டாக்கும், உன் குருத்திக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லை. மஞ்சள் குருத்திக்கு பச்சை கலர்ல துப்பட்டா போட்டு இருக்க? ஹம்.. நீ எப்படியான இரசிகைன்னு எனக்கு நல்லாவே புரியிது" என்று நமட்டுச் சிரிப்புடன் கூற தன் மொபைலைக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டாள்.
கமெரா பூட்டி இருப்பதாகக் கூறியவுடனே தோன்றிய படபடப்பில் ஹென்கரில் மாட்டி வைத்திருந்த துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள். அதற்காக இவன் கிண்டல் அடிப்பான் என்று இவள் கனவு காணவில்லையே. "சேர் நான் அவசரத்துக்கு கைல எடுத்ததை போட்டுகிட்டேன். அதுக்காக என்னை கிண்டல் பண்ணாதிங்க. நான் நெஜமாவே நல்ல இரசிகை தான். நீங்க என் இரசணையை தப்பா சொல்லாதிங்க சேர். எனக்கு கோபம் வரும்" என்று தன் கீச்சுக் குரலில் எச்சரித்தாள்.
"பேபி நீ இப்பிடியெல்லாம் பேசாத. உனக்கு செட் ஆக இல்லை. பாரு மூக்கு நுனி சிவந்து போயிருச்சு" என்று திரையில் அவள் மூக்கை வருடியவன், "ஒரு வருஷ குழந்தைக்கு மிட்டாய் கொடுத்துட்டு அதை பறிச்செடுத்தா ஒரு ரியெகஷனை கொடுக்கும் பாரு அந்த குழந்தை; அதே போல இருக்க. அப்படியே கட்டி புடிச்சி கன்னத்தை கடிக்கனும் போல இருக்கு" என்று இரசணையாய் குறும்புடன் கூற பதட்டத்தில் மொபைல் அவள் கையிலிருந்து வழுக்கி கீழே விழ முன் மீண்டும் பிடித்துக் கொண்டாள்.
"இப்படியெல்லாம் பேசாதிங்க சேர். நான் சின்ன பொண்ணு. அதுவும் எனக்கு ஒரு மாதிரி...." என்று தன் உணர்வுகளை கூற முடியாமல் என்பதை விட தெரியாமல் திணற எதிர்ப்புறம் அவளைப் பார்த்து அட்டகாசமாய் சிரித்தான் சாத்விக். ஆயாசமாய், "சேர் இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க? நான் ... நான்..." என்று மறுடியும் என்ன கூறுவது தெரியாமல் திணறி அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவளை புரிந்துக் கொண்டவன், "கூல் பேபி கூல்" என்று குறுஞ்சிரிப்புடன் திரையில் அவளைப் பார்த்தான்.
"சரி பேபி. நான் உன்னை ரொம்ப சோதிக்க இல்லை. நான் போன் பண்ண விஷயத்தையே மறந்துட்டேன். ஆர்ட் கம்படிஷன் ஞாபகம் இருக்குல்ல? அதுக்கு பிரிபெயாராகு. எனக்கு நீ எந்த டிரோயிங்கும் வரைஞ்சு தர தேவையில்லை" என்று பெரியமனதுடன் கூற, 'இவரு என்னமோ அவரோட டியோயிங் வரைய சொல்லி கிழிச்சிட்டாரு. கூப்பிட்டு முத்தம் கொடுத்துட்டு இந்த காட்டுப் பையல் பேசுற பேச்சப் பாரு' என்று தன்னுள்ளே அவனுக்கு கவுன்டர் கொடுத்தாள்.
அவளுக்கே இது ஆச்சரியம்!!!! தன் நெருங்கிய சொந்தங்களிடம் கூட இத்தனை வாயாடாதவள் இவனிடம் மட்டும் எவ்வாறு இலகுவாக அவனது பேச்சிற்கு பதில் பேசுகிறாள் என எண்ணியவள் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அதன்பிறகே தமையனின் திருமணம் நினைவிற்கு வர தலையில் கை வைத்துக் கொண்டாள்.
"என்னாச்சு பேபி" என்று சாத்விக் வருந்தும் குரலில் வினவ, "அது வந்து சேர் அண்ணாவுக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம். திடீர் முடிவு. இப்போ கம்படிஷனுக்கு எப்படி போறது?" என்று தன்னிலையை விளக்கி அவனிடமே பதிலைக் கேட்க சிறிது நேரம் எதிர்ப்புறம் அமைதி நிலவியது. "கம்படிஷனுல நீ பார்டிசிபேர்ட் பண்ணியே ஆகனும் பேபி. எங்க கோலேஜோட ப்ளசே நீ தான். பட் உன் கல்யாணத்துக்கு முன்னாடி இங்கே அழைச்சிட்டு வர வேண்டியது என் பொறுப்பு. அது வரைக்கு ஆர்யன் கல்யாண வேலைகளை பார்த்துப்போம்" என்றான் தீவிரக் குரலில்.
"சேர் நீங்க எங்களுக்கு உதவி..." என்று அவள் தயங்க, "என் மனைவியோட அண்ணா கல்யாணத்துக்கு உதவி பண்றதுல தப்பில்லை பேபி. உனக்காக மட்டும் தான் இந்த முடிவு. நீ கஷ்டபடுறதே என்னால பார்க்க முடியாது. இதை மனசுல வச்சிக்க" என்று அழுத்தம் திருத்தமாய் கூறி அழைப்பைத் துண்டித்தான் சாத்விக். 'என்ன நான் அவரோட மனைவியா? கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை. அவரை எப்படி நான் கல்யாணம் பண்ணிப்பேன்!!" என்று விதவிதர்த்துப் போனாள்.
'எப்படி கல்யாணம் பண்றதுன்னா என்ன அர்த்தம்? அவரு உனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணிப்பிரு' என்று மனசாட்சி கடுப்படிக்க, 'ஐயோ கொஞ்சம் அமைதியா போ. இப்போ அண்ணன் கல்யாண நேரம் எனக்கு ஒரு கம்படிஷன் இருக்குன்னா? இந்த காட்டுப் பையன் வேற மனைவி, துணைவின்னு உழறிட்டு இருக்காரு' என்று முணகியவாறே ஆதுரமாய் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் பிரச்சனை அவளுக்கு அல்லவா?
தன் அண்ணனின் திருமணத்தை ஆவலாக எதிர்கொண்டு இருக்க இப்போது ஓவியப் போட்டியும் அவளிற்கு சாத்விக் நினைவுறுத்தினான். அவளும் அறிவாளே..!!! இத்தனை நாட்களாக கலந்துக் கொண்ட போட்டிகளை விட இது முக்கியமான ஒரு போட்டி. அதாவது பல கல்லூரிகள் போட்டியிட்டாலும் இதில் வெற்றி பெறும் கல்லூரியின் மதிப்பும், கௌரவமும் நிச்சயமாக அதிகரிக்கும். ஆகவே அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இதில் கலந்துக் கொள்வர்.
அதனாலேயே, முக்கியமாக சில மாணவர்களை கல்லூரியின் ஆசிரியக் குழாமே தெரிவு செய்தது. அதில் சனாவை தெரிவு செய்தமைக்கான காரணம் அவளுடைய ஓவியங்களில் எப்போதும் ஒரு உயிர்ப்புத் தன்மை இருக்கும். அதிலும் அவள் உணர்வுகளை ஓவியத்தில் வெளிப்படுத்தும் விதமே தனியழகு. அவளுடைய ஓவியத்தைப் பார்த்தவர்கள் நிச்சயமாக ஐந்து நிமிடத்திற்கு குறையாது பார்வையை அதில் பதிந்திருப்பர். அந்த அளவிற்கு அவள் ஓவியங்கள் பார்ப்பவரை ஈர்த்துக் கொள்ளும்.
சனாவும் தன்னுடைய குழப்பங்களையும், பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு சாத்விக் கூறியது போல நடக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவளாக அபியைப் பார்க்கச் சென்றாள். சனா முதலில் குழம்பியவள் அடுத்து அவள் முகம் தெளிவானது என்று அனைத்தையும் பார்த்த சாத்விக்கின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
~ நீ குழம்பித் தவிக்கையில்
சிறு குழந்தையென தெரிகிறாய்
முகம் சுருக்கிப் பேசுகையில்
குமரியென தெரிகிறாய்
இருவருக்கும் அடிமையாகிப்
போனவன் நானடி ~
'ஆர்யன் உன்னை அசிங்கபடுத்த உன் கல்யாணம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பட் நான் அதை பயன்படுத்தப் போறது இல்லை. என் பேபி ஆசையாக உன் கல்யாணத்தை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கா. அவளையோ அபியையோ நான் கஷ்டபடுத்த முடியாது. ஆனால் இதுக்கு எல்லாம் சேர்த்து உன்னை துடிக்க வைக்கிறேன்' என்று தன்னுள்ளே சவால் விட்டுக் கொண்டவன் தனது அருகில் வைத்திருந்த அலுவலகக் கோப்பில் மூழ்கிப் போனான்.
சனா அபியின் கதவைத் தட்ட அபி திறந்தாள். அவளும் குளித்து இருந்தால் போலும்..கையில் துவாயுடன் கதவைத் திறந்து சனாவை கேள்வியாய்ப் பார்த்தாள். "உள்ள வரட்டுமா? கொஞ்சம் பேசனும்" என்று அனுமதி கேட்க, "லூசாடி நீ? என்ன புதுசா பேர்மிஷன் கேட்குற?" என்று திட்டியவாறே அவளை இழுத்து சென்றாள். சனா, "இன்னும் கொஞ்ச நாளில் இப்படி தட்டி தானே உன் ரூமுக்கு வரனும்? அதான் இப்போவே பழக ஆரம்பிக்கிறேன்" என்று கண்சிமிட்ட அபியின் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன.
"சும்மா போடி" என்று சிணுங்கிய அபி, தன் முகத்தை சரி செய்துக் கொண்டாள். "எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும் அபி. உன் பிரன்டுக்காக" என்று பீடிகையுடன் சனா பேச ஆரம்பிக்க, "தெளிவா பேசு சனா" என்று அபி சனாவை உற்று நோக்கினாள். 'இவ ஆரம்பமே சரி இல்லையே' என்று எண்ணிக் கொண்டாள்.
"என்ன காரணமா இருந்தாலும் கல்யாணம் நடக்கனும். அதுக்கு நீ எனக்கு சத்தியம் பண்ணனும். முதல்ல சத்தியம் பண்ணு" என்று சனா தனது வலது கையை நீட்ட, "எதுக்கு இந்த சத்தியம் எல்லாம்? எனக்கு புரியல்லைடி" என்று முகம் சுருக்கி அபி அமர்ந்தாள். " நீ முதல்ல சத்தியம் பண்ணு அபி அப்புறமா தெளிவா சொல்லுறேன்" என்று கண்களால் தன் கையைக் காட்ட, "உன்னோட பெரிய ரோதனையா போச்சு சனா" என்று முணகியவாறே சத்தியம் செய்தாள். "இப்போவாவது சொல்லித் தொலையேன்டி. டென்ஷன் பண்ணாமல்" என்று ஆற்றாமையோடு கேட்டாள்.
"அபி இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. அதே போல எனக்கு ஆர்ட் கம்படிஷனும் இன்னும் நாலு நாள்ல இருக்கு. அதுவும் மும்பைல ஆர்ட் கம்படிஷன் நடக்குது. அதுக்கு நான் போகனும். எப்படியும் அங்கே ஒரு திரீ டேய்ஸ் சரி ஸ்டே பண்ண வேண்டி வழி வரும். நான் போறேன்னு சொன்னாலே அண்ணா குதிப்பான். இப்போ நீயும் இல்லாமல் அண்ணா கூடவும் போகாமல் தனியா போறதுன்னா வானத்துக்கும் பூமிக்குமே குதிக்க ஆரம்பிச்சிருவான். ஸ்டே பண்றதை சொன்னேன் கல்யாணத்தை கென்சல் பண்ணிருவான்.
சோ அண்ணனை சமளாக்க வேண்டி இருக்கு. கல்யாணம் வேணான்னு ஒத்த கால்ல நிச்சயமா நிப்பான். நீ தான் அவனை என் கூட சேர்ந்து சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்த உதவி பண்ணனும்.. அவன் தாம் தூம்னு குதிக்கும் போது உன்னால தான் சமாளிக்க முடியும். சோ ஹெல்ப் பண்ணு அபி குட்டி. இந்த ஆர்ட் கம்படிஷன் எங்க கோலேஜை பொறுத்தவரைக்கும் எவளோ முக்கியம்னு உனக்கே தெரியும். சோ அதையும் விட முடியாது. இப்போ நீ தான் ஹெல்ப் பண்ணனும்" என்று அபியின் நாடியைப் பிடித்துக் கெஞ்சினாள் சனா.
அபி, "இதை என் கிட்ட சொன்னால் நானும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவேன்னு தெரிஞ்சு அதுக்கு பாதுகாப்பா கல்யாணம் நடக்கனும்னு சத்தியத்தை வேற வாங்கிட்டு ரீசனை சொல்ற? இல்லையா?" என்று அழுத்தமாக அவளைப் பார்க்க, "ஈஈஈ.. ஆமா அபி குட்டி. உன் பிரன்டு இல்லையா? அதான்" என்று அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, "கேடி டி நீ... தயவு பண்ணி இப்படி பாவமாக முகத்தை வச்சுக்காத" என்று தலையிலடித்து அமர்ந்தாள்.
"உன் அண்ணனை சமாளிக்கிறது சின்ன விஷயம் இல்லை சனா. எனக்கே பயமா இருக்கு" என்று கலங்க, ஆதரவாக அவள் கையைப் பிடித்தவள், "உங்க இரண்டு பேரோட கல்யாணம் என் கனவு டி. புரிஞ்சிக்கோ. நான் கம்படிஷனுக்கு போறதுக்கு முன்னாடி என்னால முடிஞ்சதை செஞ்சிருவேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்திருவேன். புரொமிஸ்" என்று சாத்விக்கின் மேல் இருந்த நம்பிக்கையில் கூறினாள்.
"என்னை பலி ஆடாக்க முடிவு பண்ணிட்ட. இப்போவே போய் சொல்லுவோமா?" என்று அபி வினவ, "இப்போ வேணா. நான் போறதுக்கு முன்னைய நாள் சொல்லலாம். அப்போ தான் என்னை அனுப்புவான்" என்று யோசணையுடன் கூற, அபி இதயத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள். "அபி என்னடி ஆச்சு?" என்று பதற, "நீ என்ன விளையாடுறியா? உன் அண்ணன் இப்போ சொன்னாலே ஆடுவான். நீ சலங்கையை வேற கட்ட நாள் பார்க்குற" என்று பயந்தாள்.
"அபி என் செல்லம் தானே நீ? தங்கம், புஜ்ஜிக் குட்டி, ஜாங்ரி, பூந்தி, உசிரு, வெள்ளி..." என்று நாடியைப் பிடித்துக் கொஞ்ச, "என் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடாதடி" என்று முடியும் முன் அவளை இத்தனை நேரமாக கொஞ்சிய சனா வாயில் பட்டென்று அடித்தாள். "அபசகுணமா நல்ல விஷயம் ஆரம்பிக்க முன்னாடி பேசாத" என்று முறைத்தாள். "வேற எப்படி பேச சொல்ற? உன் அண்ணன் என் கிட்ட முன்னாடியே தெரியுமான்னு முறைச்சு பார்த்தாலே எனக்கு ஹார்ட் எடேக்கே வந்துரும். என் பிஞ்சு இதயம் தாங்காதுடி" என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள் அபி.
"உனக்கு அண்ணாவுக்கும் இடையில சண்டை வர விட்ருவேனா நான்? ஆரம்பத்துலேயே லொக் பண்ணிட மாட்டேன் அவனை? உன்னை லொக் பண்ணது போல" என்று கண் சிமிட்ட, "என்னடி புதுசா தைரியம் வந்திருக்கு; புதுசா இப்படி பேசியே லொக் பண்ற; எல்லாம் வித்தியாசமா இருக்கே" என்று சந்தேகமாக அபி புருவம் சுருக்க, "நான் மட்டுமில்லை யாரா இருந்தாலும் இந்த சிடிவேஷனுல இதை தான் பண்ணுவாங்க" என்றாள் சனா சலித்தவாறு.
"ஹ்ங்...." என்று பெருமூச்சை விட்ட அபி, "அடுத்து என்ன பண்றது?" என்றாள். "இப்போ நீ கொஞ்சம் அமைதியா இரு. வீட்டை கிளீன் பண்ற வேலையை இன்னைக்கே ஆரம்பிக்கலாம் அபி. கல்யாண நாள் நெருங்கினால் உன்னாலயும் வேலை செய்ய முடியாது. நானும் இருக்க மாட்டேன். அத்தை மட்டும் கஷ்டபடுவாங்க.. அதனால கிளீனிங்கை ஆரம்பிக்கலாம்" என்று யோசணையுடன் கூற, "நீ சொல்றது சரி தான் சனா. வா போலாம்" என்று எழுந்த அபி தளவாடியின் முன் நின்றவள் அங்கிருந்த பொட்டை நெற்றியில் வைத்தவாறே சனாவுடன் கீழே சென்றாள்.
இருவரும் பேசிக் கொண்டே கீழிறங்க விசாலாட்சி, "நைட்டுக்கு குருமாவும், சபாதியும் ரெடி பண்ணட்டுமா?" என்று வினவ; சனா, "ஒகே அத்தை நீங்க சமையலை பார்த்துகங்க. நானும், அபியும் வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிக்கிறோம். பத்து நாளில் முடிக்க வேணும். இன்னும் நிறைய வேலை இருக்கு. அதனால சீக்கிரமா இந்த சின்ன சின்ன வேலைகளை முடிக்கலாம்" என்க, அதற்கு அபியும் ஒத்து ஊதினாள்.
"அதுவும் சரி. இன்னும் நிறைய நாள் நமக்கு இல்லையே. இன்னைக்கு நீங்க சாமி ரூமையும், உங்க ரூமையும் கிளீன் பண்ணுங்க. நாளைக்கு வேலைக்கு ஆளுங்களை வரவழைச்சி மத்த அத்தனை ரூமையும், வீட்டுக்கு வெளியேயும் கிளீன் பண்றேன். கிளீனிங் வேலையை நாளைக்கு முடிச்சா மத்த வேலைகளை நிம்மதியா ஆரம்பிக்கலாம்" என்றார் அந்த வெள்ளந்திப் பெண் இவர்களின் காரணம் தெரியாமல். சனாவும், அபியும் விசாலாட்சி கூறியது போல நல்ல விடயத்தை சாமி அறையில் இருந்து ஆரம்பிக்கலாம் என இருவரும் சாமி அறைக்குள் நுழைந்தனர்.
சாமிப் படங்களையும், குத்து விளக்குகள் அனைத்தையுமே துடைக்க சனா மூலையில் இருந்த ஒரு மரப் பெட்டியைப் பார்த்தாள். அதனை நெருங்கியவள் வெளியே படிந்திருந்த தூசியைத் துடைத்து விட்டு அதைத் திறக்க அங்கே கறுப்பு வெள்ளை நிற படங்கள் சிலவும், சில பழைய பொருட்களும் இருக்க அவள் ஒவ்வொன்றாக துடைக்க வேளியே எடுத்து வைத்தாள். சில காகிதங்கள் இருக்க தூசியைத் தட்டி வைத்தாள். அடுத்து புகைப் படங்கள் இருக்க அதையும் துடைத்தாள்.
அதில் சனாவின் தந்தையின் வாலிப நேர புகைப்படம்..அத்தனை கம்பீரமாக இருந்தார். அடுத்து சில புகைப்படங்கள் அவள் தாய் மற்றும் தந்தையின் கல்லூரி காலத்து புகைப்படங்கள். இருவர் மட்டுமே இருந்தனர். அடுத்து இரண்டு புகைப் படங்கள் இருக்க, அவள் துடைக்கச் செல்லும் போது கார்த்திக், "இங்கே இந்த நேரத்துல எதுக்கு கிளீன் பண்றிங்க?" என்று வந்தான். சனா படபடப்பில் எழ அவள் கையிலிருந்த ஒரு புகைப்படம் கீழே விழுந்து துடைத்து வைக்கப்பட்ட பகவத் கீதை வைத்திருந்த புத்தக தாங்கியின் அடியில் சென்றது.
அபி சட்டென விசாலாட்சியிடம் கூறிய காரணத்தையே இவனிடம் கூற இவனும் நம்பினான். அப்போதே சனாவின் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்க்க, "இது இங்கே மூலையில ஒரு மரப்பெட்டி இருந்தது அண்ணா. அதை எடுத்து கிளீன் பண்ணும் போது கிடைச்சது" என்று கையில் இருந்த புகைப் படத்தை கார்த்திக்கிடம் காட்டினாள். "இது யாரு அண்ணா? அப்பா கூட நல்ல ஸ்மார்டா ஒருத்தர் இருக்காரு?" என்ற கேள்வியை எழுப்ப, "அப்பா பிரன்டா இருக்கலாம் சனா" என்றான் புகைப்படத்தைப் பார்த்தபடி.
"இது வரைக்கு அப்பா இவரைப் பத்தி சொன்னதே இல்லையே. நான் பார்த்ததும் இல்லை" என்று சனா தோளை உழுக்க, "நானும் பார்த்தது இல்லைடா" என்று அதை எடுத்து பார்த்தப்படி அனைத்தையுமே அதே மரப் பெட்டியில் வைத்து அபி, சனா இருவருக்குமே உதவ ஆரம்பித்தான். பின் அறைகளுக்குச் சென்று தத்தம் அறைகளை சுத்தப்படுத்தி நாளை வேலைக் காரர்களிடம் கூற ஒட்டறை அடிக்கலாம் என்று முடிவு எடுத்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.
அன்றைய தினம் அவ்வாறு கழிய அடுத்த நாள் காலையில் கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் செல்ல மூவரும் தயாராகி வந்தனர். கார்த்திக், "அபி இன்னைக்கு கோலேஜ் முடிச்சிட்டு வெயிட் பண்ணு நாம போய் இன்விடேஷனை சிலெக்ட் பண்ணலாம்" என்றான். அபி, "ஒகே மாமா..சனா நீயும் வருவல்ல?" என்று புருவமுயர்த்த, "இது உங்க கல்யாணம் சோ, நீங்க இரண்டு பேருமே அதை பார்த்துகங்க" என்று புன்னகைத்துக் கூறி பையை எடுக்க, அபியும், கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் புன்னகைத்து பார்த்துக் கொண்டனர்.
கார்த்திக், "அத்தை நீங்க ரொம்ப உங்களை வருத்திகாதிங்க.. வேலைக்கு ஆள் வருவாங்க. நீங்க என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க. மத்ததை அவங்க பெர்பெக்டா பண்ணிடுவாங்க" என்று அக்கறையாகக் கூற அபியிற்கு தன் அன்னையின் மீது கார்த்திக் வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் பார்த்து நெகிழ்ந்துப் போனாள்.
சனா, "அண்ணா, நான் விந்தியா அக்கா கிட்ட ஹோம் டெகரேஷனை பூரா ஒப்படைக்கிறேன். நான் ஈவினிங் டிரைவர் அண்ணா கூட அவங்களை பார்க்க போறேன். நீங்க போன் பண்ணி அக்கா கிட்ட சொல்லிருங்கள்" என்றாள் தீவிரமாக.
"சரி மா நான் சொல்றேன். பத்துரமா பார்த்து போ" என்றவன் மூவரிடமும் விடைப் பெற்று தனது காரை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு செல்ல மற்ற இருவரும் கல்லூரியை நோக்கிச் சென்றனர். இன்றைய மாலை வேளையில் அந்த மர்ப நபரிற்கு சனாவை வைத்து திட்டம் திட்டுவதற்கான காரணத்தை சாத்விக் அவன் அறியாமலேயே ஏற்படுத்திக் கொடுத்தான்.