Haani karthigan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10
சாத்விக் காலையிலேயே கல்லூரிக்குச் செல்லாமல் நேரடியாகவே தனது அலுவலகத்திற்குச் சென்றான். காரணம் இன்று மாலை சனாவை வெளியே அழைத்துச் செல்வது என முடிவெடுத்து இருந்தான். அவளோடு செலவளிக்கும் நேரத்தை எண்ணும் போதே மனதில் வர்ண மத்தாப்பூக்கள் பூத்துக் குலுங்கின. கோலேஜ் முடிந்தவுடன் சனா, அபி இருவரும் வருகைத் தர அங்கே கார்த்திக் வந்திருந்தான். இருவருமே புன்னகையுடன் அவனை நெருங்கினார்கள்.
கார்த்திக், "நான் அபியை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன் பட்டு. இன்விடேஷன் எடுக்க போகும் முன்ன சாமி கும்பிட சொன்னாங்க அத்தை..நாங்க பிரஷ்ஷாகிட்டு சாமி கும்பிட்டு இன்விடேஷன் எடுக்க போறோம். இப்போ டிரைவர் வருவாரு. நீ போய் விந்தியாவை மீட் பண்ணு" என்றவன் தங்கை தனியாகச் செல்ல பயப்படுவாளோ என்று எண்ணி, "உன்னால தனியா போக முடியுமா பட்டு?" என்று தீவிரக் குரலில் வினவினான். "ஆமா அண்ணா. என்னால முடியும்" என தனக்கும் சேர்த்தே தைரியத்தை வருவித்துக் கூறினாள்.
அதே நேரம் சனாவை அழைத்துச் செல்ல காரும் வருகைத்தர சனா இருவரிடமும் கூறி காரிலேற கார்த்திக்கும் ஆயிரம் பத்திரம் கூறி தங்கள் காரில் ஏறி வீட்டை நோக்கி பயணிக்க சனா திருமண கன்ட்ரெக்ட் எடுத்து நடத்தும் விந்தியாவைப் பார்க்கச் சென்றாள். மாலை சனாவை அழைத்துச் செல்ல கல்லூரி வளாகத்திற்குள் சாத்விக்கின் கார் நுழைந்த போதே கார்த்திக்கை பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து சாத்விக்கின் கண்களில் பழிவெறி தாண்டவமாடியது.
சிறிது நேரத்தில் சனாவும், அபியும் வருகைத்தர அவர்களுடன் ஏதோ பேசினான். பின் சனா வேறு காரில் ஏற கார்த்திக் தனது காரில் அபியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லும் பாதையில் பயணிக்க, சனாவின் கார் எதிர் பாதையில் பயணித்தது. ஏதோ ஒரு திருமண வேலை என்பதை யூகித்தவன் சனா செல்லும் காரைப் பின்தொடர்ந்தான். அத்தோடு சனாவிற்கும் தனது மொபைலில் இருந்து அழைப்பை விடுத்தான்.
சாத்விக்கின் அழைப்பைப் பார்த்தவள், அதை ஏற்றாள். சனா, "ஹலோ" என்க, "எங்கே போயிட்டு இருக்க பேபி?" என்றான் சாத்விக். "கன்ட்ரெக்டர் விந்தியாவை பார்க்க போறேன்சேர்" என்று உடனடியாக பதிலளிக்க, "நான் உன்னை போலோ பண்ணி தான் வரேன். நீ அவங்களை மீட் பண்ண உள்ள போகும் போது கொஞ்ச நேரம் லேட் ஆகும்னு சொல்லி டிரைவரை வீட்டுக்கு அனுப்பு. மறுபடியும் போன் பண்ணும் போது வாங்கன்னும் மறக்காமல் சொல்லு" என்றவன் அவள் பேச இடமளிக்காது அழைப்பைத் துண்டித்தான்.
'இந்த காட்டுபையலை!!!!...' என சாத்விக்கை நினைத்து பல்லைக் கடித்தாள். அவன் கூறுவதை செய்யா விட்டால் நிச்சயமாக ஏடாகூடமாக ஏதாவது செய்து வைப்பான் என்று அறிந்தவள் அவன் கூறியது போலவே கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். விந்தியாவின் அலுவலகத்திற்குள் கார் நுழைய காரில் இருந்து இறங்கிய சனா சாத்விக் கூறியது போன்றே அச்சிப்பிசகாமல் கூற டிரைவரும், 'சரி மா' என்று சென்று விட்டார்.
அவள் பயந்தவாறே உள்ளே நுழைய சாத்விக்கின் கை அவளது கையோடு கோர்க்கப்பட்டு அழுத்தத்தை வழங்குவதன் மூலம் ஆறுதல் கூறியது. அவள் அதிர்ந்து பார்க்க குறும்பாகச் சிரித்து கண்சிமிட்டினான். அவள் நாணத்தில் வேறு புறம் திரும்பிக் கொண்டே இருவருமே நடந்தனர். விந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று கூற விந்தியா அவசர வேலை ஒன்றிற்காக வெளியே சென்று இருப்பதாகவும் வேலை முடித்து வர சில மணித்துளிகளாகும் என விந்தியாவின் உதவியாளர் மொழிந்தார்.
பின் அவரிடமே சனா அனைத்தையும் கூறி என்ன செய்ய வேண்டும்? என விளக்க விந்தியாவின் உதவியாளர் அனைத்தையுமே குறிப்பெடுத்தார். அனைத்துமே முடிந்ததும் நாளை விந்தியாவை சந்திப்பதாகக் கூறி சாத்விக், சனா இருவருமே விடைப் பெற்றனர். விந்தியாவிற்கு சனாவை கார்த்திக்கின் தங்கை என்ற ரீதியில் நன்றாக அறிவாள். அதனாலேயே சனாவும் தைரியமாக அவளை சந்திக்க வருகைத்தர அவளது கெட்ட நேரமோ அவள் இருக்கவில்லை. பயத்துடன் இருந்தவளை சாத்விக் அழைத்து வந்து நல்ல நேரமாக மாற்றினான்.
நல்ல நேரம் என்பதற்கான காரணம் சாத்விக்குடன் சனா வந்ததைப் பார்த்து இருந்தால் நிச்சயமாக கார்த்திக்கிடம் கூறியிருப்பாள். அதிலிருந்து சாத்விக்கும் தப்பிக் கொண்டான். இருவரும் வெளியேற, "நான் டிரைவரை கூப்பிடட்டுமா?" என்று அவனிடம் அனுமதி வேண்ட, "இல்லை வேணாம் பேபி. நீ என் கூட ஒரு இடத்துக்கு வா" என்று அவளை தன் காரிற்குள் அழைத்துச் செல்ல சாத்விக்கின் கார் அங்கிருந்து பறந்து சென்றது.
'எங்கே கூட்டிட்டு போறான் இந்த காட்டுப் பையன்' என அவனைப் பார்ப்பதும் வெளியே வேடிக்கைப் பார்ப்பதுமாக வர, "பேபி என்ன கேட்கனுமா இருந்தாலும் நேரடியாக கேளு. கழுத்தை திருப்பி திருப்பி இருக்காத" என்றான் சிரிப்புடன். அவளும் தைரியத்துடன், "இப்போ எங்க போறோம்" என்று வினவ, "அது போனதுக்கு அப்பொறமா தெரிஞ்சுப்ப" என்று சாலையில் கவனத்தைப் பதித்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டாள். இது அவனுடைய பீச் ஹவுஸ். காரை நிறுத்தியவன் அவளை அழைக்க மிரட்சியாக அவனைப் பார்த்தாள். சுற்றுப் புறம் இருந்த அழகு அவள் கண்களை ஈர்க்கவில்லை. அவள் கண்களை முழுமையாக பயமே சூழ்ந்து மற்றையதை மறைத்து இருந்தது. அவள் பயத்தை உணர்ந்தவனின் மனதில் தன்னை தவறாக உணர்ந்துக் கொண்டாளே என்ற வலி சுருக்கென தைத்தது.
முகம் இறுகியவன் "நான் தப்பானவன் இல்லை பேபி. உன்னை கிஸ் பண்ணுவேன். கட்டிபிடிப்பேன். பட் உன் அனுமதி இல்லாமலோ உன் கழுத்துல தாலி ஏறாமலோ நான் உன்னை எடுத்துக்க மாட்டேன். அந்த அளவுக்கு கேடு கெட்ட பொறுக்கி இல்லை நான்" என்றான் உஷ்ணக் குரலில். அவன் முகம் இறுகியதையும், அவன் குரலில் தென்பட்ட அடக்கப்பட்ட கோபத்தையும் பார்த்தவள் தன் மடமையை எண்ணி நொந்துக் கொண்டாள். தேவையே இல்லாமல் அவனை தானே சீண்டி விட்டதாகவே நினைத்தாள்.
"அது நான் அப்படி நினைக்க இல்லை..." எனத் தட்டுத்தடுமாறிக் கூற, "எனக்கு பொய் சொன்னா பிடிக்காது சனா" என்று குரலை உயர்த்த மருண்ட பார்வையுடன் வாயை மூடிக் கொண்டாள். தன் கோபத்தை சிகையை அழுந்த கோதி அடக்கியவன், அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல சிறிதாக அவன் மனநிலை மாறியது; சனாவின் வீட்டை இரசிக்கும் பார்வையில். "இது என் அம்மாவுக்காக அப்பா கட்டின வீடு. அப்பா இறக்கும் போது கம்ப்ளீட் பண்ணி இருக்க இல்லை. அம்மாவுக்கு ரொம்ப கவலை" என்றான்.
அவன் கூறும் போதே குரல் கமர ஆரம்பிக்க, சனா என்ன நினைத்தாளோ அவன் கையை ஆதரவாகப் பற்றினாள். அவனும் அவள் கையை இறுகப் பற்றியவாறே தொடர்ந்தான். "அம்மா என் கிட்ட படிக்கும் போதே சொன்னாங்க. நீ தான் இந்த வீட்டை கம்பளீட் பண்ணனும். நீ கல்யாணம் பண்ணி உன் குழந்தைகளை என் புருஷன் நினைவுகளோட இந்த வீட்ல கொஞ்சனும்னு சொன்னாங்க. அவங்க சொன்னது போலவே இந்த வீட்டை கம்பளீட் பண்ணேன். ஆனால் அதைப் பார்க்க இப்போ அம்மா இல்லை" என்று கூறும் போதே குரல் தழுதழுத்தது.
அவன் உடைந்து அமர சனாவும் அவன் அருகில் அமர்ந்துக் கொள்ள அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான். அவள் முதுகில் ஈரம் படர்வதை உணர்ந்தவள், "அழாதிங்க சேர். நீங்க அழறதை பார்த்தா மேலிருந்து உங்களை பார்க்குற அம்மாவும், அப்பாவும் ரொம்ப பீல் பண்ணுவாங்க" என்று முதுகை வருடியவாறே ஆறுதல் கூற அவனும் புரிந்து அவளிடம் இருந்து விலகி சனாவிற்கு முகம் காட்டாமலேயே கண்ணீரை அழுந்த துடைத்தான்.
தன் பெரூமிச்சில் தன்னை சமன்படுத்தியவன், "இந்த வீட்டுக்கு என் மனைவியை பர்ஸ்டா அழைச்சிட்டு வந்தேன். எப்படி இருக்கு இந்த வீடு? அப்பா கட்டினது, அம்மாவோட இரசணைக்கு போல. நீ வீட்டை சுத்தி பாரு நான் கார்ல சில திங்ஸ் வச்சிருக்கேன் அதை எடுத்துட்டு வரேன்" என்று வெளியே சென்றான். அவன் மீண்டும் உள்ளே நுழையும் போது சனா மரத்தாலான வேலைப் பாடுகள் கொண்ட கதவுகளை வருடிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"கிச்சனுக்குள்ள இருக்கேன் பேபி. ஏதாவது தேவைன்னா பேசு" என்று பொருட்களை அடுக்கி வைத்தவன் இருவருக்கும் காபி போட தயாரானான். சனா அனைத்தையும் பார்த்துக் கொண்டு கிச்சனிற்குள் நுழைய சாத்விக் இருவருக்கும் இரண்டு கப்பில் காபியை ஊற்றிக் கொண்டு இருந்தான். "காபி போட தெரியுமா சேர் உங்களுக்கு?" என்று உற்சாகமாய் வினவ, "எனக்கு சமைக்கவும் நல்லா தெரியும் பேபி. உனக்கு ருசியா சமைச்சி தரேன் என் வீட்டுக்கு வந்ததிற்கு அப்புறமா" என்றான் குறும்புடன்.
அதை கவனிக்காதது போல் பாவனை செய்தவள், "என் அண்ணாவும் நல்லா சமைப்பான் சேர். நான் அவன் சமையலுக்கு ரொம்ப பெரிய விசிறி" என்று தமையனின் சமையலை எண்ணி சிலாகித்துக் கூற சாத்விக் அமைதியாக ஒரு கப்பை அவளிடம் வழங்கினான். அவளும் அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். ஒரு மிடறு அருந்தியவன், "நான் பழிவாங்குறதுக்கு தான் இப்படியெல்லாம் பண்றேன்னு சொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா பேபி?" என்று நிதானக் குரலில் வினவினான்.
அவள் சாத்விக்கின் முகத்தையே கலவையான உணர்வுகளோடு பார்க்க, "நான் யாரை பழிவாங்கனும்னு நினைக்குறேன் தெரியுமா?" என்று அவன் புருவமுயர்த்த பெண்ணவளின் இதயம் தரிகெட்டு வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் அழுத்தமான குரலில் அவள் கண்களைப் பார்த்தவாறே, "உன் அண்ணனை தான் பழிவாங்கனும்னு நினைக்கிறேன். அதுக்கான காரணத்தை இன்னொரு நாள் சொல்றேன்" என்க சனாவிற்கோ உலகே இருண்டது போல் ஒர் எண்ணம்.
அவள் சமநிலையற்று தடுமாற சாத்விக் அவளை தாங்கி சமையல் அறையில் இருந்த திட்டில் அமர வைத்தான். ஒரு இயலாமையுடன் சாத்விக்கைப் பார்த்தவள், "எங்க அண்ணன் நிச்சயமா தப்பு பண்ணி இருக்க மாட்டான் சேர். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கிங்கன்னு நினைக்கிறேன்" என்று கலங்கிய குரலில் கூற கண்களும் கலங்கி விட்டன.
"ஆமா ஆமா உன் அண்ணன் ரொம்ப நல்லவன். நான் தான் கேடு கெட்டவன். அப்படி தானே?" என்று கொதித்து எழுந்தான். "நான் அப்படி சொல்ல வர இல்லை சேர்?" என்று அவசரமாக பதிலளிக்க, "வேற எப்படி?" என்றான் எள்ளளுடன். "சேர் என் அம்மா, அப்பா இறந்தப்போ எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம இருந்தேன் சேர். சாப்பிடனும், படிக்கனும், தூங்கனும்,விளையாடனும் எதுவுமே எனக்கு தெரியல்லை..
எனக்கு ஞாபகத்துல இருந்தது எல்லாமே என் அப்பா, அம்மா தான். அண்ணாவுக்கும் ரொம்ப கவலை. ஆனால் எனக்காக அதையெல்லாம் மறைச்சிட்டு என்னை தேத்துவான். அவன் தனியா போய் அழுவான். எனக்கு ஆறுதல்படுத்த அவன் இருந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க சேர். அவன் அழறதை பார்த்ததில் இருந்து தான் நான் அழறதை நிறுத்தினேன். அத்தை வீட்ல தான் கொஞ்ச நாள் இருந்தோம்.
ஆனால் என்னால் அங்க சுதந்திரமா இருக்க முடியாதுன்னு மறுபடியும் வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான். என்னை ஸ்கூலுக்கு அனுப்ப அவன் காலையிலேயே எந்திரிப்பான். அம்மா, அப்பா இருந்த வரைக்கும் அவன் காலையில எந்திரிச்சி நான் பார்த்ததே இல்லை. எனக்காக எந்திரிச்சி நான் ஸ்கூல் போக அத்தனையையும் ரெடி பண்ணி தருவான். அவனுக்கு சமைக்கவே தெரியாது. கஷ்டபட்டு சமைப்பான். கையை கூட வெட்டி கிருவான். சூடும் பட்டிருக்கு.
அதையெல்லாம் பெரிசுபடுத்தமாட்டான். தோசை செஞ்சால் முதல் இரண்டு கருகி இருக்கும். அவன் அதை எடுத்துட்டு நல்லதை எனக்கு கொடுப்பான். சில நாளைக்கு எனக்கு மட்டும் சாப்பிடுற அளவு தான் சாப்பாடு நல்லா இருக்கும். அதை என்னை சாப்பிட வச்சுட்டு அவன் பட்டினியில இருப்பான்" என்று கூறும் போதே குரல் கரகரக்க, தாரை தாரையாக கண்ணீர் வழிய மேலும் தொடர்ந்தாள். "என்னை அநாதைன்னு யாருமே சொல்ல விடமால் பார்த்துகிட்டான். என் ஸ்கூல் மீடிங்கை அவன் கோலேஜை கட் பண்ணிட்டு அடென்ட் பண்ண வருவான்.
அதுக்கு திட்டும் வாங்குறாத அத்தை சொன்னாங்க. எனக்கு யாரும் இல்லைன்னு நினைக்க ஓரு நிமிஷம் கூட விடமாட்டான். முழுநாளும் வேலை. நான் ரொம்ப நாளா அம்மா, அப்பா பாதிப்புல இருந்து வெளி வரவே இல்லை. அதனால எந்த வேலையுமே பண்ண மாட்டேன். அதுக்காக ஒரு நாள் கூட அண்ணா கோபப்பட்டது கிடையாது. நான் பெரியவளானப்போ என் அண்ணன் தான் அம்மா மாதிரி பார்த்துகிட்டான். அதில் இருந்து தான் நான் நோர்மலானேன்.
அப்புறமா அண்ணாக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். அவன் காலையில எனக்கு வேலை செஞ்சிட்டு கோலேஜ் போவான்.
ஈவீனிங் என்னை டியூஷனுக்கு அனுப்பி வச்சிட்டு ஓபிஸ் போய் கம்பனியை பாரத்துட்டு நைட் சமைச்சி என்னை படிக்க வச்சு தூங்க வைப்பான். அப்புறமா தான் அவன் படிக்கிறதே. ரொம்ப நேரம் கழிச்சி தூங்கி சீக்கிரமாவே எந்திரிச்சிருவான். இதான் அவன் டெய்லி வேர்க்.
அண்ணா கஷ்டபடுறதை பார்த்து நான் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிச்சேன். அத்தையை வீக்கென்டுல வர சொல்லி இரண்டு பேருமே சமையலை கத்துகிட்டோம். இப்படி எங்க வாழ்க்கை போச்சு. மாமா இறந்த பின்னாடி அபியையும், அத்தையையும் இங்கே கூட்டிட்டு வந்தான். அத்தை எங்களை ரொம்ப பாசமா பார்த்துபாங்க. அத்தை நமக்கு இன்னொரு அம்மான்னு சொல்லுவான்.
யாருக்குமே கெட்டது நினைச்சதே இல்லை. எல்லோருக்குமே நல்லது தான் பண்ணுவான். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பான். இப்படி பட்ட அண்ணனை பழிவாங்கனும்னு சொல்றிங்க சேர். நீங்க பழிவாங்க நினைக்கிறிங்கன்னா கண்டிப்பா அண்ணா ஏதாவதூ தப்பு பண்ணி நீங்க அதனால பாதிக்கப்பட்டு இருக்கனும். இவளோ நல்லவன் உங்க விஷயத்துல மட்டும் எப்படி சேர் தப்பு பண்ணி இருப்பான்" என்று நீண்ட விளகத்தைக் கூறி சாத்விக்கை கெஞ்சலாகப் பார்த்தாள்.
"உன் அண்ணனுக்கும் எனக்கும் எப்போவுமே ஒத்துபோகாது சனா. உன் அண்ணன் உனக்கும் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் ரொம்ப நல்லவன் தான். ஆனால் எனக்கு இல்லையே. என் இடத்துல இருந்து ஐந்து நிமஷம் அவன் யோசிச்சு பார்த்து பண்ணி இருக்கலாம்..ஆனால் அவன்..." என்று நினைக்கும் போதே கண்கள் சிவந்து நரம்புகள் புடைக்க நின்று இருந்தான். "என்னோட பிரன்ஸ் யாருமே என்னை நம்ப இல்லை. உன் அண்ணன் சொல்றான்னா கண்டிப்பா சரியா இருக்கும்னு அத்தனை பேரும் நம்பினாங்க.
அந்த நம்பிக்கை அவன் உடைச்சிட்டான் என் விஷயத்துல. செய்யாத ஒரு தப்புக்காக நான் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு எனக்குன்னு இருந்த எல்லாத்தையுமே இழந்துட்டு நிற்க காரணம் உன் அண்ணன் தான். உன் அண்ணன் நான் சொல்றதை கேட்டு இருக்கலாமே. பழைய பகையை மனசுல வச்சிட்டு நான் கெஞ்சுறதை கூட கேட்காமல் என்னை அடிச்சான். அப்போ எல்லாம் நான் துடுக்கான பையன். இப்போ நான் அரக்கனா மாறி இருக்க காரணமே உன் அண்ணன் தான்..." என்று கோபமாக சுவரில் கைமுஷ்டியால் குத்தினான் கோபம் குறையும் வரையில்.
சனா மிரண்டு அவனைப் பார்க்க இரத்தம் வழியும் கைகளுடன் அரக்கனைப் போலவே நின்று இருந்தான். "உன் அண்ணனை பழிவாங்கனும்னு தான் நான் இந்தியா வந்தேன். அவனைப் பத்தி தேடினேன். அப்போ தான் அவனுக்கு உயிரே நீதான்னு தெரிஞ்சிது. உன்னை இரண்டு வருஷமா வொச் பண்ணி என் பிஸ்னஸ் பூரா இந்தியாவுக்கு மாத்தி உன்னை வச்சு கேம் பிளே பண்ணனும். உன் அண்ணை அவமானப்படுத்தனும்னு நினைச்சேன்.
உன்னை தேடி வந்து உன்னை என் வலையில விழ வைக்கனும்னு நினைச்சேன். உன்னை கஷ்டபடுத்தினால் உன் அண்ணன் துடிப்பான்னு ஒரு சின்ன கணக்கு போட்டேன். அதனால் உன்னை எப்பாடு பட்டாவது என் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்து உன் அண்ணனை தவிக்க வைக்கனும்னு நினைச்சேன். ஆனால் நடந்தது வேற. உன்னை என் வலையில விழவைக்கிறேன்னு உனக்குள்ள நானே விழுந்துட்டேன்.
உன்னை கஷ்டபடுத்த என்னால முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா பிளேனையே சேன்ஜ் பண்ணேன். உன்னை என் மனைவியா மாத்தி உன் அண்ணனை துடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்" என்று கூறியவன் அலட்சியப் பாவனையுடன் அமர்ந்து காபியைப் பருகினான். சனா அதிர்ந்து அவனைப் பார்த்தவள், அவனை தானே மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில், "என் அண்ணா இஷ்டம் இல்லாமல் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றாள் நிமிர்வாக.
"ஹாஹாஹா...." என்று சத்தமாக சிரித்தவன், அடுத்த நொடி உக்கிரமாக மாறி அவள் பின் கழுத்தில் கூந்தலுடன் சேர்ந்து பிடித்தவன் தன் முகம் நோக்கி இழுத்தான். அவளது முகம் வலியில் சுருங்க அதைக்கூட இப்போது இருக்கும் அரக்கனால் உணரமுடியவில்லை. சனாவின் சாத்விக்கை முழுமையாக அடக்கி முழுமையாக அவன் பழி வெறி கொண்ட அரக்கன் ப்ரவீனாக மாறி இருந்தான்.
"எனக்கு உன் அனுமதியோ இஷ்டமோ தேவையில்லை. இதுல உன் அண்ணன் இஷ்டத்தை நான் எதிர்பார்ப்பேன்னு நீ எப்படி நினைச்ச?" என்று உறுமியவன் அலட்சியமாய் உதட்டைச் சுழித்தான். சனாவின் உடல் பயத்தில் நடுங்க அதைப் பொருட்படுத்தாதவன், "நீ என் பொன்டாட்டி தான். நான் எப்போவோ பிக்ஸ் ஆயிட்டேன். என் கிட்ட இருந்து உன்னாலேயும் தப்பிக்க முடியாது. உன் அண்ணனாலேயும் தப்பிக்க முடியாதுடி" என்று கர்ஜித்தவன் வேகமாக அவளை தள்ளவிட்டான்.
அவள் கீழே விழுந்து தன்னை சமாளித்துக் கொண்டாள் அடியேதும் படாமல். அவள் அதே நடுக்கத்துடன் சாத்விக்கைப் பார்த்து, "சேர்.." என்று மெல்லிய குரலில் அழைத்தாள். அவன் உஷ்ணப் பார்வைப் பார்க்க, "என் அண்ணனை விட்டுடுங்களேன். பிளீஸ்.. அவன் பாவம் சேர். என்னால என் அண்ணனை கஷ்டபடுத்த முடியாது. அதுக்கு நான் என்ன வேணூன்னாலும் பண்ணுவேன்" என்றாள் மெல்லிய குரலில் ஆனால் தீர்க்கமாக. "சோ என்னை மறைமுகமா பிளெக்மெயில் பண்ற. நான் ஏதாவது பண்ணா உன்னை நீயே அழிச்சிக்குவன்னு" என்று நக்கலாய் உதிர்த்தான்.
மறுபடியூம் கொடூரமாக மாறி அவள் மணிக்கட்டைக் கொண்டு இழுத்து நிற்க வைத்தவன், "நீ எனக்கு சொந்தமானவ. உன் உயிர் மூச்சுக்கித்தும் எனக்கு சொந்தம். என் பர்மிஷன் இல்லாமல் உன்னால மூச்சு கூட விட முடியாது. அப்படி இருக்கும் போது எந்த தைரியத்துல உன்னை நீயே அழிச்சிப்பன்னு சொல்லுவ?" என்று கர்ஜித்தவன் அவள் கழுத்தை நெருக்க சனாவின் கண்கள் சொருக ஆரம்பித்தது. உடனியாக அவளை விட்டு கையெடுத்தான்.
தன் கோபத்தை பின் கழுத்தில் உள்ளங்கையால் தேய்த்தவாறு சற்று மட்டுப்படுத்தியவன், "உனக்கு ஒரு சின்ன கீறல்னாலும் உனக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்ப வலிக்கும் சனா. நீ உன்னை காயப்படுத்தி கிட்டா அதை விட பல மடங்கு காயத்தை உன் அண்ணனுக்கு கொடுப்பேன். பார்த்து நடந்துக்க... நான் சொன்னதை செய்றவன். அதே போல இப்போ நான் உன் கிட்ட ரூடா பிகேவ் பண்ண காரணம் என்ன தெரியுமா?" என புருவமுயர்த்தினான்.
அவள் தெரியாது என அழுத முகத்துடன் தலையசைக்க, "இப்போ நீ என் பேபியா இல்லை. அந்த ஆர்யனோட தங்கச்சியா வந்து நிக்கிற. என் பேபி தான் எனக்கு வேணும். ஆர்யன் தங்கச்சியா என்னை எப்போவுமே நெருங்க முயற்சி பண்ணாத. அது உனக்கு ஆபத்து" என்றான் உறுதியான அழுத்தக் குரலில். "போய் முகத்தை கழுவிட்டு வா" என ஆணையிட வேகமாக முகத்தை கழுவினாள் சமையலறையில் இருந்த தண்ணீர் குழாய் மூலம்.
அவள் முகம் கழுவி வர அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன், "மறுபடியும் சொல்றேன் பேபி. என் பக்கத்துல இருக்கும் போது என் பேபியா மட்டும் இரு. எனக்கும், உன் அண்ணனுக்கும் இடையில எப்போவுமே வராத. புரியுதா?" என்று தன் கண்களை அவள் கண்களில் கலக்க விட்டு கேட்க, அவளும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆம் என தலையாட்டினாள். அவள் மூக்குத்தியிலும், நெற்றியிலும் இதழ் பதித்தவன், அவள் கை விரல்களோடு தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டான்.
அவளை அழைத்துக் கொண்டு கடற்கரையில் சற்று நேரம் நடந்தான்.
இருவருக்குமே மன அமைதிக்கு இந்த நடைப் பயிற்சி அவசியமாக இருந்ததால் அமைதியாக நடந்தார்கள். இருவரின் மனமும் ஒரு நிலை அடைய சனாவை அழைத்துக் கொண்டு சென்று விந்தியாவின் அலுவலக வீதியில் இறங்க வைத்து டிரைவருக்கு அழைக்க வைத்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான். டிரைவர் வரவும் சனா தனது காரில் பயணமானாள்.
இவை அனைத்தையுமே பார்த்த மர்ம நபரின் நண்பர் இருவரையும் புகைப்படம் எடுத்து அந்ந மர்ம நபரிற்கு அனுப்பி வைத்தான். அதைப் பார்த்த மர்ம நபர், "ஓஓ இப்படி ஒரு ரூட் இருக்கா? ஆர்யன் பாவம் நீ சாத்விக்கை இந்த முறையும் எதிர்க்க போற அதுவும் உன் தங்கச்சியால. அச்சோ சின்ன பொண்ணே நீ அநியாயத்துக்கு வந்திருக்க. சரி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்" என்று குரூரமாக சிரித்து சாத்விக், கார்த்திக், சனா மூவரின் புகைப்படத்தைப் பார்த்து கண்சிமிட்டினான்..