Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 26 (1):
மணமேடையில் உட்கார்ந்திருந்த நித்திலா லேசாக பார்வையை திருப்பி அருகிலிருந்தவனை பார்த்தாள். பாறைபோல் இறுகிக் கறுத்த முகத்துடன் உட்கார்ந்திருந்தான். அதே நேரம் நிர்மலாவும் பேரனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. ‘இந்த நேரத்துலயாவது முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சிருக்கானா பாரு..’
தாலி கட்டும்போது கூட வேறு ஏதோ யோசனையில் இருப்பது போல கவனமேயில்லாமல் வேகவேகமாக கட்டி முடித்துவிட்டு எழப்போனவனை தடுத்த சாரதா, “ஆதி என்ன பண்ற.. உட்காரு..” என்க, மற்றவர்களும் விசித்திரமாக பார்க்க ஆரம்பிக்கவும் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தான்.
ஆதி அவசரகதியிலும் நித்திலா நிதானமாகவும் ஒவ்வொரு சடங்காக செய்து முடிக்க அன்னையை அழைத்தவன் “அம்மா எனக்கொரு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு இதெல்லாம் எப்ப முடியும்..” என்று எரிச்சலுடன் கேட்க,
“ஆதி.. உனக்கு இன்னைக்கு கல்யாணம்... நீ ராத்திரி லேட்டா வந்து எல்லார் முன்னாடியும் என்னை சங்கடப்படுத்தின மாதிரி இப்பவும் எதையாவது பண்ணிடாதே பளீஸ்..”
சாரதாவின் கெஞ்சலில் சற்று நேரம் பொறுமையாக நின்றவன் அவனது ஃபோன் தொடர்ச்சியாக அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதற்குமேல் பொறுக்க முடியாமல் கிளம்பிவிடும் உத்தேசத்தில் முன்னேறப் பார்க்க அந்த நேரம் பார்த்து அவன் அருகில் வந்த சௌர்யா,
“என்னங்கண்ணா.. இவ்வளவு அவசரமா எங்கே போக போறீங்க..??” என்றான் கேள்வியாக “அதுவும் தாலி கட்டுன கையோட கிளம்பிட்டீங்க..”
“ஏய்... உன் வேலைய பார்த்துக்கிட்டு போடா..” வார்த்தைகளை கடித்து துப்பினான் ஆதி..
“நான் உங்களுக்கு விஷ் பண்ணலாம்னு வந்தேன்.. திட்டுறீங்க பார்த்தீங்களா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலைங்ண்ணா... நீங்க பல வருஷமா ஸ்கெட்ச் போட்டு, ப்ளான் பண்ணி பண்ணின கல்யாணம்... முகத்துல சந்தோசமே இல்லையே... ஏன் ப்ரோ என்னாச்சு.. உங்க ப்ளான்ல எங்கேயாவது ஓட்டை விழுந்துடுச்சா என்ன...” என்று யோசிப்பது போல் தாடையை தடவியவன் “அதெல்லாம் நீங்க பக்காவாத்தானே ப்ளான் பண்ணிருப்பீங்க... அப்புறம் எப்படி..??”
பாய்ந்து சௌர்யாவின் சட்டையை பிடித்தவன் “எங்கடா மித்ரா..??” அடக்கப்பட்ட குரலில் சீறினான் ஆதி.
“ஹப்பா... கப்புனு புடிச்சிட்டீங்க பார்த்தீங்களா.. க்ரேட் ண்ணா நீங்க.. ஆதிதேவ்னா சும்மாவா...” அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே மற்றவர்களின் கவனத்தை கவராமல் தன் சட்டையிலிருந்து அவன் கரங்களை பிரித்துவிட்டவன் நிதானமாக ஆதியின் முகத்தை பார்வையிட்டான்.
விட்டால் சௌர்யாவை அங்கேயே கொன்று புதைத்துவிடும் வெறியுடன் ஆத்திரத்தில் முகம் சிவந்து தாடை விடைக்க கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான் ஆதி.. சௌர்யாவுக்கே அவனை பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது..
உடனே “அப்படி பார்க்காதீங்கண்ணா.. உங்கள பகைச்சிக்கிற தைரியமெல்லாம் எனக்கு இல்லவே இல்ல..” என்று அப்பாவியாக கூறியவன் “இந்த கதைக்கு ஸ்க்ரீன் ப்ளே, டயலாக், டைரக்ஷன் எல்லாமே.............” என்று நிறுத்தி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாலி கட்டுனீங்களே மிஸஸ் ஆதிதேவ்... அவங்களேதான்.... அதனால நீங்க எது பண்றதா இருந்தாலும் உங்க பொண்டாட்டி கிட்டயே பண்ணிக்கங்க...” நக்கலாக கூறினான்..
சற்று தள்ளி சாரதாவுடன் நின்றிருந்த நித்திலாவின் பக்கம் பார்வையை திருப்பியவன் “நித்தும்மா... அண்ணன் தேடுறாரு பாரு.. இங்க வாடா செல்லம்..” என்று அழைக்க “என்ன அத்தான்..” என்று கேட்டுக்கொண்டு வந்தவளை பிடித்து ஆதியின் அருகில் நிறுத்தியவன் “தேகோ நித்தும்மா.. உன்ன நம்பித்தான் எங்க அண்ணன ஒப்படைச்சிருக்கேன்... இனிமேல் எங்கண்ணன் உன் பொறுப்புடா.. அவர நீதான் நல்லபடியா கவனிச்சுக்கனும் என்ன..” என்றான்.
“அதுக்கென்ன அத்தான்... தரமா கவனிச்சிடலாம்… அதுக்குத்தானே உங்க அண்ணன கல்யாணம் பண்ணியிருக்கேன்... நான் எப்படி கவனிக்கறேன்னு மட்டும் பாருங்க...” என்று சொன்னவளை கண்டு ஆதியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது..
“பார்க்கத்தானேடா போறேன்... சரி சரி வா நித்து அண்ணா கூட செல்ஃபி எடுத்துக்கலாம்.” என்றபடி அவனும் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்று செல்ஃபி எடுக்க தயாரானவன் பின்பு “ம்ப்ச் பாரு நித்து... அண்ணா சிரிக்கவே மாட்டேங்கிறார்... உன் ஹப்பிய கொஞ்சம் சிரிக்க சொல்லுடா...”
“உங்க அண்ணா சிரிச்சா மட்டும் இந்த மூஞ்சி நல்லாவா இருக்க போகுது... விடுங்க அத்தான் நம்ம சிரிக்கலாம்..” அவர்கள் இஷ்டத்துக்கு அவனை கடுப்படித்துக் கொண்டிருந்தனர்.
ஆதியால் ஒற்றை வார்த்தை பேச முடியவில்லை.. அவனுக்கு மித்ராவைப் பற்றி தெரிந்தாக வேண்டியிருந்தது.. நேற்று மாலையிலிருந்து ஒரு பைத்தியக்காரனை போல மித்ராவை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.. கடைசியில் இவர்களது வேலைதானா இது.. இருக்கும் இடத்தை மனதில் கொண்டு பொறுமையாக நின்றிருந்தான்.. உச்சக்கட்ட ஆத்திரத்தில் மூச்சு வாங்கியது அவனுக்கு...
“ஆதி, நித்து வாங்க.. பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க...” என்று சாரதா இருவரையும் அழைத்தாள்..
விஸ்வநாதன், நிர்மலா தம்பதியர் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர் இருவரும்... “நல்லாயிரும்மா..” என்று பேத்தியின் கன்னத்தை வருடிக்கொண்டே கூறிய நிர்மலா “நல்லாயிருப்பா..” என்று ஆதியிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் சட்டென்று நகர்ந்துவிட நிர்மலாவுக்கு முகத்திலடித்தாற்போல் ஆகிவிட்டது..
ஒருசில நொடிகள் பேரனை வெறித்துப் பார்த்தவர் பின்பு தன் முகத்தை மாற்றிக்கொண்டு பேத்தியை பார்த்து சிரித்து வைத்தார்.. அவர் மனம் வலித்தது.. “இவனுக்கு நான் என்ன பாவம் பண்ணேன்..”
“இவ்வளவு நேரமாச்சே மச்சி... இவங்க மண்டபத்த விட்டு கிளம்புவாங்களா இல்லையா.... பேசாம உள்ளே போயிடலாமா..” ப்ரசாத்..
அர்ஜுனும் அவனது நன்பர்களும் மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.
“டேய் தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுக்க வேணாம்.. அவங்க வந்துடுவாங்க.. இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பார்க்கலாம்..” என்றான் சிவா..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மண்டப வாசலில் சலசலப்பு ஏற்பட “எல்லாரும் வர்ராங்கனு நினைக்கிறேன்...” என்றபடி பார்த்தவன் “மச்சி.. இதுல சிஸ்டர எங்கடா கண்டுபிடிக்கிறது...” அவர்கள் குடும்பம் மொத்தமும் ஒரே நேரத்தில் வெளியேறுவதை கண்டு ப்ரசாத் கேட்க, “எனக்கு நிலா முகத்த மட்டுமாவது பார்த்தா போதும் மச்சி...” என்றான் அர்ஜுன் தவிப்புடன் நித்திலாவை கண்களால் துழாவியபடி...
சிவாதான் நித்திலாவை முதலில் கண்டு கொண்டவன் அதிர்ச்சியுடன் “டேய்.. கல்யாண பொண்ணுடா..” என்றான்.
“சிவா... கல்யாண பொண்ண பார்க்கவா நம்ம வந்திருக்கோம்.. சிஸ்டர் எங்கேனு பாருடா...”
“மச்சான்.. சிஸ்டர் தான்டா கல்யாண பொண்ணு...” கம்மிய குரலில் சிவா கூற அதன்பிறகுதான் அர்ஜுனும் ப்ரசாத்தும் மணமக்கள் பக்கம் பார்வையை திருப்பினர்.
ஒருபுறம் ஆதியின் கையை பற்றிக்கொண்டு மறுபக்கம் வந்து கொண்டிருந்த சௌர்யாவிடம் சிரித்து பேசியபடி மணப்பெண் அலங்காரத்தில் தேவதையென வந்து கொண்டிருந்தது சாட்சாத் நித்திலாவேதான்..
அவனது நிலா!!!
நம்பமுடியாத அதிர்ச்சி, திகைப்பு... மூச்சுவிடவும் மறந்தவனாய் ஸதம்பித்துப்போய் நின்றுவிட்டான் அர்ஜுன்..
‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் அதிர்வுடன் பார்த்த ப்ரசாத்தின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த நேம் போர்ட் பட்டது..
‘ஆதிதேவ் வெட்ஸ் நித்திலா’
மூவரும் இத்தனை நேரம் அங்குதான் நின்றிருந்தார்கள். ஒருவர்கூட அதனை கவனிக்கவில்லையே..
ப்ரசாத், சிவா இருவராலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான்கு வருடங்களுக்கும் மேலாக நன்பனின் காதலை உடனிருந்து பார்த்தவர்கள் அல்லவா...
“அந்த பொண்ணு மட்டும் கிடைக்கலைனா இவன் செத்துடுவான்டா..” அவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளும் வார்த்தைகள்.. இருவரது காதுகளிலும் இப்போது நாரசமாக ஒலித்தது... அவர்களது இதயமே பிளந்துவிடும் போல இருந்ததில் தங்களுக்கே இந்த நிலை என்றால்.... இருவரும் அர்ஜுனை திரும்பி பார்த்தனர்..
சிலையாக நின்றவனின் கண்கள் மட்டும் சிரித்தபடியே காரில் ஏறிக் கொண்டிருந்த நித்திலாவின் மீது நிலைகுத்தி நின்றது....
#######################
“இதுக்குத்தான்... இதுக்குத்தான் அப்பவே அந்த ஆதி பயல கொன்டுடலாம்னு சொன்னேன்... அரை உசிர்ல துடிச்சிக்கிட்டு இருந்தவன காப்பாத்தி விட்டீங்க... இப்போ அவன் நம்ம தலையிலயே கை வெச்சிட்டான்... எல்லாம் நாசமா போச்சு....” வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான் சந்திர ப்ரகாஷ்..
மகன் கத்துவதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த காபியை நிதானமாக பருகிக் கொண்டிருந்தார் சகுந்தலாதேவி...
“நீதான்டி ஓடிப்போய் அவன காப்பாத்தி விட்ட...” என்று சகோதரியான ரேணுகாவை பார்த்து அவன் கோபமாக கூற..
“இங்க பாரு.. நான் ஒன்னும் என் இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் பண்ணல.. அம்மாதான் அவன் உயிருக்கு எதுவும் ஆக கூடாதுனு சொன்னாங்க.. அதனால காப்பாத்தினேன்.. இல்லைனா எனக்கென்ன தலைவிதியா அவன கொலை பண்ண திட்டமும் போட்டு காப்பாத்தியும் விடுறதுக்கு...” என்று பதிலுக்கு காய்ந்தாள் ரேணுகா “நீ எது கேக்குறதா இருந்தாலும் அம்மாகிட்டயே கேளு... என்கிட்ட சத்தம் போடுற வேலைய வெச்சிக்காதே...”
அவள் சொன்னது அத்தனையும் உண்மை என்பதால் அன்னையை திரும்பி முறைத்தவன், “ஏம்மா... ஏன் இதை நடக்க விட்டீங்க... நம்ம எத்தன வருஷமா இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம்... இப்படி ஒரே நாள்ள...... எல்லாம் தலைகீழா போச்சே... சை... உங்க கிட்ட தான்மா கேக்குறேன்.. ஏதாவது பேசுங்க...” என்று அவன் மீண்டும் பொறுமையிழந்து சத்தம் போட ஆரம்பிக்க காபியை குடித்து முடித்து கப்பை வைத்தவர் அதே நிதானத்துடன் மகனை ஏறிட்டார் சகுந்தலாதேவி..
“ம்ம்ம்ம்... என்ன சொன்ன??.. அவன அப்பவே கொன்னுருக்கலாம்னு சொன்ன... அப்படித்தானே... அவன அன்னைக்கே கொன்னுருந்தா... அந்த ஜெயதேவ் நம்மதான் அவன் பேரன கொன்னோம்னு கண்டுபிடிச்சி, இந்நேரத்துக்கு நம்மள புதைச்ச இடத்துல ஆல மரமே முளைச்சிருக்கும்...”
“சரி.. அது அப்போ நடந்தது... நடந்து முடிஞ்சிடுச்சி... இப்போ இந்த கல்யாணத்த எதுக்கு நடத்த விட்டீங்க... சேது மாமா சொன்னப்பவே கிளம்பி போய் ரெண்டுல ஒன்னு பார்த்திருக்கலாமே... இப்படி பண்ணிட்டீங்களேம்மா... நான்தான் நேத்து ஊர்ல இல்லாம போயிட்டேன்... நீயாவது அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே...” என்று அன்னையிடம் ஆரம்பித்து சகோதரியிடம் முடித்தான்.
“ப்ரகாஷ்... நான் உன் அம்மாடா.. உனக்கே இவ்வளவு கொதிப்பா இருக்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்.. எல்லாம் காரணமாத்தான்டா விட்டு வெச்சிருக்கேன்....” அவரது பிள்ளைகள் இருவரும் புரியாமல் பார்க்க, “அந்த விஸ்வநாதனுக்கு நெஞ்சுவலி வந்ததா சேது சொன்னான்.... இந்த மாதிரி சமயத்துல நம்ம பிடிவாதமா இருந்தாலோ, சண்டைக்கு போனாலோ நிர்மலா அந்த விஸ்வநாதன் பக்கம் சாய்ஞ்சிடுவா... அதுக்கு நம்ம இடம் கொடுக்க கூடாது...”
“அவ என்னை நம்பிக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான்டா நம்ம நினைக்கிறதெல்லாம் நடத்த முடியும்... இத்தனை நாள் நம்ம பாடுபட்டு காப்பாத்தி வெச்சிருந்த அந்த நம்பிக்கைய இந்த கல்யாணத்த நிறுத்தனும்கிற ஒரே காரணத்துக்காக கோட்டை விட்டுட எனக்கு இஷ்டமில்ல....” என்று கூறியவர், பின்பு ஒருவித குரூர சிரிப்புடன் “அவ என்னை முழுசா நம்பி என் பேச்சை கேட்டுகிட்டு இருக்கிற வரைக்கும் நம்ம எது வேணாலும் பண்ணலாம்... இப்பக்கூட அக்கா வருத்தப் படுவாங்களேன்னு என்னை பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருப்பா...”
“இனிமேல் பண்ண என்ன இருக்கு.. அதான் அவன் நித்திலாவ கல்யாணம் பண்ணிக்கிட்டானே... இனிமேல் நம்மளால என்னத்த பண்ணி கிழிக்க முடியும்....”
“ஹா... ஹா... ஹா... ப்ரகாஷ் அங்கதான்டா நீ தப்பு பண்ற… ம்ம்ம்... அந்த மித்ரா இருக்காளே... ஆதி நிற்க சொன்னா நிப்பா,, உட்கார சொன்னா உட்காருவா... அவ அவன வேணாம்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாளாமா... இதெல்லாம் நடக்கிற காரியமாடா... நித்திலாவ கட்டிக்கிறதுக்காக அவன்தான் என்னமோ பண்ணிருக்கான்...” என்க அவரது பிள்ளைகள் இருவரும் ‘அப்படியும் இருக்குமோ..’ என்ற எண்ணத்தில் சகுந்தலாவின் பேச்சை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தனர்...
“நம்ம ஆர்யாவுக்கு நித்திலாவ பொண்ணு கேட்டு போகப்போறது அவனுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு... அதனாலதான் அன்னைக்கே அவனும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கான்.. மித்ராவ கட்டிக்கப்போறதா சொல்லி அத்தனை பேரையும் ஏமாத்தி கடைசி நேரத்துல அவள என்னமோ பண்ணிட்டு அந்த விஸ்வநாதன்கிட்ட நித்திலாவ கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டிருப்பான்... பேரன் கேட்டா அந்த விஸ்வநாதன் மாட்டேன்னா சொல்லுவான்... அவனே எல்லார்கிட்டயும் பேசி சமாளிச்சி அவன் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கான்... இதுதான் நடந்திருக்கும்...”
“ம்மா!!!... எப்படிம்மா???” அவருடைய பிள்ளைகள் இருவரும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்துடன் கேட்க, அதற்கு சிரித்தவர் “அதான் சொன்னனே... நான் உங்க அம்மாடா...” என்றார்..
“ஆனா நித்திலாவும் உடனே சம்மதிச்சிட்டாளேம்மா...” ரேணுகா குழப்பத்துடன் கேட்டாள்.
“ம்ம்ம்... அதுதான் எனக்கும் புரியல.. ஒருவேள குடும்ப கௌரவத்த காப்பாத்தனும்னு பண்ணியிருக்கலாம்.. இல்லைன்னா அவளுக்கு அவன்மேல ஆசை இருந்திருக்கனும்... அவள தூக்கி வளர்த்ததே அவன்தானே...” சகுந்தலா..
“ஆமாமா... அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கிறதுக்கு நம்ம என்ன எல்லாம் பாடு பட வேண்டி இருந்துச்சு..” என்று எரிச்சலுடன் கூறியவள் “அப்பவே அவள தாங்கு தாங்குனு தாங்குவான்... இப்போ சொல்லவே வேணாம்.. அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கவே முடியாது....” என்றாள் ரேணுகா.
“முட்டாள்.. அவன் என்ன ஆசையா குடும்பம் நடத்த அவள கல்யாணம் பண்ணியிருக்கான்னு நினைக்கிறியா... நிர்மலாவ பழி வாங்க அவ பேத்திய கட்டியிருக்கான்... பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கொழுத்தி போட்ட நெருப்பு இப்பத்தான் பத்திக்கிட்டு எரியுது... வருவா பாரு... இன்னும் கொஞ்ச நாள்ள.. அக்கா!! என் பேரன்கிட்ட (ஆதி) இருந்து என் பேத்திய (நித்திலா) காப்பாத்துங்க அக்கான்னு என்கிட்டயே கதறிக்கிட்டு வருவா அந்த நிர்மலா.. அப்ப ஆரம்பிக்கலாம் நம்ம ஆட்டத்த...” சகுந்தலாவின் குரலில் குரோதம் வழிந்தோடியது..
“என்ன ஆட்டத்த ஆரம்பிக்க போறீங்க...” என்று கேட்டபடி அங்கு வந்து சேர்ந்தாள் சந்திர ப்ரகாஷின் ஒரே மகள் ஷிவானி... “என்ன அந்த ஆதி, நித்திலா கல்யாண மேட்டர் பேசிக்கிட்டு இருக்கீங்களா... அதான் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இல்ல.. இனிமேல் என் ரூட் கிளியர்.. சட்டுபுட்டுனு எனக்கும் ஆர்யா மாமாக்கும் கல்யாணம் பண்ணுற வழிய பாருங்க..”
“என் செல்லம்..” என்று பேத்தியை அணைத்துக் கொண்டவர் “உன் ஆர்யா மாமா உனக்குத்தான் கண்ணு.. ஆனா அதுக்கு முன்னாடி அந்த நித்திலாவ வெச்சி நமக்கு ஒருசில காரியம் ஆகவேண்டி இருக்கு... அதெல்லாம் முடிஞ்சிடட்டும்... அப்புறம் அவள இருந்த இடமே தெரியாம பண்ணிட்டு உனக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.. என்ன...” என்றார்.
“என்னமோ போங்க பாட்டி.. அன்னைக்கு என் மாமா அவளுக்கு மோதிரம் போட்டுட்டு வந்ததையே என்னால தாங்கிக்க முடியல... நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா....” என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுவதை போல் கூறியவள் “அவளோட அந்த கைய துண்டு துண்டா வெட்டி எடுக்கனும் மாதிரி இருக்கு...” என்றாள் வெறுப்புடன்.
“அதுக்கென்ன கண்ணு.. முடிஞ்சா அதையும் பண்ணிடுவோம்...”
“பாட்டினா பாட்டிதான்...” என்று சகுந்தலாவை முத்தமிட்டு விட்டு சென்றது வெறும் இருபதே வயது நிரம்பிய அந்த விஷச்செடி..
கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வீட்டு டிரைவர் கனகவேல் கையில் ஒரு பெட்டியுடன் வந்து நின்றான். அவன் சகுந்தலாவின் தூரத்து உறவுக்காரன்..
“என்னடா.. நான் சொன்னத வாங்கிட்டியா...” சகுந்தலா கேட்க “ஆமாக்கா... வாங்கிட்டேன்...” என்று பவ்யமாக பதிலளித்தான்.
“என்னம்மா.. கனகு கிட்ட என்ன வாங்க சொன்னீங்க???” என்று ரேணுகா புரியாமல் கேட்க, “கல்யாணப் பரிசு..” என்று மட்டும் கூறிய சகுந்தலா கனகவேலை பார்த்து “போ... இதை கொண்டு போய் கல்யாணப் பொண்ணுக்கு என்னோடைய பரிசுனு சொல்லி நிர்மலா வீட்டுல கொடுத்துட்டு வா...” என்றார்..
“சரிங்கக்கா...” என்று தலையாட்டியவன் “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிர்ரேன்...” என்றுவிட்டு விஸ்வநாதன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
தொடரும்.........
‘ஆதியின் நிலா’ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் செல்லக்குட்டீஸ்....
மணமேடையில் உட்கார்ந்திருந்த நித்திலா லேசாக பார்வையை திருப்பி அருகிலிருந்தவனை பார்த்தாள். பாறைபோல் இறுகிக் கறுத்த முகத்துடன் உட்கார்ந்திருந்தான். அதே நேரம் நிர்மலாவும் பேரனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. ‘இந்த நேரத்துலயாவது முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சிருக்கானா பாரு..’
தாலி கட்டும்போது கூட வேறு ஏதோ யோசனையில் இருப்பது போல கவனமேயில்லாமல் வேகவேகமாக கட்டி முடித்துவிட்டு எழப்போனவனை தடுத்த சாரதா, “ஆதி என்ன பண்ற.. உட்காரு..” என்க, மற்றவர்களும் விசித்திரமாக பார்க்க ஆரம்பிக்கவும் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தான்.
ஆதி அவசரகதியிலும் நித்திலா நிதானமாகவும் ஒவ்வொரு சடங்காக செய்து முடிக்க அன்னையை அழைத்தவன் “அம்மா எனக்கொரு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு இதெல்லாம் எப்ப முடியும்..” என்று எரிச்சலுடன் கேட்க,
“ஆதி.. உனக்கு இன்னைக்கு கல்யாணம்... நீ ராத்திரி லேட்டா வந்து எல்லார் முன்னாடியும் என்னை சங்கடப்படுத்தின மாதிரி இப்பவும் எதையாவது பண்ணிடாதே பளீஸ்..”
சாரதாவின் கெஞ்சலில் சற்று நேரம் பொறுமையாக நின்றவன் அவனது ஃபோன் தொடர்ச்சியாக அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதற்குமேல் பொறுக்க முடியாமல் கிளம்பிவிடும் உத்தேசத்தில் முன்னேறப் பார்க்க அந்த நேரம் பார்த்து அவன் அருகில் வந்த சௌர்யா,
“என்னங்கண்ணா.. இவ்வளவு அவசரமா எங்கே போக போறீங்க..??” என்றான் கேள்வியாக “அதுவும் தாலி கட்டுன கையோட கிளம்பிட்டீங்க..”
“ஏய்... உன் வேலைய பார்த்துக்கிட்டு போடா..” வார்த்தைகளை கடித்து துப்பினான் ஆதி..
“நான் உங்களுக்கு விஷ் பண்ணலாம்னு வந்தேன்.. திட்டுறீங்க பார்த்தீங்களா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலைங்ண்ணா... நீங்க பல வருஷமா ஸ்கெட்ச் போட்டு, ப்ளான் பண்ணி பண்ணின கல்யாணம்... முகத்துல சந்தோசமே இல்லையே... ஏன் ப்ரோ என்னாச்சு.. உங்க ப்ளான்ல எங்கேயாவது ஓட்டை விழுந்துடுச்சா என்ன...” என்று யோசிப்பது போல் தாடையை தடவியவன் “அதெல்லாம் நீங்க பக்காவாத்தானே ப்ளான் பண்ணிருப்பீங்க... அப்புறம் எப்படி..??”
பாய்ந்து சௌர்யாவின் சட்டையை பிடித்தவன் “எங்கடா மித்ரா..??” அடக்கப்பட்ட குரலில் சீறினான் ஆதி.
“ஹப்பா... கப்புனு புடிச்சிட்டீங்க பார்த்தீங்களா.. க்ரேட் ண்ணா நீங்க.. ஆதிதேவ்னா சும்மாவா...” அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே மற்றவர்களின் கவனத்தை கவராமல் தன் சட்டையிலிருந்து அவன் கரங்களை பிரித்துவிட்டவன் நிதானமாக ஆதியின் முகத்தை பார்வையிட்டான்.
விட்டால் சௌர்யாவை அங்கேயே கொன்று புதைத்துவிடும் வெறியுடன் ஆத்திரத்தில் முகம் சிவந்து தாடை விடைக்க கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான் ஆதி.. சௌர்யாவுக்கே அவனை பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது..
உடனே “அப்படி பார்க்காதீங்கண்ணா.. உங்கள பகைச்சிக்கிற தைரியமெல்லாம் எனக்கு இல்லவே இல்ல..” என்று அப்பாவியாக கூறியவன் “இந்த கதைக்கு ஸ்க்ரீன் ப்ளே, டயலாக், டைரக்ஷன் எல்லாமே.............” என்று நிறுத்தி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாலி கட்டுனீங்களே மிஸஸ் ஆதிதேவ்... அவங்களேதான்.... அதனால நீங்க எது பண்றதா இருந்தாலும் உங்க பொண்டாட்டி கிட்டயே பண்ணிக்கங்க...” நக்கலாக கூறினான்..
சற்று தள்ளி சாரதாவுடன் நின்றிருந்த நித்திலாவின் பக்கம் பார்வையை திருப்பியவன் “நித்தும்மா... அண்ணன் தேடுறாரு பாரு.. இங்க வாடா செல்லம்..” என்று அழைக்க “என்ன அத்தான்..” என்று கேட்டுக்கொண்டு வந்தவளை பிடித்து ஆதியின் அருகில் நிறுத்தியவன் “தேகோ நித்தும்மா.. உன்ன நம்பித்தான் எங்க அண்ணன ஒப்படைச்சிருக்கேன்... இனிமேல் எங்கண்ணன் உன் பொறுப்புடா.. அவர நீதான் நல்லபடியா கவனிச்சுக்கனும் என்ன..” என்றான்.
“அதுக்கென்ன அத்தான்... தரமா கவனிச்சிடலாம்… அதுக்குத்தானே உங்க அண்ணன கல்யாணம் பண்ணியிருக்கேன்... நான் எப்படி கவனிக்கறேன்னு மட்டும் பாருங்க...” என்று சொன்னவளை கண்டு ஆதியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது..
“பார்க்கத்தானேடா போறேன்... சரி சரி வா நித்து அண்ணா கூட செல்ஃபி எடுத்துக்கலாம்.” என்றபடி அவனும் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்று செல்ஃபி எடுக்க தயாரானவன் பின்பு “ம்ப்ச் பாரு நித்து... அண்ணா சிரிக்கவே மாட்டேங்கிறார்... உன் ஹப்பிய கொஞ்சம் சிரிக்க சொல்லுடா...”
“உங்க அண்ணா சிரிச்சா மட்டும் இந்த மூஞ்சி நல்லாவா இருக்க போகுது... விடுங்க அத்தான் நம்ம சிரிக்கலாம்..” அவர்கள் இஷ்டத்துக்கு அவனை கடுப்படித்துக் கொண்டிருந்தனர்.
ஆதியால் ஒற்றை வார்த்தை பேச முடியவில்லை.. அவனுக்கு மித்ராவைப் பற்றி தெரிந்தாக வேண்டியிருந்தது.. நேற்று மாலையிலிருந்து ஒரு பைத்தியக்காரனை போல மித்ராவை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.. கடைசியில் இவர்களது வேலைதானா இது.. இருக்கும் இடத்தை மனதில் கொண்டு பொறுமையாக நின்றிருந்தான்.. உச்சக்கட்ட ஆத்திரத்தில் மூச்சு வாங்கியது அவனுக்கு...
“ஆதி, நித்து வாங்க.. பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க...” என்று சாரதா இருவரையும் அழைத்தாள்..
விஸ்வநாதன், நிர்மலா தம்பதியர் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர் இருவரும்... “நல்லாயிரும்மா..” என்று பேத்தியின் கன்னத்தை வருடிக்கொண்டே கூறிய நிர்மலா “நல்லாயிருப்பா..” என்று ஆதியிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் சட்டென்று நகர்ந்துவிட நிர்மலாவுக்கு முகத்திலடித்தாற்போல் ஆகிவிட்டது..
ஒருசில நொடிகள் பேரனை வெறித்துப் பார்த்தவர் பின்பு தன் முகத்தை மாற்றிக்கொண்டு பேத்தியை பார்த்து சிரித்து வைத்தார்.. அவர் மனம் வலித்தது.. “இவனுக்கு நான் என்ன பாவம் பண்ணேன்..”
“இவ்வளவு நேரமாச்சே மச்சி... இவங்க மண்டபத்த விட்டு கிளம்புவாங்களா இல்லையா.... பேசாம உள்ளே போயிடலாமா..” ப்ரசாத்..
அர்ஜுனும் அவனது நன்பர்களும் மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.
“டேய் தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுக்க வேணாம்.. அவங்க வந்துடுவாங்க.. இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பார்க்கலாம்..” என்றான் சிவா..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மண்டப வாசலில் சலசலப்பு ஏற்பட “எல்லாரும் வர்ராங்கனு நினைக்கிறேன்...” என்றபடி பார்த்தவன் “மச்சி.. இதுல சிஸ்டர எங்கடா கண்டுபிடிக்கிறது...” அவர்கள் குடும்பம் மொத்தமும் ஒரே நேரத்தில் வெளியேறுவதை கண்டு ப்ரசாத் கேட்க, “எனக்கு நிலா முகத்த மட்டுமாவது பார்த்தா போதும் மச்சி...” என்றான் அர்ஜுன் தவிப்புடன் நித்திலாவை கண்களால் துழாவியபடி...
சிவாதான் நித்திலாவை முதலில் கண்டு கொண்டவன் அதிர்ச்சியுடன் “டேய்.. கல்யாண பொண்ணுடா..” என்றான்.
“சிவா... கல்யாண பொண்ண பார்க்கவா நம்ம வந்திருக்கோம்.. சிஸ்டர் எங்கேனு பாருடா...”
“மச்சான்.. சிஸ்டர் தான்டா கல்யாண பொண்ணு...” கம்மிய குரலில் சிவா கூற அதன்பிறகுதான் அர்ஜுனும் ப்ரசாத்தும் மணமக்கள் பக்கம் பார்வையை திருப்பினர்.
ஒருபுறம் ஆதியின் கையை பற்றிக்கொண்டு மறுபக்கம் வந்து கொண்டிருந்த சௌர்யாவிடம் சிரித்து பேசியபடி மணப்பெண் அலங்காரத்தில் தேவதையென வந்து கொண்டிருந்தது சாட்சாத் நித்திலாவேதான்..
அவனது நிலா!!!
நம்பமுடியாத அதிர்ச்சி, திகைப்பு... மூச்சுவிடவும் மறந்தவனாய் ஸதம்பித்துப்போய் நின்றுவிட்டான் அர்ஜுன்..
‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் அதிர்வுடன் பார்த்த ப்ரசாத்தின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த நேம் போர்ட் பட்டது..
‘ஆதிதேவ் வெட்ஸ் நித்திலா’
மூவரும் இத்தனை நேரம் அங்குதான் நின்றிருந்தார்கள். ஒருவர்கூட அதனை கவனிக்கவில்லையே..
ப்ரசாத், சிவா இருவராலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான்கு வருடங்களுக்கும் மேலாக நன்பனின் காதலை உடனிருந்து பார்த்தவர்கள் அல்லவா...
“அந்த பொண்ணு மட்டும் கிடைக்கலைனா இவன் செத்துடுவான்டா..” அவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளும் வார்த்தைகள்.. இருவரது காதுகளிலும் இப்போது நாரசமாக ஒலித்தது... அவர்களது இதயமே பிளந்துவிடும் போல இருந்ததில் தங்களுக்கே இந்த நிலை என்றால்.... இருவரும் அர்ஜுனை திரும்பி பார்த்தனர்..
சிலையாக நின்றவனின் கண்கள் மட்டும் சிரித்தபடியே காரில் ஏறிக் கொண்டிருந்த நித்திலாவின் மீது நிலைகுத்தி நின்றது....
#######################
“இதுக்குத்தான்... இதுக்குத்தான் அப்பவே அந்த ஆதி பயல கொன்டுடலாம்னு சொன்னேன்... அரை உசிர்ல துடிச்சிக்கிட்டு இருந்தவன காப்பாத்தி விட்டீங்க... இப்போ அவன் நம்ம தலையிலயே கை வெச்சிட்டான்... எல்லாம் நாசமா போச்சு....” வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான் சந்திர ப்ரகாஷ்..
மகன் கத்துவதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த காபியை நிதானமாக பருகிக் கொண்டிருந்தார் சகுந்தலாதேவி...
“நீதான்டி ஓடிப்போய் அவன காப்பாத்தி விட்ட...” என்று சகோதரியான ரேணுகாவை பார்த்து அவன் கோபமாக கூற..
“இங்க பாரு.. நான் ஒன்னும் என் இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் பண்ணல.. அம்மாதான் அவன் உயிருக்கு எதுவும் ஆக கூடாதுனு சொன்னாங்க.. அதனால காப்பாத்தினேன்.. இல்லைனா எனக்கென்ன தலைவிதியா அவன கொலை பண்ண திட்டமும் போட்டு காப்பாத்தியும் விடுறதுக்கு...” என்று பதிலுக்கு காய்ந்தாள் ரேணுகா “நீ எது கேக்குறதா இருந்தாலும் அம்மாகிட்டயே கேளு... என்கிட்ட சத்தம் போடுற வேலைய வெச்சிக்காதே...”
அவள் சொன்னது அத்தனையும் உண்மை என்பதால் அன்னையை திரும்பி முறைத்தவன், “ஏம்மா... ஏன் இதை நடக்க விட்டீங்க... நம்ம எத்தன வருஷமா இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம்... இப்படி ஒரே நாள்ள...... எல்லாம் தலைகீழா போச்சே... சை... உங்க கிட்ட தான்மா கேக்குறேன்.. ஏதாவது பேசுங்க...” என்று அவன் மீண்டும் பொறுமையிழந்து சத்தம் போட ஆரம்பிக்க காபியை குடித்து முடித்து கப்பை வைத்தவர் அதே நிதானத்துடன் மகனை ஏறிட்டார் சகுந்தலாதேவி..
“ம்ம்ம்ம்... என்ன சொன்ன??.. அவன அப்பவே கொன்னுருக்கலாம்னு சொன்ன... அப்படித்தானே... அவன அன்னைக்கே கொன்னுருந்தா... அந்த ஜெயதேவ் நம்மதான் அவன் பேரன கொன்னோம்னு கண்டுபிடிச்சி, இந்நேரத்துக்கு நம்மள புதைச்ச இடத்துல ஆல மரமே முளைச்சிருக்கும்...”
“சரி.. அது அப்போ நடந்தது... நடந்து முடிஞ்சிடுச்சி... இப்போ இந்த கல்யாணத்த எதுக்கு நடத்த விட்டீங்க... சேது மாமா சொன்னப்பவே கிளம்பி போய் ரெண்டுல ஒன்னு பார்த்திருக்கலாமே... இப்படி பண்ணிட்டீங்களேம்மா... நான்தான் நேத்து ஊர்ல இல்லாம போயிட்டேன்... நீயாவது அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே...” என்று அன்னையிடம் ஆரம்பித்து சகோதரியிடம் முடித்தான்.
“ப்ரகாஷ்... நான் உன் அம்மாடா.. உனக்கே இவ்வளவு கொதிப்பா இருக்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்.. எல்லாம் காரணமாத்தான்டா விட்டு வெச்சிருக்கேன்....” அவரது பிள்ளைகள் இருவரும் புரியாமல் பார்க்க, “அந்த விஸ்வநாதனுக்கு நெஞ்சுவலி வந்ததா சேது சொன்னான்.... இந்த மாதிரி சமயத்துல நம்ம பிடிவாதமா இருந்தாலோ, சண்டைக்கு போனாலோ நிர்மலா அந்த விஸ்வநாதன் பக்கம் சாய்ஞ்சிடுவா... அதுக்கு நம்ம இடம் கொடுக்க கூடாது...”
“அவ என்னை நம்பிக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான்டா நம்ம நினைக்கிறதெல்லாம் நடத்த முடியும்... இத்தனை நாள் நம்ம பாடுபட்டு காப்பாத்தி வெச்சிருந்த அந்த நம்பிக்கைய இந்த கல்யாணத்த நிறுத்தனும்கிற ஒரே காரணத்துக்காக கோட்டை விட்டுட எனக்கு இஷ்டமில்ல....” என்று கூறியவர், பின்பு ஒருவித குரூர சிரிப்புடன் “அவ என்னை முழுசா நம்பி என் பேச்சை கேட்டுகிட்டு இருக்கிற வரைக்கும் நம்ம எது வேணாலும் பண்ணலாம்... இப்பக்கூட அக்கா வருத்தப் படுவாங்களேன்னு என்னை பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருப்பா...”
“இனிமேல் பண்ண என்ன இருக்கு.. அதான் அவன் நித்திலாவ கல்யாணம் பண்ணிக்கிட்டானே... இனிமேல் நம்மளால என்னத்த பண்ணி கிழிக்க முடியும்....”
“ஹா... ஹா... ஹா... ப்ரகாஷ் அங்கதான்டா நீ தப்பு பண்ற… ம்ம்ம்... அந்த மித்ரா இருக்காளே... ஆதி நிற்க சொன்னா நிப்பா,, உட்கார சொன்னா உட்காருவா... அவ அவன வேணாம்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாளாமா... இதெல்லாம் நடக்கிற காரியமாடா... நித்திலாவ கட்டிக்கிறதுக்காக அவன்தான் என்னமோ பண்ணிருக்கான்...” என்க அவரது பிள்ளைகள் இருவரும் ‘அப்படியும் இருக்குமோ..’ என்ற எண்ணத்தில் சகுந்தலாவின் பேச்சை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தனர்...
“நம்ம ஆர்யாவுக்கு நித்திலாவ பொண்ணு கேட்டு போகப்போறது அவனுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு... அதனாலதான் அன்னைக்கே அவனும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கான்.. மித்ராவ கட்டிக்கப்போறதா சொல்லி அத்தனை பேரையும் ஏமாத்தி கடைசி நேரத்துல அவள என்னமோ பண்ணிட்டு அந்த விஸ்வநாதன்கிட்ட நித்திலாவ கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டிருப்பான்... பேரன் கேட்டா அந்த விஸ்வநாதன் மாட்டேன்னா சொல்லுவான்... அவனே எல்லார்கிட்டயும் பேசி சமாளிச்சி அவன் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கான்... இதுதான் நடந்திருக்கும்...”
“ம்மா!!!... எப்படிம்மா???” அவருடைய பிள்ளைகள் இருவரும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்துடன் கேட்க, அதற்கு சிரித்தவர் “அதான் சொன்னனே... நான் உங்க அம்மாடா...” என்றார்..
“ஆனா நித்திலாவும் உடனே சம்மதிச்சிட்டாளேம்மா...” ரேணுகா குழப்பத்துடன் கேட்டாள்.
“ம்ம்ம்... அதுதான் எனக்கும் புரியல.. ஒருவேள குடும்ப கௌரவத்த காப்பாத்தனும்னு பண்ணியிருக்கலாம்.. இல்லைன்னா அவளுக்கு அவன்மேல ஆசை இருந்திருக்கனும்... அவள தூக்கி வளர்த்ததே அவன்தானே...” சகுந்தலா..
“ஆமாமா... அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கிறதுக்கு நம்ம என்ன எல்லாம் பாடு பட வேண்டி இருந்துச்சு..” என்று எரிச்சலுடன் கூறியவள் “அப்பவே அவள தாங்கு தாங்குனு தாங்குவான்... இப்போ சொல்லவே வேணாம்.. அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கவே முடியாது....” என்றாள் ரேணுகா.
“முட்டாள்.. அவன் என்ன ஆசையா குடும்பம் நடத்த அவள கல்யாணம் பண்ணியிருக்கான்னு நினைக்கிறியா... நிர்மலாவ பழி வாங்க அவ பேத்திய கட்டியிருக்கான்... பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கொழுத்தி போட்ட நெருப்பு இப்பத்தான் பத்திக்கிட்டு எரியுது... வருவா பாரு... இன்னும் கொஞ்ச நாள்ள.. அக்கா!! என் பேரன்கிட்ட (ஆதி) இருந்து என் பேத்திய (நித்திலா) காப்பாத்துங்க அக்கான்னு என்கிட்டயே கதறிக்கிட்டு வருவா அந்த நிர்மலா.. அப்ப ஆரம்பிக்கலாம் நம்ம ஆட்டத்த...” சகுந்தலாவின் குரலில் குரோதம் வழிந்தோடியது..
“என்ன ஆட்டத்த ஆரம்பிக்க போறீங்க...” என்று கேட்டபடி அங்கு வந்து சேர்ந்தாள் சந்திர ப்ரகாஷின் ஒரே மகள் ஷிவானி... “என்ன அந்த ஆதி, நித்திலா கல்யாண மேட்டர் பேசிக்கிட்டு இருக்கீங்களா... அதான் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இல்ல.. இனிமேல் என் ரூட் கிளியர்.. சட்டுபுட்டுனு எனக்கும் ஆர்யா மாமாக்கும் கல்யாணம் பண்ணுற வழிய பாருங்க..”
“என் செல்லம்..” என்று பேத்தியை அணைத்துக் கொண்டவர் “உன் ஆர்யா மாமா உனக்குத்தான் கண்ணு.. ஆனா அதுக்கு முன்னாடி அந்த நித்திலாவ வெச்சி நமக்கு ஒருசில காரியம் ஆகவேண்டி இருக்கு... அதெல்லாம் முடிஞ்சிடட்டும்... அப்புறம் அவள இருந்த இடமே தெரியாம பண்ணிட்டு உனக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.. என்ன...” என்றார்.
“என்னமோ போங்க பாட்டி.. அன்னைக்கு என் மாமா அவளுக்கு மோதிரம் போட்டுட்டு வந்ததையே என்னால தாங்கிக்க முடியல... நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா....” என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுவதை போல் கூறியவள் “அவளோட அந்த கைய துண்டு துண்டா வெட்டி எடுக்கனும் மாதிரி இருக்கு...” என்றாள் வெறுப்புடன்.
“அதுக்கென்ன கண்ணு.. முடிஞ்சா அதையும் பண்ணிடுவோம்...”
“பாட்டினா பாட்டிதான்...” என்று சகுந்தலாவை முத்தமிட்டு விட்டு சென்றது வெறும் இருபதே வயது நிரம்பிய அந்த விஷச்செடி..
கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வீட்டு டிரைவர் கனகவேல் கையில் ஒரு பெட்டியுடன் வந்து நின்றான். அவன் சகுந்தலாவின் தூரத்து உறவுக்காரன்..
“என்னடா.. நான் சொன்னத வாங்கிட்டியா...” சகுந்தலா கேட்க “ஆமாக்கா... வாங்கிட்டேன்...” என்று பவ்யமாக பதிலளித்தான்.
“என்னம்மா.. கனகு கிட்ட என்ன வாங்க சொன்னீங்க???” என்று ரேணுகா புரியாமல் கேட்க, “கல்யாணப் பரிசு..” என்று மட்டும் கூறிய சகுந்தலா கனகவேலை பார்த்து “போ... இதை கொண்டு போய் கல்யாணப் பொண்ணுக்கு என்னோடைய பரிசுனு சொல்லி நிர்மலா வீட்டுல கொடுத்துட்டு வா...” என்றார்..
“சரிங்கக்கா...” என்று தலையாட்டியவன் “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிர்ரேன்...” என்றுவிட்டு விஸ்வநாதன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
தொடரும்.........
‘ஆதியின் நிலா’ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் செல்லக்குட்டீஸ்....
பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி
Part 2 Nithilavin attam start ayiruchu.Pavam Athi Nila kitta mattitu mulikka poran
www.srikalatamilnovel.com