இதயம் 1:
அந்த இரவுநேர கேளிக்கை விடுதி அதற்குரிய கோட்பாடுகளுடன் உலகில் உள்ள அத்தனை தீயதுகளின் அடையாளங்களோடு முன்பகல் 12 மணிக்கு கூட காலை 9 மணி மணி ரயில் நிலையம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
பருவ வயசில் ஆரம்பித்து காதலர்கள் ,கல்யாணமானவர்கள் , பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆனவர்கள் ,ஏன் தாத்தா ஆனவர்கள் கூட வயது வித்தியாசம் இன்றி மது மற்றும் மாதுவுடன் லயித்து கொண்டிருந்தனர்.
அந்த விடுதியின் குறைந்த பட்ச நிபந்தனை பணம் என்பதோடு நின்றுவிட்டது.
அந்த பெரிய ரூமின் மூலையில் உள்ள சோபாஃவில் ஒரு அழகி தன்வசம் உள்ள செயற்கை அழகு சாதன பொருட்களால் பேரழகியாக தன்னை மாற்றி அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.
பாவம் தன்னை அழகுபடுத்தி கொள்ளவே அதிகம் செலவு செய்திருப்பாள் போல உடையில் கொஞ்சம் இல்லை, அதிகமாகவே வறுமை தெரிகிறது.
அந்த உடை மார்பு பகுதியில் ஆரம்பித்து தொடையை தாண்டி ஒரு இஞ்சி கூட இறங்கவில்லை.
அவள் பெயர் நமக்கு தேவை இல்லை.ஆனால் அவளுக்கு அருகில் இருப்பவனின் வர்ணனை கொஞ்சம் தேவை படுகிறது.அந்த யுவதியின் தொட கூடாத இடங்களை எல்லாம் தொட்டுக்கொண்டும் பார்க்க கூடாத இடங்களை பார்த்துக்கொண்டும் இருக்கும் அவர்தான் இல்லை இல்லை அவன் தான் தி கிரேட் ரங்கநாதன் தமிழ் நாட்டின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவன்.
பின் 50 களில் இருக்கும் போல அவன் வயது அதன் அடியாளமாய் பள பளவென்று முன் வழுக்கையுடனும் நன்கு சரிந்த தொப்பையுடனும் இருந்தான்.
அந்த யுவதியின் வயதில் கண்டிப்பாக அவனுக்கு ஒரு பெண்ணே பையனோ இருக்க வாய்ப்புண்டு..
அதன் பிரதிபலிப்பு , குற்ற உணர்வு எதும் இல்லாமல் தள்ளாட முடியாத போதையில் அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையில் நுழைந்தான்.
அவன் கொடுத்த பணத்திற்கான வேலை முடிந்ததும் அந்த பருத்த உடம்பை நகர்த்த முடியாமல் நகர்த்திவிட்டு வெளியே வரும்போது அவளுக்கும் நெஞ்சம் கொஞ்சம் சுருக்கென்றே இருந்தது.,
இருந்து என்ன பயன் அந்த எண்ணம் அவளுக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை என தெரிந்த அடுத்த நொடி தோளை குலுக்கிக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.
ஒரு சாமானியனின் ஒரு மாத உழைப்பிற்கு உண்டான பணத்தை தன் அரைமணி நேர இச்சைக்கு செலவழித்துவிட்டு தள்ளாடிய படியே தன் காரை நோக்கி நகர்ந்தது அந்த ஆறறிவு ஜந்து..
தன் காரில் ஏறி கதவை சாத்தும் போது மறுபுறம் கதவை திறந்து கொண்டு ஒரு மச மச உருவம் ஏறி அமர்ந்தது.
என்ன கண்ணை கசக்கி கொண்டு பார்த்த போதும் அடித்த சரக்கு அந்த உருவத்தை தெளிவாக காட்டவில்லை..
“யாரது” என்றான் குளரியபடி
“ அந்த குரல் தனது தனித்தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே உள்ள கம்பீரத்தோடு “ நான்தான் அக்னி “ என்று ஒலிக்க
பெண் குரல் என்றதும் ரங்கநாதன் இழித்தபடி அருகில் செல்ல அவன் அருகாமையில் இருந்து அக்னி சிறிது விலக வெளியில் உள்ள லைட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் தெரிந்தது.
பால் நிலா போன்ற மாசு மருவில்லா அழகியமுகம் வாகு இல்லாமல் நன்றாக தூக்கி போட்ட போனிடையில் ஹேர் ஷ்டலில் ,ஓசன் ப்ளூ ஜீன்ஸ் அதே நிறத்தில் ஜீன் துணியில் உள்ள ஒரு முழுக்கை சட்டை காதில் வெள்ளை நிற கல் வைத்த சிறு தோடு.
எந்த அலங்காரமும் இல்லாமல் துலக்கி வைத்த வெண்கல விளக்கு போல இருந்தாள் அக்னி.
அவளின் கண்களில் மட்டும் எப்பொழுதும் ஒரு துணிச்சல், ஒரு அலட்சியம் அது அவளுக்கு கூடுதல் அழகை கொடுக்கும்..
அந்த துணிச்சல் அந்த அலட்சியம் எல்லாம் கண்டிப்பாக ஆரோக்கியமானதாகத்தான் இருக்குமே தவிர அகந்தையாக இருக்காது.....
அக்னி அவனை நோக்கி ஒரு வரிதான் ஒரே வரிதான் கூறினாள்.” நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட அதான் கடைசியா பார்க்கலாம்னு வந்தேன் “ என்று கூறியவள் அடுத்த நொடி காரைவிட்டு இறங்கிவிட்டாள்.
முழு போதையில் இருக்கும் அவனுக்கு அவள் சொல்லும் எதும் புரியவும் இல்லை, புரிய அவன் முயற்சியும் செய்யவில்லை
காரை எடுத்து கொண்டு அதிவேகத்தில் வளைத்து வளைத்து ஒட்டிக்கொண்டு நகரத்திற்கு வெகு தொலைவில் உள்ள விடுதியில் இருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அந்த கார் செல்லும் திசையையே பார்த்து கொண்டிருக்கும் அக்னியின் கண்களில் எந்த ஒரு மாறுபாடு, எதையும் சாதித்த உணர்வு என்று எதும் இல்லை மாறாக அது சாதரணமாகவே இருந்தது.
அப்பொழுது தனது அருகில் வந்து நிற்கும் ஸ்கூட்டி சத்தத்தில் திரும்பி பார்த்தாள் அங்கே அவள் தோழி ஷாம்னி கண்களில் மிரட்சியுடன் அருகில் வந்து நின்றாள்.
அவளை பார்த்து லேசாக சிரிக்க ,ஷாம்னி“ பிலிங்கி இது உனக்கு தேவைதானா,ஏன் தேவை இல்லாத பிரச்சனை” என்று படபடப்போடு கேட்க
“ கண்டிப்பா தேவைதான் ஷாமு , வண்டியை எடு” என்றவள் பின்னே ஏறிக்கொண்டாள்.
அந்த இரவு அவள் கொடுத்து வந்த வேலையை சரியாக செய்தது.
இரவு வீட்டிற்கு வரவே 1 மணிக்கு மேல் ஆனதால் அக்னி நன்கு அசந்து தூக்கிக் கொண்டிருக்க அதிகாலை நான்கு மணிக்கே அக்னியின் செல் இரவு வைத்த
அலாரத்தின் பலனாக விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.
அதை அணைத்து வைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர நினைக்கும் போது அடுத்த நொடி அந்த கணீர் குரல் அந்த வாக்கியத்தை அவளின் காதருகே உரைக்க உடனே எழுந்தவள் குளித்து விட்டு தூங்கி விழுந்ததின் அடையாளங்கள் ஏதும் இன்றி புத்துணர்ச்சியுடன் கையில் தடிமனான TNPSC புத்தகமும் அருகில் ஒரு ஆப்டியூட் புத்தகமும் இருக்க படிக்க ஆரம்பித்துவிட்டாள் .
7 மணிக்கு கீழே இறங்கி வரும் போது அங்கே அவளின் அன்னையும் தந்தையும் அவள் நடந்து வரும் அழகை பார்த்து கொண்டிருந்தனர்.
அவள் தந்தையோ பெருமையாக அவள் அன்னையோ பெண் பிள்ளை இப்படி இருக்கிறாளே என்று வருத்தத்துடனும்.
ஆம் அவளிடம் எத்தனை உடை இருந்தாலும் அத்தனையும் ஜீன்ஸ் மட்டுமே, அதே போல் சட்டையும் எல்லாம் முழுக்கையில் ஆண்பிள்ளைகள் போடும் சட்டைகள் போலத்தான் .
இப்பவும் கூட ப்ளூ ஜீன் ,.கருப்பு நிற முழுக்கை சட்டையுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தாள்
“ அப்பா” என்று கூவிக்கொண்டே அவரின் கழுத்தை தொங்கிக்கொண்டும் அவளின் அன்னையின் கன்னத்தில் முத்தமும் ஒரே நேரத்தில் கொடுக்க
அவளின் தந்தை ராமன் “ என் செல்லம் “என கொஞ்ச அவளின் அன்னை சத்யாவோ“ ஏய் கோட்டான் அடங்கி உட்காரு” என்று அதட்டல் போட்டார்.
அக்னி ,ராமன் சத்யா தம்பதியரின் ஒரே செல்வ மகள் தாய் வழி சொத்தான தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் பேக்டரிக்கும் தந்தை வழி சொத்தான இந்தியாவின் தலை சிறந்த ஆக்ரோ (agro) கம்பெனிக்கும் ஏக போக வாரிசு
ராமனும் சத்யாவும் வேறு வேறு இனத்தவர் இருவரும் வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் ,இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப
சத்யாவின் வீட்டில் அதிக எதிர்ப்பின் காரணமாக சத்யா வெளியே வந்து ராமன் வீட்டின் முழு சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் அவர்களது.
அக்னி பிறந்த கொஞ்ச நாளில் சத்யாவின் பெற்றோர்கள் இறக்கவே வாரிசான சத்யாவிற்கு நிர்வாக பொறுப்புகள் வந்து சேர்ந்தது. ராமன் சத்யா இருவரும் திறமையாக வளர்த்து தங்கள் தொழிலை என்றும் ஏறு முகத்திலையே வைத்து உள்ளனர் .
நம் அக்னிக்கு அந்த மாறி தொழிலை பார்க்கும் எண்ணங்கள் எதுவும் இல்லை அவள் அதிகபட்ச எண்ணம் கனவு எல்லாம் குறைந்தது ஒரு நாளில் ஒருவருகாவது உதவி செய்ய வேண்டும் என்பதே...
இப்பொழுது இரண்டு வருடங்களாக இன்னும் 2 விஷயம் அதனுடன் சேர்ந்து இருக்கிறது அவ்வளவுதான்.வேறு எந்த மாற்றமும் இல்லை
“ ஏன் பாப்பு ஒரு சுடிதார் இல்லை புடவையை ஒருதட கூட கட்ட கூடாதா எப்பொழுதும் இப்படி ஜீன்ஸ், ஷர்ட் போட்டுக்கிட்டு சுத்துரியே “ என சத்யா கூற
“ அம்மா பிலீஸ் எனக்கு இதான் பிடிச்சிருக்கு தொல்லை பண்ணாத.. உனக்காகதான் பாய் கட் வச்சிருந்த ஹார் ஸ்டையில இப்படி முதுகு வர வளர்த்து இருக்கேன் இதுவே எனக்கு அவ்வளோ தொல்லை பண்ணுது “ என்று முகம் சுழிக்க.
இதற்கு மேல் பேசினால் காலை உணவு சாப்பிட மாட்டாள் என அறிந்த சத்யா வாயை மூடிக்கொண்டார்..
இருந்தும் இவ்வளவு அடர்த்தியான முடி இடுப்பிற்கு கீழ் வளர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
மூவரும் காலை உணவை சாப்பிட்டு கொண்டே அன்றைய தினசரிகளை அலசினர்.
ராமன் “ பாப்புகுட்டி இண்டஷரியலிஸ்ட் ரங்கநாதன் நேத்து நைட் கார் ஆக்சிடெண்ட்ல செத்துட்டாராம் டா இன்னைக்கு நியூஸ் ஹைலைட் அதான் “என்க .
( கொன்னதே உங்க பொண்னுதான்...அங்கிள்...)..
அந்த ரங்கநாதன் யார் என்றே தெரியாதது போல ராமனிடம் அரைமணிநேரம் விசாரணையை முடித்து கொண்டு தன் அப்புச்சி ,ஆச்சியை ( ராமனின் பெற்றோர்) பார்த்துவிட்டு தன் தந்தையிடம் வந்து
“ அப்பா உங்க PA க்கு இன்னைக்கு கொஞ்சம் லீவ் கொடுங்க அவளோட எனக்கும் கொஞ்சம் வெளில வேலை இருக்கு..
( எங்க EB ஆபீஸ் வாசல்ல தான ok ok )
சத்யா “ இன்னைக்கு எங்க.. ஹெல்மட் விற்க போறீங்களா பாப்பு”என்க அதற்கு அக்னி பார்த்த பார்வையில் பஸ்பம் ஆகாமல் தப்பித்துவிட்டார் .
அதை பார்த்து சிரித்து கொண்டே ராமன் “ ஏன் டா உன் பிரண்ட் ஷாம்னி இல்லையா அது என்ன என் PA” என்க
"அவள் இன்னைக்கு லீவு போட மாட்டேன் சொல்லிட்டா அப்பா அதான் கோபம் “ என்றாள்.
ராமன் “ சரி டா அப்பறம் அப்பா நாளைக்கு பெங்களூர் போறேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் அம்மா பிஸின்றதால நீ தான் ஒரு வாரம் பார்த்துக்கணும் என்க “
அக்னி“அப்பா ஒருவாரம்லாம் முடியாது மாக்சிமம் 3 நாள்தான் நான் கவேர்ட்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்கணும்”
சத்யா “ பாப்பு நாமளே தினமும் 1000 பேருக்கு வேலை கொடுக்குற இடத்தில இருக்கும் போது நீ ஏன் இப்படி ராப்பகலா படிச்சு கஷ்டப்படுற,நாளைக்கே வந்து பொறுப்பை எடுத்துக்கோ “ ..
அக்னி “ எனக்கு அதெல்லாம் வேணாம் அம்மா.. எனக்கு 15000 சம்பளத்துல ஒரு அரசாங்க வேலை மட்டும்தான் “ என்றவள் அடுத்த நொடி வெளியேறிவிட்டாள்..
எப்பொழுதும் ஏன் என்று கேட்க அவள் இருப்பதும் இல்லை அப்படி கேட்டாலும் பதிலும் வருவது இல்லை. சத்யா பாவமாக ராமனை பார்க்க அவர் ஆறுதலாக கண்களை மூடி திறந்தார்.
அக்னி அவள்தோழி ஷாமுவை அழைத்துக்கொண்டு நேராக சென்றது அந்த மத்திய சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு .
அவளின் ஸ்கோடா காரின் டிக்கியில் ஏறி உட்கார்ந்து ஒரு காலை மடக்கி ஒரு காலை கீழே தொங்கவிட்டுக்கொண்டு கைகள் இரண்டையும் பின்னே காரின் மேல் ஊன்றிக்கொண்டு அந்த மின்வாரிய அலுவலகத்தின் வாயிலையே தன் கூலிங் கிளாசிற்கு பின்னே உள்ள கண்களின் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆவலோடு.
ஒரு இரண்டரை வருடமாக அவளின் இரவுகளும் பகலும் இங்கே வந்து ஒரு அரை மணி நேரமாவது நிற்காமல் முடிவதும் இல்லை ஆரம்பிப்பதும் இல்லை.
தீப்பிளம்பு போல இருக்கும் நம் நாயகி இங்கே வந்தால் மட்டும் எப்பொழுதும் உருகி கரைந்து விடுவாள் அவளின் செல்ல பனிகட்டியால்.
சரியாக 9.25 க்கு கருப்பு நிற பல்சர் பைக் வந்து நிற்க அதில் 6 அடிக்கும் அதிகமான உயரத்துடன் ஒரு ஆண்மகன் இறங்கி ஹெல்மட்டை கழட்ட அவனை அப்படியே அக்னியின் விழிகள் விழுங்கி கொண்டிருந்து.
அடர்த்தியாக முன் நெற்றியில் விழும் முடி, ஹேர் ஜெல்லில் அடங்க மறுத்து திமிறிக்கொண்டிருக்க ..அளவான புருவத்துடன் ஆளை விழுங்கும் தீர்க்கமான அதே நேரம் சாந்தமான கண்களோடு, வேலையின் பொருட்டு தாடி,மீசை ட்ரிம் செய்து அளவோடு இருக்க ,
நல்ல சந்தன நிறத்தில், ஏதே ஒரு நாளைக்கு 1 அல்லது 2 சிகிரெட் வரை குடிக்கும் லேசான மிக லேசான கருத்த உதடுகளுடன் அந்த கருப்பும் உத்து பார்த்தால் மட்டுமே..
( ஆக இது நம்ம கண்ணழகி தெ ரியாது போலவே மாட்டுனடா மாப்ள...)
எதிராளி 10 வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தையில் பதிலை சொல்லும் அமைதியான ஆளுமையும் , கண்களில் கட்டளை பிறப்பிக்கும் புத்தி கூர்மையும் கொண்ட அவளின் அவன் ,துசர்...
துசர் வேதநாயகம் சீப் என்ஜினீர் ஆப் சென்ட்ரல் சென்னை _ EB டிபார்ட்மெண்ட் ( cheif enginer of central chennai).
இந்த இரண்டரை வருடங்களாக தினமும் தன் காதலை சொல்ல வருகிறாள்தான் ஆனால் ஒரு முறை கூட சொல்ல முடியவில்லை அவனின் ஒரு பார்வைக்கு விழுந்துவிடுகிறாள் எப்பொழுதும் .
இப்பொழுது கூட துசர் ஏதோ உறுத்த கண்களை அந்த பகுதியில் சுழல விட அவனின் விழி வட்டத்தில் அவளும் அவள் காரும் அரை நொடி பதிய அதற்கே கார் டிக்கியில் இருந்து உடல் உதற வழுக்கி கொண்டு கீழே விழுந்துவிட்டாள் அக்னி.
துசரை பார்க்கும் போதும் மட்டும் அவன் கண்கள் தன் மேனியோடு கலக்கும் போது மட்டுமே தன் உடம்பில் உணரும் பெண்மையின் அடையாளங்கள் எப்பொழுதுமே அவளுக்கு பெருமைதான்.
இந்த அக்னி என்னும் நெருப்பை அணைக்கும் பனியாக இருந்தான் நம் துசர்..
அவனும் அவளை சில மாதங்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் 30 அடி இடைவெளியில் ஆனால் அதை தாண்டி அவன் அவளை ஆராய முற்படுவது இல்லை.ஏன் என்றால் அவனின் இரவுகளையும் கனவுகளையும் ,அவனின் இளமையும் அவனின் ஆராட்சியையும் அந்த இரு விழிக்கு சொந்தகாரி அல்லவா திருடிவிட்டாள்.
கீழே விழுந்த கிடந்த அக்னியை பார்த்த ஷாமினிக்கு வாய் கொள்ளாத சிரிப்பு.
அக்னி பெயருக்கு தகுந்தாற் போல நெருப்பாக இருப்பவள் தன் தோழி, எத்தனை கடுமையான சூழ்நிலைகளை கூட எளிதாக துளி கடினம் இல்லாமல் கடந்தவள்,கடப்பவள்..
இத்தனை ஏன் நேற்று இரவு ஒரு பெரிய தொழிலதிபரை திட்டமிட்டு சுவடுகள் ஏதும் இன்றி கொலை செய்தவள் ஒரு ஆணவனின் அரை நொடி பார்வையில் இப்படி விழுந்துகிடக்கிறாளே என்று .
இதைதான் காதல் என்பார்கள் போல என்று யோசித்தவளின் நினைவுகளில் ஒரு கோணங்கியின் முகம் வந்து போனது.
ஷாமினுக்கும் அக்னிக்கும் ஒரு வயதுதான் என்றாலும் அவளிடம் பிரமிப்பாக பார்க்கும் விஷயங்கள் ஷாமினிக்கு நிறைய உள்ளன.
“ ஷாமு “ என்ற அக்னியின் குரலில் அவளின் சிந்தனை அறுபட “சாரி பிலிங்கி எதோ யோசனையில் என்று அவளை நோக்கியவள்
“ என்ன பிலிங்கி இன்னைக்கும் அவுட்டா “என்று சிரிக்க அவளை முறைத்து கொண்டே அமர்ந்து இருந்தாள் அக்னி
அவளின் செய்கைகள் அனைத்தும் முன்னுக்கு பின் நிறைய முரண்பாடுகளோடு இருக்க காரணம் அவளுக்கே வெளிச்சம்...
போதுமா....