Anitha Selvam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 18
அந்த பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் திரைகளால் பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் ஒரு பகுதியின் படுக்கையில் அமர்ந்திருந்த மனோ, பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த செழியனியனிடம் திரும்பி, "பொண்ணுக்கு கழுத்தில் கத்தி வெட்டு பட்டிருக்கிறது என்று சொல்லிஅரைமணி நேரமாச்சி. இந்த அம்மாவும் அப்பாவும் என்ன பண்றாங்கனு தெரியலையே" என்று குறைபட்டாள்.
கையிலிருந்த கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து, "மேகமூட்டமாக இருக்குதில்லையா.. காயப்போட்டிருக்கிற துணியை எடுத்துட்டு வருவாங்க."
"செழி!!"
"பின்னே என்ன மனோ? நாம் போகலாமே. நீதான் அம்மா வந்ததும் போகலாம், அந்த பொண்ணு வந்ததும் போகலாம்னு உட்கார வைச்சிருக்க"
கண்களை சுருக்கி அவனை முறைத்தவள், அருகில் வந்த, நர்ஸைப் பார்த்து, "சிஸ்டர்.. ஏன் இன்னும் மீனலோசனியைக் கூப்பிட்டு வரவில்லை?" என்று அருகிலிருந்த பகுதியைக் காட்டி, மூன்றாவது முறையாகக் கேட்க இதுவரை," இதோ வந்திடுவாங்க.." என்று பொறுமையாகச் சொன்னவர், தற்போது சலிப்பாய், "அதை ஏன் மேடம் கேட்குறீங்க.. தோள்பட்டை லேசாக வீங்கியிருக்கு.. எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுக்கலாம் என்றுதான் டாக்டர் சொன்னார். அங்கே அந்த பொண்ணோட அப்பாவும் அண்ணாவும் தலை முதல் கால்வரை எல்லா இடத்திற்கும் எக்ஸ்ரே , சிடி எல்லாம் எடுக்க சொல்லி வம்பு பண்ணிகிட்டு இருக்காங்க"
லேசாய்ப் புன்னகைத்து அவர் கொடுத்த வலி மாத்திரையை வாங்கி வாயில் போட்டு, அவர் இன்னொரு கையில் நீட்டிய தண்ணீரை வாங்கிப் பருகினாள். இவர்தான் மனோ வந்ததும் மருத்துவர் கழுத்திலிருந்த காயத்தை சுத்தம் செய்து, ஆயின்மென்ட் ஒன்று தடவி பேன்டேஜ் போடும் போது உடனிருந்தவர்.
அவர் போனதும் செழியன், "ஓவரா பண்றாங்களே!! அந்த பொண்ணு என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா மனோ?"
"நிஜமாகவே பெரிய அப்பாடக்கர் தான்டா! நகைக் கடை ஓனர் பொண்ணு. பார்க்க அப்படியே டால் மாதிரி இருப்பா"
"நீ கொடுக்கிற பில்ட் அப்ல எனக்கே பார்க்கனும் போல இருக்கே.. நான் போய் பார்த்திட்டு வரவா?" என்றபடி, அவன் எழ, அதற்குள் தடதடவென்று செருப்பொலிகள் முன்னே வர, பின்னே, இவர்கள் திரையைக் திறந்து, சத்யாவும் சித்தார்த்தும் வந்தார்கள். "மனோ.. என்னடி ஆச்சி.. எப்படி இருக்க?" பதறியபடி வந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்த மனோ, "ஒன்னும் இல்லை சத்யா.. நல்லா இருக்கேன். இதோ பாரு சின்ன காயம்தான். ஆமாம், எனக்கு அடிபட்டதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"திடீரென்று ஆதி சார் ஃபோன் செய்து மனோ எங்கேனு கேட்டார். கிளம்பிட்டேன்னு சொன்னதும் என்னவென்றே கேட்காமல் கட் செய்துவிட்டார். வாட்ச்மேனிடம் உன் ஃபோட்டோ காட்டி இந்த பொண்ணு எப்போ கிளம்பினாங்க.. யாராவது வம்பு பண்ணினாங்களான்னு விசாரிச்சதா செய்தி வந்தது.. அடுத்த கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்து சிவாவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.. என்னென்னவோ புரளி.. உனக்கு ஃபோன் பண்ணினா நீ எடுக்கலை. ஆதியும் அதற்குப்பின் கால் அட்டென்ட் பண்ணலை. அப்புறம் சித்தார்த் உலகநாதன் சார்கிட்ட கேட்டதற்கு அவர் எல்லாம் சொன்னார்..அதான் உடனே கிளம்பி வந்தோம். நீ சொல்லு. என்ன ஆச்சி?"
மனோ நடந்தது அனைத்தையும், அதாவது சங்கரன் சார் கொடுத்த வேலையிலிருந்து விலாவாரியாக சொல்லி முடித்து, "எனக்கு பெரிய டவுட் கரெக்டா ஆதி சார், போலிஸ் எல்லாம் எப்படி அந்த டைம்ல அங்கே வந்தாங்க?" என்று அதுவரை தன் தலையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை முன்வைத்தாள்.,
தான் கேள்விப்பட்டது வரை சித்தார்த் சொன்னான். துப்பறியும் நிபுணர் சிவாவின் நடமாட்டத்தில் சந்தேகம் உள்ளதாக சங்கரன் சாரிடம் சொல்ல, சங்கரன் சார் பிரச்சனை பெரிதாக மாறுவதால் ஆதிக்கும் தெரிய வேண்டும் என்று அவனைக் கூப்பிட்டு சொல்லிவிட, ஆதி அவளைக் காப்பாற்ற போலிசையும் அலெர்ட செய்து, அவனும் அங்கே வந்து விட்டான். அங்கே நடந்ததும் அறிந்திருந்ததால், "சூப்பர் மனோ.. பயங்கர ஹீரோயிக் வேலையெல்லாம் செஞ்சிருக்க" என்று சித்தார்த் சிலாகித்தான்.
"என்ன ஹீரோயிக் வேலை சித்தார்த் சார். சும்மா இருந்திருந்தா, இவளை மாதிரி சின்ன பேன்டேஜோட தப்பிச்சிருக்கலாம். காப்பாற்றுகிறேன்னு அந்த பொண்ணைத் தள்ளிவிட்டு அந்த பொண்ணு இப்போ உயிருக்கு போராடிகிட்டு இருக்காம்"
"நீ ஒருத்தன் போதும்டா"
"மீனாவைப் பற்றிய அப்டேட் ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடி தான் டாக்டர் எனக்குக் கொடுத்தார்."என்று செழியனிடம் சிரித்தபடி சொன்ன சித்தார்த் "நீ செஞ்சது சரிதான் மனோ.. அந்த குரூப் என்ன ப்ளான்ல இருந்தாங்க தெரியலை. ஆனா அந்த இடத்தில் கொஞ்சம் களேபரம் ஆனதில் தான் உங்க ஆட்டோவைக் கண்டுபிடிச்சி போலிஸ் வரமுடிந்தது. ஆனா நீங்க ஆட்டோ ஏறியதை எப்படி மிஸ் பண்ணினாங்க தெரியலை"
"அது.. போலிஸ் எங்களுக்காகப் பார்த்துகிட்டு இருக்காங்கன்னு தெரியாதில்லையா, பின்னே வர்றவங்களை மிஸ் பண்றதுக்காக, தலையை துப்பட்டாவால் சுத்திகிட்டேன். மீனலோசனிகிட்டேயும் வெயிலுக்கு போட்டுக்கோங்கன்னு சொல்ல அவங்களும் போட்டுக்கிட்டாங்க.."
"ஓ.. ஓகே.. "
சிறு அமைதி நிலவ, மனோ பேச ஆரம்பித்தாள், "சிவா இவ்வளோ எக்ஸ்ட்ரீமா போவார்னு நினைக்கலை."
"ம்.. அதை மறந்திடு மனோ. ஆதி பயங்கர கோபத்தில் இருக்கிறானாம். இனி அவனால் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது"
இப்போ வலி இருக்கா?" அக்கறையாய் சத்யா கேட்க, "ம்ஹீம்.. சுத்தமா இல்லை. கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க.. நான்தான் மீனலோசனி மேடமை ஒருமுறை பார்த்திட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்."
"என்னென்னவோ ரீசன் சொல்லி உட்கார்ந்துகிட்டு இருக்கா சத்யா அக்கா..இன்னும் கொஞ்ச நேரத்தில் செக்யூரிட்டி வந்து நம்மை வெளியே அனுப்பிடுவார்.."
"ரொம்ப டயர்டா தெரியுற மனோ.. காபி குடிக்கிறியா?"
இதில் கொஞ்சம் நேரத்தைத் தள்ளலாம், "ம்.. ஓகே.." மனோ சம்மதமாய் தலையை ஆட்ட, சித்தார்த் எழுந்தான், "நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நானும் உன் தம்பியும் காபி வாங்கிட்டு வர்றோம்" என்று சித்தார்த் முன்வர, செழியன் அவனோடு நடக்க ஆரம்பித்தான். கண்களாலேயே ஏதோ சைகை செய்தபடி கிளம்பிய சித்தார்த்தைப் பார்த்த மனோ ஆயாசமாய் கண்களைச் சுழற்றி, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். "என்னாச்சி மனோ?"
"ஒரு பொண்ணு காயம்பட்டு படுத்திருக்கிறேன். இப்போ போய் காதலுக்கு தூது பேசச் சொல்லி ஒருத்தர் சிக்னல் காட்டிட்டுப் போறார்"
"காதலுக்கு தூ.. "கேள்வியாய் ஆரம்பித்த சத்யா சட்டென்று நிறுத்தினாள். முகம் கன்ற, "மனோ.. ப்ளீஸ்.. இதிலே எதுவும் சொல்லாதே?"
"ஏன் சொல்லக் கூடாது?" கால்களை கட்டிலிலிருந்து தொங்கப் போட்டு சத்யாவை நேர்ப்பார்வை பார்த்தவள், தொடர்ந்தாள், "ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லு. அதற்கப்புறம், நான் இதைப் பற்றி பேசலாமா வேண்டாமான்னு சொல்றேன்."
"மனோ.. ப்ளீஸ்.."
"சத்யா.. எதுவும் இல்லைனா எத்தனை வருஷம் னாலும் சித்தார்த் காத்திருக்கத் தயார். ஆனால் இப்போது, வீட்டில் ஹைதராபாத் போக சொல்லி கேட்கிறாங்க. விட்டுட்டுப் போக முடியாது. கல்யாணம் ஆனால் உரிமையாய் கூப்பிட்டுப் போகலாமேன்னு கேட்கிறார். அவர் கேட்பதில் என்ன தப்பு?"
"எனக்கு கில்டியா இருக்குமே மனோ.."
" எனக்காகத்தான் பிரிஞ்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது, எனக்கு கில்டியா இருக்குமே சத்யா.."
"அதெல்லாம் முடியாது..உன் கல்யாணத்தின் போதுதான் எனக்கும் கல்யாணம்.."
"சினிமாவில்தான் நடக்கும்.."
"இதுவரை நடந்ததில் நிறைய அப்படிதானே இருக்கு.. அதுமட்டுமில்லாம, எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. அது மட்டும் உண்மைன்னா, ஒரே நாள் மட்டுமில்லை, ஒரே மேடையிலேயே நடக்க வாய்ப்பிருக்கு.. " தானும் மனோவின் கண்களை நேராகப் பார்த்து கேட்டாள், "என்ன மனோ.. சான்ஸ் இருக்கா?"
"என்ன சான்ஸ்.. எனக்குப் புரியலையே?" முடிந்தவரை முகத்தை நேராக வைத்தபடி பதில் சொன்னவளைச் சந்தேகமாகப் பார்த்தபடி, "நிஜமாகவா? எனக்கென்னவோ சிலநேரம் ஆதி சாருக்கும் உனக்கும் இடையில் ஒரு வேவ் ஓடுற மாதிரி இருக்கு" சந்தேகமாய் கேட்டவளின் கைகளைப் பற்றி தன் இருகரங்களுக்கு நடுவில் வைத்து, "சத்யா.ப்ளீஸ்.. ஓகே சொல்லு.. எனக்காகக் தான் பிரிஞ்சிருக்கீங்கன்னா, அதைவிட எனக்குக் கஷ்டம் வேற இருக்கும்னு நினைக்கிறியா? நீ சந்தோசமாய் இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோசமாய் இருக்கும் தெரியுமா? நான் சித்தார்த் சாரை லவ் பண்ணியிருந்தா கூட நீ ஃபீல் பண்ணலாம். சத்தியமாக லவ் பண்ணலை"
"நீ என்ன சொன்னாலும், உன்கிட்டேயிருந்து பறிச்சிகிட்டமாதிரி ஒரு ஃபீல் மனோ..என் சைட்ல இருந்தும் கொஞ்சம் யோசியேன்."
உதடுகளை ஒன்றோடொன்று அழுந்தப் பதித்தவள், அவன் அணைப்பு தந்த தைரியம் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்க்க, "ம்.. ஒரு டீல் போடலாம்.. நீ கல்யாணத்திற்கு ஓகே சொல்லு. இன்னும் உங்க வீட்ல சொல்லி, அவங்க வீட்ல சொல்லி, கல்யாணம் முடிவாகி எவ்ளோ நாள் இருக்கு. அதுக்குள்ளே, நான் எப்படியாவது கஷ்டப்பட்டு, உன் கல்யாணத்திற்கு ஜோடியாக நிற்கிறேன். ஓகே வா?"
"நீ சும்மா சொல்ற?.."
"நான் என்றைக்காவது உன்கிட்ட பொய் சொல்லியிருக்கிறேனா சத்தி? ம்.. சொல்லு.. சித்தார்த்தும் பாவமில்லையா.. எந்த தடையும் இல்லாதபோது உன்னோடு ஹைதராபாத் போகனும்னுதானே அவர் ஆசைப்படுவார். அதுமட்டுமில்லாமல், என்னையும் டார்ச்சர் பண்றார்..மதியானத்திலிருந்து ஒரே புலம்பல். அப்போவே என் ரூமுக்கு வந்து ஒரு மணி நேரம் பேசினார். இப்போ பிரிஞ்சா, அதுவே நிரந்தரமாகிடுமோன்னு பயப்படறார்மா "
எதுவும் சொல்லாமல் சத்யா, குனிந்தபடி விரல்நகங்களையே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, கதவைத் திறந்து சித்தார்த் மட்டும் உள்ளே வந்தான். "செழியன் மீனலோசனியைப் பார்க்கப் போயிருக்கிறான்" என்றபடி காபிக் கோப்பையை இருவரிடமும் கொடுத்துவிட்டு நின்றவன், மனோவிடம் புருவம் உயர்த்தி கண்களால், "எப்படி போனது பேச்சுவார்த்தை" என்பது போல் கேள்வி கேட்க, மனோ சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். அவ்வளவுதான். சித்தார்த்தின் முகத்தில் அத்தனை சந்தோசம். "வாட்.. நிஜமாகவா? உண்மையாகவா சொல்ற மனோ?"
"ஒரே கேள்வியை எப்படி கேட்டாலும் அதே பதில்தான் சித்தார்த் சார்.. மேடம் ஓகே சொல்லிட்டாங்க.."
"நான் சொல்லவேயில்லையே"
"என்கிட்ட ஏன் சொல்லனும். சார்கிட்ட சொல்லிடு.. நான் போய் மீனலோசனியை பார்த்து விட்டு வந்திடுறேன்." என்றபடி மனோ எழுந்து சித்தார்த்தின் முன் தன் வலக்கையை நீட்டி, "கங்கிராட்ஸ் சார்.. பெரிய ட்ரீட்டாகக் கொடுக்கனும்" என்றாள்.
வலக்கையால் அவள் கையைப் பற்றிய சித்தார்த், "ஒரு வாரமாய் இதுக்குதான் மனோ போராடிக்கிட்டு இருக்கேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளேன்னு கோபம் கூட வந்தது." சொன்னவன் இடக்கையை அவள் தோளோடு சேர்த்து அணைத்து, "தேங்க்யூ சோ மச்" என்க, அந்த நேரத்தில்தான் நம்ம ஆதி என்ட்ரி கொடுத்தது.
காலையிலிருந்து அவன் மனம் முழுக்க மனோவே நிறைந்திருக்க, வெவ்வேறு நிகழ்வுகளில், நினைவுகளில் அவன் சித்தார்த்தை கிட்டத்தட்ட அல்ல, முழுதாகவே மறந்தே போயிருந்தான். இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த குறளில் வள்ளுவன் சொன்ன, 'தன் நோய்க்குக் தானே மருந்து' என்பதற்கு சரியாய், மதியம், சித்தார்த்திடம் தான் விரும்புவதாகச் சொல்லிவிட்டாளா என்ற பயம், அதன்பின் மனோவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று இதுவரை அறிந்திராத நடுக்கம், அடுத்து தன் முதல் தீண்டலில் உயிர்வரை ஊடுருவியவளுக்கான ஏக்கம் என்று அவன் அனைத்து தடுமாற்றங்களுக்கும் அவள் முகமும், பார்வையும், அருகாமையுமே மருந்தாக அவனுக்குத் தேவைப்பட்டன. அந்த சிறு அணைப்பில் மனதில் தோன்றிய தீப்பொறி இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.
அடி ஆழமில்லை என்று மருத்துவமனையில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு தன் கண்ணால் பார்க்க வேணடும். எதையுமே யோசிக்காமல் மனோவைப் பார்ப்பதே குறிக்கோளாக வந்தவனுக்கு, அவன் கண்ட காட்சியில், ஹைவேயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருவன், முன்னே சட்டென்று ஒரு வண்டி வந்தால், கால்கள் ப்ரேக்கை அழுத்தி, , உடலும் உள்ளமும் குலுங்கியபடி அதிர்ச்சி மாறாமல் உறைந்திருப்பானே, அப்படிதான் உறைந்துநின்றான். தன்னைப் பார்த்ததும் இயல்பாக இருவரும் பிரிவது மனதில் பதிந்தது.
அவள் இயல்பாகத்தானே இருப்பாள்?அவள் ஏன் பயப்பட வேண்டும். அவளுக்கு என்றுமே அவன் ஆதி சார்தானே. எம்.டி. அதை மீறி அவள் என்றுமே அவனிடம் பழகியதில்லையே. காரில் அன்று பேசியது, அவளோடு யாராயிருந்தாலும் அப்படி சுவாரசியமாகத்தான் பேசியிருப்பாள். அவள் அப்படி பேசும் போது , யாராயிருந்தாலும் அவள், வீடு வந்து விடுமோ என்று இருக்கின்ற எல்லா தெருக்குள்ளும் புகுந்துதான் செல்வான்..
ஆனால் எனக்கு அவள் யாரோயில்லையே?.. இப்படி வலிக்குமா? அலைகள் அப்படியே நின்றன.. காற்று நிற்க, அசையும் மரக்கிளைகள் அப்படியே நின்றன. இதயம் உடைந்தது, என்றெல்லாம் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை வர்ணிப்பதைப் படித்திருக்கிறான். இதில் எந்த உவமையுமே அவன் அனுபவிக்கும் வலியை, முழுதாகச் சொல்லவில்லையே.
..
இருள் சூழ்ந்த அறைக்குள் இருப்பவன் உள்ளேயே சுற்றி சுற்றி வருவது போல், தன் எண்ண அலைகளுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்த, ஆதி நிமிர்ந்தான், 'நோ.. ஆதி.. நோ எமோசன்ஸ்.. ஒன்லி லாஜிக். எஸ். நான் மனோவை லவ் பண்ணுறேன். அவள் என்னை லவ் பண்ணலை. இப்போது என்ன செய்ய வேண்டும். இனி இன்னொருவனோடு, இன்னொருவனுடையவளாக, அவளைப் பார்க்க முடியாது. ஒரே தீர்வு, க்ளீன் கட்.. அதுதான் சரி..அதை எப்படி செய்வது?"
ஆதி நிச்சயம் வருவான் என்று எதிர்பார்த்திருந்த மனோவிற்கு அவனைப் பார்த்ததும் மனமும் முகமும் பூவாய் மலர்ந்தது. "வாங்க.. வாங்க ஆதி சார்"
"ஏன் மனோ என்கிட்ட சொல்லவில்லை?"
ஆர்வமாய் வரவேற்றவளிடம் இறுகிய குரலில், அவன் கேட்க மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை. எதைச் சொல்லவில்லை? எதைப் பற்றி கேட்கிறான்? ஏன் இப்படி கோபமாகக் கேட்கிறான்? "எதை சார்?"
"ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி பேசாதே மனோ"
அவனது கோபமான குரலில் மனோ சற்று அதிர்ந்தாள். இந்த குரல், இந்த தொனி இதுவரை மனோ ஆதியிடம் அறிந்திராதது. ஆதி யாரிடமாவது கோபப்பட்டாலும், அது அடக்கப்பட்டு வெளிப்படுத்துவதாயிருக்கும். தாம் தூம் என்று யாரிடமுமே குதிக்க மாட்டான். இப்போது இப்படி கத்தும் அளவிற்கு என்ன நடந்தது?
"ஆதி.. என்ன ஆச்சி? ஏன் இப்படி பேசுற?"
"நீ இதில் தலையிடாதே சித்தார்த்.. ஸ்டுபிடிட்டிக்கும் ஒரு அளவு இருக்கு.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.."
யாரைப் பார்த்து ஸ்டுப்பிட் என்கிறான்? எதற்கும் ஒரு எல்லை உண்டு. மனதிலிருப்பவனே என்றாலும் மரியாதை இல்லாமல் பேசினால் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? மனோ தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தாள், "யார் சார் அப்படி அளவில்லாத ஸ்டுபிடிட்டியோடு இருப்பது?"
"அது யாருன்னு தெரியாததுதான் ஸ்டுபிடிட்டி!"
"ஆதி.."
"விடுங்க சித்தார்த் சார்.. அவர் என்ன சொல்றாரோ சொல்லட்டும். நான் என்ன செய்தேன்?"
தன் பான்ட் பாக்கெட்டிற்குமள், கைகளை நுழைத்து, கால்களை சற்றே விரித்து மனோவைத் தீர்க்கமாகப் பார்த்தவன், "ஏன் சிவாவைப் பற்றி என்கிட்ட சொல்லலை. அதனால் தானே இப்போ இவ்வளவு பிரச்சனையும்?"
"அதுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.? இதில் என்ன பிரச்சனை?"
என்ன பிரச்சனையா? உலகமே இடிந்தது போல இருக்கிறது, என்ன பிரச்சனையா? ஆனால் எந்த பிரச்சனையை இவளிடம் சொல்வது? யோசித்தவனுக்கு இதுதான் வந்தது, "மீனலோசனிக்கு அடிபட்டிருக்கிறது. அவள் யார்னு தெரியுமா?"
அவ்வளவுதான்.. எல்லாமே முடியப்போகிறது, மனம் கேட்காதே கேட்காதே என்று பதற கேட்டாள், "யார் சார் மீனலோசனி?"
"எங்க வீட்டில் எனக்காகப் பார்த்திருக்கும் பெண்.."மனோ பயந்த பதில்தான். ஆனால் அவன் வாய் வார்த்தையாகவே கேட்டதும், உள்ளத்தின் பதற்றம், பயம் எல்லாம் ஆழ்ந்து கோபம் மட்டுமே கொதித்து மேலே வந்தது, "நான் என்ன செய்திருக்கனும்?"
"என்கிட்டே சொல்லியிருக்கனும்..இப்போ அவளுக்கு அடிபட்டிருப்பதற்கு நான் எத்தனை பேருக்கு பதில் சொல்லனும் தெரியுமா?" "
"சேர்மேன்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னார்.."
"அவரா உன்னை அப்பாயின்ட் செய்தார்?"
"இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க?"
"இனி எதுவும் சொல்ல இல்லை மனோ.. யூ ஆர் ஃபயர்டு.. நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம். உன்னுடைய இந்த மாதத்துக்கான பத்துநாள் சம்பளம் வீடு தேடி வரும்.."
உதடுகளை கேலியாக வளைத்து, "நீங்க யார் சார் என்னை வரவேண்டாம்னு சொல்றதுக்கு.. நானே சொல்றேன். இன்றைக்கோடு நான் என் வேலையை ரிசைன் பண்றேன். குட்பை!" அப்போதுதான் உள்ளேவந்த செழியனின் கரங்களைக் பற்றியபடி, "வா.. செழி.. போகலாம்" என்றபடி வெளியேறினாள்.
அந்த பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் திரைகளால் பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் ஒரு பகுதியின் படுக்கையில் அமர்ந்திருந்த மனோ, பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த செழியனியனிடம் திரும்பி, "பொண்ணுக்கு கழுத்தில் கத்தி வெட்டு பட்டிருக்கிறது என்று சொல்லிஅரைமணி நேரமாச்சி. இந்த அம்மாவும் அப்பாவும் என்ன பண்றாங்கனு தெரியலையே" என்று குறைபட்டாள்.
கையிலிருந்த கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து, "மேகமூட்டமாக இருக்குதில்லையா.. காயப்போட்டிருக்கிற துணியை எடுத்துட்டு வருவாங்க."
"செழி!!"
"பின்னே என்ன மனோ? நாம் போகலாமே. நீதான் அம்மா வந்ததும் போகலாம், அந்த பொண்ணு வந்ததும் போகலாம்னு உட்கார வைச்சிருக்க"
கண்களை சுருக்கி அவனை முறைத்தவள், அருகில் வந்த, நர்ஸைப் பார்த்து, "சிஸ்டர்.. ஏன் இன்னும் மீனலோசனியைக் கூப்பிட்டு வரவில்லை?" என்று அருகிலிருந்த பகுதியைக் காட்டி, மூன்றாவது முறையாகக் கேட்க இதுவரை," இதோ வந்திடுவாங்க.." என்று பொறுமையாகச் சொன்னவர், தற்போது சலிப்பாய், "அதை ஏன் மேடம் கேட்குறீங்க.. தோள்பட்டை லேசாக வீங்கியிருக்கு.. எதற்கும் ஒரு எக்ஸ் ரே எடுக்கலாம் என்றுதான் டாக்டர் சொன்னார். அங்கே அந்த பொண்ணோட அப்பாவும் அண்ணாவும் தலை முதல் கால்வரை எல்லா இடத்திற்கும் எக்ஸ்ரே , சிடி எல்லாம் எடுக்க சொல்லி வம்பு பண்ணிகிட்டு இருக்காங்க"
லேசாய்ப் புன்னகைத்து அவர் கொடுத்த வலி மாத்திரையை வாங்கி வாயில் போட்டு, அவர் இன்னொரு கையில் நீட்டிய தண்ணீரை வாங்கிப் பருகினாள். இவர்தான் மனோ வந்ததும் மருத்துவர் கழுத்திலிருந்த காயத்தை சுத்தம் செய்து, ஆயின்மென்ட் ஒன்று தடவி பேன்டேஜ் போடும் போது உடனிருந்தவர்.
அவர் போனதும் செழியன், "ஓவரா பண்றாங்களே!! அந்த பொண்ணு என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா மனோ?"
"நிஜமாகவே பெரிய அப்பாடக்கர் தான்டா! நகைக் கடை ஓனர் பொண்ணு. பார்க்க அப்படியே டால் மாதிரி இருப்பா"
"நீ கொடுக்கிற பில்ட் அப்ல எனக்கே பார்க்கனும் போல இருக்கே.. நான் போய் பார்த்திட்டு வரவா?" என்றபடி, அவன் எழ, அதற்குள் தடதடவென்று செருப்பொலிகள் முன்னே வர, பின்னே, இவர்கள் திரையைக் திறந்து, சத்யாவும் சித்தார்த்தும் வந்தார்கள். "மனோ.. என்னடி ஆச்சி.. எப்படி இருக்க?" பதறியபடி வந்தவளை ஆச்சர்யமாகப் பார்த்த மனோ, "ஒன்னும் இல்லை சத்யா.. நல்லா இருக்கேன். இதோ பாரு சின்ன காயம்தான். ஆமாம், எனக்கு அடிபட்டதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"
"திடீரென்று ஆதி சார் ஃபோன் செய்து மனோ எங்கேனு கேட்டார். கிளம்பிட்டேன்னு சொன்னதும் என்னவென்றே கேட்காமல் கட் செய்துவிட்டார். வாட்ச்மேனிடம் உன் ஃபோட்டோ காட்டி இந்த பொண்ணு எப்போ கிளம்பினாங்க.. யாராவது வம்பு பண்ணினாங்களான்னு விசாரிச்சதா செய்தி வந்தது.. அடுத்த கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்து சிவாவைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.. என்னென்னவோ புரளி.. உனக்கு ஃபோன் பண்ணினா நீ எடுக்கலை. ஆதியும் அதற்குப்பின் கால் அட்டென்ட் பண்ணலை. அப்புறம் சித்தார்த் உலகநாதன் சார்கிட்ட கேட்டதற்கு அவர் எல்லாம் சொன்னார்..அதான் உடனே கிளம்பி வந்தோம். நீ சொல்லு. என்ன ஆச்சி?"
மனோ நடந்தது அனைத்தையும், அதாவது சங்கரன் சார் கொடுத்த வேலையிலிருந்து விலாவாரியாக சொல்லி முடித்து, "எனக்கு பெரிய டவுட் கரெக்டா ஆதி சார், போலிஸ் எல்லாம் எப்படி அந்த டைம்ல அங்கே வந்தாங்க?" என்று அதுவரை தன் தலையைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை முன்வைத்தாள்.,
தான் கேள்விப்பட்டது வரை சித்தார்த் சொன்னான். துப்பறியும் நிபுணர் சிவாவின் நடமாட்டத்தில் சந்தேகம் உள்ளதாக சங்கரன் சாரிடம் சொல்ல, சங்கரன் சார் பிரச்சனை பெரிதாக மாறுவதால் ஆதிக்கும் தெரிய வேண்டும் என்று அவனைக் கூப்பிட்டு சொல்லிவிட, ஆதி அவளைக் காப்பாற்ற போலிசையும் அலெர்ட செய்து, அவனும் அங்கே வந்து விட்டான். அங்கே நடந்ததும் அறிந்திருந்ததால், "சூப்பர் மனோ.. பயங்கர ஹீரோயிக் வேலையெல்லாம் செஞ்சிருக்க" என்று சித்தார்த் சிலாகித்தான்.
"என்ன ஹீரோயிக் வேலை சித்தார்த் சார். சும்மா இருந்திருந்தா, இவளை மாதிரி சின்ன பேன்டேஜோட தப்பிச்சிருக்கலாம். காப்பாற்றுகிறேன்னு அந்த பொண்ணைத் தள்ளிவிட்டு அந்த பொண்ணு இப்போ உயிருக்கு போராடிகிட்டு இருக்காம்"
"நீ ஒருத்தன் போதும்டா"
"மீனாவைப் பற்றிய அப்டேட் ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடி தான் டாக்டர் எனக்குக் கொடுத்தார்."என்று செழியனிடம் சிரித்தபடி சொன்ன சித்தார்த் "நீ செஞ்சது சரிதான் மனோ.. அந்த குரூப் என்ன ப்ளான்ல இருந்தாங்க தெரியலை. ஆனா அந்த இடத்தில் கொஞ்சம் களேபரம் ஆனதில் தான் உங்க ஆட்டோவைக் கண்டுபிடிச்சி போலிஸ் வரமுடிந்தது. ஆனா நீங்க ஆட்டோ ஏறியதை எப்படி மிஸ் பண்ணினாங்க தெரியலை"
"அது.. போலிஸ் எங்களுக்காகப் பார்த்துகிட்டு இருக்காங்கன்னு தெரியாதில்லையா, பின்னே வர்றவங்களை மிஸ் பண்றதுக்காக, தலையை துப்பட்டாவால் சுத்திகிட்டேன். மீனலோசனிகிட்டேயும் வெயிலுக்கு போட்டுக்கோங்கன்னு சொல்ல அவங்களும் போட்டுக்கிட்டாங்க.."
"ஓ.. ஓகே.. "
சிறு அமைதி நிலவ, மனோ பேச ஆரம்பித்தாள், "சிவா இவ்வளோ எக்ஸ்ட்ரீமா போவார்னு நினைக்கலை."
"ம்.. அதை மறந்திடு மனோ. ஆதி பயங்கர கோபத்தில் இருக்கிறானாம். இனி அவனால் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது"
இப்போ வலி இருக்கா?" அக்கறையாய் சத்யா கேட்க, "ம்ஹீம்.. சுத்தமா இல்லை. கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க.. நான்தான் மீனலோசனி மேடமை ஒருமுறை பார்த்திட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்."
"என்னென்னவோ ரீசன் சொல்லி உட்கார்ந்துகிட்டு இருக்கா சத்யா அக்கா..இன்னும் கொஞ்ச நேரத்தில் செக்யூரிட்டி வந்து நம்மை வெளியே அனுப்பிடுவார்.."
"ரொம்ப டயர்டா தெரியுற மனோ.. காபி குடிக்கிறியா?"
இதில் கொஞ்சம் நேரத்தைத் தள்ளலாம், "ம்.. ஓகே.." மனோ சம்மதமாய் தலையை ஆட்ட, சித்தார்த் எழுந்தான், "நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நானும் உன் தம்பியும் காபி வாங்கிட்டு வர்றோம்" என்று சித்தார்த் முன்வர, செழியன் அவனோடு நடக்க ஆரம்பித்தான். கண்களாலேயே ஏதோ சைகை செய்தபடி கிளம்பிய சித்தார்த்தைப் பார்த்த மனோ ஆயாசமாய் கண்களைச் சுழற்றி, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள். "என்னாச்சி மனோ?"
"ஒரு பொண்ணு காயம்பட்டு படுத்திருக்கிறேன். இப்போ போய் காதலுக்கு தூது பேசச் சொல்லி ஒருத்தர் சிக்னல் காட்டிட்டுப் போறார்"
"காதலுக்கு தூ.. "கேள்வியாய் ஆரம்பித்த சத்யா சட்டென்று நிறுத்தினாள். முகம் கன்ற, "மனோ.. ப்ளீஸ்.. இதிலே எதுவும் சொல்லாதே?"
"ஏன் சொல்லக் கூடாது?" கால்களை கட்டிலிலிருந்து தொங்கப் போட்டு சத்யாவை நேர்ப்பார்வை பார்த்தவள், தொடர்ந்தாள், "ஏன் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லு. அதற்கப்புறம், நான் இதைப் பற்றி பேசலாமா வேண்டாமான்னு சொல்றேன்."
"மனோ.. ப்ளீஸ்.."
"சத்யா.. எதுவும் இல்லைனா எத்தனை வருஷம் னாலும் சித்தார்த் காத்திருக்கத் தயார். ஆனால் இப்போது, வீட்டில் ஹைதராபாத் போக சொல்லி கேட்கிறாங்க. விட்டுட்டுப் போக முடியாது. கல்யாணம் ஆனால் உரிமையாய் கூப்பிட்டுப் போகலாமேன்னு கேட்கிறார். அவர் கேட்பதில் என்ன தப்பு?"
"எனக்கு கில்டியா இருக்குமே மனோ.."
" எனக்காகத்தான் பிரிஞ்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது, எனக்கு கில்டியா இருக்குமே சத்யா.."
"அதெல்லாம் முடியாது..உன் கல்யாணத்தின் போதுதான் எனக்கும் கல்யாணம்.."
"சினிமாவில்தான் நடக்கும்.."
"இதுவரை நடந்ததில் நிறைய அப்படிதானே இருக்கு.. அதுமட்டுமில்லாம, எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. அது மட்டும் உண்மைன்னா, ஒரே நாள் மட்டுமில்லை, ஒரே மேடையிலேயே நடக்க வாய்ப்பிருக்கு.. " தானும் மனோவின் கண்களை நேராகப் பார்த்து கேட்டாள், "என்ன மனோ.. சான்ஸ் இருக்கா?"
"என்ன சான்ஸ்.. எனக்குப் புரியலையே?" முடிந்தவரை முகத்தை நேராக வைத்தபடி பதில் சொன்னவளைச் சந்தேகமாகப் பார்த்தபடி, "நிஜமாகவா? எனக்கென்னவோ சிலநேரம் ஆதி சாருக்கும் உனக்கும் இடையில் ஒரு வேவ் ஓடுற மாதிரி இருக்கு" சந்தேகமாய் கேட்டவளின் கைகளைப் பற்றி தன் இருகரங்களுக்கு நடுவில் வைத்து, "சத்யா.ப்ளீஸ்.. ஓகே சொல்லு.. எனக்காகக் தான் பிரிஞ்சிருக்கீங்கன்னா, அதைவிட எனக்குக் கஷ்டம் வேற இருக்கும்னு நினைக்கிறியா? நீ சந்தோசமாய் இருக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோசமாய் இருக்கும் தெரியுமா? நான் சித்தார்த் சாரை லவ் பண்ணியிருந்தா கூட நீ ஃபீல் பண்ணலாம். சத்தியமாக லவ் பண்ணலை"
"நீ என்ன சொன்னாலும், உன்கிட்டேயிருந்து பறிச்சிகிட்டமாதிரி ஒரு ஃபீல் மனோ..என் சைட்ல இருந்தும் கொஞ்சம் யோசியேன்."
உதடுகளை ஒன்றோடொன்று அழுந்தப் பதித்தவள், அவன் அணைப்பு தந்த தைரியம் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்க்க, "ம்.. ஒரு டீல் போடலாம்.. நீ கல்யாணத்திற்கு ஓகே சொல்லு. இன்னும் உங்க வீட்ல சொல்லி, அவங்க வீட்ல சொல்லி, கல்யாணம் முடிவாகி எவ்ளோ நாள் இருக்கு. அதுக்குள்ளே, நான் எப்படியாவது கஷ்டப்பட்டு, உன் கல்யாணத்திற்கு ஜோடியாக நிற்கிறேன். ஓகே வா?"
"நீ சும்மா சொல்ற?.."
"நான் என்றைக்காவது உன்கிட்ட பொய் சொல்லியிருக்கிறேனா சத்தி? ம்.. சொல்லு.. சித்தார்த்தும் பாவமில்லையா.. எந்த தடையும் இல்லாதபோது உன்னோடு ஹைதராபாத் போகனும்னுதானே அவர் ஆசைப்படுவார். அதுமட்டுமில்லாமல், என்னையும் டார்ச்சர் பண்றார்..மதியானத்திலிருந்து ஒரே புலம்பல். அப்போவே என் ரூமுக்கு வந்து ஒரு மணி நேரம் பேசினார். இப்போ பிரிஞ்சா, அதுவே நிரந்தரமாகிடுமோன்னு பயப்படறார்மா "
எதுவும் சொல்லாமல் சத்யா, குனிந்தபடி விரல்நகங்களையே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, கதவைத் திறந்து சித்தார்த் மட்டும் உள்ளே வந்தான். "செழியன் மீனலோசனியைப் பார்க்கப் போயிருக்கிறான்" என்றபடி காபிக் கோப்பையை இருவரிடமும் கொடுத்துவிட்டு நின்றவன், மனோவிடம் புருவம் உயர்த்தி கண்களால், "எப்படி போனது பேச்சுவார்த்தை" என்பது போல் கேள்வி கேட்க, மனோ சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். அவ்வளவுதான். சித்தார்த்தின் முகத்தில் அத்தனை சந்தோசம். "வாட்.. நிஜமாகவா? உண்மையாகவா சொல்ற மனோ?"
"ஒரே கேள்வியை எப்படி கேட்டாலும் அதே பதில்தான் சித்தார்த் சார்.. மேடம் ஓகே சொல்லிட்டாங்க.."
"நான் சொல்லவேயில்லையே"
"என்கிட்ட ஏன் சொல்லனும். சார்கிட்ட சொல்லிடு.. நான் போய் மீனலோசனியை பார்த்து விட்டு வந்திடுறேன்." என்றபடி மனோ எழுந்து சித்தார்த்தின் முன் தன் வலக்கையை நீட்டி, "கங்கிராட்ஸ் சார்.. பெரிய ட்ரீட்டாகக் கொடுக்கனும்" என்றாள்.
வலக்கையால் அவள் கையைப் பற்றிய சித்தார்த், "ஒரு வாரமாய் இதுக்குதான் மனோ போராடிக்கிட்டு இருக்கேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளேன்னு கோபம் கூட வந்தது." சொன்னவன் இடக்கையை அவள் தோளோடு சேர்த்து அணைத்து, "தேங்க்யூ சோ மச்" என்க, அந்த நேரத்தில்தான் நம்ம ஆதி என்ட்ரி கொடுத்தது.
காலையிலிருந்து அவன் மனம் முழுக்க மனோவே நிறைந்திருக்க, வெவ்வேறு நிகழ்வுகளில், நினைவுகளில் அவன் சித்தார்த்தை கிட்டத்தட்ட அல்ல, முழுதாகவே மறந்தே போயிருந்தான். இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த குறளில் வள்ளுவன் சொன்ன, 'தன் நோய்க்குக் தானே மருந்து' என்பதற்கு சரியாய், மதியம், சித்தார்த்திடம் தான் விரும்புவதாகச் சொல்லிவிட்டாளா என்ற பயம், அதன்பின் மனோவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று இதுவரை அறிந்திராத நடுக்கம், அடுத்து தன் முதல் தீண்டலில் உயிர்வரை ஊடுருவியவளுக்கான ஏக்கம் என்று அவன் அனைத்து தடுமாற்றங்களுக்கும் அவள் முகமும், பார்வையும், அருகாமையுமே மருந்தாக அவனுக்குத் தேவைப்பட்டன. அந்த சிறு அணைப்பில் மனதில் தோன்றிய தீப்பொறி இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தது.
அடி ஆழமில்லை என்று மருத்துவமனையில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு தன் கண்ணால் பார்க்க வேணடும். எதையுமே யோசிக்காமல் மனோவைப் பார்ப்பதே குறிக்கோளாக வந்தவனுக்கு, அவன் கண்ட காட்சியில், ஹைவேயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ஒருவன், முன்னே சட்டென்று ஒரு வண்டி வந்தால், கால்கள் ப்ரேக்கை அழுத்தி, , உடலும் உள்ளமும் குலுங்கியபடி அதிர்ச்சி மாறாமல் உறைந்திருப்பானே, அப்படிதான் உறைந்துநின்றான். தன்னைப் பார்த்ததும் இயல்பாக இருவரும் பிரிவது மனதில் பதிந்தது.
அவள் இயல்பாகத்தானே இருப்பாள்?அவள் ஏன் பயப்பட வேண்டும். அவளுக்கு என்றுமே அவன் ஆதி சார்தானே. எம்.டி. அதை மீறி அவள் என்றுமே அவனிடம் பழகியதில்லையே. காரில் அன்று பேசியது, அவளோடு யாராயிருந்தாலும் அப்படி சுவாரசியமாகத்தான் பேசியிருப்பாள். அவள் அப்படி பேசும் போது , யாராயிருந்தாலும் அவள், வீடு வந்து விடுமோ என்று இருக்கின்ற எல்லா தெருக்குள்ளும் புகுந்துதான் செல்வான்..
ஆனால் எனக்கு அவள் யாரோயில்லையே?.. இப்படி வலிக்குமா? அலைகள் அப்படியே நின்றன.. காற்று நிற்க, அசையும் மரக்கிளைகள் அப்படியே நின்றன. இதயம் உடைந்தது, என்றெல்லாம் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை வர்ணிப்பதைப் படித்திருக்கிறான். இதில் எந்த உவமையுமே அவன் அனுபவிக்கும் வலியை, முழுதாகச் சொல்லவில்லையே.
..
இருள் சூழ்ந்த அறைக்குள் இருப்பவன் உள்ளேயே சுற்றி சுற்றி வருவது போல், தன் எண்ண அலைகளுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்த, ஆதி நிமிர்ந்தான், 'நோ.. ஆதி.. நோ எமோசன்ஸ்.. ஒன்லி லாஜிக். எஸ். நான் மனோவை லவ் பண்ணுறேன். அவள் என்னை லவ் பண்ணலை. இப்போது என்ன செய்ய வேண்டும். இனி இன்னொருவனோடு, இன்னொருவனுடையவளாக, அவளைப் பார்க்க முடியாது. ஒரே தீர்வு, க்ளீன் கட்.. அதுதான் சரி..அதை எப்படி செய்வது?"
ஆதி நிச்சயம் வருவான் என்று எதிர்பார்த்திருந்த மனோவிற்கு அவனைப் பார்த்ததும் மனமும் முகமும் பூவாய் மலர்ந்தது. "வாங்க.. வாங்க ஆதி சார்"
"ஏன் மனோ என்கிட்ட சொல்லவில்லை?"
ஆர்வமாய் வரவேற்றவளிடம் இறுகிய குரலில், அவன் கேட்க மனோவிற்கு ஒன்றும் புரியவில்லை. எதைச் சொல்லவில்லை? எதைப் பற்றி கேட்கிறான்? ஏன் இப்படி கோபமாகக் கேட்கிறான்? "எதை சார்?"
"ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி பேசாதே மனோ"
அவனது கோபமான குரலில் மனோ சற்று அதிர்ந்தாள். இந்த குரல், இந்த தொனி இதுவரை மனோ ஆதியிடம் அறிந்திராதது. ஆதி யாரிடமாவது கோபப்பட்டாலும், அது அடக்கப்பட்டு வெளிப்படுத்துவதாயிருக்கும். தாம் தூம் என்று யாரிடமுமே குதிக்க மாட்டான். இப்போது இப்படி கத்தும் அளவிற்கு என்ன நடந்தது?
"ஆதி.. என்ன ஆச்சி? ஏன் இப்படி பேசுற?"
"நீ இதில் தலையிடாதே சித்தார்த்.. ஸ்டுபிடிட்டிக்கும் ஒரு அளவு இருக்கு.. நானும் பார்த்துகிட்டே இருக்கேன்.."
யாரைப் பார்த்து ஸ்டுப்பிட் என்கிறான்? எதற்கும் ஒரு எல்லை உண்டு. மனதிலிருப்பவனே என்றாலும் மரியாதை இல்லாமல் பேசினால் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? மனோ தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தாள், "யார் சார் அப்படி அளவில்லாத ஸ்டுபிடிட்டியோடு இருப்பது?"
"அது யாருன்னு தெரியாததுதான் ஸ்டுபிடிட்டி!"
"ஆதி.."
"விடுங்க சித்தார்த் சார்.. அவர் என்ன சொல்றாரோ சொல்லட்டும். நான் என்ன செய்தேன்?"
தன் பான்ட் பாக்கெட்டிற்குமள், கைகளை நுழைத்து, கால்களை சற்றே விரித்து மனோவைத் தீர்க்கமாகப் பார்த்தவன், "ஏன் சிவாவைப் பற்றி என்கிட்ட சொல்லலை. அதனால் தானே இப்போ இவ்வளவு பிரச்சனையும்?"
"அதுதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே.? இதில் என்ன பிரச்சனை?"
என்ன பிரச்சனையா? உலகமே இடிந்தது போல இருக்கிறது, என்ன பிரச்சனையா? ஆனால் எந்த பிரச்சனையை இவளிடம் சொல்வது? யோசித்தவனுக்கு இதுதான் வந்தது, "மீனலோசனிக்கு அடிபட்டிருக்கிறது. அவள் யார்னு தெரியுமா?"
அவ்வளவுதான்.. எல்லாமே முடியப்போகிறது, மனம் கேட்காதே கேட்காதே என்று பதற கேட்டாள், "யார் சார் மீனலோசனி?"
"எங்க வீட்டில் எனக்காகப் பார்த்திருக்கும் பெண்.."மனோ பயந்த பதில்தான். ஆனால் அவன் வாய் வார்த்தையாகவே கேட்டதும், உள்ளத்தின் பதற்றம், பயம் எல்லாம் ஆழ்ந்து கோபம் மட்டுமே கொதித்து மேலே வந்தது, "நான் என்ன செய்திருக்கனும்?"
"என்கிட்டே சொல்லியிருக்கனும்..இப்போ அவளுக்கு அடிபட்டிருப்பதற்கு நான் எத்தனை பேருக்கு பதில் சொல்லனும் தெரியுமா?" "
"சேர்மேன்தான் சொல்ல வேண்டாம்னு சொன்னார்.."
"அவரா உன்னை அப்பாயின்ட் செய்தார்?"
"இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க?"
"இனி எதுவும் சொல்ல இல்லை மனோ.. யூ ஆர் ஃபயர்டு.. நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம். உன்னுடைய இந்த மாதத்துக்கான பத்துநாள் சம்பளம் வீடு தேடி வரும்.."
உதடுகளை கேலியாக வளைத்து, "நீங்க யார் சார் என்னை வரவேண்டாம்னு சொல்றதுக்கு.. நானே சொல்றேன். இன்றைக்கோடு நான் என் வேலையை ரிசைன் பண்றேன். குட்பை!" அப்போதுதான் உள்ளேவந்த செழியனின் கரங்களைக் பற்றியபடி, "வா.. செழி.. போகலாம்" என்றபடி வெளியேறினாள்.