ஆதி அப்போது தான் கல்லூரிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவனது அலைபேசி ஒலிக்கவும் , அதை எடுத்து பேசியவனுக்கு தினேஷ் சொல்லிய செய்தியை கேட்டதும் அவனை கொன்று விடும் அளவுக்கு கோபம் வந்தது. ஆனால் அவனது கோபத்தை தினேஷிடம் காட்டும் நேரம் இதுவல்லவே..
தினேஷிற்கு பயமாக இருந்தது. ஆதியின் கோபத்தைப் பற்றி அவன் அறிந்ததே. அன்று அவன் அடித்த அடி இன்றும் அவன் நினைவில் இருக்கிறது. ஆனால் தற்போது மதியல்ல முக்கியம். தனை சிநதித்தவன் " ஆதியை அழைத்தான்.
"ஆதி...... ஆதி..... லைன்ல இருக்கியா.... ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நா இவ்ளோ பிராப்ளம் ஆகும்னு நினைக்கல. என் மேல நீ கோபமா இருக்கேனு தெரியும். ஆனா இப்ப மதிய காப்பத்துறது தான் முக்கியம். ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணு"
ஆதியும் அதை தானே சிந்தித்துக் கொண்டிருந்தான். "சரி நா பாத்துக்குறேன். நீ போன வை" என்று கோபத்தை அடக்கியக் குரலில் சொன்னான். எங்கே பேச பேச தன்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாதோ என்று நினைத்தவன் அலைபேசியை கட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் இருக்கும் இடத்திலிருந்து மதி ஆபத்தில் சிக்கியிருக்கும் இடத்தை அடைய வேண்டுமானால் அரை மணி நேரம் ஆகும். அதுவரை மதிக்கு பாதுகாப்பில்லை என்றெண்ணியவனுக்கு சட்டென நினைவில் வந்தது அவர்களது தொழிற்சாலையில் மேனேஜராக வேலைப் பார்க்கும் முத்துக் குமார்.
அவருக்கு அழைத்தவன் விவரத்தை சொல்லிவிட்டு அந்த பகுதியில் வசிக்கும் தங்களது வேலையாட்கள் மூலம் மதியை தேட சொன்னான். தனது தந்தையிடம் கூட இதுபற்றி தெரிவிக்க வேண்டாம் என அவரிடம் கட்டளையிட்டவன் தானும் மதியை தேடி புறப்பட்டான்.
அவனது மனம் முழுவதும் மதியே நிறைந்திருந்தாள். அவளது அழகு யாரையும் திரும்பி பார்க்க வைக்கக் கூடியது. அதனால் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளிடம் அவன் வம்பு செய்த நினைவுகளும் பயத்தில் விரிந்த அவளது கண்களுமே அவனது நினைவில் நின்றன.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ஆட்களைத் தொடர்பு கொண்டு அவளைப் பற்றி விசாரித்தான். காலையில் கல்லூரி, பள்ளி, வேலை என அனைவரும் பயணிக்கும் நேரம் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருந்தது. அப்படி இருந்தும் அரை மணி நேரத்தில் போக வேண்டிய இடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.
அவன் அந்த கோவில் இருந்த இடத்தை அடைந்ததும் மணியின் கார் ஓரமாக நின்றிருப்பதை பார்த்தவாறு அந்த சந்துக்குள் செல்ல வண்டியை வேகமாக செலுத்தினான். அந்த நொடி வரை இல்லாமல் அவனது இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கு கேட்டது.
அவனைச் சுற்றியிருந்த உலகம் அவனது கண்முன்னே மறைந்தது போல தோன்றியது. மதி மதி என அவனது மனம் ஓலமிட அந்த சந்தை அடைந்தான். மதிக்கு எதுவும் நடந்திட கூடாது. இது மட்டும் தான் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் அந்த இடத்தை அடைந்தவுடன் அவனது ஆட்கள் அவனை எதிர் கொண்டனர்.
அவர்களது முகத்தில் கலவரம் தெரிந்தது. அதைப் பார்த்த நொடி ஆதியின் மனம் துவண்டது. தான் நடக்க கூடாது என நினைத்தது நடந்து விட்டதோ!!! மதி...... மதி........ அந்த நிமிடம் அவன் மனதில் மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.
ஆனால் அவன் முகத்தில் எதையும் காட்டாது இறுக்கமாகவே வைத்திருந்தான். அவனது ஆட்களில் ஒருவன் அவனை நெருங்கி மெதுவாக விஷயத்தை சொன்னான். அப்போது தான் ஆதிக்கு உயிர் வந்ததை போல இருந்தது. ஒரு நிமிடம் நின்று தன்னை அமைதி படுத்திக் கொண்டவன். மதியைக் காண விரைந்தான்.
அந்த சந்தை நோட்டமிட்டவாறே அவன் நடந்தான். ஆள் நடமாட்டமில்லாத பகுதி. இங்கே என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியாது. அருகருகே வீடுகள் இருந்தன. அவற்றிலும் யாரும் வசிக்காமல் தூசிப் படிந்து கிடந்தன. அதனைத் தாண்டி சற்று தூரத்தில் பாட்டில்கள் , உடைந்த பொருட்களின் பகுதிகள், பழைய துணிகள் என்று பல பொருட்கள் அங்கே குவித்து வைக்கப் பட்டிருந்தன. மொத்தத்தில் அந்த இடம் ஒரு குப்பை கிடைங்கை போல காட்சி அளித்தது.
அவனுக்கு தினேஷ் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. " ஆதி...... நா தினேஷ் பேசுறேன். ப்ளீஸ் போன வச்சுடாத. இது மதி சம்பந்தப் பட்ட விஷயம். மதியோட உயிருக்கு ஆபத்து . அவள காப்பாத்து" என கடகடவென சொல்லி முடித்தான். முதலில் ஆதி அதை நம்ப வில்லை.
ஆனால் மதி என்ற பெயரைக் கேட்டதும் அவனது மனதில் ஒரு அதிர்வு தோன்றியது உண்மை. அவனது அமைதி தினேஷை பயமுறுத்தியதோ என்னவோ அவனே மீண்டும் தொடர்ந்தான். "ஆதி.... நா சொல்றத நீ நம்பலயா.... நா பொய் சொல்லல. என்ன நடந்துச்சுனா" என்றவன் மதியும் கண்டது முதல் அவளை துரத்தியது வரை சொல்லி முடித்தான்.
"நா அவள பயமுறுத்த தான் நினச்சேன். ஆனா அவ ஓடிப் போவானு நா நினைக்கல. நா அவ பின்னாடியே ஓடுனேன். அப்பதான்" என்றவன் எச்சில் விழுங்கும் சப்தம் ஆதிக்கு தெளிவாக கேட்டது.
தினேஷிற்கு பயமாக இருந்தது. ஆதியின் கோபத்தைப் பற்றி அவன் அறிந்ததே. அன்று அவன் அடித்த அடி இன்றும் அவன் நினைவில் இருக்கிறது. ஆனால் தற்போது மதியல்ல முக்கியம். தனை சிநதித்தவன் " ஆதியை அழைத்தான்.
"ஆதி...... ஆதி..... லைன்ல இருக்கியா.... ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நா இவ்ளோ பிராப்ளம் ஆகும்னு நினைக்கல. என் மேல நீ கோபமா இருக்கேனு தெரியும். ஆனா இப்ப மதிய காப்பத்துறது தான் முக்கியம். ப்ளீஸ் ஏதாச்சும் பண்ணு"
ஆதியும் அதை தானே சிந்தித்துக் கொண்டிருந்தான். "சரி நா பாத்துக்குறேன். நீ போன வை" என்று கோபத்தை அடக்கியக் குரலில் சொன்னான். எங்கே பேச பேச தன்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாதோ என்று நினைத்தவன் அலைபேசியை கட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் இருக்கும் இடத்திலிருந்து மதி ஆபத்தில் சிக்கியிருக்கும் இடத்தை அடைய வேண்டுமானால் அரை மணி நேரம் ஆகும். அதுவரை மதிக்கு பாதுகாப்பில்லை என்றெண்ணியவனுக்கு சட்டென நினைவில் வந்தது அவர்களது தொழிற்சாலையில் மேனேஜராக வேலைப் பார்க்கும் முத்துக் குமார்.
அவருக்கு அழைத்தவன் விவரத்தை சொல்லிவிட்டு அந்த பகுதியில் வசிக்கும் தங்களது வேலையாட்கள் மூலம் மதியை தேட சொன்னான். தனது தந்தையிடம் கூட இதுபற்றி தெரிவிக்க வேண்டாம் என அவரிடம் கட்டளையிட்டவன் தானும் மதியை தேடி புறப்பட்டான்.
அவனது மனம் முழுவதும் மதியே நிறைந்திருந்தாள். அவளது அழகு யாரையும் திரும்பி பார்க்க வைக்கக் கூடியது. அதனால் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளிடம் அவன் வம்பு செய்த நினைவுகளும் பயத்தில் விரிந்த அவளது கண்களுமே அவனது நினைவில் நின்றன.
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய ஆட்களைத் தொடர்பு கொண்டு அவளைப் பற்றி விசாரித்தான். காலையில் கல்லூரி, பள்ளி, வேலை என அனைவரும் பயணிக்கும் நேரம் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருந்தது. அப்படி இருந்தும் அரை மணி நேரத்தில் போக வேண்டிய இடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.
அவன் அந்த கோவில் இருந்த இடத்தை அடைந்ததும் மணியின் கார் ஓரமாக நின்றிருப்பதை பார்த்தவாறு அந்த சந்துக்குள் செல்ல வண்டியை வேகமாக செலுத்தினான். அந்த நொடி வரை இல்லாமல் அவனது இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கு கேட்டது.
அவனைச் சுற்றியிருந்த உலகம் அவனது கண்முன்னே மறைந்தது போல தோன்றியது. மதி மதி என அவனது மனம் ஓலமிட அந்த சந்தை அடைந்தான். மதிக்கு எதுவும் நடந்திட கூடாது. இது மட்டும் தான் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் அந்த இடத்தை அடைந்தவுடன் அவனது ஆட்கள் அவனை எதிர் கொண்டனர்.
அவர்களது முகத்தில் கலவரம் தெரிந்தது. அதைப் பார்த்த நொடி ஆதியின் மனம் துவண்டது. தான் நடக்க கூடாது என நினைத்தது நடந்து விட்டதோ!!! மதி...... மதி........ அந்த நிமிடம் அவன் மனதில் மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.
ஆனால் அவன் முகத்தில் எதையும் காட்டாது இறுக்கமாகவே வைத்திருந்தான். அவனது ஆட்களில் ஒருவன் அவனை நெருங்கி மெதுவாக விஷயத்தை சொன்னான். அப்போது தான் ஆதிக்கு உயிர் வந்ததை போல இருந்தது. ஒரு நிமிடம் நின்று தன்னை அமைதி படுத்திக் கொண்டவன். மதியைக் காண விரைந்தான்.
அந்த சந்தை நோட்டமிட்டவாறே அவன் நடந்தான். ஆள் நடமாட்டமில்லாத பகுதி. இங்கே என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியாது. அருகருகே வீடுகள் இருந்தன. அவற்றிலும் யாரும் வசிக்காமல் தூசிப் படிந்து கிடந்தன. அதனைத் தாண்டி சற்று தூரத்தில் பாட்டில்கள் , உடைந்த பொருட்களின் பகுதிகள், பழைய துணிகள் என்று பல பொருட்கள் அங்கே குவித்து வைக்கப் பட்டிருந்தன. மொத்தத்தில் அந்த இடம் ஒரு குப்பை கிடைங்கை போல காட்சி அளித்தது.
அவனுக்கு தினேஷ் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. " ஆதி...... நா தினேஷ் பேசுறேன். ப்ளீஸ் போன வச்சுடாத. இது மதி சம்பந்தப் பட்ட விஷயம். மதியோட உயிருக்கு ஆபத்து . அவள காப்பாத்து" என கடகடவென சொல்லி முடித்தான். முதலில் ஆதி அதை நம்ப வில்லை.
ஆனால் மதி என்ற பெயரைக் கேட்டதும் அவனது மனதில் ஒரு அதிர்வு தோன்றியது உண்மை. அவனது அமைதி தினேஷை பயமுறுத்தியதோ என்னவோ அவனே மீண்டும் தொடர்ந்தான். "ஆதி.... நா சொல்றத நீ நம்பலயா.... நா பொய் சொல்லல. என்ன நடந்துச்சுனா" என்றவன் மதியும் கண்டது முதல் அவளை துரத்தியது வரை சொல்லி முடித்தான்.
"நா அவள பயமுறுத்த தான் நினச்சேன். ஆனா அவ ஓடிப் போவானு நா நினைக்கல. நா அவ பின்னாடியே ஓடுனேன். அப்பதான்" என்றவன் எச்சில் விழுங்கும் சப்தம் ஆதிக்கு தெளிவாக கேட்டது.