நினைவு-24
“ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே..”
முழுதாக எட்டு மணிநேரம் கழிய, அறைக்குள் சஹானாவின் கைகளையே பிடித்துக் கொண்டிருந்த அஜய்யின் கைகளில் சிறு அசைவு...! அம்மெல்லிய அசைவையும் உணர்ந்தவன், தன்னவளை ஏறிட அவளது உடல்நிலையில் மாற்றமிருப்பது போல் தோன்ற உடனடியாக ஓடிச் சென்று மருத்துவரை அழைத்து வந்தான்.
மருத்துவர்களின் பரிசோதனை முடிந்து மெல்ல கண் விழித்தாள் சஹானா. முழுதாக ஒருநாள் கழிந்த பின்பே கண் திறந்தவளால் கண்களை சிரமப்பட்டே திறக்க முடிந்தது. கண்களைத் திறந்தவள் கண்களில் கண்ணீருடன் சுற்றியிருந்த குடும்பத்தார் மற்றும் நட்புகளைப் பார்த்தவள்,
தாங்கமுடியாத தலைவலியும், உடல்சோர்வும் தந்த பயத்தில் கண்ணீருடன் “ம்மா...”என்று தாயை அழைத்தாள்.
“சானுமா” என்று ரேணுகா மகளின் நெற்றியில் இதமாக முத்தமிட,
“அண்ணா...வலிக்குது”என்று தலையைப் பிடித்தாள்.
“அம்மு உனக்கு ஒண்ணுமில்லடா, யூ ஆர் ஆல்ரைட்.எல்லாம் சரியாகிடும்”என்று தங்கையை கார்த்திக் தேற்ற,
“எ..னக்கென்னாச்சுப்பா?”என்று அங்கிருந்த தன் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே வினவ,
“ஒண்ணுமில்லடா கண்ணா.”என்றார் அவரும்.
“சஹானா, நேத்து உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆனதிலேயிருந்து உங்க குடும்பமே இங்க தான் இருக்காங்க”என்று அங்கிருந்த அனைவரையும் அவளது பார்வை வளையத்திற்குள் கொண்டு வந்து தன் சந்தேகத்தை மறைமுகமாகவே விசாரித்தார் மருத்துவர்.
தன்னை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தவள், “யாருண்ணா இவங்கெல்லாம்?”என்று அவர்களது தலையை இடியை இறக்கினாள் சஹானா.
தங்கையின் பதிலில் சற்றே குழம்பிய கார்த்திக்,
“சானுமா, விளையாடாதடா. ஆல்ரெடி நேத்து உனக்கு இப்படி ஆனதிலிருந்து இவன் பேய் பிடிச்ச மாதிரி இருக்கான். நீ வேற...”என்று அஜய்யை பார்த்தபடியே கூற,
தன் அண்ணனை தொடர்ந்து, அஜய்யை பார்த்தவளுக்கு அவனது கண்கள் காட்டிய வலியில், ஏதேதோ உணர்வுகள் சட்டென்று மனதை தாக்க அவளுக்கும் அனிச்சை செயல் போல் கண்கலங்க ஆரம்பித்தது. உயிரை உருவும் அவனது பார்வையில் எதையும் யோசிக்க முடியாமல் அவளுக்கு தலைவலிக்க, இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டவள்,
“எனக்கு தெரியலண்ணா,உன் ஃப்ரெண்டா?”என்று கேட்டு அனைவரையும் அதிர வைக்க,
தன்னவள் கண்விழித்ததிலிருந்து அவளது ஒற்றைப் பார்வைக்காக காத்திருந்த அஜய்க்கு, தன்னவளின் அறிமுகமில்லாத பாவனையில் ஏதோ புரிவது போலிருக்க, புரிந்துகொண்ட செய்தியோ அவனுக்கு உயிர்வலியை தர,மனதளவில் முழுதாக நொறுங்கிப்போனான்.
இருப்பினும் முயன்று தன்னை சமன்படுத்தியவன்,
“சஹி,ரொம்ப வலிக்குதாடா”என்று சஹானாவின் கைகளை பிடிக்க அவனது கைகளை உதறியவள்,
“டச் பண்ணாம பேசுங்க அண்ணா”என்று அஜய்யைத் தள்ளி நிறுத்தினாள்.
அனைவரும் அதிர்ந்து விழிக்க, மிதுனாவோ,
“சானு, அஜயண்ணாவா?நேத்து ஃபுல் இப்படி இந்த பெட்ல படுத்து கிடந்துட்டு, யூ.எஸ், திருச்சி, குலுமனாலினு அங்கங்க இருந்தவங்க எல்லாரையும் கதி கலங்கி இங்க வர வச்சிட்டு,ஆனாலும் உனக்கு இந்த லொள்ளு மட்டும் குறையலடி”என்று தோழியை அணைக்க வர,
“நீங்க யாரு?”என்று ஒதுங்கினாள் சஹானா.
அப்போது கதவைத் திறந்து கொண்டு அர்ஜூனுடன் உள்ளே வந்த பூஜா,
“பேசுனா அடிச்சு பல்ல கில்ல கழட்டிருவேன், பார்த்துக்கோ. அஜய் அண்ணா கூட மட்டுமே ஆஃபிஸ்க்கு போய்ட்டுவானு அத்தனை டைம் சொல்லிட்டு தானடி போனேன்”என்று அழ,
“பூஜ், எனக்கொண்ணும் இல்லடி. இப்போ நான் ஆல்ரைட். ஆமா நீ எங்க போன? அர்ஜூன்ண்ணாவ உனக்கெப்படி தெரியும்”என்று வினவ, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் அஜய் இந்த உலகத்திலேயே இல்லை எனலாம்.
அருகில் நின்ற கார்த்திக்கின் கரங்களிலேயே அவனது மனநிலை உணரப்பட,
மருத்துவரோ, “வெல் சஹானா, இப்போ தான் முழிச்சிருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க. ரொம்ப நேரம் பேசக்கூடாது. இப்போ நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க”என்று தன் சோதனையைத் தொடர்ந்தார்.
சோதனையை முடித்து வெளியே வந்தவரிடம்,
“டாக்டர், சஹிக்கு அம்… இப்போ என்ன ப்ராப்ளம்?”என்று அஜய் கேட்க,
அவனது தோளில் தட்டியவர்,
“யுவர் கெஸ் இஸ் கரெக்ட் அஜய். ஷீ இஸ் அஃபெக்டேட் பை ஆன்டெரோக்ரேட் அம்னீசியா.”என்று அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியமளித்தார்.
“இது வழக்கமா மூளை அதிர்ச்சியால் ஏற்படும். ஆக்ஸிடண்ட்ல சஹானாவோட தலையில் பலமா அடிபட்டதால் அவங்களோட மூளை சேதமடைந்திருக்கு. அவங்க உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல,ஆனா பிரச்சனை எல்லாமே அவங்க நினைவுகளோட. சஹானாவோட கடந்த கால நினைவுகள் இப்போ மறக்கடிக்கப்பட்டிருக்கு”என்றதும் அஜய்க்கோ கால்களின் கீழ் பூமி நழுவியது போல் உணர்ந்தான்.
அனைவரும் அதிர்ச்சியில் இருக்க முதலில் சுதாரித்த மிதுனா,
“ஆனா டாக்டர்,சானுக்கு அப்பா,அம்மா, அண்ணா எல்லாம் நியாபகமிருக்குறது ஓகே. பூஜாவ மட்டும் நியாபகமிருக்கு, எங்களை தெரியலைனு சொல்றா,ஏன் டாக்டர்?”என்று கண்கலங்க,
“கமான் கேர்ள், சஹானாவோட மூளைக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் லெவல் தெரியாதில்லையா?”என்றவர்,
“பூஜா மாதிரி நீங்களும் சஹானாவோட ஸ்கூல் ஃப்ரெண்டா இருந்திருந்தா சஹானாக்கு இப்போ உங்களையும் நியாபகமிருந்திருக்கும். நம்மோட மூளை கம்பியூட்டரோட சி.பி.யூ மாதிரி. மெமோரி டிவைஸ்ல சில நிலைகள் இருக்கு. சஹானாவோட ப்ரைன் மெமோரில இப்போ ரீசண்ட் ஸ்டோரேஜ் மட்டும் தான் எரேஸ் ஆகிருக்கு. அவங்களால புது உறவுகள், சமீபத்தில் நடந்த விஷயங்கள், புதிய தகவல்களை நினைவில் வைக்க முடியாது.”என்றவர், அஜய்யின் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தவர்,
“ஐயம் சாரி டு சே திஸ் அஜய், அவங்களுக்கு நீங்க யாருன்னு தெரியாது. இப்போதைக்கு சஹானா உங்களை அண்ணனோட ஃப்ரெண்டா மட்டும் தான் பார்ப்பாங்க, ஃபியான்ஸியா இல்ல”என்று அழுத்தம் கொடுத்தார்.
அஜய் அமைதியாய் இருக்க கார்த்திக் தான்,
“டாக்டர், இது எப்படி குணப்படுத்தலாம்? எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் வேணும்னாலும் பண்ணலாம் டாக்டர்” என்க,
“கார்த்திக், மூளை கம்பியூட்டர் மாதிரினு தான் சொன்னேன். காசு கொடுத்து உடனடியா சரி பண்ண மூளை ஒண்ணும் கம்பியூட்டரில்ல. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். சஹானாவோட மெடிக்கல் ரிப்போர்ட் படி, இப்போ அவங்க அபாயக் கட்டத்தைத் தாண்டிட்டாங்க தான். பட், அவங்களோட மூளை அதை அக்செப்ட் பண்ணனும். எல்லாத்துக்கும் மேல, சஹானாவுக்கே தெரியாது ‘அவ இப்போ ஒரு அம்னீசியா பேசண்ட்’னு. ஃபர்ஸ்ட் சஹானா மெண்டல்லி இந்த ட்ரீட்மெண்ட்க்கு ஃபிட் ஆகனும்.”என்று விளக்க,
“சஹானாக்கு எப்போ எல்லா நினைவுகளும் திரும்பும் டாக்டர்?”என்று கேட்ட அஜய்யிடம்,
“ஆக்ச்சுவலி, அம்னீசியா எப்போ குணமாகும்னு உறுதியா சொல்லவே முடியாது அஜய். அது காயத்தோட அளவைப் பொருத்தது. இப்போ உங்களை யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டு தூங்குற சஹானா, முழித்ததும் கூட உங்களை ஹக் பண்ணி காதலை வெளிபடுத்தலாம்….இல்ல, ஒரு மாதமோ, வருஷமோ கூட ஆகலாம். நினைவுகள் திரும்பாமலே கூட போகலாம்... காயமடைந்த மூளை தானாகவே குணமாக ஆரம்பிச்சா தான் நினைவுகள் திரும்ப வரும்.”என்றவர் அஜய்யின் சோர்ந்த முகத்தைப் பார்த்து,
“டோன்ட் வொர்ரி யங் மேன், காயத்திலிருந்து மூளை சேதத்தை எஸ்டிமேட் பண்ணுறதுக்கு அண்ட் குணமாகுறதை ஊக்குவிக்குறதுக்கும் சில நுட்பங்கள் இருக்கு. அதை நாங்க ஸ்டார்ட் பண்ணிட்டோம்”என்று ஆறுதலளித்தார்.
“டாக்டர், இன்னும் ஒரு மாசத்துல என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். தாலி எடுத்தாச்சு, பத்திரிக்கைலாம் கூட குடுத்து முடிக்கப்போறோம். இப்போ போய் இப்படி ஆகிருக்கே, நாங்க என்ன பண்ண போறோம்?”என்று கலங்கிய ரேணுகாவிடம்,
“அவங்களுக்கு அம்னீசியானு மட்டும் தான்மா சொன்னேன். அவங்க மேரேஜ் பண்ணிக்குறதுல பிரச்சனைனு சொல்லவேயில்லையேமா. ஃபிஸிக்கலி ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்னு இந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுதே”என்று சஹானாவின் மருத்துவ குறிப்பேட்டைக் காட்டினார்.
“அப்போ இவங்க கல்யாணத்தை தள்ளிப்போடாம குறிச்ச நாள்லயே நடத்தலாம்னு சொல்றீங்களா டாக்டர்?”என்று வினவிய அஜய்யின் தாயிடம்,
“ஒய் நாட்? என்கிட்ட கேட்டால், தள்ளிப்போடாம இந்த மேரேஜ நடத்துறது கூட சஹானாவுக்கு ஒரு பெட்டர் அம்னீசியா ட்ரீட்மெண்ட் தான்.”என்றவரிடம்,
“சானு இன்னும் கம்ப்ளீட்டா குணமடைஞ்சதுக்கு அப்புறம் கல்யாணம் வச்சிக்கலாம்னு எனக்கு தோனுது டாக்டர்”என்ற கார்த்திக்கிடம்,
“கமான் கார்த்திக், சஹானாவ நீங்க நோயாளியா ட்ரீட் பண்ணாதீங்க. கவனமா பார்த்துக்கோங்க. கவனம் உங்க பார்வைல இருந்தா மட்டும் போதும்.குழந்தைக்கு சொல்லிக்கொடுக்குற மாதிரி சஹானாக்கு சொல்லிக்கொடுக்ககூடாது. ஆனா, அஜய் அண்ட் பேமிலியை அவங்ககிட்ட பக்குவமா சொல்லி புரிய வையுங்க. பிகாஸ், இப்போ சஹானாக்கு அவளோட வயசு என்னனு கூட தெரியாது. ஐ திங்க், இப்போ சஹானா அவளோட ஸ்கூல் லைஃப்ல இருக்காங்க. அதான் பூஜாவை மட்டும் நியாபகமிருக்கு.”என்று இயம்பினார் மருத்துவர்.
“சஹியோட இந்த நிலைமைல எப்படி எங்க மேரேஜ் நடக்கணும்னு சொல்றீங்க டாக்டர்? இதனால என்ன மாற்றம் வரும்?” தன் ஐயத்தை அஜய் கேட்க,
“அஜய் மேரேஜ்க்கு முன்னாடி சஹானா அவங்க வீட்டுல இருக்கப்போற நாட்கள்ல இருந்து மேரேஜ்க்கு அப்புறம் அவங்க அட்மோஸ்ஃபியர் சேன்ஜாகும். அது தான் வேணும்.மறந்த நினைவுகளை இப்போ மீட்டுக் கொண்டு வர்றதுல குடும்ப ஆதரவு ரொம்பவே முக்கியம். மேரேஜ்க்கு முன்னாடி உள்ள நாட்கள்ல அவங்களோட காலேஜ் லைஃப் ஃபோட்டோஸ்,அவங்களுக்கு பிடிச்ச மியூஸிக், ஸ்நாக்ஸ், ஸ்மெல் இப்படி எல்லாத்தையும் அவங்களுக்கு உங்க வாயால சொல்லாம உங்க ஆக்டிவிட்டீஸ்னால சொல்லனும்”என்றவர்,
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு சஹானா வீட்டிலே, அவங்க கூடவே இருக்குறது இன்னும் பெஸ்ட்”என்று மிதுனாவையும், ரீனாவையும் கைக்காட்டி கூறியவர்,
“இது தான் ட்ரீட்மெண்ட்டோட தொடக்கமே. அவங்க தனியா இருந்தாங்கன்னா, அவங்களாகவே அழிக்கப்பட்ட நினைவுகளை கொண்டு வர முயற்சிப்பாங்க.அது கரெக்ட் தான், ஆனாலும் மூளைக்கு ஓவர் ஸ்ட்ரஸ் கொடுப்பாங்க. அது கூடவே கூடாது. நினைவுகளை புதுப்பிக்குறது, இப்போ அவங்களுக்கு ஒரு டிரைனிங். அது இயல்பா நடக்கனும். உதாரணத்துக்கு, காலேஜ் லைஃப்ல நடந்த ஒரு போட்டோவ காட்டி நீங்க ஒரு சின்ன சண்டை, கதை மாதிரி கொண்டு போனீங்கன்னா, அது அவங்களுக்கும் ரிலாக்ஸா இருக்கும், இப்படியே அஜய்யை அவங்க புரிஞ்சிக்குறதுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்”என்றார்.
“ஒரு டைம் ஹிப்னாஸிஸ் பண்ணலாமா டாக்டர்?” என்று கேட்ட அஜய்யிடம்,
“டெஃபனைட்லி... மறக்கப்பட்ட நினைவுகளை நினைவுபடுத்துவதுக்கு பெஸ்ட் வே ஹிப்னாஸிஸ். ஆனா நான் சொன்னேனே, அவங்களுக்கு வந்திருக்குறது ஆன்டெரோக்ரேட் அம்னீசியா. மூளைக்கு வேலை கொடுக்காம வேலை செய்ய வைக்கனும்”என்று குணமடைதலின் மேலும் சில யுக்திகளையும் எடுத்துக்கூறிய பின் அனைவரும் வெளியேறினர்.
வெளியே வந்த பின்பும் யோசனையிலேயே அமர்ந்திருந்த அஜய்யின் அருகில் வந்த ரேணுகா,
“தம்பி,இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கனும். என் பொண்ண விட்டுற மாட்டீங்க தானே...”என்று கண்ணீருடன் கேட்க,
“என்ன அத்தை பேசுறீங்க நீங்க. என் சஹியை நான் விடுறதா? என்னை பொறுத்தவரையில் அவ என் மனைவி. இப்படி எது வந்தாலும் அவ என்னை விட்டு போய்ட கூடாதுன்னு தான் சஹியை பொண்ணுப் பார்க்க வந்தபோவே,அவளோட முழு சம்மதத்தோடயே என்னோட முதல் தாலியை அவ கழுத்துல செயினா போட்டுட்டேன்.இனி அவளே நினைச்சாலும் என்கிட்ட இருந்து போக முடியாது.”என்று உறுதியுடன் கூறி பெரியவர்களை அங்கிருந்து அகற்றினான்.
“வேற என்னத்தடா யோசிச்சிட்டு இருக்குற?நீ போய் சும்மா சானுகிட்ட பேசு”என்ற கார்த்திக்கின் குரலில்,
“இல்லடா மச்சான், இப்போ அவளுக்கு அம்னீசியானு அவளுக்கே தெரியாதுடா. அதை எப்படி சஹிக்கிட்ட சொல்லறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.”என்க,
“என்னால சொல்ல முடியும்னு கண்டிப்பா தோணலடா, நீயே சொல்லிடேன்.”என்று கை விரிக்க,
“ஹ்ம்ம்”என்றவன், அர்ஜூனிடம் திரும்பி,
“அர்ஜூன், இந்த கேஸை நீ தான் எடுத்து நடத்தனும்”என்றான்.
“டேய்,இது ஆக்ஸிடண்ட்னு தானேடா ரிப்போர்ட் ஃபைல் பண்ணிருக்காங்க?” அர்ஜூனின் கேள்விக்கு,
“நோ அர்ஜூன், எனக்குத் தோணுதுடா. சஹி என்கிட்ட போன்ல பேசுறப்போ ‘தூரமா ஃபாஸ்டா ஒரு லாரி வருது, ஓரமா போங்க’னு டிரைவர் கிட்ட சொன்னாடா. ஆனா நான் ஆக்ஸிடண்ட் ஸ்பாட்டுக்கு போனப்போ இவங்க காரும் ஓரமா தான் கிடந்திருந்துச்சு.”என்றவன்,
“இது ஆக்ஸிடண்டா இருந்திருந்தா, அந்த லாரி டிரைவர் ஏன்டா நிக்காமலே போகனும்?”என்றான்.
“ஆனா அஜய், சானுவ கொலைப் பண்ணுற அளவுக்கு யாருடா எதிரி?”என்று ஆதி கேட்க,
“கண்டிப்பா இருக்காது அஜய், அம்முவ எல்லாருக்குமே பிடிக்கும்டா, யாருக்கிட்டயுமே எதிர்த்து கூட பேசமாட்டா”என்று கார்த்திக் கூற,
அங்கு நின்றிருந்த தோழிகள் மூவரிடமும்,
“சஹாக்கு அப்படி யாராவது இருக்காங்களா?” என்று அர்ஜூன் கேட்டான்.
“கண்டிப்பா இல்லண்ணா, அவ யார்கிட்டயும் அதிர்ந்து கூட பேசமாட்டா. நாங்க வம்பு பேசுனாலே அவ எங்கள தான் திட்டுவா”என்று ரீனாவும் கூற,
“கார்த்தி உங்க அப்பாக்கு பிஸ்னஸ் சைட் எதிரிகள் யாராவது இருக்காங்களா?”என்று கார்த்திக்கிடம் திரும்ப,
“கொலைப்பண்ண துணியுற அளவுக்குலாம் அப்படி யாருமில்லைடா. இவனுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்னு தான் எனக்கு சந்தேகமா இருக்கு”என்றான்.
“நோ அர்ஜூன், நீ இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணு. நான் கேஸ் குடுக்குறேன். இப்போதைக்கு எனக்கு யாரு மேலேயும் சந்தேகம்னு வரலை. ஆனா இது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி தான்டா.”என்று உறுதியுடன் கூறியவன்,
“என்னடா, நீயும் இவங்கள மாதிரி இது ஆக்ஸிடண்ட் தான்னு என்னை கன்வீன்ஸ் பண்ண போறியா?”என்று அர்ஜூனிடம் சாட,
“இல்ல மச்சான், உன்னோட வியூல எனக்கும் சேம் டவுட் வருது தான்டா. பட் இப்போ சஹாக்கு அம்னீசியா. எங்கயிருந்து தொடங்கனு தான் யோசிச்சிட்டு இருக்கேன்”என்க,
“விட்ட இடத்துல இருந்து தொடங்கு. ஆக்ஸிடண்ட் ஆகுறதுக்கு முன்னாடி அண்ட் பின்னாடி இருக்குற பர்ஸ்ட் சிக்னல்ல உள்ள சிசிடிவி புட்டேஜை கலெக்ட் பண்ணு. அதுல அந்த பர்ட்டிக்குலர் டைம்ல போன லாரியோட டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணு. ஏதும் ஹெல்ப் வேணும்னா என் அண்ணாகிட்ட கேளு.அவன் வக்கீலா இருக்குறதால உனக்கு அவனோட ஹெல்ப் தேவைப்படலாம். பட், இது எல்லாத்தையுமே கொஞ்சம் கான்ஃபிடன்ஷியலாவே பண்ணு.”என்று படபடவென ஆணையிட்டவன்,
“ப்ளீஸ்டா, நீயே இறங்கி பண்ணுடா. அந்த கிரிமினல் யாரா இருந்தாலும் அவனை நீ உன் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தவேண்டாம். என் சட்டத்தின் படி, நான் தான் தண்டனை கொடுப்பேன்.”என்று கர்ஜித்தவன், அங்கிருந்த எவரையும் கண்டுகொள்ளாது சஹானாவின் அறைக்குள் நுழைந்தான்.
தாயின் மடியில் குழந்தையென படுத்திருந்தவளிடம்,
“என்ன சஹி, தூங்கலையா? இப்போ பெயின் இருக்காடா?”என்று ஆதூரத்துடன் விசாரித்தான்.
“ம்ம், பரவாயில்ல. என் அண்ணா எங்க?”என்று கேட்கும் போதே அனைவரும் அங்கு வர, அர்ஜூனின் அருகில் நின்ற பூஜாவைக் கண்டவள்,
“ஹேய் பூஜ், உனக்கு மேரேஜ் ஆகிட்டாடி? இப்போவே ஏன்டி மேரேஜ் பண்ணின?”என்று கேட்டாள்.
வார்த்தை வராமல் அனைவரும் நிற்க,
தன்னவளின் நிலையுணர்ந்த அஜய்,
“இப்போ மேரேஜ் பண்ணாம, அறுபது வயசுலயா பண்ணுவாங்க?”என்று வேண்டுமென்றே சஹானாவிடம் வம்பிழுக்க,
“நான் ஒண்ணும் உங்ககிட்ட கேட்கலை. என் ஃப்ரெண்ட்கிட்ட கேட்குறேன். உங்களுக்கென்ன?அண்ணா, இந்த அண்ணா யாரு?”என்று அஜய்யிடம் ஆரம்பித்து கார்த்திக்கிடம் கேள்வியாக முடித்தாள்.
அஜய்யோ வேண்டுமென்றே,
“என்னது அண்ணனா? அண்ணா கிண்ணானு கூப்பிட்ட பல்ல கழட்டி கையில தந்திருவேன், பார்த்துக்கோ. ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு” என்று உசுப்பேற்றினான்.
சஹானாவும் பதிலுக்கு, “அத்தானா? அரமெண்டல்னு வேணும்னா கூப்பிடவா?”என்று கேட்க,
“சஹா பேக் டு ஃபார்ம்”என்ற அர்ஜூன் நகைக்க,
“சானுமா, மாப்பிள்ளையை அப்படிலாம் சொல்லக்கூடாதுடா”என்ற தந்தையின் கூற்றில்,
“என்னது மாப்பிள்ளையா? யாருக்குப்பா?”என்று கேட்க,
“ஹேய் அம்மு, அஜய் தான்டா நீ கட்டிக்கப்போற மாப்பிள்ளை”என்று கார்த்திக் கூறவும்,
அதிர்ச்சியில்,
“என்னது.....! இவனா?”என்று அலறினாள் சஹானா.
நினைவுகள் தொடரும்....!