All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கதை திரி

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதேநேரம் மாயா தனது அறையில் தன் தந்தை கொடுத்த கடிதத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்!!! அவளது விழிகளில் விளக்க இயலாத ஒரு தேடல்!!தேடல்கள் எதனால் உருவானது என்பதை அவள் அறியவில்லை.


பல வருடங்களுக்கு முன் அழுதழுது கண்ணீரும் வற்றிய சமயம் தன்னில்,இன்னொரு பெண்ணாக இருந்தால்..நிச்சயம், வாழ்வை விடுத்திருப்பாள்!!ஆனால்,விதியோ!அல்லது வினையோ!இவளை ருத்ராவிடம் சேர்த்தது.....



தன் தந்தை எழுதிய கடிதத்தை இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் படித்திருப்பாள்...ஆனாலும்
"இன்றும் மனம் குடிக்கொண்ட அக்னி தணியவில்லை.அது அணையவும் விருப்பமின்றி தகித்துக் கொண்டிருந்தது.

"நான் சொல்றதை தான் நீ கேட்கணும்!என் உதவி இல்லைன்னா என்ன பண்ணிட முடியும் உன்னால??உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழித்துக்கோ!"-ஆணவமாக ஒலித்த குரல்!!!அச்சமயங்களில் அவள் கண்ணீரை அதிக அளவில் உணர்ந்தது அவளது தனிமையே!!?!
நானிருக்கிறேன்!என்ற வார்த்தையை அவள் அப்போது யாரிடமும் கேட்டதில்லை.


மனம் வெதும்பிய சமயத்தில் அணைப்பினில் சேர்க்க நெஞ்சம் ஏதும் கிட்டவில்லை.!!!!

முற்பிறவி புண்ணியம் ஏதேனும் எஞ்சி இருக்கலாம்!!அதனால்,அவளுக்கு கிட்டிய ஒரே ஆனந்தம்!அவளது ருத்ராவும்,,மாமாவும்!!!

அவள் நொடிந்த சமயத்தில் ருத்ரா கண்ணீரை துடைக்க மறுத்து,'அழுது முடி!மன துயரங்களை கொட்டிவிடு!'என்ற தத்துவத்தை விதைத்தவன்.அழிந்த அவள் நம்பிக்கையை உயிர்பித்து,அதை சுயநலமாக்காமல்,உலகை நோக்கி திசை திருப்பியவன்.

அவள் வெறுப்பினை பயமின்மையாக மாற்றி அவளுக்கு உயிர் கொடுத்தவன்.!!!

இன்று மாயா என்றாள் அறியாதவர் எவரும் இலர். !!!

தனது பெற்றோரை பிரிந்து,,அடைக்கலம் தேடி கனகாவிடம் வந்தது,,ஆதவனின் எதிர்பாராத நட்பு,,,தீடீர் திருமணம்,,கணவன் என்ற அரக்கனிடம் சிக்கி தவித்தது என தனது வாழ்க்கையின் பயணத்தை நினைத்து பார்த்தவள் ...அதன் பிறகு நடந்த சம்பவத்தை நினைக்க தொடங்கினாள்....


பிரகாஷ் என்ன இது!!!ஒரு சின்ன பொண்ண போய் உங்க பையன் இப்படி பண்ணி வச்சிருக்கான்!!!

டாக்டர் அது வந்து....


நீங்க எதுவும் சொல்ல வேணாம்!!!உங்களுக்கு அறிவு இல்ல!!! இந்த நிலமையில யாரு உங்க பையனுக்கு கல்யாணம் பண்ண சொன்னா!!! இதுவும் ஒரு விதத்துல அட்டம்ட் ரேப் தான் தெரியுமா!!!நான் இப்போ போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்தா என்ன நடக்கும் தெரியுமா!!!!



டாக்டர் அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க!!!!


சரி சரி உங்க கூட லேடீஸ் யாராவது வந்துருக்காங்களா!!!!


இல்ல டாக்டர்!!!!!


என்ன பிரகாஷ் இது !!!யாராவது லேடீஸ் இருந்தா அழச்சிட்டு வாங்க!!!!


டாக்டர் என்னாச்சு!!!ஏதாவது பிராப்ளமா!!!


உங்ககிட்ட எப்படி சொல்றது பிரகாஷ்!!!!


பரவாயில்ல டாக்டர் என்கிட்ட சொல்லுங்க!!! அவ எனக்கு பொண்ணு மாதிரி தான் என்றார் வேதனையுடன்!!!!



ப்ளட் ரொம்ப லாஸ் ஆகிருக்கு!!!கண்ட இடத்துல சிகரெட்டால சூடு வச்சிருக்கான்....சின்ன பொண்ணு அவ எப்படி தாங்குவா!!!டெயிலியும் ஆயீன்மெண்ட் போடனும்!!!அவுங்கள கொஞ்ச நாள் கேரா பாத்துக்கனும்..அதுக்கு முதல்ல ஒரு லேடிய ஏற்பாடு பண்ணுங்க!!! என்று கூறிவிட்டு சென்றார்!!!



சத்ய பிரகாஷ் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்து விட்டார்....அப்போது தான் அவருக்கு தன் மனைவியின் அண்ணி நிர்மலா ஞாபகம் வர அவருக்கு கோல் செய்து வரவழைத்தார்...
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :10




சுதந்திரா கண்கள் மூடி படுத்திருந்தாள்.... அப்போது அவளது தலையை யாரோ வருடுவது போல் இருக்க,, சட்டென விழித்தவள் அங்கிருந்த சத்திய பிரகாஷை பார்த்து....


சார் வேண்டாம் சார்...என்ன எங்கேயாவது கொண்டு விட்டுடுங்க சார்...!!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு!!!! நான் இனிமே அந்த வீட்டுக்கு வரமாட்டேன்!!! நான் தெரியாம உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!!! எனக்கு படிப்பு எல்லாம் வேண்டாம்!!! நான் எங்கேயாவது போயிடுறேன்!!! என்று கையெடுத்து கும்பிட்டாள்......


அவள் பேசுவதை கேட்க கேட்க சத்யபிரகாஷ்க்கு இதயத்தை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது.....



பயப்படாதடா கண்ணா!!!! அதெல்லாம் ஒன்னும் ஆகாது!!!! மாமா நான் இருக்கேன் டா!!!! அந்த மாதிரி எதுவும் நடக்க விடுவேனா!!!! இனிமே அவன் உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்!!!! அதுக்கு நான் பொறுப்பு என்று அவளது தலையை வருடி கொடுத்தார்!!!!


அப்ப இனிமே இப்படி நடக்காது இல்ல என்று அப்பாவியாய் கேட்டாள்!!!!


நடக்காதுடா என்று ஆறுதல் கூறியவர்.... உனக்கு உடம்பு சரியானதும் நீ படிக்கலாம்...அதுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் பாத்துகிறேன் சரியா!!!!



அவர் கூறியதை கேட்டு இருந்த பயம் காணாமல் போக
நான் படிக்க போறேனா!!!!!! என்று சந்தோஷத்தில் கத்தினாள்!!!!!


அவளுக்கு படிப்பில் உள்ள ஆர்வத்தை பார்த்து வியந்தவர்.....
ஆமாண்டா!!!! அதுமட்டுமில்லாமல் இனிமே உனக்கு துணைக்கு ஒருத்தவங்கள வர வச்சிருக்கேன்..... உனக்கு என்ன தேவை என்றாலும் அவங்ககிட்ட கேட்டா செய்வாங்க!!!!



யாரு சார் அது????


இதோ பாருடா!!!! என்ன சார் எல்லாம் கூப்பிடாதே!!!!அப்பானு கூப்பிடு!!!! அப்பான்னு கூப்பிட கஷ்டமா இருந்தா... மாமானு கூப்பிடு!!! சரியா...




சரி மாமா!!!! ஏனோ அவளது அப்பாவை தவிர வேறு யாரையும் அப்படி கூப்பிட அவளுக்கு தோன்றவில்லை......



யாரு வரப்போறா மாமா...அவுங்க என்ன நல்லா பாத்துப்பாங்களா!!!!



அது உன் புருஷனோட அத்தை வரப்போறாங்க!!!! அவுங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க!!!!!


அவருக்கு அத்தைனா எனக்கு அம்மா தானே!!!!அய்யா!!! எனக்கு ஒரு புது அம்மா கிடைக்க போறாங்களே!!!! என்று சந்தோஷத்தில் கத்தினாள்!!!!



ஆமாடா உனக்கு என்ன தேவனாலும் அவங்ககிட்ட கேட்கலாம் சரியா.....



சரி என்று தலை ஆட்டினாள்!!! மாமா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா!!!!



என்கிட்ட கேக்க என்னடா தயக்கம்!!!!


இல்ல... அது வந்து..... வந்து அவரோட பேரு என்ன!!!!!




யாரோட பேருடா?????



அதான் உங்க பையனோட பேரு????



அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியானார்...... பேர்கூட தெரியாமலா கல்யாணம் பண்ணிக்கிட்ட!!!!



ஆமா !!!எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல....அவுங்க என்ன மிரட்டி தான் ஒத்துக்க வச்சாங்க!!!! எனக்கு அப்போ கஷ்டமா இருந்தது!!!! நீங்க என்ன படிக்க வைக்கிறேனு சொன்னப்ப தான் எனக்கு சந்தோஷமாவே இருந்தது!!!!அதனால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.....



அப்போ உங்க அத்தை உன்கிட்ட எதுவுமே சொல்லலையா !!!!!!என்றார் அதிர்ச்சியுடன்



இல்ல !!!மாப்பிள்ளை கொஞ்சம் குடிப்பாரு... அப்படின்னு மட்டும்தான் சொன்னாங்க!!!!


சத்யபிரகாஷ்க்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை .....!!!அவன் பேரு சந்திர பிரதாப் வர்மா என்றார் .....


ஓ நல்ல பேரு தான்!!! அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்.....




உன்கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல!!!! ஏற்கனவே அவன் ஒரு பொண்ண லவ் பண்ணான்.... அந்த பொண்ணு மேலே உயிரா இருந்தான்.....ஒரு நாள் எங்கிட்ட வந்து அந்த பொண்ண பத்தி சொன்னான்....நானும் அவன் காதலுக்கு ஒகே சொல்லிட்டேன்....அவனுக்கு அவ்ளோ சந்தோஷம்....உடனே இத அவன்கிட்ட சொல்லனுனு சந்தோஷமா கிளம்பி போனான்......ஆனா அவன் திரும்பி வரும் போது அவன் முகத்துல சந்தோஷத்துக்கு பதில் ஏமாற்றம் தான் அதிகம் இருந்தது....


என்னாச்சு மாமா!!!அவுங்க வீட்ல ஒத்துக்கலயா!!!


அப்படி நடந்து இருந்தா கூட நான் சந்தோஷ பட்டிருப்பேன்!!!ஆனா ஆனா அந்த பொண்ணு அவ வீட்ல வேற ஒருத்தன் கூட......அதற்குமேல் கூறமுடியாது அவருக்குத் தொண்டை அடைத்தது....




மாமா நீங்க என்ன சொல்றீங்க!!!!என்றாள் அதிர்ச்சியாய்....


ஆமாடா!!!அத பாத்ததும் இவன் நொறுங்கி போய்டான்...!!!அவ செஞ்ச துரோகத்த நினைத்து கதறுனான்...ஏன் இப்படி பண்ணுனனு துடிச்சான்!!!


ஆனா அதுக்கு அவ நான் இப்படி தான்... இஷ்டமுனா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ இல்லைனா போய்டே இரு என்றாள்....


அப்போ நீ என்ன உண்மையா லவ் பண்ணலயா!!!!


ஹா. ஹா..ஹா லவ்வா!!!!நீ பாக்க அழகா இருந்த...அதவிட பணக்காரன் வேற...அதனால கொஞ்ச நாள் உன்கூட சுத்துனேன்....ஆனா நீ நான் நெனச்ச மாதிரி இல்ல...ஒரு கிஸ் கேட்டாலே கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் தப்புனு சொல்ற...என்ன போல ஒரு பொண்ண பக்கத்துல வச்சிகிட்டு உன்னால சாமியார் மாதிரி இருக்க முடியும்...ஆனா நான் லைப்ப ஒவ்வொரு நாளும் புதுசா வாழனுனு நினைக்கிறவ....என்னால அப்படி இருக்க முடியாது!!!! என்றாள் அலட்சியமாய்...



உனக்கு என்ன கிஸ் பண்ணனும் அவ்வளவு தானே!!!நான் பண்றேன் நீ எப்படி சொல்றியோ அப்படியே நடந்துகிறேன்...இதெல்லாம் விட்டுட்டு என்கூட வந்துடு...நாம இனிமே புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று கெஞ்சினான்....


ஒ அப்படியா!!!நான் என்ன சொன்னாலும் கேப்பியா!!!!

கே..ட்..பே..ன்!!!


அப்ப இப்பவே நீ எனக்கு வேனும்!!!என்ன முழுசா எடுத்துக்கோ !!!என்றவள் அவனை வந்து கட்டிபிடித்தால் கொஞ்சமும் கூச்சமின்றி.....


அதை கேட்டு அருவருப்புடன் முகத்தை சுழித்தவன் அவளை விலக்கி விட்டு கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு என்றான்...


பாத்தியா பாத்தியா இதுதான் நீ...இது பண்ணா தப்பு கிஸ் பண்ணா தப்புனு சொல்லிகிட்டு இருக்க..ஆனா என்னால அப்படி இருக்க முடியாது....லைப்ப என்ஜாய் பண்ணனும்....என்றாள்..


அருகில் நின்றவனோ அவளிடம் பேபி எனக்கு என்னமோ இவன் மேல டவுட்டா இருக்கு!!!நீயா கூப்டும் வர மாட்றானா இவ ஒரு வேளை ஆம்பள இல்லையோ!!!!


கரக்டா சொல்ற பேபி!!!எனக்கும் அந்த டவுட் இருக்கு!!!உடனே அவனை பார்த்து நீ உண்மையாவே ஆம்பிள்ளை தானா!!!!! என்றாள்....



அதுவரை பொறுமையாய் நின்றவன் அவள் தன் ஆண்மையை பற்றி பேசியதும் கோபம் தலைக்கு ஏற அருகில் இருந்த பூச்சாடியை எடுத்து அவள் தலையில் ஒரு போடு போட்டான்....அருகில் இருந்தவன் பயந்து அங்கிருந்து ஒடினான்....


அவள் அ...ம்...மா என்று அலற தலையிலிருந்து ரத்தம் கொட்டியது....மேலும் கோபம் தீராமல் இன்னொரு அடியும் வைத்தான்...அதில் அவள் சுருண்டு கீழே விழுந்தாள்......மேலும் அவளை அடித்து அடித்து கொன்றே விட்டான்.......



சட்டை முழுக்க இரத்த கரையுடன் வந்தவனை கண்டதும் நான் பயந்து போய் அவனிடம் கேட்க அவன் நடந்த அனைத்தையும் கூறினான்.....அதை கேட்டு நான் அதிர்ச்சியாகி நிற்கும் போதே போலீஸ் வந்து அவனை கூட்டிட்டு போய்டாங்க...நானும் அவன வெளில எடுக்க எவ்வளோ முயற்சி பன்னுனேன்....ஆனால் முடியல...அவனுக்கு இரண்டு வருஷம் ஜெயில் தண்டனை கொடுத்துட்டாங்க....
எத்தனையோ முறை நான் பாக்க போனேன்...ஆனா அவன் என்னை பாக்க விரும்பவே இல்லை....தண்டனை முடிஞ்சு வெளியே வந்தப்போ ஆளே மாறிப் போயிருந்தான்..ஜெயில்ல சில போதை பொருள் கடத்துறவுங்களோட பழக்கம் ஏற்பட்டு போதைக்கு அடிமையாகி வேற ஒருத்தனா தான் வந்தான்....அதுக்கு அப்பறம் குடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.....நாளுக்கு நாள் அது தான் அவனது உலகமுனு ஆயிடுச்சு....நான் பயந்து போய் அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணலானு நெனச்சப்போ யாருமே அவனுக்கு பொண்ணு குடுக்க முன் வரல......அப்பறம் தான் என் பிரண்ட் மூலமா உன்ன பாக்க வந்தேன்...உன் அத்தை கிட்ட எல்லாத்தையும் சொல்லி தான் நான் என் மகனுக்கு உன்ன கல்யாணம் பண்ணுனேன்....ஆனா அவுங்க உன்கிட்ட எதுவுமே சொல்லலனு எனக்கு சத்தியமா தெரியாதுமா!!!!தயவு செய்து என்ன மன்னிச்சிடும்மா!!!!என்றார்....


அய்யோ மாமா!!!!எதுக்கு மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க!!!! உங்க மேல எந்த தப்பும் இல்ல..!!!ஆனா அவரு ரொம்ப பாவம்ல்ல...அப்போ அவரு ரொம்ப கஷ்டப்பட்டுருப்பாரு தானே!!!


அவனால் தனக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்தும் அதனை பற்றி கவலை படாமல் அவனுக்காக இரக்கப்படும் அவளை நினைத்து அவருக்கு பெருமையாக இருந்தது....


மாமா அவர நெனச்சு நீங்க கவலை படாதீங்க....!!!! சீக்கிரமே அவரு நல்லா ஆயிடுவாறு!!!!என்று அவருக்கு ஆறுதல் கூறினாள்...


அப்படி நடந்தா சந்தோஷம் தான்!!!!சரிடா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ...நான் டாக்டர பாத்துட்டு வந்துடுறேன்...!!!!என்று கூறிவிட்டு சென்றார்.....




ச்சீ நீயும் ஒரு பொண்ணு தான!! உன்னால எப்படி இப்படி ஒரு காரியத்த செய்ய முடிஞ்சது!!!!உனக்கு மனசாட்சி இல்ல..!!!இதே நீ பெத்த பொண்ணா இருந்துருந்தா இப்படி பண்ணிருப்பியா!!!!எதுக்கு பணம் பணமுனு இப்படி அலையுற....சம்பாதிக்கல சம்பாதிக்கலனு டார்ச்சர் பண்ணி எங்க அப்பன அல்பாய்ஸ்ல அனுப்பிட்ட....!!!அந்த பாவத்தையே இன்னும் போக்கல...அதுக்குள்ள ஒரு சின்ன பொண்ண போய் இப்படி ஒருத்தனுக்கு கட்டி வச்சிருக்கியே!!!!நீயெல்லாம் ஒரு தாயா!!!! என்று கோபமாய் கத்தி கொண்டிருந்தான் ஆதவன்...!!!


டேய் என்னடா நீ ரொம்ப பேசுற!!?பணம் இல்லாத மனுஷன் பொணத்துக்கு சமம் என்றார் கனகா!!!!


நீ சொல்றது கரக்ட் தான்!!!ஆனா அதை உழைத்து சம்பாதிக்கனும்!!!!இப்படி ஆதரவு தேடி வந்த பொண்ணு வித்து சம்பாதிக்க கூடாது...!!!!



டேய் என்ன பேச்சு பேசுற !!!!அவளுக்கு செலவு பண்ணத அப்பறம் எப்படி வசூலிக்கிறது!!!!


அவ உன்னோட அண்ணன் பொண்ணு தான!!! மாமா நமக்கு எவ்வளவு செஞ்சிருப்பாரு!!!அதெல்லாம் மறந்துட்டு அவரு பொண்ணுக்கு செஞ்சதையே கணக்கு பாக்குற...!!!சும்மாவா செஞ்ச!!! சின்ன பொண்ணுனு பாக்காம சம்பளம் இல்லாத வேலைகாரி மாதிரி தான நடத்துன!!!


ஆதவா அது வந்து......


போதும் இதுக்கு மேல நீ எதுவும் பேசாத!!!! உன்ன என்னோட அம்மானு சொல்லவே அசிங்கமா இருக்கு!!!! இனிமே என் முகத்துலயே முழிக்காத என்று கூறிவிட்டு சென்றான்......


அவர் தான் அவன் கூறியதை கேட்டு சிலையென நின்றார்..!!?



வாம்மா வா எப்படி இருக்க!!! உன் புருஷன் எப்படி இருக்கான் என்றார் சத்ய பிரகாஷ் நிர்மலாவிடம்....



நீங்க இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை அண்ணா!!! நாங்க நல்லா இருக்கோம்.. வர்மா இப்போ எப்படி இருக்கான்.....அவன் கல்யாணத்துக்கு வர முடியல...அப்போ அம்ருதாவிற்கு உடம்பு சரியில்லை...அதான் வர முடியவில்லை என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்....



பரவாயில்லம்மா!!!!இப்போ அம்முக்கு பரவாயில்லையா!!!


இப்போ நல்லா இருக்கா அண்ணா!!!!அப்பாவும் பொண்ணும் என்ன முன்ன அனுப்பிட்டு பின்னால வரேனு சொன்னாங்க !!!!


அப்படியா !!! சரிம்மா நீ போய் ப்ரஸ் ஆயிட்டு வா...நம்ம வீட்டு மருமகள பாக்க பாக்கலாம்...!!!


அண்ணா தப்பா எடுத்துக்காதீங்க!!!! எனக்கு வர்மாவ பாக்கனும்!!!



சரிம்மா இரண்டு பேரையும் பாக்கலாம்....நீ போய் ப்ரஸ் ஆயிட்டு வா!!!


சரி அண்ணே என்று கூறிவிட்டு தங்களுக்காக ஒதுக்கபட்ட அறைக்கு சென்றார்....


அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் வர்மாவின் அறையில் இருந்தனர்...



வர்மா முழு போதையில் இருந்தான்....பார்பதற்கு மெலிந்து போய் கண்கள் எல்லாம் ஒட்டி போய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தான்!!!



ஏ..ய் யா...ண்..ட்.லி எனாற வு..ட்..டு போன என்று புலம்பி கொண்டிருந்தான்..!!!


என்ன அண்ணா இப்படி ஆய்டான்!!! பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா!!!நான் வளத்த பையன இப்படியா பாக்கணும் என்று அழுதார்....



அழாதம்மா!!!எல்லாம் அவனோட தலை எழுத்து...!!! என்று கூறி வருந்தினார்...


இந்த நிலமையில இருக்குற நம்ம பையனுக்கு வாழ்க்கை குடுத்த அந்த புண்ணியவதி யாரு அண்ணே!!!!



அவளுக்காக தாம்மா உன்ன வரவழைத்தேன் என்றவர் நடந்த அனைத்தையும் கூறினார்!!!!


சரி அண்ணா நான் பாத்துகிறேன்...நீங்க ஒன்னும் கவலை படாதீங்க...என்று கூறி கொண்டே சுதந்திராவின் அறைக்கு சென்றனர்....



சுதந்திரா கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்....

சுதந்திரா யாரு வந்துருக்கா பாரு என்ற பிரகாஷின் குரலில் விழித்தவள் அங்கு நின்று கொண்டிருந்த நிர்மலாவை கண்டு அதிர்ச்சியானாள்....




அவளது உதடுகளோ அ.....ம்....மா என்று அவளையும் அறியாமல் முணுமுணுக்க ...அம்ம்ம்ம்மா என்று உரக்க அழைக்க போகும் நேரம் அம்ம்மா நீங்க இங்க தான் இருக்கீங்களா!!! என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் அம்ருதா...அவளை தொடர்ந்து ராமச்சந்திரனும் வந்தார்....



அவர்கள் இருவரையும் யார் என்று யூகித்தவள் அம்மா என்று அழைக்க வந்ததை அப்படியே விழுங்கி விட்டாள்....


சுதந்திரா நான் சொன்னேன்ல!! அது இவுங்க தான்!! பேரு நிர்மலா..இது அவுங்க ஹஸ்பண்ட் ராமசந்திரன் இது அவுங்க பொண்ணு அம்ருதா என்று அறிமுகபடுத்த சுதந்திரா வேண்டா வெறுப்பாய் கேட்டுக் கொண்டாள்...!!அவளது மனமோ உள்ளே அக்னி பிளம்பாய் வெடித்து சிதறியது...என்னையும் என் அப்பாவையும் விட்டுவிட்டு நீ வேறு ஒருவருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா!!!!பெற்ற மகளையே அடையாளம் கான முடியாத அளவிற்கு நீ இருக்கிறாய் என்று கோபமும் ஆற்றாமையும் ஒரு சேரே எழுந்தது...

சுதந்திரா நீ சொன்ன மாதிரி உனக்கு அம்மா அப்பா தங்கை எல்லாம் கிடச்சாச்சு....என்றார்...


ஆமாண்டா கண்ணா!!! அண்ணா எல்லாம் சொன்னார்...நீ ஒன்னும் கவலை படாத இனிமே உன்ன பத்திரமா பாத்துக்க வேண்டியது இந்த அம்மா பொறுப்பு என்றார்....!!!


அம்மாவா!!!!என்றாள் அதிர்ச்சியாகி ஒருவேளை தான் யார் என்று ஞாபகம் வந்துவிட்டதோ என்று நினைத்து....


ஆமா!!!வர்மாக்கு அத்தைனா உனக்கு நான் அம்மா தானே!!!



ஓ .. இல்லைங்க என்னால உங்கள அம்மானு கூப்பிட முடியாது என்றாள் உறுதியுடன்..!!!

அவள் கூறியதை கேட்டு நால்வரும் அதிர்ச்சியாயினர்!!!!



என்னம்மா சொல்ற என்றார் புரியாமல்!!!



உலகத்திலே ரொம்ப அழகான வார்த்தை எது தெரியுமா!!!அம்மா என்ற வார்த்தை தான்...அது வெறும் வார்த்தை மட்டுமில்ல....நம்பிக்கை...அன்பு..பாசம்...விட்டு கொடுத்தல்...இதெல்லாம் சேர்ந்த ஒரு ஜீவன் தான் அம்மா...!!கடவுள் எங்களுக்கு குடுக்குற முதல் முகவரி அம்மா!!!!ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும் அம்மாவை போல் அன்பு செய்ய முடியாதுனு சொல்லுவாங்க....ஆனா நான் உலகத்திலயே வெறுக்குற ஒரு வார்த்தைனா அது அம்மா என்ற வார்த்தைய தான்....தன்னோட சந்தோஷத்தை விட பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியமுனு நினைக்கிற தாய தான் நான் பாத்துருக்கேன்.....ஆனா அவளோட சந்தோஷத்துக்கா என்னையும் எங்க அப்பாவையும் தனியா விட்டுட்டு போன ஒரு கேடு கெட்டவள அம்மானு கூப்பிடுற தகுதி அவளுக்கு இல்ல.....என்றாள் கோபத்துடன்......


அவள் கூறியதை கேட்டு சத்யபிரகாஷ் இந்த பொண்ணு இவ்வளவு பேசுமா!!!என்று அதிர்ந்து போய் அவள் கூறிய எதுவும் புரியாமல் குழம்பி நின்றார்.....



நீ என்னம்மா சொல்ற...எனக்கு ஒன்னும் புரியல...அதுக்கும் என்ன அம்மானு கூப்பிடுறதுக்கும் என்னம்மா சம்மந்தம்!!!!


ஏதோ ஓரு ஆதங்கத்தில் இப்படி கூறிவிடாடாள்...அவள் கேட்ட பிறகே அவள் கூறியது அவளுக்கு விளங்க
அது...அதுவந்து....ஆஆங் என்று யோசித்தவள் அப்படிப்பட்ட உன்னதமான வார்த்தையை சொல்லி உங்கள கூப்பிட்டா அந்த கேடுகெட்டவ ஞாபகம் தான் வரும்!!!
அதனால நான் உங்கள அம்மானு கூப்பிட மாட்டேன் என்றாள்!!!!


சற்று முன் அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து போன நிர்மலா ...இப்போது அவள் கூறிய காரணத்தை கேட்டு தன்னை சமன்படுத்தி கொண்டார்!!!!



அதனால என்ன கண்ணா உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே கூப்பிடு !!!என்றார்....



அக்கா அப்போ அம்மாவ என்ன மாதிரி நீங்களும் நிம்மினு கூப்பிடுங்க என்றாள் அம்ருதா.....!!??


அப்படி கூப்டா திட்ட மாட்டாங்க....அதுவும் இலாலாம சின்ன வயசுல நான் வளர்த்த நாயோட பேரும் நிம்மி தான்.....!!!!


அவள் கூறியதை கேட்டு நிர்மலா அவளை முறைக்க .....
அதெல்லாம் அம்மா கோச்சிக்க மாட்டாங்க.....என்றவள் நிர்மலாவை பார்த்து நீங்க கோச்சிக்க மாட்டீங்க தானே!!என்று கேட்க வந்த கோபத்தை அடக்கி கொண்டு ஆமாம் என்று தலையாட்டினார்....


அவுங்களே சொல்லிட்டாங்க....!!! நீங்க இனிமே அப்படியே கூப்பிடுங்க....என்றாள்...

சரி சரி விட்டா நீ விடிய விடிய பேசுவ ...அவ ரெஸ்ட் எடுக்கட்டும்...நாம கிளம்பலாம் என்று கூறி அந்த அறையை விட்டு வெளியேறினர்.....
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்.:11


அவர்கள் சென்றதும் அறையில் தனித்து இருந்த சுதந்திராவிற்கு தன் தந்தை கொடுத்த கடிதம் நினைவிற்கு வர அதனை எடுத்து பிரித்தாள்....அதில்


அன்புள்ள மாயாவிற்கு.....என்று ஆரம்பித்த அந்த கடிதத்தை படிக்க படிக்க அவளது கை நடுங்கியது...கோபம் ஆற்றாமை ஏமாற்றம் துரோகம் என பலவற்றை தாங்கிய தன் தந்தையை நினைத்து கண்ணீர் வடித்தாள்....நிர்மலாவை அப்போதே கொன்றுவிடும் அளவிற்கு அவளுக்கு கோபம் வந்தது....!!!மீண்டும் அந்த கடிதத்தை தொடர்தாள்....!!!


அழகாய் சென்று கொண்டிருந்த எனது வாழ்க்கையில் தென்றலாய் வந்து சூறாவளியாய் சுழன்று அடித்தவள் அவள்..!!!உனக்கு நன்கு தெரியும் எனது உடல்நிலையை பற்றி....!!!ஆனந்தமாய் சென்ற எங்கள் வாழ்க்கையில் சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்தன...!!!! அன்றொரு நாள் எனக்கு ஒரு ஆக்ஸிடண்ட் ஆனது....அதன் பிறகு எங்களது வாழ்கையே மாறிவிட்டது...!!!சிறிது சிறிதாக நடந்த சண்டை பெரிதானது..!!!ஒருநாள் வந்து என்னுடன் வாழ விரும்பவில்லை....உன்னை விட்டு செல்கிறேன் என்றாள்!!!!நான் அதை கேட்டு அதிர்ந்து போனேன் ...!!!அந்த நாளை உன்னாலும் மறக்க முடியாது..!!!அவள் நம் இருவரையும் வேண்டாம் எனாறு விட்டு சென்றதை!!!!!!

சுதந்திராவின் மனமோ கதறி துடித்தது...!!!அன்றைய நாளை எண்ணி...!!!அவள் சென்ற போது தன் தந்தை அனுபவித்த வலி ஏக்கம் தவிப்பு அனைத்தையும் கண்களால் கண்டவள் ஆயிற்றே.!!!எத்தனை முறை அந்த சம்பவம் தன் கனவில் வந்து தன்னை துன்ப படுத்தியது..!!!அந்த சம்பவம் இப்பவும் கண் முன் நிலழாடியது....!!!!!


நிலா!நான் சொல்றதைக் கேளும்மா!என் மேலே எந்தத் தப்பும் இல்லை!"-பிரிந்து செல்ல நினைக்கும் தன் மனைவியை இயன்றவரை தடுக்க முயன்றாள் அவர்....


"ச்சீ..கையை விடு!எனக்கு அருவருப்பா இருக்கு!"-கரம் தீண்டிய கணவனின் கரத்தினை உதறினார் அவர்.....


"நான் சொல்றதைக் கேளு!என் மேலே எந்தத் தப்பும் இல்லை!தயவுசெய்து போகாதே!ந...நம்..நம்ம பொண்ணுக்காகவாது இரும்மா!அம்மா இல்லாம அவ வளரக் கூடாது!உன்னை நான் கெஞ்சி கேட்கிறேன்!"-அப்பெண்மணி சுவரோரம் அச்சத்தோடு ஒட்டி இருந்த தன் புதல்வியின் மேல் ஒரு அக்னிப் பார்வையை வீசினார்.....



"உன் பொண்ணு தானே!அவளும் இனி உன்னை மாதிரி தான் வளர்வா!எனக்கு அப்படிப்பட்ட அவமானம் தேவையே இல்லை!"-என்றவர் பதிலுக்கு காத்திராமல் அவரது அருகே சென்று அவர் காதினில் ஏதோ கூறினார்......



அதனை கேட்டு அதிர்ச்சியாகி ஸ்தம்பித்து போனவர் ....அடுத்த நொடி தன்னை சுதாரித்து கொண்டு
இவ்வளவு கேவலமானவளா நீ?ச்சே...!இனி நான் உனக்கு கணவனும் இல்லை!நீ எனக்கு மனைவியும் இல்லை!உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை .... எனாறார்..


அதை நினைத்தவளுக்கு இப்போதும் கண்கள் கலங்கியது...!!!!அவள் அன்று தன் தந்தையின் காதில் கூறியது என்ன என்ற விடை தெறியா கேள்விக்கு விடை இதில் இருக்கலாம் என்று நினைத்து அதை படித்தவளுக்கு கைகள் நடுங்க தொடங்கியது....!!!அதில் இருந்தவற்றை நம்ப முடியாமல் திகைத்து நின்றாள்....!!


அவள் அன்று என் காதில் கூறியதை இன்று கூட என்னால் நம்ப முடியவில்லை....எனது உடலில் எச் ஐ வி இரத்தத்தை செலுத்தியது அவள் தானாம்..!!!வருங்காலத்தில் அவளது மகிழ்சியான வாழ்க்கைக்கு நான் தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக தான் இது!!!!என்றாள்...அதை கேட்டு நான் துடித்து போனேன்...!!!



வாழ்க்கையே முடிந்தப்பிறகும் வைராக்கியத்தோட உன்னை நான் வளர்த்த காரணம் இரண்டு!முதல் காரணம்,நீ என் இரத்தம்!என்னோட மாயா!என் ஆதி,அந்தம் எல்லாமே நீ தான்!யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கி ஆண்டவள் நீ!என் பிரதி பிம்பம் நீ!!!மற்றொன்று நிர்மலா.....!!!!துரோகி ...!!! நம்பிக்கை துரோகி ....!!!இங்கே உன்னை விட்டு நான் தனித்து செல்வது உன்னால் ஒரு கடமை நிறைவேற்ற பட வேண்டும் என்று தான்...!!!!அது மரணம்!!!நிர்மலாவின் கொடூர மரணம்....!!!!அவள் இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவள்...!!!!காதல் என்ற பெயரில் என்னை ஏமாற்றி எனக்கும் அந்த காதலுக்குமே துரோகம் செய்த அவளை அழித்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்...!!!


நான் போக வேண்டிய காலம் வந்துவிட்டது!ஒரு அப்பாவா உனக்கு செய்ய வேண்டிய ஒரு கடமையை செய்யாமல் போறேன்!அது என்னன்னு உனக்கு தெரிந்திருக்கும்!!!!!அந்த நிர்மலா என்ற அரக்கியை அழிக்க மாயாங்கிற மகாசக்தியை பெண்ணென்ற ரூபத்துல இந்த உலகத்துக்கு விட்டு வைத்துவிட்டு செல்கிறேன்!!!!நீ சுயமாக வாழுற காலம் வந்துவிட்டது!!!!"



"இனி,காலம் உள்ளவரை உன் கூட தான் நான் இருப்பேன்!ஆனா,உன் பார்வைக்கு தெரிய மாட்டேன்!என்னடா அப்பா இப்படி பேசுறாரே தற்கொலை பண்ணிக்க போறாரான்னு நினைக்காதே!என் முடிவு நெருங்கினது எனக்கு தெரிந்துவிட்டது அவ்வளவுதான்!நான் கூறியதை மறந்து விடாதே!!!!அவளால் பாதிக்கப்பட்ட கடைசி உயிர் நானாக தான் இருக்க வேண்டும்...!!!
என்று எழுதியிருந்தார்...!!!



அவள் அடுத்த பக்கத்தை திருப்ப அதில் பின் குறிப்பு என்று ஏதோ எழுதியிருந்தார்...

மாயா நீ நினைக்கலாம் ஏன் உனக்கு திருமணம் முடிந்த பிறகு இந்த கடிதத்தை படிக்க கூறினேன் என்று..!!!அதற்கு காரணம் உண்டு...!!!நிர்மலா எனக்கு செய்த துரோகத்தை நீ முன்பே அறிந்தால் நீ திருமண பந்தத்தில் உன்னை ஈடுபடுத்தி கொள்ள மாட்டாய்...காதல் மேல் உனக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்...அதனால் தான் இந்த கடிதத்தை நீ திருமணம் ஆனதும் படிக்க வேண்டும் என்று கூறினேன்...!!!!!என்று முடித்திருந்தார்....


நிர்மலாவை நினைத்து அவளது கண்களில் அக்னி ஜுவாலை உண்டானது....!!!ஒரு நொடி தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தாள் சுதந்திரா.திறக்கப்பட்ட விழிகளுக்குள் ரௌத்திரம் தலைவிரித்தாடியது!!!!!நிர்மலாவை பழிவாங்க தக்க சமயத்தை எதிர்பாத்து கொண்டிருந்தாள் மாயா!!!!



சுதந்திராவின் உடல் நிலை இப்போது நன்கு தேறி இருந்தது...அவள் எதற்காவும் நிர்மலாவின் உதவியை நாடவில்லை....தன்னால் முடிந்ததை தானே செய்து கொண்டாள்....இதற்கு இடையில் அவளை பள்ளியில் சேர்க்க வேண்டிய வேலைகளை சத்யபிரகாஷ் செய்து கொண்டிருந்தார்.....!!!!


அன்று ஞாயிற்று கிழமை....அனைவரும் வீட்டில் இருந்தனர்...சுதந்திரா பயந்து பயந்து உள்ளே நுழைந்தாள் வர்மாவின் அறையை சுத்தம் செய்வதற்காக !!!!அங்கு வர்மா போதையில் படுத்து கொண்டு ஏதோ புலம்பி கொண்டிருந்தான்..... அவனது அறை முழுவதும் மது பாட்டில்களாக கிடந்தன.....அதனை எடுத்து அறையை சுத்தம் செய்த அவளுக்கு அவனது நிலைமையை நினைத்து பரிதாபமாக இருந்தது..... அப்போதுதான் அவள் அவனை நன்கு கவனித்துப் பார்த்தாள்.....முகம் முழுவதும் முடிகள் படந்து அவனது முகத்தையே மறைத்திருந்தன.....!!!!


முதல்ல மாமாகிட்ட சொல்லி இவருக்கு ஷேவ் பண்ண சொல்லனும்!!!!!தலை எது மூஞ்சி எதுனே தெரியல..!!!!என்று நினைத்து கொண்டே அறையை சுத்தம் செய்தவள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை கண்டு மலைத்து போனாள்.....!!!


இவ்வளவா!!!!இவ்வளவும் கண்ணு முன்னாடி இருந்தா எவனா இருந்தாலும் குடிக்க தான் செய்வான்..!!!முதல்ல இதெல்லாம் இங்கிருந்து தூக்கி எறியனும்...என்று நினைத்து கொண்டே அவை அனைத்தையும் எடுத்து வேறு இடத்தில் மறைத்து வைத்தாள்...!!!!



இவள் அறைக்குள் வந்து மூன்று மணி நேரம் ஆகியிருந்தது!!!!!!
இப்போது அவனை தவிர அறை முழுவதையும் சுத்தப்படுத்தி இருந்தாள்...!!!
பிறகு தன்னை சுத்தபடுத்தி கொண்டு கீழே வந்தாள்...!!!


அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து இருக்க.....!!! அவள் வர்மாவின் அறையிலிருந்து வெளி வருவதை கண்டு அதிர்ந்து போயினர் ....!!!கொஞ்ச நேரமாக அவளைக் காணாமல் இருந்ததால் அவள் தோட்டத்தில் இருப்பாள் என்று நினைத்த சத்திய பிரகாஷ் அவள் மாடியிலிருந்து கீழே இறங்கியதும் அவளைப் பார்த்து பயந்துதான் போனார்....!!!! ஆனால் அது ஒரு நிமிடம் மட்டுமே!!!!! சுதந்திரா முகத்தில் எந்த பயமும் இல்லாமல் நிர்மலான முகத்துடன் வருவதை கண்டு தான் அவருக்கு நிம்மதியே வந்தது...!!!!




வாம்மா!!!!வந்து உட்காரு !!! நீ இவ்வளவு நேரம் மேலயா இருந்த!!! நான் நீ தோட்டத்துல இருப்பேனு நெனச்சேன் என்றார்.....!!!!



இல்ல மாமா!!!!!அவர் ரூம் எல்லாம் ஒரே அழுக்கா இருந்தது..... அதனால்தான் சுத்தம் பண்ணிட்டு வரேன்!!!!!



கண்ணா!!!! நான் ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதே !!!!!அவன் ரூம்ல இருக்கும் போது அவன் கண்ணு முன்னாடி நீ போகாத !!!???



ஏன் மாமா !!!??!


இல்லம்மா...அது...வந்து.......


பெரியவங்க சொல்றாங்கல!!!!! சொல்லுறதை மட்டும் செய்..!!! ஏன் எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்காதே!!!! என்று வார்த்தையில் கடுமை கூட்டி கூறினாள் நிர்மலா...!!



அவர் கூறியதைக் கேட்டு சுதந்திரா அவரை முறைத்துக்கொண்டே ...மாமா சொல்லுங்க !!!ஏன் போக கூடாது !!என்றாள்...


இல்லம்மா!!! அன்னைக்கு மாதிரி ஏதாவது தப்பா நடந்துட கூடாதுங்குற பயத்துல.......


புரியுது மாமா!!!!அதுக்காக அவர அப்படியே
விட்டுட போறீங்களா!!! அவர திருத்துறதுக்கு கொஞ்சமாவது முயற்சி பண்ணலாமே!!!!


நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்!!!!அவன் கேக்கவே மாட்றான்!!!அதுக்கு மேல நான் என்னமா பண்ண முடியும்!!!!



இப்படி சொன்னா எப்படி மாமா!!!!நாம தான் அவரை மாத்த முயற்சி பண்ணனும்..!!!முதல்ல அவரோட தாடி எல்லாம் ஷேவ் பண்ண யாரயாச்சும் வர சொல்லுங்க...!!!என்று கூறிக் கொண்டிருக்கும் போது ...



டேய்...எல்லாரும் எங்கடா இருக்கீங்க..!!!என்று கேட்டு கொண்டு அங்கு வந்தான் வர்மா!!!


வாப்பா !!!வந்து சாப்டு என்றார் பிரகாஷ்...!!!



எனக்கு சாப்பாடெல்லாம் வேணாம்!!!!என் ரூம்ல இருந்த பாட்டிலெல்லாம் எங்க என்று கத்தினான்..!!!!


எங்களுக்கு தெரியாதுப்பா!!!!



பொய் சொல்லாதீங்க!!!!யாரோ அது எல்லாத்தையும் எடுத்துருக்கீங்க...!!உங்கள கெஞ்சி கேக்குறேன் குடுத்துடுங்க!!!!தலையெல்லாம் வலிக்குது !!!!பிளீஸ் குடுத்துடுங்க என்று கெஞ்சினான்!!!!



அவன் கெஞ்சுவதை பார்த்து அனைவருக்குமே பாவமாய் தான் இருந்தது...!!!


அய்யோ!!!தலையை வலிக்குதே!!!!ஆஆஆஆஆஆ என்று தலையை பிடித்து கொண்டு கத்தினான்...!!!!


சட்டென அங்கிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்து கொண்டு இப்போ குடுக்கல அறுத்துகிட்டு செத்துடுவேன் என்று மிரட்டினான்!!!!


அவனது செயலை கண்டு அனைவரும் நடுங்கி போயினர்!!!!

வேண்டாம் சந்திரா!!!அத கீழே வச்சிடு !!!!


ஆமா வர்மா !!! அத கீழே வை !!!அத்தை உனக்கு வாங்கி தரேன்!!!

எனக்கு இப்பவே வேணும்!!!உடனே வாங்கி வர சொல்லுங்க !!!!என்று கூறி கொண்டே கையில் சிறு அழுத்தம் கொடுக்க கத்தி அவனது கழுத்தின் தோல் பாகத்தை கீறி இரத்தம் வந்தது!!!!!

அதனை கண்டு பயந்து போன பிரகாஷ் அய்யோ!!! ரத்தம் என்று கத்திகொண்டே அவனருகில் செல்ல...!!!


கிட்ட வராதீங்க!!!! வந்தா அறுத்துக்குவேன் என்று இரண்டடி பின்னோக்கி வைத்தான்..!!!!!

முதல்ல அத பண்ணு!!!நீ உயிரோட இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்!!!!அதுக்கு பதில் நீ சாவுறத மேல்!!!!நீ இருந்து எல்லாரையும் கஷ்ட படுத்துறதுக்கு பதில் ஒரே அடியா போய்டு என்று அமைதியாய் ஆனால் தன் ஆழ்ந்த பார்வையை செலுத்தி கூறினாள் ...!!!!!

அவள் கூறியதைக் கேட்டு அனைவருமே அதிர்ந்து போயினர்...!!!


சுதந்திரா நீ என்ன பேசுற !!!என்று அதட்டினார் பிரகாஷ்.....!!



ஏய் !!!உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.... அவனே போதையில பண்ணிக்கிட்டு இருக்கான்.. நீ வேற எக்குத்தப்பா சொல்லி அவனை அழிக்க பாக்குறியா!!!!! முதல்ல வாய மூடிக்கிட்டு இங்கிருந்து போ !!!என்று கத்தினார் நிர்மலா....!!



என்னை இங்கிருந்து போக சொல்ல நீ யாரு!!??இது என்னோட வீடு !!!அது என்னோட புருஷன்!!! அவருக்கு நான் பொண்டாட்டியா!!! இல்ல நீ ....என்று இழுக்க....



சுதந்திரா...!!!! என்று அதட்டினார் பிரகாஷ் ......



மாமா!!! இப்படி எல்லாரும் அவர் செய்றதுக்கு பயந்துபோய் இருக்கறதுனாலதான் அவர் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கார்...!!!! என்று கூறும் போதே ....


ஏய்ய்ய்..... யாருடி நீ !!!!என் வீட்டுக்கு வந்து என்னையே சாக சொல்ற!!!!! நான் எதுக்கு டி சாகணும்.... நீ சாவு என்று கூறியவன் இமைக்கும் நேரத்தில் கத்தியை அவளது கழுத்தில் வைத்தான்....!!!!


சந்திரா வேண்டாம்பா!!!!அவ ஏதோ சின்ன பொண்ணு ..!!! தெரியாம சொல்லிட்டா!!!! அவள விட்டுடு என்று கெஞ்சினார்...!!!



மாமா!!!எதுக்கு பயப்படுறீங்க!!?தைரியமா இருங்க ....!!!அவரால என்ன எதுவும் பண்ண முடியாது !!!!என்றாள் ....



ஏய்!!!என்னடி உனக்கு அவ்வளவு தைரியமா!!!!என்றவன் அவளது கழுத்தில் கத்தியை அழுத்த ....


வலியில் ஸ்...ஸா..ஆஆ என்று முணகினாள்......!!!



அப்போது தா...ரா என்று ஒரு குரல் கேட்க.....



குரல் வந்த திசையை அனைவரும் பார்க அங்கு ஆதவன் நின்று கொண்டிருந்தான்.....


ஆ..து என்று அழைத்தவளுக்கு அவளையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...!!!


அவளது கண்ணீர் வர்மாவின் கையில் பட்டு தெறிக்க ...

ஏய் !!!யாருடி அவன்...உன் கள்ள காதலனா!!!!இவ்வளவு நேரம் எதுத்து பேசின...இப்ப அவன பாத்ததும் அழற.....
என்ன நல்லவ மாதிரி நடிக்கிறியா!!!!


ஏய்!!!என்ன வார்த்தை டா சொன்ன என்று ஆதவன் வர்மாவை அடிக்க கை ஓங்க...!!?


ஆ...து அவரு என் புருஷன்!!!என்ன என்ன வேனாலும் பேசலாம். அதுக்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு!!!!!என்றாள்...



ஏய்!!கேட்டியா!!! எனக்கு எல்லா உரிமையும் இருக்காம்...இந்த பொண்ணுங்கல நம்பாத...எல்லாரும் சுயநலவாதிங்க!!!சுகத்துக்காக எவன் கூட வேணாலும் போவாளுங்க!!!! ஆனா நம்ம கிட்ட நல்லவுங்க மாதிரியே நடிப்பாளுங்க !!!என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி கொண்டிருந்தான்..!!!


தாரா என்ன இது!!!இதுக்கு மேல நீ ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது..!!!நீ உடனே கிளம்பி எங்கூட வா என்றான்...!!!!
ஒரு பொண்ண கை நீட்டி அடிக்கிறவன் எல்லாம் ஆம்பளையா!!!!




அவன் கூறியதை கேட்ட வர்மாவின் கண்கள் சிவக்க தொடங்கியது...
ஏய் !!!அவ ஏன் பொண்டாட்டி !!!அவள நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்றான்...தான் மறுபடியும் ஒரு பெண்ணிடம் தோற்று போவது பிடிக்காமல்.....


அவன் கூறியதை கேட்ட சுதந்திராவின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது....!!!அடுத்த நிமிடம் அவன் கூறியதை கேட்டவளுக்கு தன் இதயத்தை யாரோ இரும்பு கம்பியை கொண்டு அடிப்பது போல் இருந்தது...!!!!



இவள இப்போ நான் அனுபவிச்சிட்டு நான் ஆம்பளனு நிரூபிக்கிறேன்...அப்பறம் அவள நீ கூட்டிட்டு போ நான் எதுவும் கேட்க மாட்டேன் என்றவன் அவளது கழுத்திலிருந்து கத்தியை எடுத்தவன் அவளின் கழுத்தின் அருகே தன் முகத்தை வைத்து அவளை ஆழந்து சுவாசித்தான்....




அவனது செய்கையில் அவளது உடல் அப்பட்டமாய் நடுங்க....அதனை அடக்க வழி தெறியாமல் நின்றாள்.. !!!!

ஆதவன் அவளின் அருகே வர...





வேண்டாம் ஆது!!!!எல்லாரும் இங்கிருந்து போங்க!!! ஒரு பொண்டாட்டியா அவரோட கடமையை நிறைவேத்த வேண்டியது என்னோட பொறுப்பு என்று கூறினாள்.!!!!



சுதந்திராம்மா!!!!என்று பிரகாஷ் தயங்க....


பயபபடாதீங்க மாமா!!!எனக்கு ஒன்னும் ஆகாது...நீங்க போங்க என்றாள்....


அவள் கூறியதை கேட்டு கனத்த இதயத்துடன் அனைவரும் சென்றனர்...!!!


அவளை நெருங்கி அவளின் காதுகளை வன்மையாய் கடித்தான்....அது அனைவரும் நடமாடும் பொது இடம் என்று கூட பாராமல் ஒரு அரக்கனை போல் அவளை கீழே தள்ளி விட்டு அவளின் மீது ஆக்ரோஷமாய் படந்தான்....ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவள் அவனது முரட்டு தாக்குதலில் உடம்பில் வலி அதிகமாக இரண்டு பக்க தரையையும் அழுத்தி பிடித்து கொண்டு தன் வலியை பொறுத்து கொண்டாள்...!!!!அவளை காய படுத்த நினைத்தவன் அவளின் பொறுமையை கண்டு மூர்க்கதனமாய் நடக்க தொடங்கினான்... !!! அவளது உடல் முழுவதும் தன் நகங்களால் கீறினான்.....போதாத குறைக்கு கிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்தான்....அவன் அவளை தன்னை ஏமாற்றியவளாகவே நினைத்தான்...!!!அனுபவிடி!!!நல்லா அனுபவி...!!!நீ இந்த உடம்புக்கு தான டி ஆசைபட்ட...!!!என்று மூர்க்கனாக மாறி அவளை கசக்கி பிழிந்தான்..!!!இவ்வளவு நடந்தும் அவள் வலியை காட்டிக் கொள்ளாமல் தன் உதட்டை பற்களால் கடித்து கொண்டாள்...!!!ஒரு கட்டத்தில் அவளது உதட்டிலிருந்து இரத்தம் கசிய தொடங்கியது..!!!இருந்தும் அவள் கத்தவில்லை..!!அவனை ஒதுக்கவும் இல்லை....!!!அவள் படும் கஷ்டத்தை பார்த்து அந்த துன்பத்திற்கே அவளை கண்டு இரக்கம் சுரந்தது...!!!அவனால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக அவள் மேலயே படுத்துவிட்டான்...!!!அவள் கண்களிலிருந்து கண்ணீர் எட்டி பார்க்க அதனை வழுகட்டாயமாய் நிறுத்தியவள்...தன்னை தானே திடப்படுத்தி கொண்டாள்....!!!தனக்கு தாலி கட்டிய கணவன் தன்னுடன் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணை நினைத்து தன்னை அணைப்பதை எந்த பெண்ணும் தாங்கி கொள்ள மாட்டாள்...!!!ஆனால் அவள் அதையும் தாங்கி கொண்டு இருந்தாள்...அவளது மனதிலோ வெறுமை...!!!அவள் அவன் கொடுக்கும் துன்பத்தை கண்டு அஞ்சவில்லை...மாறாத அந்த துன்பத்திற்கே சவால் விட்டாள்...!!!


துன்பமே கேட்டுக்கொள் !!!!
வலிகளை பொறுத்து கொள்வேன்
பொறுமையின் சிகரத்தின் நுனி வரை ....!!!

துன்பமே கேட்டுக்கொள்!!!!
புறமுதுகு காட்டி ஓடமாட்டேன்
நீ புலம்பி வீழும் வரை .....


துன்பமே உன்னை காத்துக்கொள்
என் வெற்றியின் மழையில்
துவண்டு வீழாமல் உன்னை
காத்துக்கொள் ......


துன்பமே நீ புயலாகி வீசினாலும்
இன்று நான் நாணாலால் தான்
வளைந்துகொடுத்து போவேன்
ஒருநாள் மரம் ஆவேன்
அன்று என் தென்றலும்
உன்னை விரட்டிவிடும் ....


தென்றலே இரவு மட்டுமே பிழைத்திரு
ஒறுநாள் சூரியன் உதித்திடும்
என் வெற்றியின் வாசற்படியில் .....!!!



ஒரு கட்டத்தில் விழித்தவனுக்கு ஏதோ வித்தியாசமாக தோன்ற கண்களை கசக்கி கொண்டு பார்க்க இவனை அனைத்து கொண்டு படுத்திருந்தாள் சுதந்திரா...!!!!


அதை கண்டவனுக்கு கோபம் அதிகமாக வெடுக்கென்று அவளிடமிருந்து பிரிந்து மதுவை தேடி ஒடினான்...!!!அவனது விலகலை உணர்ந்து அவள் சட்டென எழுந்து அமர்ந்தவள்....!!!


நீங்க எங்க தேடினாலும் அது உங்களுக்கு கிடைக்காது...!!!உங்களுக்கு தேவை போதை தான !!!அது மதுனால வந்தா என்ன!!மாதுனால வந்தா என்ன!!! உங்களுக்கு எப்ப போதை தேவைபட்டாலும் என்னை தேடி வரலாம் என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்...!!!

அவள் கூறியதை கேட்டு அவன்தான் விக்கித்து போய் நின்றான்...!!!
 
Last edited:

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :12



நாட்கள் அதன் போக்கில் சென்றது...!!!! சுதந்திரா அவனை ஒரு சேயை போல் கவனித்துக் கொண்டாள்.... அவனுக்கு பகலில் தாயாகவும் இரவில் தாசியாகவும் ஆகிப்போனாள் .... அவளது அன்பில் அவன் சிறிது சிறிதாக மாறத் தொடங்கி இருந்தான்.... ஆனால் வர்மாவினால் குடியை மட்டும் நிறுத்த முடியவில்லை....!!!



ஒருநாள் அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்...!!! அப்போது அறையில் இருந்து சுதந்திரா வெளியே வர... சட்டென அவளுக்கு தலையே சுற்றுவது போல் இருக்க.... தன்னையும் மீறி மயங்கி சரிந்தாள்..... !!!அனைவரும் பதறிப்போய் அவளை நோக்கி ஓடினர்....!!!!

சுதந்திரமா என்னாச்சு!!!! சத்யபிரகாஷ் பதறி துடிக்க...

அண்ணா பயப்படாதீங்க..!!நான் செக் பண்றேன் என்றவர் அவளது நாடியை பிடித்து பார்த்தார் ....!!!!


அண்ணா சந்தோஷமான விசயம் தான்...!!! நீங்க தாத்தாவா ஆக போறீங்க....!!!




நிர்மலா கூறியதை கேட்டு சுதந்திரா கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது....!!!தனக்கு ஒரு குழந்தை...அந்த நினைப்பே அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.....தன் தந்தையே தனக்கு மகனாக பிறக்க போகிறார் என்று நினைத்தவள் தன் மணி வயிற்றை தொட்டு பார்த்து மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள்.....!!


நிர்மலா கூறியதை கேட்டதும் அவருக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை....!!!


அவர் சுதந்திராவின் கையை பிடித்து கொண்டு ரொம்ப நன்றி மா.....!!!என் மகன் வாழ்க்கையில நடக்கவே நடக்காதுனு நெனச்ச ஒரு விசயம் இப்ப நடந்துருக்கு...!!!
என்று கூறி கண்ணீர் வடித்தார்...!!!


அய்யோ!!!மாமா நன்றினு ஏன் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க!!! இது என்னோட கடமை இல்லையா!!!என்று கூறும் போதே சு..ல..ந்..தி..லா ஏய் சுலந்திலா என்று உளறிக் கொண்டே அங்கு வந்தான் வர்மா...!!!!


சுதந்திரா மனமுடைந்து போனாள்.....!!! தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன் கணவனிடம் கூற ஆசையாக காத்துக் கொண்டிருந்தவள் இப்போது அவன் நன்கு குடித்துவிட்டு வந்திருப்பதைக் கண்டு மனதில் வெறுமை சூழ...... என்னங்க நான் இங்க இருக்கேன் என்று கீழே விழப்போனவனை தாங்கிப் பிடித்தவள் அவனை அணைத்தவாறு தங்களது அறையை நோக்கி அழைத்துச் சென்றாள்......!!!


போகும் அவர்களை பாவமாய் பார்த்துக்கொண்டிருந்தார் சத்யபிரகாஷ்...!!!


அண்ணா கவலைப்படாதீங்க எல்லாம் கூடிய சீக்கிரம் மாறிவிடும் என்றார் நிர்மலா.....!!!


அந்த நாள் எப்போது வரும் என்று தெரியலையே என்றார் ஒருவித விரக்தியுடன்.....!!!



சாரி சுலந்திரா ...!!!நாலும் குலி(டி)க்க கூடாலுனு தான் நெனக்கிறேன்...ஆனா முடியலையே..!!!அவ என்ன ஏமாத்திட்டா!!!!அவள நான் உண்மையா லவ் பன்ன்னேன்...!!!!ஆனா அவ என்ன ஏமாத்திட்டா...!!!! என்று புலம்பி கொண்டு அவளது இடையை கட்டிக் கொண்டான்....!!!


அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்தவள் அவனது தலைக்குள் தனது விரலை நுழைத்து அவனது முடியை கோதியவாறே நீங்க எதையும் நினைக்காம அமைதியா தூங்குங்க!!!!!என்று அவன் முடியை வருட வருட அவன் கண்கள் சொக்கியது...!!!!


சட்டென விழிகளை திறந்தவன் நீயும் என்ன விட்டு போய்ட மாட்டியே!!!!என்றான் பாவமாய்...!!!!


நான் உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன்...!!! உங்க கூடவே தான் இருப்பேன்...!!!என்றாள்


அவள் கூறியதில் முகம் மலர அவளது கையை எடுத்து தனது தலைக்குள் விட்டு கொண்டு முன்ன மாதிரியே பண்ணு என்றான்....


அவளும் புன்னகைத்து கொண்டே அவன் புறமாக சரிந்து படுத்து கொண்டு அவனின் தலையை வருட ஒரு தாயின் அணைப்பில் உறங்கும் சிறு குழந்தை போல் அவளின் இடையை கட்டிக் கொண்டு முகத்தை அவள் கழுத்துக்கு அடியில் வைத்துக் கொண்டு அவன் சுகமாய் உறங்கி போனான்...!!!!அவளும் தன் உடல் அசதியால் உறங்கி போனாள்....!!!


மாலை ஆறு மணி வரை இருவரும் தூங்கினார்கள்....!!! முதலில் விழித்தது சுதந்திரா தான்...!!!! விழித்தவள் நேரே பாத்ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மாலை நேர பூஜையை முடித்து கொண்டு அறையை நோக்கி சென்றாள்......!!!

அங்கு குளித்துமுடித்து அமைதியாக அமர்ந்திருந்த அவனின் நெற்றியில் விபூதியை இட புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டான்....பின்பு அமைதியாக சாப்பிட்டான்...!!!எல்லாம் இரவு வரும் வரை மட்டுமே..!!!!


சுதந்திரா கீழே பெரியவரிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்த போது,,, இவ்வளவு நேரம் என்ன பண்ண!!!!! என்று கோபமாய் கத்தினான்..... அவனது முகம் சிவந்து போனது ....சிகரெட்டை எடுத்து மாற்றி மாற்றி புகைத்து அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக ஆக்கினான்....!!!!


சுதந்திரா அமைதியாக நின்றாள்...!!!அவள் இதை எதிர்பார்த்தது தான்..!!!!அவனால் இரவு நேரத்தில் குடிக்காமல் இருக்க முடியாது!!!!குடித்தால் தான் அவனுக்கு இரவு நேரத்தில் உறக்கமே வரும்..!!!ஆனால் அவன் அப்படி குடித்து விட்டால் அவன் மிருகமாய் மாறி போவான்...!!! அவன் அப்படி மாறும் பொழுது அவளை சிறு பெண் என்றும் பாராது கசக்கி பிழிந்து விடுவான்....!!! அவன் அந்தக் குடியை விட எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் அதனை விட முடியவில்லை.. !!!!!அவன் ஒருநாள் குடிக்காமல் இருந்தால் கூட கண்கள் பூத்து போய் மூஞ்சி முகமெல்லாம் வீங்கி போய் செயலிழந்து விடுவான்...எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுவான்...!!!


சற்று நேரம் அமைதியாக இருந்த சுதந்திரா அங்கு இருந்த ஒரு அறைக்கு சென்று ஒரு மது பாட்டிலை எடுத்து வந்து அவனது கையில் திணித்தாள்...!!!!


அவளைப் பார்த்து கொடூரமாய் விழித்தவன் என்னடி என்ன குடிகாரன்னு சொல்லாம சொல்றியா..??? என்று ஆத்திரமாய் கேட்க...


சுதந்திரா அதே அமைதியான முகத்துடன் நின்றிருந்தாள்....!!! என் புருஷன் குடிகாரன் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும் !!!!!!நீங்க இத குடித்துவிட்டு நிம்மதியா தூங்குங்க.... ப்ளீஸ்!!! என்று கெஞ்ச... அவனது சினம் இன்னும் அதிகமானது....


குடி குடி குடி குடியே என் வாழ்க்கையா போச்சு....!!!என்றவன் அதனை வாங்கி தூர எறிந்தான்....!!!!சுதந்திரா கண்களில் கண்ணீருடன் அவனை பாவமாய் பார்த்தாள்....!!!!


அழாத சுதந்திரா !!!!!எனக்கு முன்னாடி அழாத என்று கத்தியவனின் அருகில் சென்று அவனது முகத்தை தன் வயிற்றோடு கட்டிக் கொண்டு ஏம்மா இப்படி!!!!யார்மேல இவ்வளவு ஆத்திரம்..!!நமக்கு விதிச்சது இவ்வளவு தானு வாழ பழகிகனும் நாம ரெண்டு பேரும்.....!!!வேணாம் கண்ணா இவ்வளவு கோபம் என்று மேலும் அவனை இறுக்கி அணைத்து கதறினாள்..!!!


அவ்வளவு தான் அவனின் கோபம் எங்கு சென்றதோ தெரியவில்லை....!!!!அவளது இடையை கட்டிகொண்டு தாரா தாரா என்னால முடியலடி!!!நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்....நான் குடிச்சா மிருகமா மாறி உன்ன காயப்படுத்துறேண்டி!!!உன்ன வேண்டா வெறுப்பா தாண்டி கல்யாணம் பண்ணிகிட்டேன்...!!!ஒவ்வொரு வாட்டி நான் உன்ன தொடும் போதும் நீ கதறி துடிக்கனுனு தாண்டி நான் நினச்சேன்....!!! ஒரு பொண்ணால ஏமாந்த நான் பொண்ணுங்க எல்லாரையும் அழ வச்சு பாக்க தான்டி ஆசைபட்டேன்.....ஆனா நீ அழுதா என்னால தாங்க முடியலைடி!!!!அதே சமயம் என்னால குடிக்காம இருக்கவும் முடியலடி!!!!அத குடிக்கலனா செத்துடலாம் போல இருக்குடி!!!!ஆனா அத குடிச்சதுக்கு அப்பறம் நான் உன்கிட்ட மிருகமா நடந்துப்பேனு நினைக்கும் போதே சத்தியமா என்னால முடியலடி என்று கதறினான்...!!!!


அவனது கண்ணீர் அவளது வயிற்றில் பட்டு அவளது இதயத்தை சுட்டது...!!!!அவனது தலையை நிமிர்த்தி நெற்றியில் கிடந்த அவனது முடியை விலக்கி விட்டு அதில் அழுந்த தன் முத்திரையை பதித்தாள்.....!!!!ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறீங்க....உங்களால குடியை விட முடியுனு மனசுல நெனச்சா கண்டிப்பா முடியும்.....!!?உலகத்துல குடிச்சு குடிச்சு அழிஞ்சு போனவுங்க நிறைய பேர் இருக்காங்க..!!!!ஆனா குடிக்கு அடிமையாகி உங்கள மாதிரி குடும்பத்தோட சேர்ந்து வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்குற பல பேர் இன்னைக்கு குடியை மறந்து அவுங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழறாங்க....!!!!நீங்க எதனால குடிச்சு உங்க உடம்ப கெடுத்துகிறீங்க....!!!நீங்க நேசிச்ச பொண்ணு உங்கள விட்டு வேற ஒருத்தன் கூட போய்டானு தான!!!!தப்பு செஞ்ச அவ செத்துட்டாங்க!!! தப்பே செய்யாத நீங்க ஏன் கஷ்டபடனும்...!!!உங்களுக்கு என் கூடவும் நம்ம குழந்தை கூடவும் சந்தோஷமா வாழ விருப்பம் இல்லையா!!!!!


இருக்கு என்றவன்....சட்டென அவள் கூறியதின் அர்த்தம் புரிந்து நீ என்ன சொல்ற என்று ஆச்சரியத்துடன் கேட்க...அவள் அவனது கையை எடுத்து அவளது வயிற்றில் வைத்தாள்...!!!!அவன் முகம் பிரகாசிக்க அவளை பார்க்க சந்தோஷத்தில் அவனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது....!!!!


அவனது கண்களை துடைத்து விட்டவள் இனிமே நீங்க எதையும் நினைத்து கவலை படாதீங்க..!!!எல்லாம் சரியாயிடும்....என்றாள்....



எப்படி!!!!என்னால குடிய விடவே முடியலயே!!!!!என்று அவள் கையை பிடித்து இழுத்து தன் நெஞ்சில் சரித்த வர்மா சற்றுநேரம் அவளை இருக்கியபடி இருந்து விட்டு உனக்காக நான் என்னடி செய்திருக்கேன்!!??எதுக்காக என் மேல் இவ்வளவு அன்பு காட்ற!!! என்று நெகிழ்ச்சியுடன் கேட்க.....!!!!


சுதந்திரா அவனது மீசையை பிடித்து இழுத்து நீங்க எனக்கு என்னங்க செய்யனும்....???உங்க மனைவியா இருக்க அனுமதிச்சிருக்கீங்களே அது போதாதா!!!!!அன்பு தரமும் இடமும் பார்த்து வராதுங்க என்றாள் கனிவுடன்......!!!


வர்மா அவளது வார்த்தையில் உருகி. போனான்.....அவள் காட்டும் இந்த கள்ளம் கபடம் அற்ற தூய்மையான அன்பு அவனை நெகிழ்த்தியது...இவ்வளவு நாட்கள் நான் கொடுக்கும் துன்பத்தை தாங்கி கொண்டு கொஞ்சமும் சலைக்காமல் அவள் தரும் அன்புக்கு இணையாக தான் கொடுக்க வேண்டியது கடலளவு இருக்கிறது ஏன்று நினைத்தான்....!!!!


நீங்க மனசு வச்சா கண்டிப்பா முடியும்....!!!நிறைய இடத்துல போதைக்கு அடிமையானவுங்கள குணபடுத்த நிறைய போதை மறுவாழ்வு மையங்கள் இருக்கு..!!!அங்க போனீங்கனா கண்டிப்பா உங்களால மாற முடியும்....!!! அங்க பக்க விளைவுகள் எதுவும் வர கூடாதுனு குடிப்பழக்கத்தைப் போக்க மருந்து, மாத்திரைகள் எதுவும் கொடுக்கமாட்டாங்க.... கவுன்சலிங் கொடுத்துப் பேசியே திருத்தப் பார்ப்பாங்க....!!!!நீங்க குடியை நிறுத்த உங்க ஒத்துழைப்பும் மனமாற்றமும் தான் அவசியம் என்பதை வலியுறுத்துவாங்க.....!!!நீங்க அங்க போய் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடலை பரிசோதனை செய்வாங்க.... தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும் ...அப்படி நீங்க அங்க போனா கண்டிப்பா நீங்க மாறுவீங்க...எனக்கு நம்பிக்கை இருக்கு...!!!!அதனால மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம இருங்க என்று கூறினாள்...!!!!


அவனுக்கு அவள் கூறிய ஆறுதல் வார்த்தை விட அவளது அணைப்பு அதிக ஆறுதல் தந்தது.... வயிற்றிலிருந்த முகத்தை மேலேற்றி அவளது நெஞ்சினில் முகம் புதைத்தான்..!!! அவளின் வாசத்தை நுகர்ந்தான்...அவளது இடையை இறுக்கி தன்னோடு சேர்த்து அணைத்தான்....!!!






அவனை ஆறுதல் படுத்தும் நோக்கில் இருந்தவள் முதலில் கவனிக்கவில்லை....வர்மாவின் அடர்த்தியான முடிகள் அவளின் கழுத்துக்கடியில் உரசியது...மார்புகளில் உரசி குறுகுறுப்பை ஏற்படுத்தியவனை எப்படி தடுப்பது என்று யோசிக்கும் முன்பு அவளது தலை பின்னால் சரிந்தது....விரல்கள் அவன் தலை முடிக்குள் நுழைந்தது...அவளும் பெண்தானே!!!!ஆனால் அவள் பெண்மை விழிக்கும் முன்பே அவளது தாய்மை உணர்வு விழித்து கொண்டது....!!!அவனது கைகள் நடுங்க ஆரம்பித்தது....கண்கள் சிவந்த போய் அவனது உடல் செயலிழந்தது போல் இருக்க அதனை உணர்ந்த சுதந்திரா...அவனுக்கு உறுத்தா வண்ணம் மார்பிலிருந்து அவன் தலையை நீக்கியவள் அவனை விட்டு பிரிந்து சென்று மது பாட்டிலுடன் வந்தாள்....அவளையே ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தவன் வாயில் அதனை ஊற்றினாள்....அவன் மறுத்து எதுவும் கூறாமல் அதனை வாங்கி தன் வாயில் சரித்து கொண்டான்....அடுத்த நிமிடம் போதை தலைக்கு ஏற அதுவரை இருந்த இதம் மறைந்து அவளை வன்மையாய் சிறைபிடிக்க இனி நடக்க போகும் விபரீதம் தெரிந்தே அவனை அணைத்து கொண்டாள் சுதந்திரா....!!!!


மறுநாள் விடியல் வர்மாவிற்கு ஒரு நல்ல நாளாக அமைந்தது...சுதந்திரா சத்யபிரகாஷிடம் போதை மறுவாழ்வு மையத்தை பற்றி கூற...அவரும் அதற்கு சம்மதித்து அவனை அனுப்பினார்...கூடவே ஆதவனும் வர்மாவிற்கு துணையாக அனுப்ப பட்டான்...!!!


நாட்கள் மாதங்களாகின....!!!சுதந்திரா கர்பமாக இருப்பதால் அவளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.....!!!அதனால் தன் தனிமையை போக்க தோட்டமே கதி என்று கிடந்தாள்....!!!தன் கணவனின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஏங்க ஆரம்பித்தாள்....!!!ஒரு நாள் சுதந்திரா நிர்மலாவின் அறையை தாண்டி செல்லும் போது அங்கே நிர்மலாவும் ராமச்சந்திரனும் பேசி கொண்டிருப்பது கேட்டது...முதலில் ஏதோ பேசுகிறார்கள் என்று அவர்கள் அறையை கடக்க முயல அவர்கள் பேசுவதில் தன் கணவனின் பெயர் அடிபடுவதை கேட்டு அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்...!!!!

என்ன நிர்மலா நாம நெனச்ச எதுவும் நடக்காது போலவே!!??அவன் வேற குடிய நிறுத்தியே ஆகனுனு மறுவாழ்வு மையத்துக்கு போய்டான்...இங்க இவ வேற வயித்த தள்ளிகிட்டு நிக்கிறா????இப்படியே போனா அவன் குணமாகி வந்து பொண்டாட்டி புள்ளனு சந்தோஷமா வாழ போறான்...!!!அத பாத்துகிட்டு அவுங்களுக்கு சேவகம் செஞ்சிகிட்டு தான் இருக்கனும் போல என்று புலம்பினார் ராமசந்திரன்....!!!!

சும்மா புலம்பாதீங்க ...நானே டென்ஷன்ல இருக்கேன்....!!எவ்வளவு பாத்து பக்குவமா காய் நகத்துனோம்....!!!வர்மாவ காதலிச்சு ஏமாத்துற மாறி ஒரு பொண்ண செட் பண்ணி அவன காதலிக்க வச்சு அவனுக்கு பொண்ணுங்க மேல வெறுப்ப உண்டாக்கி அவன குடிக்கு அடிமையாக்கி இந்த வம்சம் வளராம இந்த சொத்து எல்லாம் நாம அடையலானு பிளான் பண்ணா எங்கிருந்தோ வந்த இந்த சுதந்திரா எல்லாத்தையும் கெடுத்துட்டா!!!!வர்மா பண்ற டார்ச்சரால அவன விட்டு ஒடிடுவானு பாத்தா இங்கயே டேரா போட்டு அவனோட புள்ளையையும் வாங்கிட்டு நிக்கிறா !!!!என்று எரிச்சலுடன் கூற....!!!!


ச்சீ நீங்க இவ்வளவு கேவலமானவுங்களா!!!!நீங்க நினைக்கிறது ஒரு போதும் நடக்காது....!!!என்று அங்கு வந்தாள் சுதந்திரா....!!!


அவளை கண்டு இருவரும் பயந்து தான் போயினர்....!!!அது சிறிது நேரமே!!!அடுத்த நிமிடம் அப்போ உனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு...!!!அடுத்து என்ன பண்ண போற என்றாள் நக்கலாய்!!!!!


நான் இப்பவே போய் மாமாகிட்ட சொல்றேன் என்று நகர முயன்றவளை...


ஒரு நிமிஷம் இத போய் நீ அவருகிட்ட சொன்ன ட்ரீட்மெண்ட்டுக்கு போயிருக்குற உன் புருஷன் உயிரோட வர மாட்டான்....அவன அங்கயே தீத்து கட்டிடுவோம்...!!!சொத்து எல்லாம் அவன் பேருல இருக்குறதுனால தான் பொறுமையா இருக்கோம்...இல்ல எப்பவோ அவன் கதையை முடிச்சிருப்போம்..!!!என்றாள் எகத்தாளமாய்....!!!


அவர்கள் கூறியதை கேட்டு சுதந்திரா அதிர்ந்து போய் நின்றாள்...!!!!


இதுக்கே பயந்துட்டா எப்படி??இந்த சொத்துக்காக நாங்க என்ன வேனாலும் செய்வோம்...!!!பணக்காரியா வாழனுங்குற ஒரே காரணத்துக்காக தான் அவன் காதலிச்ச பொண்ண நாங்க கொண்ணுட்டு பழியை அவன் மேல போட்டோம்...!!!


நீ..நீங்க என்ன சொல்றீங்க...!!!


அந்த கதை உனக்கு தெரியாதுல....உன் புருஷன் அடிச்சி தான் அவ செத்தானு நினைக்கிறியா!!!!சத்தியமா இல்ல...உன் புருஷன் அடிச்சதுல அவ சாவல.....அவ உயிரோட தான் இருந்தா ...நாங்க தான் அவள கொன்னோம்....போலீஸ்க்கும் இன்பார்ம் பண்ணுனோம்....!!!!தண்டனைய உன் புருஷன் அனுபவிச்சான்.....!!!


அவர்கள் கூறியதைக் கேட்க கேட்க சுதந்திராவிற்கு தலையை சுற்றுவது போல் இருந்தது....!!!!


இதோ பார் ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்றத கேட்டுகிட்டு இருக்கிறதுனா இரு..... அப்படி இல்லாம நீயா ஏதாவது பண்ணனும்னு நெனச்ச உன் புருஷன கொன்னு புதச்சிடுவோம்....!!!! இந்த வீட்டல நீ எது பண்றது நாளும் என்ன மீறி தான் பண்ண முடியும்...!!! புரியுதா,,,!!! என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர் ......அவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள் சுதந்திரா...!!!!!



7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் வர்மா குடியை முற்றிலும் மறந்து சுதந்திராவை காண ஆவலோடு வந்து கொண்டிருந்தான்.... அப்போது அங்கே சாலையோரத்தில் அழகழகான பொம்மைகள் இருப்பதை கண்டவன் சுதந்திராவிற்கு பிடிக்குமென அதை வாங்க காரில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற நேரம் எதிரே வந்த ஒரு கார் மோதி தூக்கி எறியப்பட்டான்.....!!!!! அதேநேரம் அவனை இடித்துச் சென்ற காரும் நிலை தடுமாறி அதன் கண்ரோலை இழந்து எதிரே இருந்த மரத்தில் மோதி நின்றது..... அதிலிருந்து கடவுளே எங்கள காப்பாத்து என்று ஒரு ஆணின் குரல் கேட்டது.....!!!!


ஒரு வாரம் கழித்து மிஸ்டர் வர்மா மெதுவா கண்ண திறங்க.....!!!!இதோ இங்க நிக்கிறாங்களே இவங்க யாருனு தெரியுதா!!!!


அவன் கண்களை குறிக்கி அவர்களை பார்த்து தெரியல டாக்டர் என்றான்....!!!

டாக்டர் என் தாரா தாரா அதை மட்டுமே கூறி கொண்டிருந்தான்....!!!

வர்மா தாரானா யாரு???


தெரியல டாக்டர் !!!!


டாக்டர் தனது நெற்றியை தடவி கொண்டே சாரி மிஸ்டர் ஆதவன் இவருக்கு நடந்த ஆக்ஸிடண்டுல இவரு பழச எல்லாம் மறந்துட்டார்....!!!!


டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க...!!!!!


எஸ் மிஸ்டர் ஆதவன் தாராங்குற அந்த பொண்ணு வந்தா இவருக்கு பழய ஞாபகம் திரும்பி வர வாய்ப்பு இருக்கு....!!!என்றவர் அங்கிருந்து சென்றார்.....!!!


ஆதவன் அங்கு நின்று கொண்டிருந்த நிர்மலாவை பார்த்து சுதந்திரா எங்க என்றான்...!!!!

அத எப்படி தம்பி என் வாயால சொல்லுவேன்...!!!உடம்பு சுகத்துக்கு ஆச பட்டு அவ வேற ஒருத்தன் கூட ஒடி போய்டாப்பா..!!!நானும் எவ்வளவோ தடுத்தும் கேக்காம போய்டாப்பா...!!!அவள தேடி போன அண்ணனும் ஒரு ஆக்ஸிடண்டுல செத்துட்டாரு என்று கூறி கண்ணீர் வடித்தார் .......



அவர் கூறியதை கேட்டு அதிர்ந்த ஆதவன்
நீங்க என்ன சொல்றீங்க !!!!!!நீங்க ஏன் இதை எங்கிட்ட முன்னாடியே சொல்லலை!!!!! என்று கோபமாய் கேட்க....




ஏற்கனவே கஷ்டத்துல இருக்குற உங்கள மேலும் கஷ்டப்படுத்த விரும்பல ....அதனாலதான் சொல்ல என்று கண்ணீர் மல்க கூறினார்...!!!!!


அவர் கூறியதைக் ஆதவனால் நம்ப முடியவில்லை...... அதற்குமேல் அவரிடம் எதுவும் கேட்காமல் வர்மாவை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்....... அதனால் வர்மாவின் வாழ்க்கையில் ஆதவன் இன்றியமையாதவனாகி போனான்.....



வர்மா வீட்டிற்க்கு அழைத்து வரபட்டான்.....
ஆதவன் இல்லாத சமயத்தில் நிர்மலாவும் ராமச்சந்திரனும் சுதந்திராவைப் பற்றி தவறான எண்ணத்தை அவனது மனதில் பதிய வைத்தனர்...... அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தனது கவனம் முழுவதையும் தொழிலில் காட்டினான்...... அவன் வாழ்வில் அவனுக்குப் பின்னால் நின்ற நிர்மலா மட்டுமே அவனுக்கு கடவுளாகிப் போனாள்......!!!!
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மா இத்தனை மோசமானவள்
வர்மா எல்லாம் மறந்துட்டான்
சுதந்திரவுக்கு என்ன ஆச்சு
வர்மா அப்பா எங்க
ருத்ரன் யாரு
thank u so much sis....unga yella kelvikum kathaiyin ஓட்டத்தில் பதில் கிடைகும்...
 
Top