All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கதை திரி

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரத்னாகர் பொண்ணு எனக்கு பொண்டாட்டினா...அப்போ அவர் எனக்கு மாமனார் தானே ...!!!!!என்றான்அடக்கப்பட்ட கோபத்துடன்....!!!!



நீ...சொ..ல்றது உண்மையா...!!!!மாயா என்னோட பொண்ணா என்று நம்ப முடியாமல் கேட்டார்....!!!


போதும் உன்னோட நடிப்பெல்லாம்...!!!
இதோ பார்... இனி ஒரு வாட்டி என்கிட்ட நடிச்ச
உன் உயிருக்கு நான் கேரண்டி இல்லை ....!!!என்று கோபமாய் கத்தி விட்டு அங்கிருந்து சென்றான் ...!!!!


அவன் கூறியதைக் கேட்டு ஒருவித பயத்துடன் நின்றிருந்தால் நிர்மலா....!!!!



நாட்கள் வேகமாய் ஒடியது...!!!!மாயா வீட்டிற்கு ஆழைத்து வரபட்டிருந்தாள்.....!!!வர்மா மாயாவின் வீட்டிற்கே வந்து விட்டான்...!!!

அவனை பார்த்தவள் நீ இங்க என்ன பண்ற என்றாள்...!!!


புருஷன் வீட்ல பொண்டாட்டி இருக்குறது தான் ஊர் நியாயம்...!!!ஆனா என் பொண்டாட்டி என் கூட இருக்க மாட்டேனு சொல்லிட்டா...!!!அதனால பொண்டாட்டி வீட்ல இருக்கலானு நான் இங்கயே வந்துட்டேன் என்றான் கண்கள் மின்ன...!!!!



இது ஒன்னும் சத்திரம் இல்ல...!!!கண்டவுங்க வந்து தங்க....என்றாள் முகத்தில் அறைந்தார் போல்...!!!

அவள் கூறியதை கேட்டு அவனது முகம் சுருங்கி போனது...!!!!அடுத்த நிமிடம் தன்னை சமன் செய்து கொண்டு நான் கண்டவன் இல்ல.. !!!உன் புருஷன் என்றான் நிமிர்வாய்...!!!!


அவனை மேலும் கீழும் பார்த்து கொண்டே புருஷனா..!!!என்றாள் நக்கலாய்...


அவள் கூறிய விதத்தில் அவனுக்கு கோபம் தலைக்கேற ஆமாண்டி என்றான் பற்களை கடித்து கொண்டே...!!!!


ஆதாரம் இருக்கா !!!!என்றவள் முதல்ல இங்கிருந்து போ என்று கத்தினாள்...!!!!


ஆதாரம் இருக்கு பேபி என்றவன் அவளின் அருகே நெருங்கி அவளது இடையில் ஒரு கையை கொடுத்து மறு கையால் அவளை அணைத்தவன் அவளது முகத்தில் விழுந்து கிடந்த முடியை மென்மையாய் ஊத...அவனது இந்த திடீர் செய்கையில் அவளது இதயம் ஏகத்துக்கும் எகிறி துடிக்க...சில்லென்று ஒரு உணர்வு தாக்க...அவளது பிடியிலிருந்து நழுவ முயன்றவளை விடாது பிடித்தவன் தனது ஒரு கையை கொண்டு அவளது கழுத்தை தடவி அங்கிருந்த மெல்லிய செயினை வெளியே எடுத்து அதில் கோர்க்கபட்டிருந்த தாலியை திருப்பி திருப்பி பார்த்தவன் அதை அவள் முகத்துக்கு நேரே எடுத்து காட்டி இது நான் கட்டியது தானே என்றான்....!!!!


அவள் கண்கள் சிவக்க அவனை கோபமாய் முறைத்தவள் அதனை வாங்கி தன் உடம்பில் மறைத்து கொண்டாள்....!!!


ஏம்மா மறைக்கிற..!!!!நான் உன் புருஷன் இல்லைனா அதை கழட்டி என்கிட்ட கொடு நான் போய்டுறேன் என்றான் அமத்தலாய்...!!!!


அவன் கூறிய அடுத்த நிமிடம்
பளார் என்ற சப்தம் மட்டுமே கேட்க...வர்மாவின் கண்களில் பூச்சி பறந்தது.....!!!!அப்போது தான் அவனுக்கு உறைத்து மாயா அவனை அடித்திருக்கிறாள் என்று...!!!!


கண்ணத்தை தேய்த்து கொண்டே ஏண்டி இப்போ அடிச்ச ஏன்றான் பாவமாய்...!!!!


அவனை முறைத்துக் கொண்டே மாயா அங்கிருந்து சென்றாள்....!!! போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புன்னகை வந்தது....!!!வருடங்கள் பல ஆகியும் இன்னும் தான் கட்டிய தாலிக்கும் மதிப்பு கொடுக்கும் தன் மனைவியை நினைத்து அவனது மனம் நிறைந்து போனது....!!!!


வர்மா தன் மனைவியுடன் இருப்பதாய் கூறிய செய்தியை கேள்விப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே...!!!



வர்மா தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மாயாவின் அறையை நோக்கி சென்றான்....!!!! அங்கே அதனை வைத்து விட்டு அங்கிருந்த பெட்டில் படுத்து இருந்தான் ....!!!!அவனது மனமோ
கடவுளே இங்க வந்து என்ன சொல்ல போறாளோ !!!தெரியலயே!!!எது நடந்தாலும் இந்த ரூம்ம விட்டு வெளில போய்டாத...!!!அவ கழுத்த பிடிச்சு வெளிய தள்ளினாலும் நீ போக கூடாது...!!!என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டான் வர்மா...!!!

அப்போது தனது அறைக்குள் வந்த மாயா அங்கு அமர்ந்திருந்தவனை கண்டு கோபமாகி ஏய்!!!நீ என்னோட ரூம்ல என்ன பண்ற...!!!!


இது என்னம்மா கேள்வி!!!ரூம்க்கு எதுக்கு வருவாங்க .....!!!

ஏன் இந்த வீட்ல வேற ரூம்மே இல்லையா!!!!நீ இங்க தான் தங்கனுமா !!!!


ரூம் இருக்கு செல்லம்...!!!!ஆனா என் பொண்டாட்டி இங்க தான இருக்கா!!!!பொண்டாட்டி எவ்விடமோ புருஷனும் அவ்விடமே என்றான் குறும்பாய்!!!!


மாயா அவனை முறைத்து கொண்டே நான் உனக்கு பொண்டாட்டி இல்ல...!!!அந்த உறவு எல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு என்றாள் விரக்தியாய்...!!!

அவள் கூறியது அவனுக்கு வலிக்க செய்தாலும்...தன்னை சமன்படுத்தி கொண்டு நீதான் உன் புருஷன் இல்லனு சொல்ற....!!!ஆனா ஊரே நீ என் பொண்டாட்டினு சொல்லுதே!!!!!


அவனை கோபமாய் முறைத்து கொண்டே உன் கிட்ட பேச எதுவும் இல்ல....இப்ப இங்கிருந்து போக முடியுமா!!!! முடியாதா!!!!


முடியாது என்றான்...சட்டமாய் அமர்ந்து கொண்டு....!!!!


அப்போ நான் போறேன் என்றவளை ஒரே எட்டில் தாவி பிடித்தவன் அவளை பின்புறமாய் அணைத்து தன் இரண்டு கைகளையும் அவள் வயிற்றோடு இறுக்கி கொண்டு அவளது கழுத்தில் தன் முகத்தை வைத்து தேய்க டிரிம் செய்ய பட்டிருந்த தாடி அவள் கழுத்தில் உரச பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு உணர்வை உணர்ந்த மாயா எதுவும் கூறாமல் அதனை ஆழ்ந்து அனுபவித்தாள்....!!!


பேபி பேபி நீ இன்னும் சின்ன பொண்ணாவே இருக்க...!!!நான் உன் புருஷன் ...!!!நீ இனிமே இங்க தான் இருக்கனும்...!!!அப்படி போறதுனா நான் கட்டின தாலியை கழட்டிக் குடுத்துட்டு போ என்றான் ....!!!!அதுவரை ஒருவித மயக்கத்தில் இருந்த மாயா சட்டென திமிரி அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள் ....!!!!அவள் அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்....!!!


சென்ற வேகத்தில் திரும்பினால் மாயா....!?!! அதை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா...!!!



ஆல்ரெடி எல்லா ரூமும் ஃபுல் ஆச்சு...!!! அதனால தான் நான் இங்க வந்துட்டேன் என்றவனை முறைத்து கொண்டே கட்டிலில் சென்று ஒருபுறமாய் சாய்ந்து படுத்துக் கொண்டாள்....!!!! வர்மாவும் சிரித்துக்கொண்டே மறு பக்கத்தில் படுக்க சிறிது நேரம் கண்கொட்டாமல் அவளையே பார்த்து இருந்தான்...!!!! அப்போது திரும்பிய மாயாவின் முகம் அவனது மார்பு பகுதியில் முட்டி இருந்தது....!!! திடீரென அவள் இப்படி வந்து சாய்ந்ததும் வர்மா திணறி தான் போனான்....!!!!அவள் விடும் மூச்சு காற்று அவனது மார்பில் பட்டு அவனை சூடேற்ற....அந்த புது சுகத்தை அனுபவித்தவன் ஹார்மோன்கள் தன் வேலையை செவ்வனே செய்ய முயன்று அதை கட்டுப்படுத்தியவன் மிக அருகில் கண்ட அவளது முகத்தை தன் கைகளால் வருடி விட்டு சற்று கீழே இறங்கி அவளது முகத்தோடு முகம் வைத்து அவளது கண்ணத்தில் முத்தம் வைத்தான்...!!!


இதற்கு மேல் தான் இங்கே இருந்தால் ஏடாகூடம் ஆகிவிடும் என்பதை அறிந்து பெட்ஷுட்டை தரையில் விரித்து அதில் படுத்து உறங்கினான்.....!!!


பல வருடங்களுக்குப் பிறகு இருவருமே தங்களின் இணையின் அருகில் ஆழ்ந்த உறக்கத்தை அனுபவித்தனர்....!!!
 
Last edited:

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :16




காலை சூரியனின் பொண் கிரகணங்களால் ஆக்கிரமிக்கபட்ட கீழ்வானம் தன் சிவந்த நிறத்தில் இருந்து இளம் மஞ்சள் வெயிலாக மாறி ...இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சூட்டெரிக்கும் வெயிலாக மாறபோகும் அந்த காலைப் பொழுதில் கிச்சனில் நின்று பாத்திரத்தை உருட்டி கொண்டிருந்தான் வர்மா.....!!!


இன்னைக்கு நாமலே காபி போட்டு நம்ம செல்லத்துக்கு குடுத்து அசத்துறோம்...என்று நினைத்தவன் தனது போனில் யூ டியூபை ஆன் செய்து காபி போடுவது எப்படி என்று சர்ச் செய்ய அதில் ஏகபட்ட வீடியோக்கள் வர அதில் ஒன்றை தேர்வு செய்து போனை சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு கேஸை பற்ற வைத்து பாத்திரத்தை வைத்தவன் அடுத்த பத்து நிமிடத்தில் காபி போட்டு முடித்து விட்டான்....!!!


அதனை இறக்க போகும் நேரம் இங்க என்ன பண்றீங்க..!!! என்று திடீரென்று கேட்ட குரலில் சட்டென திரும்பியவன் பிடித்திருந்த பாத்திரத்தை நழுவ விட்டான்... அது அவனது காலில் பட்டு தெறித்து விழ அதன் எரிச்சலில் அய்யோ ..!!!அம்மா என்று கத்தினான் ...!!!!


இதனை சற்றும் எதிர்பார்க்காத அமிர்தா அய்யோ அத்தான் என்னாச்சு ...!!!என்று பதறியடித்து ஓடி வந்தாள்....!!!


ஐயோ ..!!! எரிச்சல் தாங்க முடியலையே என்று துடித்தான்...!!!!


அய்யோ அத்தான் சாரி...!!!நான் வேனுனு பண்ணல....நீங்க இந்த பக்கம் வாங்க என்றவள் அவனை அமர வைத்து அவனது காலை சுத்தபடுத்தி மருந்திட்டாள்...!!!!


அத்தான் பயப்படாதீங்க ...!!!லேசா தான் பட்டிருக்கு ..சரியாயிடும்...!!!அது சரி நீங்க ஏன் கிச்சனுக்கு வந்தீங்க....!!!


அது வந்து மாயாக்கு காபி போடலானு.... !!!


என்னது காபி போடவா என்று கண்கள் தெரித்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியாய் கேக்க...!!!!

எதுக்கு இப்போ இவ்ளோ ஷாக் ஆகுற...!!!!


நம்ம வீட்ல கிட்சன் எந்தபக்கம் இருக்குனே உங்களுக்கு தெரியாது....!!!ஆனா இங்க வந்து காபி எல்லாம் போடுறீங்க...!!!!


என் பொண்டாட்டிக்கு என் கையால காபி போட்டு கொடுக்கன்னு நினைச்சேன்...!!! நீ வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட.... என்று வருத்தமாய் கூற....!!!



சாரி அத்தான் நான் வேணும்னு பண்ணல.... நீங்க உட்காருங்க.. நான் போய் போட்டு எடுத்துட்டு வரேன்...!!



வேணாம் விடு அம்ரு.... நீயே நைட் டியூட்டி பார்த்துட்டு வந்துருக்க.....நானே போடுறேன் என்றவன் மெதுவாய் எழுந்து கிச்சனை நோக்கி நடந்தான்....!!!




அத்தான் வேண்டாம்..... நானே காபி போடுறேன்.... நாளைக்கு நீங்க போடலாம் .....!!!!



எவ்வளோ நாள் தான் உன் கையால குடிக்கிறது...இன்னைக்கு நான் போட்டு தரேன் நீ குடி என்றவன் வேறொரு பாத்திரத்தை எடுத்து காபி போட தயாரானான்....!!!!


ஐயோ அத்தான் வேண்டாம் விடுங்க...நானே....





அவளை தடுத்தவன் ஆமா கல்யாணமான புது பொண்ணு நீ ....!!!உன் புருஷன் கூட இல்லாம எதுக்குன்னு டியூட்டிக்கு போன....!!!!


ஒரு முக்கியமான கேஸ் அத்தான்.....!!!



ஓ அப்படியா ..!!!உங்க காதல் விஷயத்தை என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டீங்கல ரெண்டு பேரும்.. !!!!


அய்யோ அத்தான் என்று அவள் பதற...!!!


ஹா ஹா ஹா என்று சிரித்துக்கொண்டே பயப்படாதே..!!! ஆதவன் மாதிரி ஒரு பையன் நீ எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான் என்று கூற ....!!!


அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது....!!!!



அம்மு உனக்கு வெக்கம் எல்லாம் வருமா இன்று மேலும் சீண்ட ....!!!



போங்கத்தான் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்...!!!!


ஏய் காபி வேனாமா...!!!என்று கத்த....!!!


உங்க பொண்டாட்டிக்கே குடுங்க என்று கூறிக்கொண்டே ஓடினாள்....!!


வர்மா இரண்டு கப்புகளில் காபியை ஊற்றிக் கொண்டு மாயாவின் அறையை நோக்கி சென்றான்....!!!!



காபி கோப்பையுடன் உள்ளே நுழைந்த வர்மா தூங்கி கொண்டிருந்த மாயாவை பார்த்து திகைத்து நின்றான்....!!!


அப்போது தான் கவனித்தான் அவளை..நீல நிறத்தில் வெள்ளை கோடு போட்ட லூசான காட்டன் பேண்ட் சட்டையனிந்து.. கூந்தலை விரித்து போட்டு..
தலைக்கு ஒரு தலையணை ...நீட்டி இருந்த வலது காலுக்கு ஒரு தலையணை... மடக்கி இருந்த இடது காலுக்கு ஒரு தலையணையை வைத்து.... அந்த தலையணையைக் கட்டிக்கொண்டு குழந்தை போல் உறங்கும் மாயாவை கண்டு அவனது மனம் ஏனோ வலித்தது....!!!


வெகு நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.....!!! மெதுவாக கட்டிலின் கால் பகுதியை அடைந்து குனிந்து நீட்டியிருந்த அவளின் வலது காலை மென்மையாய் பற்றி தன் நெற்றியில் வைத்தான்.. பிறகு மண்டியிட்டு அமர்ந்து அவளது பாதத்தை எடுத்து தன் முகத்தில் அழுத்திக்கொண்டு கண்ணீரால் அவளது பாதத்தை கழுவினான்...!!! அவனது மன கொதிப்பு கொஞ்சம் அடங்கியது போலிருந்தது....!!!அவளது காலில் அசைவு தெரிய அவசரமாக அவளது பாதத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு எழுந்து கொண்டான்....!!??


தூங்கி விழித்த மாயா எதிரே எதோ நிற்பது போல் இருக்க கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க அந்த உருவம் அங்கயே நின்றது....!!!!மாயா திருதிருவென விழிக்க...!!!!விழித்து கொண்டிருப்பவளை இழுத்து அனைக்க துடித்த மனதை கட்டு படுத்தி கொண்டு குட்மானிங் பேபி என்றான்....!!!!


அவனது குரலில் சுயம் வந்தவளுக்கு நேற்றைய சம்பவம் ஞாபகம் வர அவனை முறைத்து பார்த்தாள்....!!!!


அவளை முறைப்பதை பார்த்து ரொம்ப பயமாயிருக்கு...என்று கூறி சிரித்தவன் காபி என்று அவளிடம் நீட்ட....!!!


அவள் அவனையும் கையிலிருந்த கப்பையும் மாறி மாறி பார்த்தாள்...!!!!


ஏய் பேபி என்ன பாக்குற...!!!நானே என் கையால போட்டது....குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லு என்றான் சிரித்து கொண்டே...!!!!



அதை வாங்கியவள் சிரித்து கொண்டிருக்கும் அவனை பார்த்து கொண்டே தன் வாயருகே கொண்டு சென்று பக்கத்தில் இருந்த டஸ்பினில் கொட்டினாள்...!!!


அதுவரை சிரித்த முகமாய் இருந்தவன் முகம் அவளது செயலில் இறுக்கமாய் மாற தன்னை சமன்படுத்தி கொண்டு உனக்காக ஆசையா போட்டேன் பேபி...இங்க பாரு கால்ல கூட கொட்ட்டிடுச்சு ....ரொம்ப எரிச்சலா வேற இருக்கு....!!!ஆனா நீ என்னனா அத குடிகாகாம கீழ ஊத்திட்டியே என்று வருந்தினான்....!!!


அவனது வருத்தம் அவளுக்கும் வலிக்க தான் செய்தது...இருந்தும் அதை காட்டி கொள்ளாமல் இது என்ன புது பிளானா!!!


பேபி ...என்றான் புரியாமல்...!!!


காபில எதாவது கலந்து அத நான் குடிச்சி மயக்கமானதும் உன் இஷ்டம் போல போட்டோ எடுத்து என்னை அசிங்கபடுத்தவா..!!! என்றாள் வார்த்தையில் விஷத்தை தேக்கி...!!!


அவள் கூறிய அடுத்த நிமிடம் ஆங்காரமாய் அவள் கழுத்தை பிடித்தான்....அவனது முகத்தில் இருந்த ரௌத்ரத்தை கண்டு மாயா சற்று பயந்து தான் போனாள்...!!!


ஏண்டி ஒரு வாட்டி தப்பு செஞ்சவன் திருந்தவே கூடாதா...!!!! செஞ்ச தப்ப ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்டா ஏறி மிதிப்பிங்களா...!!!! என் பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு ....!!! நான் நெனச்சா உன்னை என்ன வேணும்னாலும் செய்யமுடியும் ....!!!!எவனும் என்ன கேள்வி கேட்க முடியாது...!! என்று கோபமாய் கர்ஜிக்க ....!!



அவனது பிடியின் வலி தாங்காமல் அவள் இரும ஆரம்பித்தாள் ....!!!



சட்டென தன் பிடியை விட்டவன் ஏன் பேபி என்ன புரிஞ்சிக்க மாட்ற....!!!! என்னை மன்னிக்கவே மாட்டியா...!!!!! அது எதோ தெரியாம நடந்ததுடி.....!!!அதுக்காக என்ன மன்னிக்கவே மாட்டியா..!!!!பாருடி உனக்காக சூடு எல்லாம் வாங்கிருக்கேன் என்று தனது காலை நீட்ட .....அதில் தோல் சிவந்து போய் கொப்புளங்களாக இருந்தன.....!!!!



மாயா அவனை நக்கலாய் பார்த்துக்கொண்டே இந்த சூடு உனக்கு வலிக்குதா!!!!! அப்போ எனக்கு என்றவள் சட்டென தன் சட்டையை கழட்டி எறிந்தாள்....


வர்மா அவளையே அதிர்ச்சியாய் பார்த்திருந்தான்...!!!!அவள் சட்டையை கழட்டியதும் முதலில் திகைத்தவன் பின் அவள் உடபில் இருந்த தழும்புகளை பார்த்து சிலையாய் நின்றான்...அவளது சிவந்த உடலில் அங்கங்கே சிறு சிறு தழும்புகளாக அவளது உடல் முழுவதும் இருந்தது....!!!!!


என்ன பேபி இதெல்லாம் என்றான் உணர்ச்சியற்றவனாய்.....!!!!


இதெல்லாம் என்னதுனு உனக்கு தெரியாது...!!!ஓஓ உனக்கு தான் பழசு எல்லாம் மறந்து போச்சே....!!!என்று நக்கலாய் கூறியவள் இதெல்லாம் நீ எனக்கு வச்ச சூடு....!!!இதெல்லாம் கொஞ்சம் தான்...!!!இன்னும் நிறைய இடத்துல இருக்கு காட்டவா!!!!என்று கோபமாய் கத்த....!!!!


அவள் கத்தியதில் தன் நிலை உணர்ந்தன் அய்யோ பேபிபி என்று கதறி கொண்டே அவளை அணைத்து போதும் டி ...இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுடி என்று கூறி கத்தினான்... தன்னால் இந்த சிறு காயத்தின் வலியை கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை.... ஆனால் அவளோ உடல் முழுவதும் இந்த ரணத்தை எப்படி தாங்கியிருப்பாள் அவளுக்கு அப்போது எப்படி வலித்திருக்கும் என்று நினைத்தவன் இதயம் ரத்த கண்ணீரை வடித்தது....!!!!


மாயா எதுவும் கூறாமல் அவனை விலக்கி விட்டு பாத்ரூமிக்குள் நுழைந்து கொண்டாள்....!!!


மாயா திரும்பி வந்தும் வர்மா அப்படியே அமர்ந்திருந்தான்...அவளுக்கு அவனை அப்படி பாக்க மிகவும் கஷ்டமாக இருந்தது....!!!


அவனை அந்த சூழலிருந்து வெளி கொண்டு வர யோவ்... என்றாள்...

அவன் அசையாது அப்படியே இருக்க..யோவ் மாமா என்றாள்....!!!


அதுவரை அப்படியே அமர்ந்திருந்தவன் அவளது மாமா என்ற அழைப்பில் முகம் பிரகாசிக்க அவளை பார்த்தான்....அவனது மனதுக்குள் ஜிவ்வென்ற ஒரு உணர்வு வந்து போனது...!!!


என்ன.???


உன் மனசுல பெரிய மகாராஜானு நினைப்பா!!!!!


அவன் அவளை புரியாமல் பாக்க...!!!!


என்னோட கபோட் முழுக்க உன்னோட ட்ரஸ் எல்லாம் வச்சது இல்லாம என்னோடது எல்லாம் கீழ எடுத்து போட்டுருக்க என்றாள் அமத்தலாய்...!!!


கொஞ்சம் இரு என் ட்ரஸ் எல்லாம் எடுத்துகிறேன் என்று மெதுவாக கூறியவன் அவனது உடைகளை எடுத்து. வேறு கபோடில் வைத்து விட்டு வெளியே போக கதவை நோக்கி சென்றான்...!!!!


யோவ் மாமா எங்க போற...!!!என்றவளின் குரலில் மீண்டும் திரும்பினான்...! !


நீ பாட்டுக்கு போனா இதெல்லாம் யாரு அடுக்குவா!!!!நீ தான போட்ட...நீயே அடுக்கு என்றாள்... !!!



சரி நீ போய் குளிச்சிட்டு வா...நான் அடுக்குறேன் என்றவன் அவளது உடைகளை அடுக்க தொடங்கினான்...!!!


அவளது உடைகளை நேர்த்தியாக அடுக்கியவன் மனதில் புதுவிதமான உணர்வு வந்து போனது...!!!இதுவரை அவனுக்கு மற்றவர்களிடம் வேலை சொல்லி தான் பழக்கம்...இது போன்ற வேலைகள் புதிது....அவன் மனதில் ஏதோ ஒன்று குறுகுறுக்க...அவளது உடைகளை அடுக்கினான்....!!!!



அடுக்கி முடித்து திரும்பியவன் அதிர்ச்சியாகி நின்றான்...!!!மாயா ஒரே டர்க்கி டவலால் உடலை சுற்றி கொண்டு வந்து நின்றாள்....!!!


அவளும் அவனை எதிர் பார்க்கவில்லை...அவன் சென்றிருப்பான் என்று நினைத்திருந்தாள்....



சற்று முன் பாராத்த போது தெரியாத அவளது ஆழகு இப்போது இந்த நிலையில் அவளை அவ்வாறு பார்த்ததும் வர்மாவின் ரத்த ஓட்டம் சூடாகியது.... அதற்குமேல் அங்கு நிற்காமல் அவன் வெளியேறினான்...!!!



அவளின் மனது வர்மாவிற்கு நன்கு புரிந்தது....!!! அதாவது இந்த மாதிரி எல்லாம் பண்ணிட்டு நான் சபலப்பட்டு அவளைத் தொட்டா அதையே சாக்கா வைச்சு என்னை கேவலமா பேச திட்டம் போட்டுருக்கா என்று தெளிவாக தப்புக் கணக்குப் போட்டான் வர்மா......!!!!




அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து இருந்தனர்....!!! அனைவருக்கும் அமிர்தா உணவு பரிமாறினாள்...!!!அம்ரு நீயும் உட்கார்ந்து சாப்பிடு..... நான் பரிமாறுவேன் என்ற வர்மா அவளையும் உட்கார வைத்து பரிமாறினான்....!!! அவனது இந்த புதிய பரிமாற்றத்தில் சத்திய பிரகாஷ் மாயா உட்பட அனைவருமே அதிர்ந்து போயினர்....!!!



இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமா பேபி....நல்லா சாப்பிடு பேபி...!!!வேற எதாவது வேனுமா ...!!!என்று மாயாவை ஒரு வழி படுத்தி கொண்டிருந்தான்...!!!



அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது அவனது இந்தப் புதிய பரிமாணம் எதற்கு என்று......!!!


மாயா அனைவருக்கும் முன்பும் அவனைத் திட்ட முடியாமல் தன் பற்களை கடித்தவள் எல்லாருக்கும் முன்னாடி ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே என்றாள்..!!!!



அதுவரை மகிழ்ச்சியாக இருந்த அவனது முகம் சூம்பி போனது...!!!!




அவளது முக மாற்றத்தைக் கண்டு அனைவரும் நெற்றியை சுருக்க..... தன்னை சமன் செய்தவன் தானும் ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்துக் கொண்டு பேச்சை மாற்றும் பொருட்டு ஆதவா நீங்க ரெண்டு பேரும் எப்போடா காதலிக்க ஆரம்பிச்சீங்க என்று கேட்டான்.....!!!!



அவனது இந்த திடீர் கேள்வியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ....!!!!



டேய் ஆதவா...!!!! எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் என் கூடவே தான் இருந்தீங்க...!!!! அப்புறம் எப்படி...!! அதான் கேட்கிறேன் என்றான்.....!!!


அதெல்லாம் இப்போ எதுக்கு வர்மா..... என்றான் நெளித்தபடியே ஆதவன்...!!!



நீ இப்படி நெளியிறத பார்த்தா ரொம்ப கேவலமா தான் ப்ரப்போஸ் பண்ணிருப்ப போல இருக்கே ..!???!அம்மு நீ சொல்லு என்றான்...!!!



அவன் கூறியதை கேட்டு ஆதவன் அமிர்தாவை பார்த்து அசடு வழிய அமிர்தா அவனை முறைத்துப் பார்த்தாள்....!!!! அத்தான் இவர் லவ் பண்றத எங்க என் கிட்ட சொன்னாரு ....என் பிரண்டு கிட்ட தான் சொன்னார்... என்றவள் அவன் காதலை சொன்ன தருணத்தை கூறத் தொடங்கினாள்...!!!!



அமிர்த்தா வெளிநாட்டில் தனது படிப்பை முடித்து விட்டு இங்கு வந்து இரண்டு மாதங்களாகியது....!!!!அவளும் அவளது தோழியும் காபி அருந்தி கொண்டு ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து இருந்தனர்... !!!அப்போது அவர்களை நோக்கி வந்தான் ஆதவன்...!!!! வந்தவன் அவர்களுக்கு முன்பு இருந்த சேரில் அமர்ந்து அவனது தோழியிடம் ஹாய் என் பேரு ஆதவன்.... வயசு 27.....நல்ல குடும்பம்... வீட்டுக்கு ஒரே பையன்... நல்ல வேலை.. நல்ல சம்பளம்... இந்த விட முக்கியமா நல்லா பார்த்துக்குவேன்....!!!


அவள் அவன் முகத்தை ஆர்வமாய் நோக்க ...!!!


இதெல்லாம் ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா... எனக்கு உங்க பிரண்ட ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் அமிர்தாவை பார்த்து....!!!


அதுவரை அமைதியாய் காபி அருந்தியவள் அவன் கூறியதை கேட்டு அவனை விழிவிரித்து பார்த்தாள்....!!!


அமிர்தாவை பார்த்து உங்களை
கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறேன்.... சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்... ஓகே பாய் என்று கூறிவிட்டு எழுந்து செல்ல..... இருவரும் ஒன்றாக சேர்ந்து ஹலோ என்றனர் ....!!!



சட்டென திரும்பியவன் ஐய்ய் கூப்பிட்டாங்க ...என்று வழிந்து கொண்டே அவளது தோழியை கொஞ்சம் தள்ளு என்றான்....!!!

அவளோ ஹலோ எஸ் கியூஸ் மீ...


எஸ்....!!! ஒரு கிளாரிபிகேஷனுக்காக கேட்கிறேன்...

ஆங்ங் கேளுங்க....!!!


எனக்கு தானே ரூட்டு விட்டுகிட்டு இருந்த.....


இன்னா அக்கா...

அக்காவா..!!!!என்று அவள் விழிக்க....



ஹாய் அமிர்தா.. ஐ லவ் யூ ....ரொம்ப நாளா ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்.... இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது..... என் லவ்வ நான் சொல்லிட்டேன்....உன் லவ்வ சொல்ல வேன்னா கொஞ்சம் டைம் எடுத்துக்கோ...!!! நம்பலையா..!!! என் ஹார்ட்ட கேளு..... என் கண்ண கேளு ....


டேய் தம்பி மொதல்ல கவுண்டர்ல போய் பில்ல கேளு என்றால் அவளது தோழி...!!!



நீ போய் கட்டிடுக்கா..!!! ரொமான்டிக் பேசிகிட்டு இருக்கேன்ல டுபுக்கு என்றவன்...

சோரி... லவ் பண்ணனும் சொல்லல.... லவ் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்றேன்.... யோசிச்சு சொல்லு... வேணும்னா கொஞ்சநாள் பழகி பார்க்கலாம்.... என் போன் நம்பரை நீ எங்கேயும் தேட வேண்டாம்... நானே உனக்கு டெக்ஸ் பண்றேன்...
ஸ்டே க்யூட் ஆல்வேஸ் ஓகே பாய் டேக் கேர் அமிர்தா என்று கூறிவிட்டு சென்றான்...!!!



போகும் அவனையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா...!!! என் ஆது எப்பவுமே க்யூட் தான் என்று சிலாகித்து சொல்ல....!!!


என்னது ஆதுவா !!!!அவன உனக்கு முன்னாடியே தெரியுமா!!!! என்றாள் அதிர்ச்சியாய்....!!!



தெரியும் .... பேரு ஆதவன்... இப்ப என் மாமாவோடு ஆபீஸ்ல வொர்க் பண்றார்....!!! ஒருவிதத்தில் எனக்கு ரிலேட்டிவ் தான்... என்றவள் அவளையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்...!!


அதன் பிறகு போனில் இருவரும் நிறைய பேசினர் .....ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொண்டனர்...!! அவனும் அவனது காதலை.!ஏற்றுக்கொண்டாள்.....!!!அப்போதுதான் ஆதவனுக்கு அவள் வர்மாவின் அத்தை மகள் என்று தெரியவந்தது....!!! இருவருமே தங்களது காதலை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டனர்...!!!!

இதனை கூறிக்கொண்டிருந்த அமிர்தா முகம் சிவக்க அங்கிருந்து ஓடியே விட்டாள்......!!! சுற்றியிருந்த அனைவரும் ஆதவனை கலாய்க்க அவன் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓடியே விட்டான்...!!!!



ருத்ரா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க என்றான்....!!!வர்மா...



அதுவரை சிரித்துக் கொண்டிருந்த ருத்ராவின் முகம் வேதனையை தத்தெடுத்தது....!!!! அதற்குமேல் ஒன்றும் கூறாமல் ருத்ரா அங்கிருந்து சென்று விட்டான்....!!!! மாயாவும் வர்மாவை நன்கு முறைத்துக்கொண்டே சென்றாள்...!!!!


சத்யபிரகாஷ் தனது மகனை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்குடா.....!!! உன்னை இப்படி பார்க்கணும்னு எத்தனை நாள் காத்திருந்தேன்.... அது எல்லாம் இப்பதான் நிறைவேறி இருக்கு என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்....!!!!


ஆனால் வர்மாவோ வேதனை முகத்துடன் சென்ற ருத்ராவையே நினைத்துக் கொண்டிருந்தான்....!!!




அதன் பிறகு அனைவரும் தங்களது அலுவலகத்திற்கு சென்றனர்....!!! வர்மா மாயாவிற்கு கொடுப்பதற்காக ஒரு விலை உயர்ந்த சாரியை எடுத்து வந்து மாயாவின் வருகைக்காக காத்திருந்தான்...!!!! இரவு எட்டு மணி ஆகியும் மாயா வரவில்லை.... அதை நினைத்து பயந்தவன் அவளைத் தேடிப் போகலாம் என நினைத்து அறைக் கதவை திறக்க...திடீரென தன் நெஞ்சின் மீது சரிந்து விழுந்த மாயாவை தாங்கிப் பிடித்தான் வர்மா.....!!!!
 
Top