All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயாய் ஒரு தென்றல்- கதை திரி

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :13


அந்த திருமண மண்டபமே களைகட்டியிருந்தது... எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் தலைகளாக தெரிந்தது.... அரசியல்வாதிகளும்,, தொழிலதிபர்களும் அதிகமாக நிரம்பி வழிந்தனர்.... நிர்மலாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.... கடவுளே இந்த கல்யாணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்....!!!

ஐயர் ஹோம குண்டத்தின் அருகில் அமர்ந்துகொண்டு மந்திரங்களை கூறி கொண்டிருந்தார்..... அவரின் எதிரே முகத்தில் கல்யாண மாப்பிள்ளை காண மகிழ்ச்சி சிறிதும் இல்லாமல் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான் வர்மா.....!!! தொழில் வட்டாரத்தில் இவ்வளவு நாள் கோட்டு சூட்டுடன் பார்த்தவனை இங்கே மணக்கோலத்தில் பாரம்பரிய உடையில் அமர்ந்து இருப்பவனை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் விழியகலாமல் பார்த்தனர்...!!!


மணமகள் அறையில் ஒரு வித தவிப்புடன் இருந்தாள் அம்ருதா...கடவுளே எப்படியாவது இந்த கல்யாணத்த நிப்பாட்டுங்க...!!!என்று வேண்டினாள்.. !!!


ஏய் அம்மு ரெடியா என்று கேட்டுக்கொண்டு அங்கு வந்தார் நிர்மலா..!!!


அங்கே அழகாய் பட்டுடுத்தி புது பெண்ணாய் ஜொலித்த அம்ருதாவை கண்ணம் வலித்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று நெட்டி முறித்தார்...!!!!


அம்மாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்தலாமா !!என்று யோசித்தவள் அம்.....எனும் போதே சீக்கிரம் ரெடியாகி அழைச்சிட்டு வாங்க என்று கூறிவிட்டு சென்றார்....!!!

அம்ருதாவிற்கு அய்யோ என்றிருந்தது...!!!அவளது மனதினுள் பய பந்துகள் உருள ஆரம்பித்தன.....!!!!



அதேநேரம் வர்மா இறுகி போய் அமர்ந்திருந்தான்...!!! அம்பி கல்யாண கலை கொஞ்சம் கூட இல்லாம இருக்கேலே கொஞ்சம் சிரிச்சிண்டு இருங்கோ!!!!!வர்மா அவரை முறைத்து பார்த்தான்....!!!அதை கண்டு பயந்து புரோகிதர் நாழி ஆகறது பொண்ண அழச்சிண்டு வாங்கோ என்றார்.....!!


கூறை பட்டுடுத்தி அன்னம் போல் நடந்து வந்த அம்ருதாவை அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர்...!! பொண்ணு பாக்க மகாலட்சுமி மாதிரி அழகா இருக்கா..!!!ஏன் கண்ணே பட்டுடும் போல இருக்கு!!!என்று அம்ருதாவை ஆசையாய் பார்த்தார்... !!!பின்பு அமிர்தா வர்மாவின்
வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்தாள்!!!!
அவனுக்கு கூறிய மந்திரங்கள் அனைத்தும் அவளுக்கும் கூறப்பட்டது.... குறித்த சுபமுகூர்த்ததில் வர்மா எழுந்து அம்ருதாவின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க....!!!



மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”


கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று புரோகிதர் கூற, தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தெரியும் வண்ணம் கையை உயர்த்தி சைகையும் காட்டுகிறார் புரோகிதர். சமிக்ஞை சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பலரும் அதே போல கையை உயர்த்தி விரலை ஆட்டி “கெட்டி மேளம் , கெட்டி மேளம்” என்கின்றனர். அதோடு இருக்கைகளை விட்டு எழுந்து பூவும் அட்சதையும் போடத் தயாராகின்றனர்.

மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மேடையின் அருகாமைக்கு விரைகின்றனர். வீடியோகிராபரும், போட்டோகிராபரும் மணமக்களை சுற்றி சூழ்ந்து இருக்கும் உறவினர் நண்பர்களிடம் “சார் , கொஞ்சம் வியூ கொடுங்க” என்று கோருகின்றனர். இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையில் கெட்டி மேளம் முழங்க வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் தான் இருக்கும் பரபரப்பில் தாலியை அம்ருதாவின் கழுத்தில் கட்ட போகும் நேரம் "வர்மாமாமாமா" என்று ஒரு குரல் கேட்க ....அனைவரும் குரல் வந்த திசையை திரும்பிப் பார்க்க.... அந்த நேரம் அமிர்தாவின் கழுத்தில் தாலி ஏறியது .....!!!!குரல் வந்த திசையை திரும்பி பார்த்த அனைவரும் அதிர்ந்து போயினர் .....!!!அங்கே
வர்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமிர்தா தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை கையில் எடுத்தவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது...!!!!




சற்று நேரத்திற்கு முன்பு...


மாயா தனது அறையில் கண்களை மூடி படுத்திருந்தாள்.....!!! அப்போது அம்மாமாமா என்ற அலறல் சத்தம் கேட்க.... பட்டென விழித்தவள் விரைவாக கீழே இறங்கி வந்தாள்....!!!!!


ஏன் !!!!என்னாச்சு !!!!ஏன் இப்படி உயிரே போற மாதிரி கத்துற என்று அதட்ட....



அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டே டிவியை காட்டினாள்......



அவள் காட்டிய திசையை பார்த்த மாயா மனம் பதைக்க ,,உடல் நடுங்க தொப்பென்று சோபாவில் அமர்ந்தாள்.....!!!! அங்கே தொலைக்காட்சியில் ப்ளாஷ் நீயூஸ் ஓடிக்கொண்டு இருந்தது.....!!!! அதில் பிரபல தொழிலதிபர் மாயா பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார்....!!!! என்று அன்று வர்மா எடுத்த போட்டோ அதில் காண்பிக்கப்பட்டது....!!! இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தொழிலதிபர் மாயாவின் முன்னாள் காதலர் என்று சொல்லப்படுகிறது....!!! என்று ஓடிக்கொண்டிருந்தது.....!!!


மீண்டும் அதில் அந்த நபர் அந்த போட்டோல இருக்குறது சத்தியமா உண்மைங்க ....!!!அன்னைக்கு நானும் மாயாவும் ஒன்னா இருக்கும் போது எடுத்தது தான் அது...!!! அவங்களுக்கு எப்ப எல்லாம் செக்ஸ் தேவைப்படுதோ அப்போ என்னைய கூப்பிடுவாங்க..... அதுக்கு நிறைய பணமும் குடுப்பாங்க.....!!!! நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்க கூட போவேன் என்று பொய்யாய் கூறிக் கொண்டிருந்தான்....!!!!!



அதேநேரம் வீட்டின் வெளியே ஒரே சத்தமாக இருக்க ....அங்கு சென்ற அவள் முகத்தில் பளிச் பளிச்சென வெளிச்சம் பரவியது....!!!! அங்கு அவரை சுற்றி புகைப்படக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் நின்று கொண்டிருந்தனர்.....!!!!


மாயா மேடம் உங்க மேல பாலியல் புகார் வந்து இருக்கே..... இது உண்மையா ....இல்லை அது பொய் என்று மறுக்க போறீங்களா!!!!!



எத்தனை வருஷமா அவர் கூட உங்களுக்கு பழக்கம்...!!!!



இந்த பழக்கத்தினால் தான் நீங்க இன்னும் திருமணம் செய்து கொல்ல வில்லையா!!!!!!


இது பொய் என நிரூபிக்க உங்க கிட்ட ஆதாரம் இருக்கா!!!!!
என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்....!!!!


மாயா எதுவும் கூறாமல் உயிரற்ற ஜடமாய் நின்றுகொண்டிருந்தாள்......!!!!! அவள் அவர்கள் யாருக்கும் பதில் கூறாமல் விருவிருவென தன் அறையை நோக்கி சென்றாள்....!!!!

அறைக்குச் சென்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.... அவளது மனம் வர்மாவை நினைத்து கதறி துடித்தது....!!!! ஏன் மாமா இப்படி பண்ணீங்க!!!உங்க கல்யாணத்தை நான் நிறுத்திடுவேனு என் மேல இப்படி ஒரு பழி போட்டீங்களா!!!!! என்னை பழிவாங்க உங்களுக்கு வேற வழியே கிடைக்கலையா!!!!!! என் மானத்தை வாங்கி தான் நீங்க என்ன ஜெயிக்கணுமா?????!!! என்று கதறி துடித்தாள்.....!!!!மாயாவிற்கு நன்கு தெரிந்தது ....அந்த போட்டோவில் இருப்பவன் வர்மா தான் என்று..... தன் கணவனின் முதுகின் பின்னால் இருக்கும் மச்சம் அவன் தான் என்று அடித்து சொன்னது...அதுமட்டுமில்லாமல் அன்று வர்மா தன்னை அழைத்து வந்ததை வேலையாள் கூறியிருந்தாள்......!!!அவளுக்கு அதை எல்லாம் நினைக்க நினைக்க உயிரே போவது போல் இருந்தது.....!!!!



எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ தெரியாது !!!!கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்தாள்....!!!
தேவையில்லாத சலனங்கள் எனக்கு எதுக்கு?யாராலும் எனக்கு எந்தச் சுகமும் இல்லை.எனக்கு தேவையெல்லாம் என் கடமையை முடிக்கணும்!அது பூர்த்தியான பிறகு,அதற்கு மேலும் வாழணும்னு எனக்கு ஆசை இல்லை..

"காதல் சாதாரணமான பந்தம் இல்லை!அதோட பவித்ரம்,அக்னியை விட உயர்ந்தது!அப்படிபட்ட காதல் எனக்கு கிடைக்கவில்லை....!!காவலாய் இருக்க வேண்டியவனே இங்கு காலனாகி போனான்...!!!

மாயா எவருக்கும் ஆட்படாதவள்!சுதந்திரமானவள்!நான் வாழ எந்த ஆண்மகனின் அன்பும் எனக்கு அவசியமில்லை.காதலினால் விளையப்போவது ஏதுமில்லை!மரணம் அனைத்தையும் ஓர்நாள் கெடுத்து ஆளும்!மனம் சஞ்சலம் கொள்ளும் முன்,இந்த நாடகத்திற்கு முடிவு அளிக்க வேண்டும்!என் வைராக்கியத்தை காதல் ஆள நான் அனுமதி அளிக்கப் போவதில்லை."-என்று
முடிவெடுத்தவள் அறையை விட்டு வெளியே வரும் நொடி அவளை பின்னாலிருந்து தாக்கியது ஒரு உருவம்...!!!தலையை பிடித்து கொண்டு பின்னால் திரும்பியவள் அங்கு ஏற்கனவே அவளால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவன் கையில் பூ ஜாடியுடன் நின்றிருந்தான்...!!!

நீயா !!!?!


ஆமாண்டி !!!! நான்தான் உன்னை பார்த்து தப்பா பேசினேனு என்ன ஒரு ரூமுக்குள்ள வச்சு சுட்டியே!!! இப்போ இந்த ஊரே உன்ன பார்த்துதான் பேசுது...!!! எல்லாரையும் சுடுவியாடி!!!!! உன்ன பழிவாங்க தாண்டி இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தேன்..... அந்த சந்தர்ப்பம் எனக்கு இப்பதான் கிடச்சது என்று கூறிக்கொண்டே அவள் தலையில் அடிக்க போக...... மாயா அவனது கையைப் பிடித்துத் தடுத்து அவனது உயிர் நாடியில் ஓங்கி ஒரு உதை விட்டாள்...... அவன் வழியில் சுருண்டு கீழே விழுந்தான்..... பிறகு அவனை அடித்து வெளுத்து விட்டாள்....!!!! அவன் வலி தாங்காமல் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டான்....!!!



நடந்து கொண்டிருக்கும் இந்த பரபரப்பான செய்தியை பார்த்து ருத்ரா அதிர்ந்து போனான்....!!! அவனது கண்களில் கோபம் ருத்ரதாண்டவம் ஆடியது ....!!!!அடுத்த நிமிடம் தன் போனை எடுத்தான்... அதில் யாருக்கும் அழைத்து ஏதோ கூற,,, அடுத்த பத்து நிமிடத்தில் அந்த டிவியில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவன் முகத்தில் ரத்தம் வழிய முகமெல்லாம் வீங்கி போய் ருத்ராவின் முன்பு கிடைத்த பட்டான்....!!!!



நீ யாருடா!!! ஏன்டா இப்படி சொன்ன என்று தன் காலால் அவன் வயிற்றில் எட்டி உதைக்க சுருண்டு போய் இரண்டு அடி தள்ளி விழுந்தான்.....!!!!


சார்!!!! என்ன ஒன்னும் பன்னாதீங்க சார்...... நான் எல்லா உண்மையும் சொல்லிடுறேன் என்று கூறியவன் நடந்த அனைத்து உண்மைகளையும் கூறினான்....!!!!!


அவன் கூறியதை கேட்டு ருத்ரா இந்த உண்மையை அப்படியே சேனல்ல சொல்லுவியா என்று கேட்க,,,, அவன் ஆம் என்று தலையை ஆட்டினான்.....!!!!



அடுத்த பத்தாவது நிமிடம் தொலைக்காட்சியில் தொழிலதிபர் மாயா பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது....!!!! அவருடன் இருந்ததாகக் கூறிய அந்த நபர் இப்போது அவர் கூறிய அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார்....!!!!அவர் இவ்வாறு பேசுவதற்கு காரணம் என்ன...!!!!அவரை அடித்து இவ்வாறு கூற சொன்னார்களா!!!அதுமட்டுமில்லாமல் மாயா உடன் இருந்த நபர் அவர் இல்லை என்றாள் வேறு யார்!!!என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது...!!!என்று பரபரப்பாக நீயூஸ் ஒடிக் கொண்டிருந்தது....!!!!!


ருத்ரா தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்....!!!!அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....!!!!அந்த போட்டோவில் இருப்பவன் யார் என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான்....!!!!

ருத்ரா!!!!?


தலை நிமிர்ந்து பார்த்தான்...!!!அவன் கண்கள் இரத்தமென சிவந்திருந்து.....!!!

அ...ப்..பா... மா..யா???!!!


கவலை படாத....!!!எல்லாம் சரியாயிடும் ....!!!!இப்ப நாம ஒரு இடத்துக்கு போகனும்...!!!அங்க போனா அவன் யாருனு நமக்கு தெரியும் என்று கூறியவர் அவனையும் அழைத்து கொண்டு புறப்பட்டார்.....!!? !!



வர்மாமா... என்று கத்திக்கொண்டே அவனை நெருங்கியவர் பளார்...என அவன் கண்ணத்தில் ஒரு அறை விட்டார்....!!!!


வர்மா அதிர்ச்சியாய் தன் கண்ணத்தை தடவி கொண்டே அ........ப்.......பா என்றான்....!????



ச்சீ வாய மூடுடா...!!!!!என்ன அப்படி கூப்டாத...!!!உனக்கு அந்த தகுதி இல்ல...!!!!
நீயெல்லாம் ஒரு மனுஷனாடா!!!!நாய்க்கு ஒரு வேல சாப்பாடு போட்டா கூட நன்றியோட இருக்கும்டா...!!!ஆனா நீ....!!!!ச்சீ....


அப்பா..நீ..நீங்க எப்படி உயிரோட.....என்னால நம்பவே முடியல...என்று அவரை கட்டி கொண்டு கதறினான்...!!!

ச்சீ கைய எடு ...!!! பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போது இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட உனக்கு வெக்கமா இல்லை... அதுமட்டுமில்லாமல் அவள் உன் வாழ்க்கையில் பிரச்சனை பண்ண கூடாதுன்னு அவன் வாழ்க்கையே அசிங்கப்படுத்திடியே என்று கோபமாய் கத்தினார்....!!!!


அப்பா நான் ஒன்னும் அவள அசிங்க படுத்தல...அவதான் என்ன அசிங்க படுத்திட்டு இந்தோ நிக்கிராறே தி கிரேட் ருத்ரா இவரு கூட ஓடி போனா.....!!!!



அவன் கூறிய அடுத்த நிமிடம் ருத்ராவின் கை வர்மாவின் கண்ணத்தில் இடியென இறங்கியது......!!!!


ருத்ரா இங்க எதுவும் பேச வேணாம் ....!!!!சேனல்காரங்க பிரஸ்காரங்க எல்லாரும் இருக்காங்க....!!!அவன இழுத்துட்டு வா நம்ம வீட்டுக்கு என்று கூறிவிட்டு சென்றார்....!!!!

இங்கு நடைபெற்ற சம்பவமும் பத்திரிக்கை க்கும் சேனலுக்கும் தீனியாகி போனது....!!!!



அந்த அறையில் அனைவரும் கூடி இருந்தனர்....!!!!!


அண்ணா நீங்க எப்படி உயிரோட...!!!!என்று அதிர்ச்சியாய் நிர்மலா வினவ.....!!!!


அவர் அவளை பார்த்த பார்வையில் கப்பென தன் வாயை மூடிக் கொண்டார்....!!!!


என்ன சொன்ன என்ன சொன்ன மாயா உன்ன அசிங்க படுத்தினாளா!!!!அவ யாரு தெரியுமாடா !!!!தெய்வம் டா!!! அவ போல ஒரு மனைவி கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும்...!!!!என்றவர் அவன் வாழ்வில் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறினார்....!!!!


அதை கேட்ட வர்மாவுக்கு இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தது....!!!!என்ன காரியம் செய்திருக்கிறேன்...!!!!தாயாய் இருந்து தாங்க வேண்டியவளை தவறாக நினைத்து விட்டேனே!!!!அவள் எனக்கு செய்த சேவைக்கு காலம் முழுதும் அவள் காலடியில் கிடக்க வேண்டிய நானே அவளை தப்பாக நினைத்து விட்டேனே!!!!அவளை பற்றி யார் தப்பாக கூறியிருந்தாலும் அவளை நான் தேடி இருக்க வேண்டுமே!!!!சுய நினைவு இல்லாத நேரத்தில் கூட நான் அவள் பெயரை கூறியிருக்கிறேன் என்றால் அவள் என் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கிறாள்...!!! என்று கதறினான்....!!!!!

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நிர்மலாவும் ராமச்சந்திரனும் நைசாக நழுவ பார்க்க அங்கு நின்று கொண்டிருந்த புரோகிதர் அவர்களை நழுவவிடாமல் பிடித்து வைத்திருந்தான்.....!!!!



நீ எப்படி இங்க...!!??யாருடா நீ!!!!எங்க கைய விடு என்று நிர்மலா முரண்டு பிடிக்க....!!! அவர்கள் கூறியதைக் கேட்காமல் அவர்களை மேலும் இருகப்பற்றினான் புரோகிதர்...!!!



ருத்ரா வர்மாவின் கழுத்தை பிடித்து என்னடா சொன்ன அவ என் கூட ஓடி வந்துட்டாளா!!!! யாருடா சொன்னா...!!! அவளை நான் எந்த மாதிரி சூழ்நிலையில் பார்த்தேன் தெரியுமா என்றவன் அதனை கூறத் தொடங்கினான்.....!!!!!


ருத்ரா அந்த சிக்னலில் தனது காரில் அமர்ந்திருந்தான்....!!!!அப்போது பக்கத்து காரிலிருந்து மாமா முடியல மாமா...ரொம்ப வலிக்குது என்று தன் வயிற்றை பிடித்து கொண்டு கத்திக் கொண்டிருந்தாள்....!!!!


சுதந்திராம்மா என்னாச்சுடா!!!என்று சத்ய பிரகாஷ் பதட்டமாக....!!!


மாமா வயிறு ரொம்ப வலிக்குது என்று கதறினாள்....!!!!!


கடவுளே நான் இப்ப என்ன பண்ணுவேன் என்று கைகளை பிசைந்தார்...!!!!


அதேநேரம் சிக்னல் முடிய காரை வேகமாய் கிளப்பினார் சத்ய பிரகாஷ்...!!!!


அவர் பதட்டத்தில் காரை வேகமாக செலுத்தினார்....!!!அப்போது வலியால் துடிப்பவளை திரும்பி பார்த்தவர் எதிரே ரோட்டை கிராஸ் செய்து ஒடியவனை கவனியாது அவன் மேல் மோத அவன் தொலைவில் தூக்கி எறியப்பட்டான்....!!!அதே நேரம் அவரது காரும் ஒரு பெரும் மரத்தில் மோத கடவுளே எங்கள காப்பாத்து என்று கத்திக்கொண்டே மயக்கமானார்....!!!


அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ருத்ரா பதட்டமாகி தனது காரை விட்டு இறங்கி அவர்களை நோக்கி ஒட அவன் அங்கு கண்ட காட்சியில் அவனது ஐம்புலன்களும் அடங்கி ஒடுங்கியது....!!!!!


அங்கே சுதந்திரா தன் வயிற்றை பிடித்து கொண்டு புழுவாய் துடித்தாள்....!!!!ருத்ரா அவளை தூக்க கீழே குனிய சுதந்திராவின் காலுக்கிடையில் அவளது உதிரம் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஒடியது...!!!!

அவளை கொண்டு காரில் கிடத்தி விட்டு சத்ய பிரகாஷையும் தூக்கி கொண்டு மருத்துவ மனைக்கு ஒடினான்....!!!
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :14



ருத்ரா ஒய்ந்து போய் அமர்ந்திருந்தான்....!!!அவனுக்கு ஏனோ கண்களை இருட்டி கொண்டு வந்தது...அந்த சம்பவம் நடக்கும் போது எந்த மனநிலமையில் இருந்தானோ...அதே நிலைமையில் தான் இப்போதும் இருந்தான்....!!!!

ருத்ரா மேலும் கூற தொடங்கினான்....அந் த ஆக்ஸிடண்டுனால அப்பா கோமாக்கு போய்டார்....!!!கொஞ்ச நாள் முன்னாடி தான் அவர் சுயநினைவுக்கு வந்தார்....!!!!!ஆனா மாயா...அவ கதறுன கதறல்...அந்த சின்ன வயசுல தான் அவளுக்கு எவ்வளவு கஷ்டம்....!!!அப்போ பாத்த மாயா இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கா...!!!அவ வயித்துல இருந்த குழந்த செத்தே பொறந்துச்சு....!!!ஒரு வாரம் கழித்து கண்ணு முழிச்சு அவ குழந்தைய காணாம கதறுன கதறல்....!!!அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்த அத்தனை பேரும் அவள பாத்து அழுதாங்க...!!!அவளோட வயித்த புடிச்சிகிட்டு அய்யோ!!!!போச்சா!!!எல்லாமே போச்சா!!!!என்று கதறிய கதறல் என்று கூறும்போதே அவனது உடல் சிலிர்த்து அடங்கியது....!!!!

அதன்பிறகு அவ கொஞ்ச நாள் குழந்தை நியாபகமாவே இருந்தா..!!!சாப்டாம தூங்காமா பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பிச்சா...!!!!அவள சமாதான படுத்தி சாப்ட வக்கிறதுக்குள்ள போதும் போதுனு ஆய்டும்...!!!அவளுக்கு கொஞ்ச கொஞ்சமா நிகழ்காலம் உரைக்க ஆரம்பிச்சது...!!!!உன்ன தேடி வந்தா...!!!!ஆனா அவ யாருனு உனக்கு தெரியல....!!!எத்தனயோ முறை உன்கிட்ட உண்மைய சொல்ல நெனச்சா....!!!ஆனா நீ அவ முகத்த கூட பாக்கல...!!!!அவ யாருனு தெரிஞ்சிக்க கூட நீ விரும்பல....!!!!அப்பறம் எங்கிட்ட வந்து தயங்கி தயங்கி ஒன்னு கேட்டா!!!!என்ன கேட்டா தெரியுமா!!!!நான் படிக்கனும்...!!!என்ன படிக்க வக்கிறீங்களானு!!!!அத கேட்டு நான் அதிர்ச்சியானேன்....!!!அப்பறம் அவ ஆசை படியே படிக்க வச்சேன்....!!!!படிச்சு முடிச்சதும் அவ வேற மாயாவா மாறிபோனா...!!!!அவளோட நடை உடை பாவனை எல்லாத்தையும் மாத்த ஆரம்பிச்சா!!!!என்னோட தொழில கையில எடுத்தா...!!!!அப்போது இருந்து அவ வாழ்க்கையில் தோல்வியே இல்லை..!!!!எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவ முன்னாடி கை நீட்டி பேச பயப்படுவாங்க....!!!ஆனா நீ அவ அசந்த சமயமா பாத்து அவ முதுகுல குத்திடியே என்றான் வேதனையுடன்....!!!!!



அவன் கூறியதை கேட்க கேட்க அவன் மனம் துடித்தது....!!!அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்ற....நான் இப்போ தாராவை பாக்கனும் என்றான் உறுதியாய்!!!!

அவள பாக்குறதுக்கு இனிமே என்ன இருக்கு ...!!!அதான் அவள அசிங்கபடுத்திட்டியே என்று கத்தினார் சத்ய பிரகாஷ்.....!!!

அப்பா நீங்க என்ன சொல்றீங்க....!!!என்றான் அதிர்ச்சியுடன்....!!!


ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத என்றவர் அங்கிருந்த டீவியை ஆன் செய்ய....அங்கே ஒடிக்கொண்டிருந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்...!!!


அதனை பார்த்து கொண்டிருந்த புரோகிதர் கண்கள் கோபத்தில் மின்ன அவன் வர்மாவின் சட்டையை பிடித்தான்..!!!

அப்போது தான் அங்கிருந்த அனைவரும் அவனை பார்த்தனர்...!!!!அவன் யாரென்று அனைவரும் தெரியாமல் விழிக்க...!!!!



ஆது அத்தான் சட்டையிலிருந்து முதல்ல கைய எடுங்க என்று அம்ருதா அதட்ட ...ஆதவன் அவனது பிடியை தளர்த்தினான்......!!!!



அப்போதுதான் அங்கு நின்று கொண்டிருந்த அமிர்தாவின் கழுத்தில் தாலி தொங்கி கொண்டிருப்பதை கண்ட அனைவர் முகத்திலும் அதிர்ச்சி ....!!!!



வர்மாவும் தான் அவள் கழுத்தில் தாலி கட்ட வில்லையே என்று யோசிக்கும்போதே......!!! நான்தான் அவ கழுத்துல தாலி கட்டினேன் என்று தன் வேடத்தை கலைத்தான் ஆதவன் ....!!!!




எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.....!!! நானும் அம்முவும் அஞ்சு வருஷமா லவ் பண்னோம்...!!!!! எங்கே அவள் எனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற பயத்தில் தான் இந்த வேஷத்தில் வந்து தாலி கட்டினேன்...!!!! அதுக்கு காரணம் இருக்கு.... இந்த கல்யாணத்துக்கு என்ன வரவிடாமல் தடுக்க முயற்சி பண்ணுணாங்க.....!!! அதனால்தான் இந்த வேஷம் போட வேண்டியதாயிடுச்சு என்று கூறினான்.....!!!!



அவன் கூறிய எதையும் காதில் வாங்காமல் விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியேறினான் வர்மா.....!!!!


ஆது இது எல்லாத்துக்கும் காரணம் இதோ நிற்கிறாங்களே என்ன பெத்தவுங்க!!!!ச்சீ இவுங்க மகள்னு அந்த வார்த்தையை சொல்ல கூட அருவருப்பா இருக்கு .....!!!இவங்க தான் காரணம்!!!! இவங்கதான் மாயாவ பத்தி அத்தான்கிட்ட தப்பு தப்பா சொல்லிருக்காங்க!!!!! எனக்கு என்னமோ இந்த நியூஸ் கூட இவங்க தான் பரப்பிவிட்டு இருக்காங்கன்னு தோணுது..... என்று கூறிய அடுத்த நொடி சத்யபிரகாஷ் கை நிர்மலாவின் கன்னத்தில் இடியென இறங்கியது.....!!!! அவளை நீ பார்த்துப்ப என்கிற தைரியத்தில் தானே உன்ன இங்க வர வச்சேன்...!!! ஆனா நீ என்ன வேலை பார்த்திருக்க என்று மாறி மாறி அவர் கன்னத்தில் அறைந்தார் ....!!!!!அங்கு நின்று கொண்டிருந்த ருத்ரா தன் பங்குக்கு நாலு சாத்து சாத்தினான்...!!?! அதை பார்த்து பயந்து போன ராமசந்திரன் அந்த செய்தியை பரப்பியது தாங்கள்தான் என்று ஒத்துக்கொண்டார்.....!!!!!

ஒரு கணவன் மனைவிய தப்பா போட்டோ எடுத்து அத தப்பா பரப்பி விட்டதுக்காக இவ மேல கேஸ் போட்டு உள்ள தள்ளு ருத்ரா என்று கோபமாக அவர் கூற ...!!!!

ஐயோ !!!அண்ணா சத்தியமா அந்த போட்டோ நான் எடுக்கல ....!!!! அந்த போட்டோல இருக்கிறது வர்மா என்று கூட எனக்கு தெரியாது!!!!! அந்த போட்டோ வர்மா மொபைல் தான் இருந்தது என்று கூற..... அவர் அவளை பார்த்த பார்வையில் சர்வமும் அடங்கி போய் நின்றாள் நிர்மலா....!!!!


அடுத்த அரை மணிநேரத்தில் சத்யபிரகாஷ் கூறியதை நிறைவேற்றினான் ருத்ரா....!!!


வர்மா நேரே மாயாவின் வீட்டை நோக்கிச் சென்றான்...!!!! அங்கே பத்திரிக்கைக்காரர்கள் சூழ்ந்து நின்றனர்....!!! அங்கே அவன் வருவதைக் கண்டு.... சார் இன்னிக்கு உங்களுக்கு கல்யாணம் ....அந்த கல்யாணம் கடைசி நேரத்துல நின்னதுக்கான காரணம் என்ன...!!!!!



சார் இப்போ நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க...!!!! உங்களுக்கு மாயாவுக்கும் என்ன சம்பந்தம் ...!!!என்று கேள்வி மேல் கேள்வி கேட்க..... அவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்க கூறியவன் தன் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான் .....!!!!!




உங்க எல்லாருக்கும் நான் இப்போ ஒரு உண்மையை சொல்ல போறேன்...... என்னோட கல்யாணம் இன்னைக்கு நடக்கல .....அதுக்கு காரணம் மாயா...!!!



நீங்க என்ன சொல்றீங்க சார்.....உங்க கல்யாணம் நடக்காததுக்கும் மாயாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு சார்...!!!!


சம்மந்தம் இருக்கு .....
ஏன்னா!!!!! மாயா என்னோட வைஃப் என்றான் ......!!!!!



அவன் கூறியதைக் கேட்டு அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியாயினர் ......!!!!!


சார் நீங்க சொல்றது உண்மையா!!??? அப்புறம் எதுக்கு நீங்க இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க இருந்தீங்க!!!!!



நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாள் சேர்ந்து வாழலயா!?!! என்று கேள்வி மேல் கேள்வி கேட்க!!!!!


ஒருவன் முன்வந்து சார்!!! மாயா மேடம் உங்க வைஃப் னா அந்த போட்டோல இருக்கற அந்த நபர் நீங்க தானா!!!! என்று கேட்க ..... !!!வர்மா ஆமாம் என்று தலையாட்டினான்.....!!! அந்த போட்டோவில் இருக்கும் நபர் நான்தான்....!!!! ஒரு மனைவி கூட ஒரு புருஷன் ஒன்னா இருக்கிறது தப்பா!!!!!! ஒரு கணவன் மனைவிகுள்ள உள்ள அந்தரங்கத்த பத்தி இப்படி தப்பா பேசுற உங்க பத்திரிக்கை மீதும் சேனல் மீதும் நான் கம்ப்ளைண்ட் கொடுத்தா என்னாகும் தெரியுமா!!!! என்று கேள்வி எழுப்ப....!!!!


காலையிலிருந்து கால் வலிக்க நின்று கொண்டிருந்தவர்களுக்கு அவன் கூறிய வார்த்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது....!!!!

அவர்கள் அனைவரும் அவனிடம் சாரி கேட்க.....

இனிமேயாவது ஒரு விசயம் பத்தி பேசும் போது அதபத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு பேசுங்க .....யாரோ ஏதோ கொடுக்குறாங்க அப்படின்னு அதப்பத்தி இல்லாத பொல்லாத பேசுறது முதல்ல நிப்பாட்டுங்க என்று கூறினான்....!!!



அவன் கூறியதை கூறிய கேட்டு அங்கு நின்ற அனைவரும் தலைகுனிந்தனர்.....!!!!


மக்கள் யாரும் தப்பு பண்ணிட்டா சுட்டிக்காட்ட பிரஷ்காரங்களும் சேனல்களிலும் இருக்கீங்க...!!! ஆனா அதே தப்பை நீங்க பண்ணினா உங்களை யார் கேட்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே கிடைக்கிற நியூஸ என்ன ஏதுன்னு தெரியாம பப்ளிஷ் பண்றீங்க என்று கோபமாய் கத்தினான்...!!!! அவன் கூறியதை கேட்டு அனைவரும் அவனிடம் சாரி கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்....!!!


வர்மா மாயாவை தேடிக்கொண்டு அவளது அறையை நோக்கி ஓடினான்....!!! அங்கே மாயா கண்களிலிருந்து கண்ணீர் வழியே உடல் மறத்து போய்,, முகத்தில் சோகமே உருவாய் ,,மனதில் வெறுமை சூழ அமர்ந்து இருந்தாள்.....!!!


வர்மா இதுவரை அவளை இப்படி பார்த்ததில்லை....!!!!மற்றவர்கள் முன் நேருக்கு நேர் நின்று எதிர்க கூடியவளாக தான் பார்த்திருக்கிறான்....!!!! ஆனால் இன்று வாழ்க்கையே இழந்ததுபோல் அமர்ந்திருப்பதை கண்டு அவனது நெஞ்சம் கதறி துடித்தது .....!!!!



அவள் மேல் ஏற்பட்டுள்ள தன் ஒட்டுமொத்த அன்பையும் அந்த குரலில் கொண்டுவந்து தா....ரா என்று ஓடி அவள் காலுக்கு அடியில் அமர்ந்தவன்.... என்ன மன்னிச்சிடு டி.....!!!! சத்தியமா எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லாமல் தான் மறந்துட்டேன்....!!!!! ஆனா உன்கிட்ட மன்னிப்பு கேட்குற தகுதி கூட எனக்கு இல்லை ...!!!!!யாரு என்ன சொல்லியிருந்தாலும் அதை நம்பி இருக்கக் கூடாது என்று கதறினான்....!!!


அவனது கண்ணீர் அவளது பாதத்தை நனைத்தது....!!!! மாயா எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் ...!!!!



பேசுடி !!!!என் கிட்ட ஒரு வார்த்தை பேசு ...!!!எனக்கு நீ என்ன தண்டனை வேணாலும் குடு....!!!! நான் மனசார ஏத்துகிறேன்..... ஆனா என் கூட பேசாமல் மட்டும் இருக்காதே...!!!என்ன திட்டியாவது எதனா பேசுடி...!!!!!!ஏன்டா இப்படி பண்ணேன்னு நாலு அடியாவது அடி டி என்று அவளது கையை பிடித்து தன் கண்ணத்தில் அறைந்து கொண்டான்...!!!இப்படி அமைதியா இருந்து என்ன கொல்லாதடி !!!!!என்று கதறினான் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னன்...எதிரிகளை தன் ஒற்றை பார்வையால் தூரே நிறுத்த செய்பவன்...!!!எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடைத்து விட்டு வெற்றியை நோக்கி செல்பவன்..இன்று வாழ்க்கையில் தோற்று போய் தன் மனைவியின் காலில் விழுந்து கதறி கொண்டிருந்தான்....!!!!


மாயா எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தாள்....!!!!


அப்போ பேச மாட்டியா!!!எங்கூட பேச மாட்டியா!!!!என்ன மன்னிக்கவே மாட்டியா!!!!என்று ஏக்கமாய் கேட்டவனை கண்சிமிட்டாது பார்த்து கொண்டிருந்தாள் மாயா...!!!!!



வேண்டாம் நீ என்னை மன்னிக்க வேண்டாம் ..!!!!எங்கூட பேச வேணாம்....!!!!உன்ன எப்படி என் வழிக்கு கொண்டு வரதுனு எனக்கு தெரியும்..!!!!நீயா வந்து என்கூட பேசுவ ...!!!பேச வக்கிறேன்...!!!!!உன் கோபம் ..பிடிவாதம் எல்லாத்தையும் விட்டுட்டு நீயா எங்கிட்ட வந்து பேசுவ.....!!!!அப்போ தெரியும்டி இந்த சந்திர பிரதாப் வர்மா யாருனு...!!!!என்று கூறிவிட்டு சென்றவன் என்ன நினைத்தானோ தீடீரென திரும்பி அவளுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளை தலைக்குள் விரலை விட்டு அப்போ நான் இவ்வளவு கெஞ்சியும் நீ பேசமாட்டலா!!!!அவ்ளோ திமிரா உனக்கு...!!!பழைய வர்மாவ பாக்கனுனு ஆசைபடுறியா!!!!என்றவன் சட்டென அவள் இதழில் தன் இதழை பதித்து வன்மையாக அதனை கடித்தான்....!!!அவளது இதழ் தேனை ருசித்தவனால் அவளிடமிருந்து தனது இதழை பிரிக்க மனமில்லாது அதிலே புதைந்து போனான்....!!!!வெகு வருடங்களுக்கு பிறகு தன் கணவனிடமிருந்து கிடைக்கும் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் மாயா...!!! அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவனது தலையில் நனைத்தது...!!!! சிறிது நேரத்திற்கு பின்பு தான் அவனுக்கு உறைத்தது அவள் எந்தவித எதிர்ப்பும் இன்றி இருப்பதை...!!!சட்டென அவனுக்கு ஏதோ சரியில்லை என தோன அவளது தலையிலிருந்து கை எடுத்தவன் அதிர்ந்து போனான்...!!!!!


அவனது கை முழுவதும் ஒரே இரத்தம்....!!!தாரா என்னாச்சுடி என்று பதறியவன் அவளை அணைத்து அவளது பின்னந்தலையை பார்க்க அங்கிருந்து இரத்தம் வலிந்து அவளது பின்புறம் முழுவதும் நனைந்திருந்தது....!!!


அய்யோ!!!என்னாச்சுடி என்று அவளை உலுக்கும் போதே மாயாவின் தலை கீழே சரிந்து விழுந்தது....!!!!!


ருத்ரா சத்ய பிரகாஷ் அம்ருதா ஆதவன் அனைவரும் டீவியில் சென்று கொண்டிருந்த செய்தியை பார்த்து நிம்மதி அடைந்தனர்...!!!



அதில் பிரபல தொழிலதிபர் மாயா வழக்கில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.....!!!!மாயா தன் மனைவி என்றும் அவருடன் இருப்பது தான் தான் என்றும் தொழிலதிபர் சந்திர பிரதாப் வர்மா கூறியுள்ளார்....!!!மேலும் இவர்களை பற்றி தப்பான புகைபடம் எடுத்து அதை வெளியிட்டத்திற்காக டாக்டர் நிர்மலாவும் அவரது கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்....!!!மேலும் டாக்டர் நிர்மலா பிரதாப் வர்மாவின் அத்தை என்பதும் குறிப்பிட தக்கது...அவருடைய மகளை தான் வர்மா திருமணம் செய்து கொள்வதாக இருந்தது...!!!தனது மகளின் திருமணத்தில் மாயாவால் எந்த பிரச்சனையும் வர கூடாது என்பதற்காக தான் அவர் இதை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது....!!!!! என்று செய்தி ஒடிக் கொண்டிருந்தது....!!!!

அதனை கண்ட அனைவர் மனதிலும் நிம்மதி வந்து போனது...!!!!


டேய் ஆதவா!!!!நீ எப்போட அம்மு கழுத்துல தாலி கட்டுன என்று சிரித்து கொண்டே கேட்டார் சத்யபிரகாஷ்....!!!!


அப்பா நீங்க வர்மானு கத்துன டைம்ல எல்லாரும் உங்களயே பாத்தாங்களா !!!அந்த டைம்ல கட்டிட்டேன்....!!!!நீங்க கொஞ்சம் லேட்டா வந்துருந்தாலும் என் கதி அதோ கதி தான் என்றான்...!!!


அவன் கூறிய விதத்தில் அனைவருமே சிரித்து விட்டனர்...!!!!


அம்ருதா ஒடி சென்று சத்யபிரகாஷை அணைத்து கொண்டாள்....!!!! உங்களை மறுபடியும் பாப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல மாமா...!!! என்று கண்ணீர் சிந்தினாள்...!!!


அவளது தலையை மெதுவாய் வருடியவர் நான் நல்லா இருக்கேன் மாமா எனக்கு ஒன்னும் இல்லை என்று ஆறுதல் கூறினார்....!!!!


அப்பா அம்மா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் மாமா என்று கூறினாள்...!!!!

மன்னிப்பெல்லாம் எதுக்கு மா என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார்....!!!!


நிர்மலா போன்ற ஒரு நம்பிக்கை துரோகிக்கு இப்படி ஒரு பெண்ணா!!!! என்று ருத்ரா அசந்து போனான்...!!!!


ஆது எனக்கு ஒரு சந்தேகம் என்றாள்...!!!



என்னம்மா உன் சந்தேகம் ...!!!இந்த புரோகிதர் காஸ்டியூம் எல்லாம் எங்க வாங்குனேன்னா!!!!


ஐயோ!!!?! அது இல்லை ...எங்க கூடவே இருந்த மாயாவை எங்க அம்மாவுக்கே அடையாளம் தெரியாதப்போ நீ எப்படி கண்டுபிடிச்சே...!!! என்றாள்.....!!!



சத்யபிரகாஷ் ருத்ரா கூட அவனது பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்....!!!


அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை....!!!! அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மாயா வந்து என்னை பார்த்தாள் ...!!!!


நான் முதல்ல அவ யாருன்னு தெரியாம குழம்பி போனேன்...!!!!! அப்போதுதான் அவ மாயானு சொல்லி அவளோட வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் சொன்னா....!!!! உங்க அப்பா அம்மாவ பத்தி கூட சொன்னா...!!!!


அவ சொன்னத என்னால நம்பவே முடியல....!!!!!! வர்மாவையும் அவனோட சொத்தையும் பாதுகாக்க நான் அவன் கூடவே இருக்கணும்னு சொன்னா...!!!!


அதனாலதான் நான் வர்மாமவின் ஆபிஸிலேயே வேலைக்கு சேர்ந்தேன்....!!!! என்று கூறினான் ...!!!


அம்மு உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா...!!!!! மாயாவோட அம்மா யாருன்னு தெரியுமா...!!!! என்று கேட்க.....




அவர்கள் மூவரும் தெரியாது என்று கூறினர் ...!!!!



வேற யாரும் இல்ல நிர்மலா தான் மாயாவோட அம்மா என்று கூற அதைக்கேட்டு மூவரும் ஸ்தம்பித்து நின்றனர்....!!!! அது மட்டும் இல்ல மாயா அப்பாவை கொன்றது நிர்மலாதான்...!!!!! எச்ஐவி இன்ஜெக்ஷன் போட்டு அவரைக் கொண்ணுருக்கா...!!!!! வர்மா காதலிக்க பொண்ண ஏற்பாடு பண்ணதும் நிர்மலா தான்.... என்று கூறிக் கொண்டே போக அதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் நிர்மலாவை கண்டம் துண்டமாய் வெட்டி கடலில் வீச வேண்டும் போல் இருந்தது....!!!!!



அதை கேட்டு அம்ருதா தான் கதறி துடித்தாள்...!!!!இவ்வளவு கேவலமானவளுக்கு நான் பொண்ணா பொறந்துட்டேனே என்று கதறி துடித்தாள்....!!!!



அப்போது ஆதவனின் மொபைல் சினுங்க எடுத்து காதில் வைத்தவன் எதிரே கூறப்பட்ட செய்தியில் அதிர்ச்சியாகி போனான்.. !!!! ஆது என்ன ஆச்சு என்று அவள் கேட்க மாயாவுக்கு தலையில பயங்கர அடியாம்...!!!!வர்மா தான் போன் பண்ணான்...!!!!அவளை ஹாஸ்பிடல் சேத்துருக்கானாம் என்று கூறி முடிக்கும் முன்பே நால்வரும் அந்த மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்....!!!!


மாயாவை உள்ளே அழைத்து சென்று மூன்று மணி நேரம் ஆகி இருந்தது....!!!! வர்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கூட துடைக்காமல் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்....!!!!!



அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர்...!!!! அவர்களும் அதே மனநிலையில்தான் இருந்தனர்..!!!!!



மாயாவிற்கு தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது....!!!!! அதனால் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர்...!!!!


அதைக் கேட்டு அனைவரும் பயத்துடன் அமர்ந்திருந்தனர்...!!!! அப்போது அவர்களை நோக்கி ஒரு மருத்துவர் வர... அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்...!!!!



இங்கே மாயா ரிலேட்டிவ் யாராவது இருக்கீங்களா...!!! என்று கேட்க அனைவரும் அவரின் முன்பு நின்றனர்...!!!!



டாக்டர் அவ எப்படி இருக்கா....!!! பயப்படுவதற்கு ஒன்னும் இல்லையே!!! என்று திக்கி திணறி கேட்டான் வர்மா....!!!



நீங்க ...!!!!




நான் வர்மா...!!!!! மாயாவோட ஹஸ்பண்ட்...!!!??



சாரி மிஸ்டர் வர்மா...!!!! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணியும் மாயாவை எங்களால காப்பாத்த முடியல என்று கூறி அங்கிருந்தவர்களின் தலையில் இடியை இறக்கினார்....!!!!!



அவர் கூறியதை கேட்டு அவர்கள் அனைவரும் உயிரற்ற ஜடமாய் நின்றனர்...!!!!!!
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :15


மாயா இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாய் நின்றனர் ...!!!!வர்மாவின் கால்கள் நின்ற இடத்திலிருந்து நகர மறுத்தன....!!!! பிரம்மை பிடித்தவன் போல் நின்றிருந்தான்..... டாக்டர் கூறிய செய்தியை ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தனர் அனைவரும்......!!!



பிரகாஷ் வாப்பா நாம போய் பார்க்கலாம் என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு வர்மாவை அழைக்க .....


அப்பா அவளுக்கு ஒன்னும் ஆகாது...!!!!! அவள் உயிரோட தான் இருக்கா....!!!என் மனசு அப்படி தான் சொல்லது...!!!என்று அவரை கட்டி கொண்டு தான் ஒரு ஆண் மகன் என்பதையும் மறந்து கண்ணீர் விட்டான்....!!!!!


மற்ற மூவரும் அதனை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்தனர்...!!!



இதோ பாரு சந்திரா...இன்பத்தை எப்படி நாம சந்தோஷமா ஏத்துகிறமோ அதே போல கஷ்டத்தையும் தாங்கிக்கனும்....!!!!வாப்பா நாம போய் அவள பாக்கலாம் என்று அழைக்க....!!!அவன் போக மறுத்தான்....!!!

அப்பா அவள் இன்னும் என்னை மன்னிக்கவே இல்லையே!!!! நான் செஞ்ச தப்புக்கு இன்னும் தண்டனை கொடுக்க கூட இல்லையே.. !!!! அதுக்குள்ள இப்படி.... என்று மேலே கூற முடியாமல் கதறினான்....!!!!


சத்திய பிரகாஷ் அவனை அணைத்து ஆறுதல் படுத்த முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை....!!!!


ஒருவாறு அனைவரும் தங்களை சமன் செய்து கொண்டு அந்த அறையை நோக்கி சென்றனர்....!!!வர்மா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுடைய இதய துடிப்பு அவனுக்கே கேட்டது....!!!!ருத்ராவால் அந்த காட்சியை காண முடியாது என்று அவன் உள்ளே செல்லவே இல்லை...!!!

தவித்து நிற்கும் ஆதவனை எப்படி சமாதானபடுத்துவது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள் அம்ருதா...!!!!


அங்கே ஸ்ட்ரச்சரில் மூடி வைக்கப் பட்டிருந்த அந்த உடலை கைகள் நடுங்க ..முகம் வியர்க்க .. மெதுவாய் தலையை மூடியிருந்த பகுதியை விலக்க முயன்றவனின் இதயம் வேகமாய் துடித்தது......!!!

அந்த துணியை விலக்கிய அடுத்த நிமிடம் அ..ப்....பா..பா..பா என்று அலறியே விட்டான் வர்மா.....!!!!


அப்பா இது அவ இல்லப்பா..!!!வேற யாரோ!!!! என்று துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் கூறினான்....!!!



அவன் கூறியதை கேட்டு அவர்களும் அங்கிருந்த உருவத்தை பார்க்க அது மாயா இல்லை என்று தெரிந்தது....!!!!


இப்போது தான் அவர்களுக்கு நிம்மதியாய் மூச்சுக் கூட விட முடிந்தது...!!!


அப்போது ...ஐயோ மாயாவதி என்ன விட்டுட்டு போயிட்டியே என்று கதறிக்கொண்டு ஒருவர் உள்ளே நுழைய அவர்களுக்கு புரிந்து போனது இது அவருடைய மனைவிதான் என்று....!!!!



டாக்டர் மாயாவதியை தான் மாயா என்று கேட்டு இருக்கிறார் என்பதும் புரிய ,,தாங்கள் தான் தவறாக நினைத்து விட்டோம் என்பது புரிய அவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.... !!!!ஆதவன் அங்கு அமர்ந்திருந்த ருத்ராவிடம் கூற அவன் வர்மாவை கட்டிக்கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்....!!!!


அப்போது ஒரு மருத்துவர் அங்கு வர மிஸ்டர் வர்மா உங்க வைஃப் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிடாங்க...!!!! இனிமே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ....!!! அவுங்க இப்போ மயக்கத்துல தான் இருக்காங்க...!!!மயக்கம் தெளிஞ்சதும் நீங்க போய் பாக்கலாம் என்று கூற அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டது...!!!!


மாயா எப்போது விழிப்பாள் என்று அவளுக்கு அருகிலேயே அவளது கையை பிடித்து கொண்டு ஒரு வித தவிப்போடு அமர்ந்திருந்தான் வர்மா....!!!


அப்போது அவனது கையில் ஏதோ அசைவு தெரிய அதை பார்த்தவன் முகம் விசிக்க மாயாவை நோக்கினான்....!!!அவள் மெதுவாய் தன் இமைகளை பிரித்தாள்...!!!!

வர்மா கண்களிலிருந்து கண்ணீர் வழிய பே..பி என்று அவளை அணைத்து கொண்டான்....!!!!


ரொம்ப பயந்துட்டேன் டி!!!! என் உயிரே என்ன விட்டுப் போன மாதிரி இருக்கு டி என்று அவளை அணைத்து கதறினான்...!!! அவனது கண்ணீர் அவளது முகத்தில் பட்டு தெறித்தது....!!!!



மாயா அங்கு நின்று கொண்டிருந்த அமிர்தாவை பார்த்தாள்....!!!! அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிற்றை பார்த்து அவளது முகம் வேதனையில் சுருங்கியது....!!!!! அதனை புரிந்து கொண்ட ஆதவன் அமிர்தாவின் பக்கத்தில் சென்று அவளது கையை இறுக பற்றி கொண்டு மாயா எனக்கும் அமிர்தாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்று கூறினான்....!!!!!



மாயா அவன் கூறியதை கேட்டு தன் நெற்றியை சுருக்கினாள் .....!!!!!ஆமா மாயா நாங்க ரெண்டு பேரும் அஞ்சு வருஷமா லவ் பண்னோம்...!!! உன்கிட்ட சொல்லாதது என்னோட தப்பு தான் என்ன மன்னிச்சிடு என்றான்....!!!!அவன் கூறியதை கேட்டு மாயா தன் முகத்தை திருப்பி கொண்டாள்...!!!!


அ...க்....கா...!!!!என்று கதறி கொண்டே அம்ருதா மாயாவின் காலை பிடித்து கொண்டு கதறினாள்....!!!அவுங்க செஞ்ச தப்புக்கு என்ன தண்டிச்சிடாதீங்க...!!!!!என்ன உங்க தங்கையா ஏத்துக்கோங்க என்று கெஞ்சினாள்....!!!!மாயா அவளை தன் அருகே அழைக்க அம்ருதா மாயாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.....!!!!மாயா அவளது தலையை பரிவாய் வருடினாள்....!!!அதை கண்டு அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயினர்...!!!!


பிரகாஷ் எப்போதும் போல் அவளது தலையை வருடி விட்டவர் என்ன ரொம்ப பயமுறுத்திட்ட என்றார்..!!!அவரை பார்த்து மென்மையாய் புன்னகைத்தாள்...!!!!


மாயா அப்போது தான் அங்கு நின்று கொண்டிருந்த ருத்ராவை பார்த்து தன் வாயை திறந்து . ....ரு...த்..ரா என்று அழைத்தாள்...தலையில் அடிபட்டதால் அவளால் அதிகமாக பேச முடியவில்லை....!!!!!


அவள் அழைத்த அடுத்த நொடி அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் ருத்ரா கண்களிலிருந்து வழிந்தது.... இதுவரை அவனை அப்படி பார்த்திராத மாயா அவனை தன் கையால் அழைக்க அடுத்த நொடி மாயாவை அணைத்திருந்தான் ருத்ரா......!!!!!


என்ன அழ வக்கிறதே உனக்கு வேலையா போச்சுடி...!!??!என்றவன் யாருடி உன்னை இப்படி அடிச்சா..!!!! என்று கேட்டுக் கொண்டே அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க அதை பார்த்துக்கொண்டிருந்த வர்மாவின் வயிறு கபகபவென பொறாமையில் பொங்க....அவனது காதில் இருந்து புகை வந்தது...!!!



அப்போது அங்கு வந்த டாக்டர் அவளை செக்- செய்து விட்டு இனிமே எந்த ப்ராப்ளமும் இல்ல ....!!!! இங்கேயே ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறமாக கூட்டிட்டு போங்க .....!!!யாராவது ஒருத்தர் இங்க இருந்தா போதும் என்று கூறிவிட்டு சென்றார்.....!!!


அப்பா நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க ...!!!நான் இங்கயே இருக்கேன் என்றான் வர்மா...!!!!!


இல்ல வர்மா நீ போ..!!!நான் இருக்கேன்...இது ருத்ரா...!!!


வர்மா அவனை முறைத்து கொண்டே என் பொண்டாட்டிய எனக்கு பாத்துக்க தெரியும் என்றான்...!!!!


நீ பொண்டாட்டிய பார்த்துக்கிட்ட லட்சணம் தான் எனக்கு தெரியுமே...!!!! என்றான் நக்கலாய்...!!!!



வர்மா ருத்ராவை முறைக்க.....!!!!



நீங்க ரெண்டு பேருமே பாத்துக்க வேண்டாம்....!!! நானே பாத்துக்கிறேன் என்றான் இடையில் ஆதவன்....!!!!


என்ன சுத்தி எல்லாரும் வில்லன்களா இருக்காங்க என்று மனதில் நினைத்துக்கொண்டே,,, வேண்டாம் ஆதவா ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குமே!!!!மாயா இப்படி இருக்கும் போது நீதான ஆபீஸ பாத்துக்கனும்....!!!!அதனால நீ ஆபிஸ பாத்துக்க நான் என் பொண்டாட்டிய பாத்துக்கிறேன் என்றான் வர்மா...!!!!பொண்டாட்டி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து...!!!!



இல்ல நீ போ நான் பாத்துக்கறேன்....!!!!


நீ போ..... இல்ல .....நீ போடா என்று மூவரும் சண்டையிட்டு கொள்ள...!!!

ஐயோ ...!!!!!யாருமே இருக்க வேண்டாம்.... அக்காவை நான் பார்த்துக்குறேன்..... நீங்க எல்லாம் கிளம்புங்க என்று அமிர்தா கூற.......!!!அனைவரும் சம்மதித்து அங்கிருந்து சென்றனர்.....!!!!


வர்மா அடுத்து வந்தது அவனின் அறைக்கு தான்...!!!மாயாவின் இந்த நிலைமைக்கு காரணம் யாரா இருக்கும் என யோசித்தவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை....!!!ஆனால் நிர்மலாவை நினைத்து அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன...!!!! அங்கு மாட்டப்பட்டிருந்த அவளது போட்டோவைப் பார்த்து கோபம் அதிகமாகி அதனை உடைத்து எறிந்தான்....!!!!! அந்த அறை முழுவதும் நிர்மலா நின்று கொண்டு அவனை கேலியாய் பார்த்து சிரிப்பது போல் இருக்க.... அங்கேயிருந்து அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தான்...!!! அந்த அறை முழுவதும் பொருட்கள் சிதறி கிடக்க ...அதற்கு நடுவில் ஒரு டைரியும் கிடந்தது....!!!!அதனை எடுத்தவன் யாரோட டைரி இது என யோசித்து கொண்டே அதனை பிரித்து பார்க்க...அவனுக்கு புரிந்தது இது சுதந்திர எழுதிய டைரி தான் என்று....!!!!

அடச்சே...!!!! இத்தனை வருஷமா இது இங்கதான் இருந்து இருக்கு.....!! அது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று தன்னையே நொந்து கொண்டு அவன் அதன் பக்கத்தை புரட்டி படிக்க ஆரம்பித்தான்....!!!!அதனை படிக்க படிக்க அவனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டி அதனை நனைத்தது....!!!!சிறு வயதிலிருந்தே கஷ்டம் மட்டுமே அனுபதவளை நாமும் கஷ்டபடுத்தி விட்டோமே...!!!!என்று நினைக்க அவன் மனம் வேதனையில் துடித்தது....!!!!அவளது அப்பாவின் நிலையை நினைத்து அவர் மேல் இரக்கம் சுரக்க....விட்டு சென்ற அவள் அன்னையை நினைத்து கோபம் கட்டுகடங்காமல் வந்தது...!!!! அதன்பிறகு கிடைத்த ஆதவனின் நட்பும் புரிந்தது...!!!! மேலும் படிக்க ஆரம்பித்தவன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்...!!!


அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.... !!!என்னை பெற்றவளை வேறு ஒருவரின் மனைவியாகவும்,,,வேறு குழந்தைக்கு தாயாகவும் கண்ட நாள்....!!!!சிறு வயதில் புரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்த நாள்...!!!! இதுவரை மிஸஸ் நிர்மலா ரத்னாகர் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு நீ நினைப்பது தவறு என்று உணர்த்தினார் அங்கு இருந்த மிஸஸ் நிர்மலா ராமச்சந்திரன்...!!!!


அந்தப் பக்கத்தை படிக்கும் போது வர்மா என்ன மனநிலையில் இருந்தான் என்று அவனுக்கே தெரியாது...!!!! அவனால் சிறிதும் இதனை நம்ப முடியவில்லை...!!! கடவுளே !!!!இப்படியெல்லாம் கூட ஒருவருடைய வாழ்வில் நடக்குமா...!!!! என்று அதிர்ந்து போனான்....!!! மேலும் ஆர்வம் அதிகமாகி அடுத்த பக்கத்தை புரட்ட அதில் நிர்மலாவைப் பற்றி எழுதியிருந்ததை படிக்க படிக்க அவனது கண்கள் சிவந்து முகம் செந்தனழாய் ஜொலித்தது....!!! பிறகு அதை முழுமையாக படித்து முடித்தவனுக்கு நிர்மலாவை நினைத்து அருவருப்பாய் இருந்தது...!!! பிறகு ஒரு முடிவு எடுத்தவளாய் அங்கிருந்து சென்றவன் நிர்மலாவின் முன்பு நின்றாள்......!!!!




உன்ன எவ்வளவு நம்பினேன்...!!!எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ண உன்னால எப்படி முடிஞ்சது...!!!!நான் அம்மானு கூப்டத விட அத்தைனு தான அதிகம் கூப்டேன்....!!!ஆனா நீ...!!!!மனசுல ஒன்ன வச்சிகிட்டு வெளில நடிச்சிருக்கல...!!!உனக்கு சொத்து தான் முக்கியமுனு சொல்லியிருந்தா எல்லாத்தையும் குடுத்துருப்பேனே...!!!!பாசமா இருக்குற மாதிரி நடிச்சு எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே...!!!!!என்று வேதனையோடு கூறினான் தன் எதிரே நிற்கும் நிர்மலாவை பார்த்து....!!!!



வர்மா என்ன மன்னிச்சி.....!!!!



போதும் நிறுத்து இதுக்கு மேலயும் உன் பேச்ச கேக்க நான் முட்டாள் இல்லை....!!!!


அய்யோ .. !!!வர்மா அப்படி சொல்லாத...!!!


என் பேர சொல்ல கூட உனக்கு உரிமை இல்ல...!!!! நீயும் ஒரு பொண்ணு தானே...!!!! இன்னொரு பொண்ண எப்படி உன்னால கஷ்டப் படுத்த முடிஞ்சது...!!!!!அய்யோ..!!! தெரியாம சொல்லிட்டேன்....!!!! உன்னோட சந்தோஷத்துக்காக மத்தவங்கள கொல்ல கூட தயங்க மாட்டியே..!!! என்றவன் எப்படி உன்னால முடிஞ்சது...!!!!! உன்னை உயிராய் காதலித்ததை தவிர அந்த மனுஷன் வேற என்ன பண்ணார்...!!!!! அவருக்கு போய் இப்படி ஒரு கொடுமை செஞ்சி இருக்கியே,,...!!!! என்று கோபமாய் பல்லைக் கடிக்க.....!!!


வர்மா நீ ....நீ என்னப்பா சொல்ற..!!!! எனக்கு புரியல..!!!!!



புரியலையா...!!! இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா...!!!



"................."



ரத்னாகர் ஞாபகம் இருக்கா...!!!!



அந்த பேரை கேட்டதும் நிர்மலா அதிர்ந்து விட்டாள்....!!! அவர் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு விரிந்திருந்தது....!!!!



உனக்கு எப்படி தெ... தெ...
..தெரியும்....!!!!என்றார் அதிர்ச்சியாய்...!!!!




மாமனாரை மருமகனுக்கு தெரியாம இருக்குமா...!!?!


நீ....நீ.... என்ன சொல்ற...!!!!என்றார் எச்சிலை விழுங்கியபடி...!!!!
 
Top