பானுரதி துரைராஜசிங்கம்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28
கூண்டுக்குள் இருந்த சிறு சிறு குருவிகள் கூடக் கீச்சுடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி இருந்தன.
திடீரென ஓசைகள் எல்லாம் மட்டுப் பட்டது போல எங்குமே ஒரே நிசப்தம் நிலவியது.
ஏஞ்சலினாவின் அணைப்பில் இருந்து மெல்ல விலகிய காயத்ரி ஏஞ்சலினாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“இந்த வாழ்க்கையே ரொம்ப விசித்திரமானது காயு... எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை… எது எப்படியோ உன் ஆதியோடு உன் வாழ்க்கை பிணைக்கப் பட்டு விட்டது அது போதும்…”
“நான் இதைக் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை ஏஞ்சல்… அவரை முதல் முதல் பார்த்தது, பேசியது,பழகியது,அவர் தன் காதலை சொல்லியது, நான் வேறொருவரை திருமணம் செய்தது, ஐந்து மாதத்திலேயே என் திருமண வாழ்வு முடிந்து போனது, அதன் பிறகு ஆதியைப் பார்த்தது, அவர் என் கழுத்தில் தாலி கட்டியது, அவரை நான் தவறாக நினைத்தது எல்லாமே கனவு போல இருக்கிறது… இதெல்லாம் நிஜமாகவே எனது வாழ்வில் நடந்தவை தானா? என்று தோன்றுகிறது ஏஞ்சல்”
“உன் வாழ்க்கையிலும் வசந்தம் வீசத் தொடங்கி விட்டது என்று சொல் காயு”
“நீ வேறு ஏஞ்சல்… இப்போது தான் புயலே வீசத் தொடங்கி இருக்கிறது…”
“ஏய் காயு… ஏன் அப்படி சொல்கிறாய்?”
“ஆதியின் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருக்கிறது ஏஞ்சல்… நான் செய்து வைத்த வேலை அப்படி… என்னைப் பார்த்தாலே அவர் முகம் கடுகடுவென்று மாறுகிறது தெரியுமா?”
“எல்லாம் சீக்கிரமே சரியாகும் காயு… அப்புறம் ஒரு விஷயம்… அனுபல்லவி இறந்து விட்டாள் என்று நீங்கள் நம்பத் தொடங்கிய பின்னர் இங்கே இந்த வீட்டில் அவளைப் பார்த்ததும் என்ன தோன்றியது உங்களுக்கு”
“ஏஞ்சல்… அதை வார்த்தைக்குள் கொண்டு வர முடியாது தெரியுமா?”
என்ற காயத்ரியின் கண்கள் மீண்டும் கலங்கின.
அருகில் இருவரும் பேசுவதைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரி வாய் விட்டே அழத் தொடங்கினாள்.
அதே நேரத்தில் மெல்ல நடந்து வந்த அனுபல்லவி, காயத்ரி அருகே அமர்ந்து அவளது கண்களை மெல்லத் துடைத்து விட்டு, அவள் தோளோடு சாய்ந்து கொண்டாள்.
அதைப் பார்த்த கஸ்தூரி எழுந்து ஓடி வந்து அனுபல்லவியின் முன்னால் தனது முகத்தைக் காட்டவே, அவளது முகத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்த அனுவோ காயத்ரியை அண்ணாந்து பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட காயத்ரி, சம்மதம் சொல்வது போல மெல்லத் தலையசைத்தாள்.
உடனே அனுபல்லவி, கஸ்தூரியின் கண்ணீரையும் துடைத்து விட்டாள்.
காயத்ரியைத் தனியே அழைத்து வந்த ஏஞ்சலினா தோட்டத்தில் போடப் பட்டிருந்த மரக்கதிரையில் அமர்ந்து கொண்டு,
“காயு… அனுவுடையதும் உன்னுடையதும் இந்த அழகான ஆழமான நட்பைப் பார்க்கின்ற போது எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது தெரியுமா?”
என்றபடி தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.
தன்னை அணைத்தவளை மெல்ல விலக்கி அவள் முகம் பார்த்து,
“ஏன் ஏஞ்சல்… உன்னுடைய நட்பு மட்டும் எந்த விதத்தில் குறைந்தது. நாம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்ட காலம் கூட விரல் விட்டு, எண்ணக் கூடிய மாதக்கணக்கு தானே, அதற்குள் என்னைப் புரிந்து கொண்டு எனக்காக எத்தனை விடயங்கள் செய்திருக்கிறாய் தெரியுமா… அதுமட்டுமின்றி நாம் எத்தனை சந்தோஷ துக்கங்களை ஒருவரிடம் ஒருவர் உரிமையுடன் பகிர்ந்து இருக்கிறோம் தெரியுமா?”
என்றாள் உண்மையான நட்புடன்.
தன் தோழி கூறிய இறுதி வார்த்தைகளைக் கேட்ட ஏஞ்சலினாவிற்குத் தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது.
காயத்ரிக்கு அருகே நெருங்கி அமர்ந்து கொண்டு அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“காயு நான்…நீ நினைப்பது போல் இல்லை தெரியுமா?”
“என்ன நான் நினைப்பது போல் இல்லை…”
“காயு நான் கூட உன்னிடம் ஒரு விடயம் பற்றிச் சொல்லவே இல்லை தெரியுமா?”
“ஏய்… அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் தானே?”
“நானும் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டே இருந்தேன் தெரியுமா?”
“நினைத்துக் கொண்டே இருந்தால் சரியா ஏஞ்சல்… மனதைத் திறந்து, வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே?”
“இது பற்றி உன்னிடம் சொல்வது அவசியமா? இல்லையா? என்கிற குழப்பம் தான் காயு…”
“என்னிடம் சொல்வதற்கு உனக்கு எதற்குக் குழப்பமும் தயக்கமும் ஏஞ்சல்… அப்படியானால் நீ என்னை உன் உயிர்த்தோழி என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுத் தானா?”
“அட ஆண்டவரே… அப்படி எல்லாம் இல்லை காயு… நீயாக யோசித்து எதையாவது சொல்லி வைக்காதே”
“சரி நானாக ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றால் நீ சொல்ல நினைத்த விஷயத்தை முதலில் சொல்லி முடி…”
“அது வந்து காயு…”
“அடடா… ஜவ்வு போல இழுக்காமல் விடயத்தைப் பட்டென்று சொல்லு ஏஞ்சல்…”
“காயு… என் கடந்த கால வாழ்க்கை பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன்… ஆனால் நீயே நிறைய பிரச்சினையில் இருக்கிறாய் இதற்கிடையே என்னைப் பற்றி வேறு சொல்லி உன்னை மேலும் சங்கடப் படுத்த வேண்டுமா என்று தான் இத்தனை நாள் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று ஏனோ உன்னிடம் என் கடந்த காலம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் போலத் தோன்றுகின்றது காயு…”
“நல்ல வேளை இப்போதாவது சொல்லத் தோன்றியதே… அது சரி ஏஞ்சல் ஏதாவது காதல் கடலில் குதித்து விட்டாயா? அம்மா ஏதும் மறுப்பு சொல்லி விட்டார்களா?”
“ஏய்… ஏய்… கொஞ்சம் இரு காயு… உன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டது போதும்… நான் சொல்ல வந்த விஷயமே வேறு… நான் சொல்லி முடிக்கும் வரை நீ உன் திருவாயைத் திறக்காமல் இருந்தாலே போதும்”
“சரி சரி நீ சொல்லி முடி… நான் இடையில் ஒன்றுமே பேசவில்லை”
என்றபடி தனது வாயை இரண்டு கரங்களாலும் பொத்திக் கொண்டாள் காயத்ரி…
மரக்கதிரையில் இருந்து எழுந்து கொண்ட ஏஞ்சலினா மெல்ல நடந்து சென்று, வெள்ளை ரோஜாச் செடி ஒன்றினருகே நின்று அதனை மெல்ல வருடிக் கொடுத்தாள்.
தோட்டத்தில் நின்றிருந்த ஏஞ்சலினா காயத்ரிக்கு முதுகுப்புறத்தைக் காட்டியவாறு நின்றதால், அவளது முகம் பிரதிபலித்த உணர்ச்சிகளைக் காயத்திரியால் உணர முடியாமல் போய்விட்டது.
சில நிமிடங்கள் வரையில் ஏஞ்சலினாவிடம் இருந்து சத்தம் ஏதும் வராமல் போகவே, பொறுமையிழந்த காயத்ரி பட்டென்று எழுந்து தன் தோழியைச் சட்டென்று திருப்பினாள்.
“எத்தனை நேரம் இப்படியே மௌனமாக நிற்பாய் ஏஞ்சல்… வாயைத் திறந்து எதையாவது சொல், நீ இப்படித் தயங்கித் தயங்கிப் பேசும் பெண் இல்லையே… எதையும் பட்டென்று சொல்லி விடுவாயே”
என்று கேட்ட காயத்ரியின் விழிகளை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்த ஏஞ்சலினா. தனது மனதினுள் புதைத்து வைத்த தன் கதையைத் தன் தோழியிடம் ஒப்புவித்தாள்.
ஏஞ்சலினா நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். அவளது பெற்றோருக்கு அவள் ஒரே மகள்.
இவளது பதினெட்டாவது வயதிலேயே இவளுக்குத் திருமணம் செய்து வைப்பது தொடர்பான பேச்சு அடிபட்டது.
ஏஞ்சலினாவின் தந்தையின் நண்பனின் மகன் வெளிநாட்டில் இருந்து படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறான் என்றும் அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் ஏஞ்சலினா வற்புறுத்தப் பட்டாள்.
சிட்டுக்குருவி போலச் சுற்றித் திரிந்த பெண்ணுக்குத் திருமணம் என்கிற வார்த்தையே கசந்தது.
தன் பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் சுத்தமாக விருப்பம் இல்லை. அதனால் என்னைப் படிக்க விடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுப் பார்த்தாள்.
தன்னைப் போலத் தன் மகளும் கஷ்டங்களை அனுபவிக்காமல் சகல செல்வங்களுடனும் வாழ வேண்டும் என நினைத்த ஏஞ்சலினாவின் தந்தை தானாகவே தேடி வந்த வரனை விட மனமில்லாமல், தன் நண்பனின் மகனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டார்.
கோடீஸ்வரர் வீட்டில் வாழ்க்கைப் பட்டுச் சென்ற ஏஞ்சலினாவிற்கு அந்த வீட்டில் கிடைத்த வரவேற்பு வேப்பங்காயெனக் கசந்தது.
திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏஞ்சலினாவின் கணவனான அன்ரனி மரணித்து விட்டான்.
அவன் இறந்த பின்னர் தான் அவனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்திருக்கிறது என்ற விஷயமே ஏஞ்சலினாவுக்குத் தெரியும்.
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான மகனுக்குத் தன்னுடைய ஊரில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்து விட வேண்டும் என்று இருந்த அன்ரனியின் தந்தைக்கு, தானாகச் சென்று மாட்டிய ஆடு என ஏஞ்சலினாவின் தந்தை மாட்ட, அதுவே ஏஞ்சலினாவின் வாழ்க்கை பலியாகக் காரணமாகியது.
அதன் பிறகு ஏஞ்சலினா தனது தந்தையிடம் முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை.
தந்தை மேல் ஏற்பட்ட கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்.
ஏஞ்சலினாவின் தாய் தான் மகளுடன் தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து அவளுடன் வந்து வசிக்கிறாள்.
இத்தனை விஷயத்தையும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் முழுமூச்சாக ஏஞ்சலினா சொல்லி முடித்தாள்.
ஏஞ்சலினா கூறியதை இடையூறு செய்யாமல் கேட்ட வண்ணம் இருந்த காயத்ரிக்கோ என்ன செய்வது எதைப் பேசுவது என்றே புரியவில்லை. அந்த நொடியை எப்படி உணர்ந்தாள் என்பதனை அவளாலேயே கணிக்க முடியவில்லை.
“ஏஞ்சல்… என்னடி இப்படி எல்லாம் சொல்கிறாய்?”
“என்ன எப்படி எல்லாம் சொல்கிறேன்?”
“இறைவன் ஏன் இப்படி எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்?”
“காயு… அவரும் பாவம் தானே அவருக்கும் பொழுது போக வேண்டாமா?”
என்று சிரித்தவளை இமைக்காமல் பார்த்திருந்த காயத்ரி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.
“உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமாக இல்லையா?”
“ஏன் வருத்தமாக இல்லை… அதெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது காயு”
“ஒரு காலத்தில் இருந்ததா? அப்படியானால் இப்போது?”
“இப்போது துளி கூட வருத்தம் இல்லை காயு… உன்னைச் சந்தித்து, உன் நட்புக் கிடைக்கும் வரையில் நான் இந்த வாழ்க்கையை வெறுத்தவள் தான்… ஆனால் இப்போது உன்னையும் கஸ்தூரியையும் பார்க்கும் போது எனக்கும் வாழ வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது தெரியுமா?”
என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலினா.
“இத்தனை விஷயத்தையும் இப்படி மனதினுள் புதைத்து வைத்து விட்டாயே ஏஞ்சல்”
“அப்படியில்லை காயு… நான் யாரிடமும் மனம் திறந்து பேசியதில்லை… எனக்குக் கிடைத்த அன்பான தோழி நீ மட்டும் தான்… உன்னிடம் இதை எல்லாம் சொல்லி உன்னை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாமே என்று இத்தனை நாட்கள் சொல்லவில்லை காயு… ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது காயு அது தான் எல்லாவற்றையும் கொட்டி விட்டேன்.”
“இப்போதாவது சொன்னாயே ஏஞ்சல்”
“காயு உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா?”
“ம்ம்ம்… தாராளமாகக் கேட்கலாமே”
“காயு… இப்போது போலவேயே என்னுடன் எப்போதும் நீ இருப்பாயா?”
“லூசு… இதென்ன கேள்வி… உன்னைத் தொந்தரவு செய்து கொண்டு உன்னோடு தான் நான் இருப்பேன் போதுமா?”
என்ற தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் ஏஞ்சலினா.
“பூக்கள் எல்லாம் உன்னை தொட
தவம் இருக்கும்
நீயும் தொட சருகுக்கும்
உயிர் பிறக்கும்
வானவில் வந்துனக்கு
குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்”
கூண்டுக்குள் இருந்த சிறு சிறு குருவிகள் கூடக் கீச்சுடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி இருந்தன.
திடீரென ஓசைகள் எல்லாம் மட்டுப் பட்டது போல எங்குமே ஒரே நிசப்தம் நிலவியது.
ஏஞ்சலினாவின் அணைப்பில் இருந்து மெல்ல விலகிய காயத்ரி ஏஞ்சலினாவின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“இந்த வாழ்க்கையே ரொம்ப விசித்திரமானது காயு... எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை… எது எப்படியோ உன் ஆதியோடு உன் வாழ்க்கை பிணைக்கப் பட்டு விட்டது அது போதும்…”
“நான் இதைக் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை ஏஞ்சல்… அவரை முதல் முதல் பார்த்தது, பேசியது,பழகியது,அவர் தன் காதலை சொல்லியது, நான் வேறொருவரை திருமணம் செய்தது, ஐந்து மாதத்திலேயே என் திருமண வாழ்வு முடிந்து போனது, அதன் பிறகு ஆதியைப் பார்த்தது, அவர் என் கழுத்தில் தாலி கட்டியது, அவரை நான் தவறாக நினைத்தது எல்லாமே கனவு போல இருக்கிறது… இதெல்லாம் நிஜமாகவே எனது வாழ்வில் நடந்தவை தானா? என்று தோன்றுகிறது ஏஞ்சல்”
“உன் வாழ்க்கையிலும் வசந்தம் வீசத் தொடங்கி விட்டது என்று சொல் காயு”
“நீ வேறு ஏஞ்சல்… இப்போது தான் புயலே வீசத் தொடங்கி இருக்கிறது…”
“ஏய் காயு… ஏன் அப்படி சொல்கிறாய்?”
“ஆதியின் முகத்தைப் பார்த்துப் பேசவே பயமாக இருக்கிறது ஏஞ்சல்… நான் செய்து வைத்த வேலை அப்படி… என்னைப் பார்த்தாலே அவர் முகம் கடுகடுவென்று மாறுகிறது தெரியுமா?”
“எல்லாம் சீக்கிரமே சரியாகும் காயு… அப்புறம் ஒரு விஷயம்… அனுபல்லவி இறந்து விட்டாள் என்று நீங்கள் நம்பத் தொடங்கிய பின்னர் இங்கே இந்த வீட்டில் அவளைப் பார்த்ததும் என்ன தோன்றியது உங்களுக்கு”
“ஏஞ்சல்… அதை வார்த்தைக்குள் கொண்டு வர முடியாது தெரியுமா?”
என்ற காயத்ரியின் கண்கள் மீண்டும் கலங்கின.
அருகில் இருவரும் பேசுவதைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கஸ்தூரி வாய் விட்டே அழத் தொடங்கினாள்.
அதே நேரத்தில் மெல்ல நடந்து வந்த அனுபல்லவி, காயத்ரி அருகே அமர்ந்து அவளது கண்களை மெல்லத் துடைத்து விட்டு, அவள் தோளோடு சாய்ந்து கொண்டாள்.
அதைப் பார்த்த கஸ்தூரி எழுந்து ஓடி வந்து அனுபல்லவியின் முன்னால் தனது முகத்தைக் காட்டவே, அவளது முகத்தை ஒரு தடவை உற்றுப் பார்த்த அனுவோ காயத்ரியை அண்ணாந்து பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட காயத்ரி, சம்மதம் சொல்வது போல மெல்லத் தலையசைத்தாள்.
உடனே அனுபல்லவி, கஸ்தூரியின் கண்ணீரையும் துடைத்து விட்டாள்.
காயத்ரியைத் தனியே அழைத்து வந்த ஏஞ்சலினா தோட்டத்தில் போடப் பட்டிருந்த மரக்கதிரையில் அமர்ந்து கொண்டு,
“காயு… அனுவுடையதும் உன்னுடையதும் இந்த அழகான ஆழமான நட்பைப் பார்க்கின்ற போது எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது தெரியுமா?”
என்றபடி தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள்.
தன்னை அணைத்தவளை மெல்ல விலக்கி அவள் முகம் பார்த்து,
“ஏன் ஏஞ்சல்… உன்னுடைய நட்பு மட்டும் எந்த விதத்தில் குறைந்தது. நாம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்ட காலம் கூட விரல் விட்டு, எண்ணக் கூடிய மாதக்கணக்கு தானே, அதற்குள் என்னைப் புரிந்து கொண்டு எனக்காக எத்தனை விடயங்கள் செய்திருக்கிறாய் தெரியுமா… அதுமட்டுமின்றி நாம் எத்தனை சந்தோஷ துக்கங்களை ஒருவரிடம் ஒருவர் உரிமையுடன் பகிர்ந்து இருக்கிறோம் தெரியுமா?”
என்றாள் உண்மையான நட்புடன்.
தன் தோழி கூறிய இறுதி வார்த்தைகளைக் கேட்ட ஏஞ்சலினாவிற்குத் தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது.
காயத்ரிக்கு அருகே நெருங்கி அமர்ந்து கொண்டு அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“காயு நான்…நீ நினைப்பது போல் இல்லை தெரியுமா?”
“என்ன நான் நினைப்பது போல் இல்லை…”
“காயு நான் கூட உன்னிடம் ஒரு விடயம் பற்றிச் சொல்லவே இல்லை தெரியுமா?”
“ஏய்… அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் தானே?”
“நானும் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டே இருந்தேன் தெரியுமா?”
“நினைத்துக் கொண்டே இருந்தால் சரியா ஏஞ்சல்… மனதைத் திறந்து, வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே?”
“இது பற்றி உன்னிடம் சொல்வது அவசியமா? இல்லையா? என்கிற குழப்பம் தான் காயு…”
“என்னிடம் சொல்வதற்கு உனக்கு எதற்குக் குழப்பமும் தயக்கமும் ஏஞ்சல்… அப்படியானால் நீ என்னை உன் உயிர்த்தோழி என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுத் தானா?”
“அட ஆண்டவரே… அப்படி எல்லாம் இல்லை காயு… நீயாக யோசித்து எதையாவது சொல்லி வைக்காதே”
“சரி நானாக ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றால் நீ சொல்ல நினைத்த விஷயத்தை முதலில் சொல்லி முடி…”
“அது வந்து காயு…”
“அடடா… ஜவ்வு போல இழுக்காமல் விடயத்தைப் பட்டென்று சொல்லு ஏஞ்சல்…”
“காயு… என் கடந்த கால வாழ்க்கை பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன்… ஆனால் நீயே நிறைய பிரச்சினையில் இருக்கிறாய் இதற்கிடையே என்னைப் பற்றி வேறு சொல்லி உன்னை மேலும் சங்கடப் படுத்த வேண்டுமா என்று தான் இத்தனை நாள் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று ஏனோ உன்னிடம் என் கடந்த காலம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் போலத் தோன்றுகின்றது காயு…”
“நல்ல வேளை இப்போதாவது சொல்லத் தோன்றியதே… அது சரி ஏஞ்சல் ஏதாவது காதல் கடலில் குதித்து விட்டாயா? அம்மா ஏதும் மறுப்பு சொல்லி விட்டார்களா?”
“ஏய்… ஏய்… கொஞ்சம் இரு காயு… உன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டது போதும்… நான் சொல்ல வந்த விஷயமே வேறு… நான் சொல்லி முடிக்கும் வரை நீ உன் திருவாயைத் திறக்காமல் இருந்தாலே போதும்”
“சரி சரி நீ சொல்லி முடி… நான் இடையில் ஒன்றுமே பேசவில்லை”
என்றபடி தனது வாயை இரண்டு கரங்களாலும் பொத்திக் கொண்டாள் காயத்ரி…
மரக்கதிரையில் இருந்து எழுந்து கொண்ட ஏஞ்சலினா மெல்ல நடந்து சென்று, வெள்ளை ரோஜாச் செடி ஒன்றினருகே நின்று அதனை மெல்ல வருடிக் கொடுத்தாள்.
தோட்டத்தில் நின்றிருந்த ஏஞ்சலினா காயத்ரிக்கு முதுகுப்புறத்தைக் காட்டியவாறு நின்றதால், அவளது முகம் பிரதிபலித்த உணர்ச்சிகளைக் காயத்திரியால் உணர முடியாமல் போய்விட்டது.
சில நிமிடங்கள் வரையில் ஏஞ்சலினாவிடம் இருந்து சத்தம் ஏதும் வராமல் போகவே, பொறுமையிழந்த காயத்ரி பட்டென்று எழுந்து தன் தோழியைச் சட்டென்று திருப்பினாள்.
“எத்தனை நேரம் இப்படியே மௌனமாக நிற்பாய் ஏஞ்சல்… வாயைத் திறந்து எதையாவது சொல், நீ இப்படித் தயங்கித் தயங்கிப் பேசும் பெண் இல்லையே… எதையும் பட்டென்று சொல்லி விடுவாயே”
என்று கேட்ட காயத்ரியின் விழிகளை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்த ஏஞ்சலினா. தனது மனதினுள் புதைத்து வைத்த தன் கதையைத் தன் தோழியிடம் ஒப்புவித்தாள்.
ஏஞ்சலினா நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். அவளது பெற்றோருக்கு அவள் ஒரே மகள்.
இவளது பதினெட்டாவது வயதிலேயே இவளுக்குத் திருமணம் செய்து வைப்பது தொடர்பான பேச்சு அடிபட்டது.
ஏஞ்சலினாவின் தந்தையின் நண்பனின் மகன் வெளிநாட்டில் இருந்து படிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறான் என்றும் அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் ஏஞ்சலினா வற்புறுத்தப் பட்டாள்.
சிட்டுக்குருவி போலச் சுற்றித் திரிந்த பெண்ணுக்குத் திருமணம் என்கிற வார்த்தையே கசந்தது.
தன் பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் சுத்தமாக விருப்பம் இல்லை. அதனால் என்னைப் படிக்க விடுங்கள் என்று மன்றாடிக் கேட்டுப் பார்த்தாள்.
தன்னைப் போலத் தன் மகளும் கஷ்டங்களை அனுபவிக்காமல் சகல செல்வங்களுடனும் வாழ வேண்டும் என நினைத்த ஏஞ்சலினாவின் தந்தை தானாகவே தேடி வந்த வரனை விட மனமில்லாமல், தன் நண்பனின் மகனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் முடித்து வைத்து விட்டார்.
கோடீஸ்வரர் வீட்டில் வாழ்க்கைப் பட்டுச் சென்ற ஏஞ்சலினாவிற்கு அந்த வீட்டில் கிடைத்த வரவேற்பு வேப்பங்காயெனக் கசந்தது.
திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஏஞ்சலினாவின் கணவனான அன்ரனி மரணித்து விட்டான்.
அவன் இறந்த பின்னர் தான் அவனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்திருக்கிறது என்ற விஷயமே ஏஞ்சலினாவுக்குத் தெரியும்.
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையான மகனுக்குத் தன்னுடைய ஊரில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்து விட வேண்டும் என்று இருந்த அன்ரனியின் தந்தைக்கு, தானாகச் சென்று மாட்டிய ஆடு என ஏஞ்சலினாவின் தந்தை மாட்ட, அதுவே ஏஞ்சலினாவின் வாழ்க்கை பலியாகக் காரணமாகியது.
அதன் பிறகு ஏஞ்சலினா தனது தந்தையிடம் முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை.
தந்தை மேல் ஏற்பட்ட கோபத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்.
ஏஞ்சலினாவின் தாய் தான் மகளுடன் தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து அவளுடன் வந்து வசிக்கிறாள்.
இத்தனை விஷயத்தையும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் முழுமூச்சாக ஏஞ்சலினா சொல்லி முடித்தாள்.
ஏஞ்சலினா கூறியதை இடையூறு செய்யாமல் கேட்ட வண்ணம் இருந்த காயத்ரிக்கோ என்ன செய்வது எதைப் பேசுவது என்றே புரியவில்லை. அந்த நொடியை எப்படி உணர்ந்தாள் என்பதனை அவளாலேயே கணிக்க முடியவில்லை.
“ஏஞ்சல்… என்னடி இப்படி எல்லாம் சொல்கிறாய்?”
“என்ன எப்படி எல்லாம் சொல்கிறேன்?”
“இறைவன் ஏன் இப்படி எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்?”
“காயு… அவரும் பாவம் தானே அவருக்கும் பொழுது போக வேண்டாமா?”
என்று சிரித்தவளை இமைக்காமல் பார்த்திருந்த காயத்ரி அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.
“உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமாக இல்லையா?”
“ஏன் வருத்தமாக இல்லை… அதெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது காயு”
“ஒரு காலத்தில் இருந்ததா? அப்படியானால் இப்போது?”
“இப்போது துளி கூட வருத்தம் இல்லை காயு… உன்னைச் சந்தித்து, உன் நட்புக் கிடைக்கும் வரையில் நான் இந்த வாழ்க்கையை வெறுத்தவள் தான்… ஆனால் இப்போது உன்னையும் கஸ்தூரியையும் பார்க்கும் போது எனக்கும் வாழ வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது தெரியுமா?”
என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலினா.
“இத்தனை விஷயத்தையும் இப்படி மனதினுள் புதைத்து வைத்து விட்டாயே ஏஞ்சல்”
“அப்படியில்லை காயு… நான் யாரிடமும் மனம் திறந்து பேசியதில்லை… எனக்குக் கிடைத்த அன்பான தோழி நீ மட்டும் தான்… உன்னிடம் இதை எல்லாம் சொல்லி உன்னை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாமே என்று இத்தனை நாட்கள் சொல்லவில்லை காயு… ஆனால் இன்று என்னவோ தெரியவில்லை உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது காயு அது தான் எல்லாவற்றையும் கொட்டி விட்டேன்.”
“இப்போதாவது சொன்னாயே ஏஞ்சல்”
“காயு உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா?”
“ம்ம்ம்… தாராளமாகக் கேட்கலாமே”
“காயு… இப்போது போலவேயே என்னுடன் எப்போதும் நீ இருப்பாயா?”
“லூசு… இதென்ன கேள்வி… உன்னைத் தொந்தரவு செய்து கொண்டு உன்னோடு தான் நான் இருப்பேன் போதுமா?”
என்ற தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டு கண் கலங்கினாள் ஏஞ்சலினா.
“பூக்கள் எல்லாம் உன்னை தொட
தவம் இருக்கும்
நீயும் தொட சருகுக்கும்
உயிர் பிறக்கும்
வானவில் வந்துனக்கு
குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்”