Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25
தன் முன் அமர்ந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரின் கண்களையும் ஆராய்ந்தான்....
அவனுக்குத்தான் தன் பின்னால் உள்ளவர்களை தெரியாது....ஆனால் அவர்களுக்கு தெரியுமல்லவா????
அதனாலேயே அவர்களின் கண்களை கூர்ந்து கவனிக்க துவங்கினான்.
அதில் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் நேரே வாசல் புறமாக ஒருவன் கத்தியுடன் நின்றிருப்பது புரிய பார்வையை இன்னும் கூர்மையாக்கி அலசத் தொடங்கினான்.
அவன் டேபிளுக்கு முன்னே இருந்த டேபிளில் இருந்த இரண்டு பேரும் சாதாரணமாக சாப்பிடுவது போல் இருந்தாலும் அவனையும் அவன் மனையாளையும் அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்திருப்து புரிந்தது.
அதேநேரம் சர்வர்களில் ஒருவன் வேலை செய்வது போல் பாவ்லா காட்டிக் கொண்டு இருந்தான்.
அவர்களுக்கு சந்தேகம் வராத வண்ணம் சட்டென அஷ்வினியிடம் குனிந்தவன் ஹஸ்கி வாய்ஸில்
"அஷு...நா பேசுறேன்னு நிமிர்ந்து பாக்காத" என எச்சரிக்கவும் அவனை பார்க்கப் போனவள் தலையை குனிந்தவாறே சம்மதமாக ஆட்டினாலும் மனது ஏதோ நடக்கப் போவது போல் திக்கென்றதில் பயந்து பொனாள் பாவையவள்....
"எ...என்ன தேவ்... எனி ப்ராப்ளம்?எனக்கு பயமா இருக்கு"
"ஷ்...அஷு நான்தான் பக்கத்துல இருக்கேன்ல... அப்பறமும் என்ன பயம்?"
"ம்..."
"இப்போ நா சொல்றத அடுத்தவங்களுக்கு சந்தேகம் வராத படி பண்ணு... ஓகே?"
"ஓகே"
"உன் நொண்ணன் அஜய்க்கு மேசேஜ் போட்டு அவன ஒடனே இங்க வர சொல்லு"
"பட் தேவ் அவரு எதுக்கு... நீங்க ரெண்டு பேருமே கண்டாலே முட்டிக்கிறீங்க?"
"அஷு... இந்த விஷயத்துக்கு வருண் சரிப்பட மாட்டான்... உன் ரவுடி அண்ணன் அஜய்தான் சரி... அவன வர சொல்லு...கமான் க்விக்" எனவும் அடுத்த நொடி அவனுக்கு மேசேஜ் போயிருந்தது.
மீண்டும் ஒருமுறை அலசியவன் அவர்கள் அங்கேயே இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு அசைட்டையாய் இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
நிலைமை புரியாத அஷ்வினியின் நண்பிகள் தங்களுக்குள் கிசுகிசுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருக்கவும் அபியை அடையாளம் கண்டு கொண்டவன்
"அபி...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீ?"எனவும் ஆச்சரியமாய் அவனை பார்த்தவள்
"சார்...நீங்க என்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கீங்க...என்ன பண்ணனும் சார் சொல்லுங்க?"
அந்த சர்வர் இருந்த இடத்தை துள்ளியமாய் கூறியவன்
"அவன் பக்கத்தால போயி சாதாரணமா நடக்குறது மாதிரி அவன் மேல எதயாவது கொட்டி விட்டுடு" எனவும் ஏதோ விபரீதம் என்பதை நொடியில் புரிந்து கொண்ட அவளது லாயர் மூலை அதற்கான வேலையில் இறங்கத் தொடங்கியது.
மீண்டும் அஷ்வினியிடம் குனிந்து
"அஷு...பயப்புடாத... பயப்புட்டோம்னா அவனுங்க உஷாராயிடுவானுங்க" என்க டேபிள் அடியிலிருந்த அவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள் கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட கண்களை இறுக்க மூடி திறந்தவன் அவள் கைகளுக்கு தைரியமூட்டும் வகையில் அழுத்திக் கொடுத்தான்.
"அஷு...நா வாஷ் ரூம் போறேன்...பி கேர்புல்...ஓகே?"
"நோ தேவ் என்ன விட்டு எங்கேயும் போகாதிங்க..... உங்களுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கவே முடியாது" என்றவளை வளைத்து இறுக்கி அணைக்கவும் நண்பர் கூட்டம் "ஹோ...."என கூச்சலிட்டது.
அதில் சட்டென அவளை விட்டவன் அஜய் வருகிறானா என கவனமாய் அலச நல்லவேளையாக பக்கத்தில் ஏதோ வேலைக்கென்று வந்திருந்தவன் பதற்றமாய் உள்ளே நுழைந்தான்.
ரிஷி எழுவான் என எதிர்ப்பார்க்காதவர்கள் உஷாராக அதற்குள் அஜய் பக்கத்தில் வரவும் அவனை கூர்ந்து பார்த்தவன் வாஷ்ரூமிற்குச் சென்றான் வேட்டையாடப்போகும் வேங்கையின் வேகத்தில்.....
ரிஷி செல்வதை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை....
தனியாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பாள் என யூகித்து வந்தவனுக்கு ரிஷியும் கூடவே இருக்க எதற்காக அழைத்தாள் என்பதில் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது.
தான் வாஷ்ரூம் செல்லும் வினாடி கூட தன்னவளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என யூகித்தே பிரச்சினையை சட்டென சமாளிக்கும் திறன் கொண்ட அவனை வரவழைத்திருப்பது அவனுக்கு எங்கே தெரியப்போகிறது!!!
அவசரமாக அஷ்வினியின் பக்கத்தில் வந்தவன் அவள் தோல் தொடவும் ஏற்கனவே பயந்திருந்தவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
"ஹேய் அஷ்வி...ரிலாக்ஸ்... நான் தான் பயப்படாத" என்றவாறே ரிஷியின் இடத்தில் அமர்ந்து கொள்ள நண்பிகளின் கவனம் இவன் புறம் திரும்பியது போலவே சுற்றி நின்று கொண்டிருந்த எதிரிகளின் கவனமும் அவனிடம் திரும்பியது.
அபியின் தயவில் அங்கு போலி சர்வராக நின்றிருந்தவனுக்கு காபி அபிஷேகம் நடைபெற அவனும் எரிச்சலுடன் அபியிடம் ஏதும் சொல்ல முடியாமல் வாஷ்ரூம் சென்றான்.
தன் உடையில் இருந்ததை துடைத்துக்கொண்டு இருந்தவனின் பின்னால் வந்து நின்ற ரிஷி இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி கால்களை சற்று அகற்றி அவனையே பார்த்தபடி நின்றிருந்தான்.
துடைக்கும் அவசரத்தில் முதலில் கவனிக்காமல் விட்ட அந்த சர்வர் திடீரென ரிஷி அவன் மூக்கை பொத்தவன் அவனைக் கண்ட அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவனிடமிருந்து விடுபட திமிரினான்.
அப்பொழுதென்று பார்த்து வாஷ்ரூமிற்குள் யாரும் வராததும் நம்ம ஹீரோவுக்கு வசதியாய் போயிற்று!!!
அவனை அப்படியே இழுத்துக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்த சுவற்று மறைவுக்கு கொண்டு சென்றவன் அவனை விடுவித்து அவன் சுதாரித்து ஓடும் முன் விட்டான் இடது கண்ணத்தில் பளாரென்று....
அவன் விட்ட அறையில் காது ஜவ்வு கிழிந்து இரத்தம் வராத குறையாக அவனின் காதுக்குள் கொய்ங்... எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததென்றால் அது மிகையாகாது....
அவன் தடுமாறி நிற்க அவன் முகத்தில் ஒரு குத்து விட்டவன் இரத்தம் வருவது தெரிந்தும் அடங்காமல் அவனை துவைத்து எடுத்து விட்டான்.
தாமதிக்காமல் கதிருக்கு அழைத்தவன்
"கதிர்... ஹோட்டல் சம்யுக்தாகிட்ட நம்மாளுங்கள அனுப்பு...அதுவும் பின்வழியா..." என்றவன் அவன் பதில் பேசுமுன் துண்டித்து விட்டான்.
பதற்றத்திலிருந்த அஷ்வினிக்கு நண்பர்கள் கேட்டது சீண்டியது எதுவுமே காதில் விழவே இல்லை.... ஏதோ திக்மிரமை பிடித்தவள் போல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க விஷயம் தெரியாத அஜய்க்கு ரிஷியை கொன்று போடும் வெறி....
அவன் சற்றும் எதிர்பாரா விதத்தில் நடை பெற்றது அந்த சம்பவம்!!!
அடுத்தவர்களுடன் பேசிக் கொண்டே இருந்த கவி அஜய்யின் பின்னால் திடீரென ஒருவன்(வாசலில் கத்தியுடன் நின்றிருந்தவன்) கையில் கத்தியை ஓங்கயவாறு குத்துவதற்கு வரவும் "அண்ணா....பின்னால" என கத்தவும் சட்டென தன்னை சுதாரித்தவன் மேசே மேலிருந்த தண்ணீர் க்ளாஸை எடுத்து அவன் மண்டையிலேயே உடைத்தான்.
திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் நிலை தடுமாறிய சமயம் அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டவன் பெண்களை பாதுகாப்பாக ஓரத்தில் நிற்குமாறு கூறி விட்டு அவனிடம் வந்து அவன் உயிர் நாடிக்கே ஓங்கி ஒரு உதை விட அவன் அப்படியே கீழே சரிந்தான்.
அதற்குள் ஏற்கனவே டேபிளில் இருந்த இரண்டு பேரும் அஜய்யின் பின்னால் கத்தியுடன் வந்து நின்றிருக்க வெளியிலிருந்து இன்னும் நான்கு பேர் வேறு தங்கள் ஆயுதங்களுடன் வந்து நிற்க அஷ்வி "அண்ணா" என கத்தவும் சட்டென அவன் திரும்பிய சமயம் பின்னாலிருந்தவன் கத்தியை அவன் கழுத்துக்கு குத்தப் போக அவன் கையை மடக்கி பிடித்தது ஒரு வலிய கரம்....
((வேற யாருங்க....எல்லாம் நம்மாளுதான்....))
வாஷ்ரூமிற்குள் பிடித்தவனை அவன் வந்த அடையாளமே தெரியாதவாறு தங்கள் ஆட்களிடம் ஒப்படைத்தவன் திரும்பி உள்ளே வரும் போது தான் இது நடந்தேறியது...
அவன் கையை கத்தியுடனேயே முறுக்க அவனிலிருந்து கத்தியும் விடுபட்டு கீழே விழுந்த மறுநொடி அஷ்வினி"தேவ்..." என பயத்தில் அலறியபடி ஓரெட்டு முன்னால் வைக்கப் போக
"அஷ்வினி...ஸ்டாப்... டோன்ட் மூவ்...ஸ்டே தேர்..." என்ற ரிஷியின் சீறலில் அபியை இறுக்க கட்டிக் கொண்டாள்.
தன் எதிராலியிடம் திரும்பியவன்
"என் மச்சினன் மேலயே கை வெக்க போறியா?" எனவும் அஜய்யின் முகத்தில் புன்முறுவல் பூத்ததுவோ...
"ஏன்டா...உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல..... இப்போதான் ஒருத்தன உம்முன்னால அந்த காட்டு காட்டியிருக்கான்..... கொஞ்சமும் பயமே இல்லாம அவன் மேல கை வெக்க போற.... உன்ன என்னதான் பண்றது...ஹாங்... இந்த கைய ஒடச்சிடலாம்...ஓகே?"
சிரித்த முகமாய் எள்ளல் வழியும் குரலில் கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென பழிவெறி பளபளக்க அடுத்த நிமிடம் "அம்மா..."என துடித்துக் கொண்டே அவன் கீழே விழுந்தான்.
அதற்குள் அஜய்க்கு முன்னால் இருந்தவர்கள் அடிக்கத் துவங்க அவர்களை அவன் பந்தாடத் துவங்கி விடவும் அஜய்யிற்கு பின்னாலிருந்த மற்றையவனை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி....
அவனையும் அசால்ட்டாக அடித்து துவைத்தெடுத்தவன் அஜய்யின் புறம் திரும்ப உண்மையில் திடுக்கிட்டுத்தான் போனான்.
ஏனெனில் அஜய் அடித்துக் கொண்டிருந்தது அஷ்வினி இருந்த பக்கம்...ரிஷி தற்போது நின்றிருப்பது வாஷ்ரூம் பக்கம்....
இதில் இடையில் பின்னால் இருப்பவர் விளங்காத அளவுக்கு சுவர் வேறு இருக்க அந்த சுவற்றுக்கு பக்கத்தில் புதிதாக ஒருவன் நின்றிருந்ததை அஜய் கண்டிருக்க வாய்ப்பே இல்லை.... ரிஷிக்கு மட்டுமே அவன் தெரிந்திருக்க அவனோ அஜய்யின் முதுகுக்கு கூரிய ஒரு ஆயுதத்தை கொண்டு சென்று கொண்டிருந்தான்.
இப்போது ரிஷி அவனருகில் சென்றாலும் அதற்குள் அந்த கத்தி இறங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்!!!
இப்படியிருக்க என்ன செய்வது என யொசித்தவன் சட்டென தன் அருகிலிருந்த டேபிளில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூஞ்சாடியை எடுத்து அவன் மண்டைக்கே குறி பார்த்து வீச அது சரியாக அவன் பின் மண்டையிலேயே சென்று மோதியது.
பட்ட வேகத்தில் அவன் தலை மட்டுமன்றி அவன் உடலும் முன் செல்ல அடுத்து நடக்கப்போவதை உணர்ந்த ரிஷி
"ஏய் அஜய் மூவ்..." என கத்தவும் அது அவனுக்கு விளங்கித் தொலைத்தால் தானே நகர!!!
கடுப்பான ரிஷி "டேய் அஜய்....மடயா மூவ்" என கத்தவும் தான் அவன் வார்த்தைகளில் கோபம் கொண்டு திரும்பியவன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கூரிய ஆயுதத்தை கண்டு ஸ்தம்பித்து தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் சட்டென விலகவும் அவன் முன்னிருந்தவனின் காது மடலை உரசிச் சென்று "ணங்"என்ற சத்தத்துடன் கீழே விழுந்து நர்த்தனமாடியது.
கோபத்தில் இருந்தவனின் முகம் நன்றியுணர்வோடு ரிஷியை பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் தன்னவளிடம் விரைந்தான்.
அதில் அவனுக்கு இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை... ஆனால் ஏதோ ஒரு சுவாரஷ்யம்....
அவனை பற்றி முழுதாக அறிந்து கொண்டே ஆக வேண்டுமென்கிற ஆவல்!!!
இதில் அவர்களே எதிர்ப்பார்க்காதது தான் கமிஷ்னர் மதன்சிவாவின் வருகை....
எப்படி அந்த நேரத்தில் அங்கு வந்தான் என்பது தெரியாவிட்டாலும் தன்னை சுற்றி ஏதோ நடப்பது போலவே இருந்தது அவனுக்கு....
((அடேய் பக்கி...அவன் தற்செயலா வர்லடா... எல்லாம் கூட்டு கலவானிங்க...ஜாக்கிரத ஆமா))
அஷ்வினியிடம் போனவன் அவளிடம் நெருங்காமலேயே மதனிடம் சென்று விட அஜய் தன் தங்கையை நெருங்கினான்.
ஆறுதல் தேட தாய் மடியை எதிர்ப்பார்த்து இருந்தாளோ என்னவோ அவன் வந்து நின்றதுமே அவனை பாய்ந்து கட்டிக் கொண்டு கதறித் தீர்த்து விட்டாள்.
மதனிடம் கை குழுக்கியவன் நடந்ததனைத்தையும் ஒன்று விடாது கூறிவிட்டு அவர்களை தன்னிடம் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்ளவும்
"இவரு பேசாம போலீசுக்கே படிச்சிருக்கலாம்.... பாவம் எவன் டெட் பாடிய சூஸ் பண்ணி அவனுங்களுக்கு அனுப்ப போறாரோ....." என நினைத்து விட்டு வெளியே விறைப்பாய்
"அண்...அ..அது சார் சம்பவம் நடந்த இடத்துக்கு நாங்க வந்துட்டதால இதுல நிறைய ப்ரொஸீஜர்ஸ் இருக்கு அண்...சார்...அதனால..."
என்றவனை இடை நிறுத்தியவன் அவனை கூர்மையாய் அளவிட்டபடி
"சோ வாட்?கொல முயற்சி நடந்ததுக்கு ஆதாரமா உங்களுக்கு வேனா இவங்க தேவப்படலாம்... பட் எனக்கு இவங்க என் கண்ட்ரோலுக்கு வந்தே ஆகனும்... தட்ஸ் இட்" எதிர்த்து பேச வாயைத் திறந்தவன் அவன் குரல் கடுமையில் கப்பென மூடிக் கொண்டான்.
"ஓகே அண்..சார்" என்றவன் அப்போதுதான் தன்னை புருவம் சுருக்கி பார்த்திருக்கும் தன் ஆருயிர் நண்பியை கண்டான்.
அழுது அழுது சோர்ந்து போயிருந்தாலும் அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாக வெளிப்பட்டதில் எங்கே இருந்தால் பேச வந்தே மாட்டி விடுவாள் என நினைத்தவன் அவசரமாக வெளியேறி விட்டான்...
அவனையே நெற்றி சுருக்கி பார்த்திருந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவனுக்கு அப்பொழுதுதான் தன் மனையாள் இருப்பதே மண்டையில் உறைக்க அவளருகில் செல்லவும் அவனை காண நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவனை இறுக்கத் தழுவிக் கொண்டாள்.
நண்பர்களும் அஜய்யும் விடை பெற்று சென்றுவிட அவளை தன் கை வளைவுக்குள்ளேயே வைத்தவாறு வெளியேறினான்.
விதி வலியது....
இரவு....
வீட்டு ஹாலில் நாள்வரும் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுதும் கூட அஷ்வினி ரிஷியின் கைவைளைவுக்கு உள்ளேயே அமர்ந்து கொண்டு இருந்தாலும் அவளையும் மீறி உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.
அவனை இம்மியளவும் அசையவிடாது அவன் கையை இறுக்கப் பிடித்திருக்க அவள் பயமறிந்து அவனும் அவளை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தான்.
முதலில் மௌனத்தை கலைக்க விரும்பிய கயல்
"ஏன் மாமா..." என்றுவிட்டு நாக்கை கடித்தவள்
"இல்ல...இவ்வளவு நடந்திருக்கு.... ஏன் நீங்க கால் பண்ணல?"
"நம்ம வீட்டு ஆளுங்கள அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.... அதனாலதான் ஆருவ கண்டாக்ட் பண்ணல"
"மாமா... நா ஒங்கள அண்ணானு கூப்புடட்டுமா?"
"வாட்....?அஷு அக்கா நா அண்ணனா?"
"வேற என்ன பண்றது மாமா... அஷ்விக்கு நா உங்கள மாமான்னு கூப்புட்றது புடிக்கலயாம்.... மீறி கூப்டா ஆருவ தாத்தான்னு கூப்புடுவேன்னு மெரட்றா" எனவும் ரிஷி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்க ஆரவ் அதிர்ச்சியாய் அஷ்வியை முறைத்தான்.
"ஏன் அம்மு உன் அக்காக்கு அவ புருஷன் மேல காதல்னா வேற பேரு சொல்லி கூப்புட சொல்லு.... அத விட்டுட்டு ஏன் இந்த அப்பாவி மேல கொலவெறி"
என்றுவிட்டு தன் நண்பியை மீண்டும் முறைக்க அவள் பயத்தை விடுத்து கலகலத்து சிரிக்க தன்னவள் சிரிப்பில் ரிஷிக்கும் புன்னகை பூத்தது.
"இப்போவே எனக்கு பதில் சொல்லுங்க மாமா" எனவும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளை முறைக்க அவள் தன் மீது எடுத்துக் கொண்ட உரிமையில் அவன் காதல் இன்னும் கூடியது.
"அத்தான்னு கூப்புடு" என்றவனை ஆரவ் முறைக்க விஷயம் புரிந்தவனாய்
"ஓ..அதுல கூட சிக்கல்தானா?என்ன பண்றது கயல்..?ம்..?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது... ஒன்னு அண்ணாண்ணு கூப்புட்றேன்.... இல்லன்னா சார்னு கூப்புடுவேன்.... சொல்லிட்டேன் ஆமா?"
"என்னது..சாரா... அதுக்கு அண்ணனே தேவலை"
"அப்பொ அண்ணான்னே கூப்டலாம்ல?"
"நோ கயல்விழி....அது தப்புமா" பொறுப்புள்ளவனாய் எடுத்துக் கூறவும்
"மாமா....என் ஆரு பாவம்.... உங்க பொண்டாட்டி மானத்தை வாங்காம விடமாட்டா" எனவும் ரிஷி மறுபடி சிரிக்க அஷ்வினி கயலை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தாள்.
"ஆக என் தலதான் உருளப்போகுது....அதானே?"ஆரவ் போலிக் கோபத்துடன் தன் உயிர் நண்பியை முறைக்க
"இல்லங்க ஆரு தாத்தா.... உங்க மேல கை வைக்க யாருக்கு தைரியம்?"என கேட்டு அவனை அலறவிட ரிஷியும் கயலும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"ஏய் ராட்சஸி... மரியாதயா ஒழுங்கா கூப்புடு....இல்லன்னா நானும் உன்ன ராட்சஸின்னே கூப்புடுவேன் பாத்துக்கோ"
"முடியாது போங்க ஆரு தாத்தா...."
"உன்ன...." என்றவாறு அவளை அடிக்கத் துரத்தவும் ரிஷியிடமிருந்து விலகி துள்ளி ஓடினாள் அவள்...
சிரித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மேலும் சிரிப்பு வர சிரித்துக் கொண்டே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்படி வாய்விட்டு சிரித்து எவ்வளவு நாளாயிற்று....
வெறிச்சோடிக் கிடந்த வீட்டுக்கு உயிர்ப்பை கொடுத்துக் கொண்டிருப்பவள் அவள்.....
மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத தன்னலளையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மேல் இன்னுமின்னும் காதல் பல்கிப் பெருகிற்று!!!
"தேவ்...என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்..."என கத்திக் கொண்டே வந்து அவன் பின்னே மறைய
"ராட்சஸி....மரியாதயா வெளிய வா"
"முடியாது ஆரு தாத்தா....."எனவும் ரிஷி மீண்டும் வாய்விட்டு சிரிக்க அவனையே நிம்மதியாய் பார்த்தான் ஆரவ்.....
எத்தனை நாளாயிற்று இவனை இப்படி சிரித்து பார்க்க.... தன் தோழிக்கு மானசீகமாய் நன்றி உறைத்தவன் வெளியே கோபம் போல் காட்டிக் கொண்டான்.
"அப்போ ஓகே...நீ வர மாட்ட அப்பிடித்தானே?"
"ஆமா தாத்தா.... அதிலென்ன சந்தேகம்?"
"அஷ்வீ...." என உண்மையில் பல்லை கடித்தவன்
"ஓகே ஓகே சரண்டர்.... நீ உன் காதல் புருஷன மாமான்னே கூப்டுகோ... நானே விட்டுத்தறேன்....அம்மு நீ அண்ணாவ அத்தான்னே கூப்புடு"எனவும் விழி விரித்து அவனை பார்த்தாள் கயல்விழி...
"ஆ...அஃது... அந்த பயம் இருக்கட்டும்...." என்ற அஷ்வி சற்று முன்னே வர அவள் தலையில் நங்கென கொட்டி விட்டு ஓட
"பாருங்க தேவ்....ஆருவ.... கொட்டிட்டான்... ரொம்ப வலிக்குது" தலையை தடவிக் கொண்டே தன் கணவனிடம் புகார் வாசித்தாள் அவள்....
"குட் ஜாப் ஆரு...காலைல எனக்கு கொட்டினல்ல...." என பழிப்பு காட்டி விட்டு கயலும் ஆரவ்வை இலுத்துக் கொண்டு தங்களறைக்கு விரைய
"இருடி...மாட்டாமயா போவ...." என்றவள் அப்போது தான் திரும்பி தன்னவனை பார்த்தாள்.
அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் கட்டுண்டு போனாள் பாவையவள்....
இன்னதென்று வர்ணிக்க முடியாதவொரு புதியதோர் உணர்வு மனமெங்கும் வியாபித்திருந்தது அவளுக்கு.....
வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் ஓர் அவஸ்தையான உணர்வு....
இது தான் காதலா???
தன்னை தானே கேட்டுக் கொண்டவளுக்கு புரியாத புதிராய் ஒரு பதில்.....
அவனும் அவளையே இமைக்க மறந்து ரசித்திருக்க அவன் கண்களை சந்திக்க முடியாமல் கண்ணங்கள் சிவப்பேற தலையை குனித்துக் கொள்ளவும் இளம் முறுவலொன்று உதயமானது அந்த கட்டிளம் காளைக்கு!!!
அது அவனுக்காக என்றதில் மனது இன்னுமின்னும் அவள் பால் அடித்துச் செல்லப்பட அதை தடை செய்வது போல் ஒலித்தது அவன் மொபைல்....
முகத்தில் எரிச்சலை அப்பட்டமாக காட்டியவன் அழைப்பது கதிர் என்று தெரிந்ததில் யோசனையாய் அடண்ட் செய்து காதில் வைத்தவன்
"எஸ் கதிர்..." என்றவாறே தள்ளிச் செல்ல விட்டால் போதுமென்று தங்களறைக்கு ஓடியே விட்டாள் அவன் மனையாட்டி.....
ரூமிற்குள் வந்தவளுக்கோ இன்னும் படபடப்பு அடங்கிய பாடாய் இல்லை...
எப்படி உணர்கிறாளென்று அவளுக்கே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க இதில் அவன் வேறு உற்றுப் பார்த்ததில் உண்மையில் இதயம் வேகமாக துடித்த சத்தம் தனக்கே கேட்குமளவுக்கு இருக்கவும் தான் அவன் நகர்ந்ததும் அவசரமாக வந்து விட்டாள்.
இதுவரை எப்படியோ ஆனால் இனி சத்தியமாக அவன் முகத்தை கூட பார்க்க முடியாமல் போகப் போகிறது என்பது மட்டும் தெள்ளென புரிந்து விட்டது அவளுக்கு....
இப்போது என்ன செய்வது?எப்படி அவனை தவிர்ப்பது என தீவிரமாக யோசித்தவள் அவன் வரும் முன் அவசரமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....
கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தவன் இன்டர்காமில் கதிரை அழைத்தான்.
அவன் அனுமதி பெற்று கதிர் உள்ளே நுழைந்த மறு நொடி அவனுக்காகவே காத்திருந்தவன் போல்
"வொய் கதிர்.... எனிதிங் சீரியஸ்?" என்க
"எஸ் சார்... நமக்கு கிடச்ச தகவல்படி பாத்தா அடிபட்டு வந்தவனுங்கள்ள எல்லோருக்குமே ஒரே பூத்ல இருந்து தான் கால் வந்திருக்கு.... அதுவும் ஒரே நேரத்துல..."
"வாட்....பட் ஹௌ இஸ் இட் பாசிபிள் கதிர்?"
"அதான் சார் குழப்புது"
"வெயிட் வெயிட்....அந்த பூத் எந்த ஏரியா?"
"இராமநாதபுரம் சார்"பட்டென பதில் வந்ததில் அவன் கண்கள் இடுங்கியது.
"இராமநாதபுரம்?"
"எஸ் சார்...." எனவும் நெற்றியை சுருக்கி தலையை குனிந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்து
"ஹரிஷ்கு கால் பண்ணது எந்த ஏரியா?"
"அதுவும் இராமநாதபுரம் தான் சார்"
"வாட்...?"அப்பட்டமாக அதிர்ச்சி வெளிப்பட்டது அவன் குரலில்
"எஸ் சார்....இரண்டும் ஒரே பூத் தான்"
"....."
"சார் அனன்யாவோட மொபைல ட்ரேஸ் பண்ண சொல்லியிருந்தீங்க"
"எஸ்...என்னாச்சு...எனி இன்பர்மேஷன்?"
"அதுல இருந்து அஷ்வினி மேடத்துக்கு கத்தி குத்துப்பட்ட அன்றைய நாளுக்கு முன்னால கூட ஒரு தடவ அதே பூத்துக்கு கால் போயிருக்கு..."
"...."
"அப்பறம் அமெரிக்கா கால் ஒன்னு வேற இவங்களோட மொபைலுக்கும் அதே பூத்துக்கும் கணக்ஷன் ஆகியிருக்கு"
என்றவனின் கூற்றிலேயே தெரிந்து போனது அவனுக்கு நிச்சயம் ராகேஷாகத்தான் இருக்க வேண்டுமென்று....
ஆனால் அந்த பூத்தில் பேசுபவன்????
அவன்தான் அவனின் கண்ணுக்கு தெரியா எதிரி!!!!
அடித்து சத்தியமிட்டு கூறியது உள்ளுணர்வு...
ஒருதடவை உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்காமல் பட்ட துரோகம் போதும் அவனுக்கு....
எதிரியை நெருங்கிக் கொண்டிருப்பது புரிந்தாலும் மனதில் ஏதோ இடறியது....
கதிரை பார்த்து
"கதிர்....அந்த பூத் கிட்டவும் நம்ம ஆளுங்கள ஏற்பாடு பண்ணிடு.... அண்ட் நம்ம கம்பெனிய சுத்தியும் ஏற்பாடு பண்ணு... சந்தேகம் வர்றா மாறி எவன் மாட்டுனாலும் நம்ம இடத்துக்கு கூட்டி வா..." என்றவன் இன்னும் சிலபல வேலைகளை பிறப்பித்து விட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
இரவு....
பால்கனியிலிருந்த சாய்வு நாற்காலியில் ஆரவ் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் இருந்த நீண்ட பெஞ்ச்சில் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல்விழி.
இருவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி...
எதனால்???
ரிஷியின் சிரிப்பை பார்த்துவிட்டு வந்த நிம்மதி கலந்த பூரிப்பு அது....
"அம்மு..."
"ம்... என்னடா?"
"நா இன்னக்கி எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"
எனறவனை காதலாக பார்த்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அதில் அதே அளவு காதலுடன் அவளை பார்த்தவன்
"ஐ லவ் யூ சோ மச் அம்மு..."எனவும்
"சரி...என்ன சொல்ல வந்த?"
"அண்ணா முகத்துல பாத்த சிரிப்ப கண்டதுமே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமாடி?"
"...."
"அவங்க மனசு விட்டு சிரிக்கிறத பாத்து எனக்கு அப்பிடியே அவங்கள அணச்சிகனும்னு தோனிச்சி அம்மு"
"செஞ்சிருக்க வேண்டியது"
"உன் வயித்தெரிச்சல எதுக்கு கொட்டிக்குவானேன்னு தான் பேசாம இருந்துட்டேன்டி" என்றுவிட்டு கண்ணடிக்கவும் அவனை முறைத்தவள் அவன் முதுக்குக்கே இரண்டு போடு போட்டாள்.
"அவர் எப்பவும் நல்லா இருக்கனும் அம்மு"என்றவனின் குரல் கரகரத்தது.
அதில் பதறிப்போய் அவன் தோலை தொட இலேசாய் முறுவலித்தவன்
"ஹீ இஸ் மய் ஹீரோ அம்மு...ஹீ இஸ் மய் டாட்..." என்றவனின் கண்களிலிருந்து மலுக்கென கண்ணீர் கண்ணத்தை தொட்டது.
அவனை தன் புறம் திருப்பி அவன் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்தவள் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
"ஒனக்கு தெரியுமா அம்மு...டாட் இறந்தப்போ நா ரொம்ப அழுதேன்... என்னால அத ஜீரனிச்சிக்கவே முடியலடி... அப்போ அண்ணா என்ன செய்வார் தேரியுமா?"
"...."
"என்ன அவர் மடியில படுக்க வெச்சி நா தூங்கும் வர என் தலைய தடவிகிட்டே இருப்பாரு....ஆராவ ஏற்கனவே சமாதானம் பண்ணி தூங்க வெச்சிருப்பாரு"
"...."
"அவருக்கு கவல இல்லன்னு நெனக்கிறியா அம்மு... நோ...நா தூங்கும் வர இருந்துட்டு எழுந்து போய் நிலாவ வெறிச்சிகிட்டு மௌனமா அழுகுறத நா எத்தனயோ தடவ கண்டிருக்கேன் அம்மு... அவர் அழுதா நா அழுவேன்னு தெரிஞ்சி என் முன்னால சந்தோஷமாவே காட்டிக்குவாரு...ரியலி ஹீ இஸ் க்ரேட்"
"...."
"டாட்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அம்மு"
"என்னடா சொல்ற?"
"அவர் இறந்தப்போ வந்தாங்க... அது வர அவங்கள நா பார்த்ததே இல்ல...அண்ணாவும் தான்..."
"...."
"எதுக்காக வந்தாங்கன்னு நினைக்கிற?"
"அவங்க அண்ணாவ பாக்க"
"நோ அம்மு...அவங்க வந்தது டாட் ஓட சொத்த எடுக்குறதுக்காக"
"வாட்?"
"அது எல்லாமே அண்ணாவோட பேருலயும் என் பேரு அப்பறம் ஆராவோட பேருல இருக்குறத தெரிஞ்சிகிட்டு கோபமா பொய்ட்டாங்க"
"...."
"அவங்க போகும் போது தவறுதலா என் கை அவங்க மேல பட்டுடுச்சுன்னு எனக்கு அறஞ்சாங்க.... அடுத்த கண்ணத்துல விழ வேண்டிய அடிய என் அண்ணா வாங்கிகிட்டான்"
"...."
"அவரு ரொம்ப மெச்சூட் அம்மு... அத்தய கை நீட்டி எச்சரிச்சாரு அந்த வயசுலயே"
"...."
"டாட் இறந்தப்போ கூட அவர் அப்செட் ஆகி நா பாத்ததில்ல அம்மு...பட் ஆ...ஆராவோட பிணம் வீட்டு முன்னுக்கு வெச்சிருந்தப்போ...."
அவன் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.அதை புறங்கையால் துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.
"ஆ..ஆரான்னா அண்ணாக்கு உயிர் அம்மு... என்ன போல கெடயாது... அண்ணாவ போல ரொம்ப மெச்சூட்"
"ஆரு கஷ்டம்னா விடுடா...உன்ன பாக்க முடியல"அவளும் அழுதாள்.
"ஆ...ஆராவ...ஆராவ.."தொண்டை அடைத்தது அவனுக்கு...
"..."
"அவளுக்கு அப்போ பண்டிரெண்டு வயசு அம்மு....அ...அவள... அவள கசக்கிட்டாங்க அம்மு...மு...மு... முகமெல்லாம் ஆசிட்.... எ... எனக்கு பாக்கவே பயமா இருந்துதுடி"குழுங்கிக் குழுங்கி அழுதான் அவன்....
"ஆரு...ஆரு...வேண்டாம் விடு"
"அ...அண்ணா...அண்ணா அழுதாங்கடி.... என் கண்ணு முன்னால அவள கட்டிபிடிச்சிகிட்டு அ..அழுதாங்க....கதறி துடிச்சாங்கடி... என் ரிஷி அழுதத என்னால தாங்கிக்வே முடியல அம்மு.... நானும் அழுதேன்... அண்ணா அழுதுகிட்டே இருந்தாங்க... சாப்புடாம அவ போட்டோவையே கட்டிபிடிச்சிகிட்டு வெறும் தரைல தூங்குவாங்க அம்மு....ரா...ராத்திரி திடீர்னு ஆ..ஆரான்னு கத்துவாங்க... என்னால அவர பாக்கவே முடில அம்மு..."
"...."
"எ...எனக்கு ரொம்ப லோன்லியா ஃபீல் ஆச்சு... அதுக்கு மேல பொறுத்துக்க முடியாம அவர் கூடவே நானும் தரைல படுப்பேன்...அ... அப்பறம் தான் அ...அவருக்கு என்ன ஞாபகமே வந்துது அம்மு...."
"...."
"அதுக்கப்புறம் டோட்டலா சேஞ்ச் ஆவிட்டாங்க.... எனக்காக வாழ ஆரம்பிச்சாங்க அம்மு... அவங்குளுக்கான எந்த ஆசையையும் நா இது வர பார்த்ததே இல்லடி...."
"...."
"ஒரு அப்பாவோட பொறுப்பு எப்பிடி இருக்குமோ அத தான் எனக்கும் பண்ணினாங்க அம்மு.... எனக்கு அப்பாவா மட்டுமில்லாம அம்மாவாகவும் அரவணைப்பா இருந்தவரு அம்மு என் அண்ணன்..."
"..."
"அவரு என்கிட்ட அண்ணனா பாசத்த பொழிஞ்சத விட ஒரு அப்பாவாதான் கண்டிப்பு காட்டியிருக்காரு"
"ரியலி ஹீ இஸ் க்ரேட் டா..." என்றவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான்.
மனதிலில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி விட்ட நிம்மதி அவனுள்!!!!
........
அவனுக்கு பயந்து பாத்ரூமிற்குள் நுழைந்து ப்ரஷப்பாகிவிட்டு வெளியே வந்தவளை வெற்று அறையே வரவேற்றுக் கொண்டிருந்தது.
ஹப்பாடா என மூச்சு விட்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன ஏமாற்றம் ஒன்று பரவுவதை தடுக்கத்தான் முடியவில்லை....
நேரே பால்கனிக்கு சென்றவள் அதில் இருந்த கூடை நாட்காட்டியில் ஏறி அமர்ந்தபடி தனக்குள் மூழ்கிப் போனாள்.
இன்று ஆரவ் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தது.
அன்று அபி கேட்ட போது இதே வாயால் அவன் மேல் காதல் இல்லையென்ற மனது தான் இன்று காதல் தான் என்று அடித்துக் கூறுகிறது.
அவரும் என்னை லவ் பண்ணுவாரா? என்ற ஒற்றை கேள்வியில் இருந்த சந்தோஷமெல்லாம் காற்றுப் போன பலூன் போல் வடிந்துப் போயிற்று!!!
((அட மக்கே...உனக்கு வர முன்ன ஆள் டோட்டல் அவுட்மா))
அந்த மேனா மினுக்கி அனன்யாவால் பெண்களையே வெறுத்திறுப்பவனுக்கு தன் மீது காதல் வருமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
அவருக்கு வர்லன்னா என்ன...அதான் அவருக்கும் சேத்து லவ் பண்ண நா இருக்கேனே...
தான் காதல் சொல்லப் போகும் அழகிய தருணத்திற்காக காத்திருக்க தொடங்கிய இதே மனது தான் அவனை வெறுத்து ஒதுக்கவும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரந்த பேதைக்கு சொல்லி புரியவைப்பது!!!
தொடரும்......
16-04-2021.
தன் முன் அமர்ந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரின் கண்களையும் ஆராய்ந்தான்....
அவனுக்குத்தான் தன் பின்னால் உள்ளவர்களை தெரியாது....ஆனால் அவர்களுக்கு தெரியுமல்லவா????
அதனாலேயே அவர்களின் கண்களை கூர்ந்து கவனிக்க துவங்கினான்.
அதில் ஓரத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் நேரே வாசல் புறமாக ஒருவன் கத்தியுடன் நின்றிருப்பது புரிய பார்வையை இன்னும் கூர்மையாக்கி அலசத் தொடங்கினான்.
அவன் டேபிளுக்கு முன்னே இருந்த டேபிளில் இருந்த இரண்டு பேரும் சாதாரணமாக சாப்பிடுவது போல் இருந்தாலும் அவனையும் அவன் மனையாளையும் அடிக்கடி திரும்பித் திரும்பி பார்த்திருப்து புரிந்தது.
அதேநேரம் சர்வர்களில் ஒருவன் வேலை செய்வது போல் பாவ்லா காட்டிக் கொண்டு இருந்தான்.
அவர்களுக்கு சந்தேகம் வராத வண்ணம் சட்டென அஷ்வினியிடம் குனிந்தவன் ஹஸ்கி வாய்ஸில்
"அஷு...நா பேசுறேன்னு நிமிர்ந்து பாக்காத" என எச்சரிக்கவும் அவனை பார்க்கப் போனவள் தலையை குனிந்தவாறே சம்மதமாக ஆட்டினாலும் மனது ஏதோ நடக்கப் போவது போல் திக்கென்றதில் பயந்து பொனாள் பாவையவள்....
"எ...என்ன தேவ்... எனி ப்ராப்ளம்?எனக்கு பயமா இருக்கு"
"ஷ்...அஷு நான்தான் பக்கத்துல இருக்கேன்ல... அப்பறமும் என்ன பயம்?"
"ம்..."
"இப்போ நா சொல்றத அடுத்தவங்களுக்கு சந்தேகம் வராத படி பண்ணு... ஓகே?"
"ஓகே"
"உன் நொண்ணன் அஜய்க்கு மேசேஜ் போட்டு அவன ஒடனே இங்க வர சொல்லு"
"பட் தேவ் அவரு எதுக்கு... நீங்க ரெண்டு பேருமே கண்டாலே முட்டிக்கிறீங்க?"
"அஷு... இந்த விஷயத்துக்கு வருண் சரிப்பட மாட்டான்... உன் ரவுடி அண்ணன் அஜய்தான் சரி... அவன வர சொல்லு...கமான் க்விக்" எனவும் அடுத்த நொடி அவனுக்கு மேசேஜ் போயிருந்தது.
மீண்டும் ஒருமுறை அலசியவன் அவர்கள் அங்கேயே இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு அசைட்டையாய் இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
நிலைமை புரியாத அஷ்வினியின் நண்பிகள் தங்களுக்குள் கிசுகிசுப்பதும் செல்ஃபி எடுப்பதுமாக இருக்கவும் அபியை அடையாளம் கண்டு கொண்டவன்
"அபி...எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே நீ?"எனவும் ஆச்சரியமாய் அவனை பார்த்தவள்
"சார்...நீங்க என்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கீங்க...என்ன பண்ணனும் சார் சொல்லுங்க?"
அந்த சர்வர் இருந்த இடத்தை துள்ளியமாய் கூறியவன்
"அவன் பக்கத்தால போயி சாதாரணமா நடக்குறது மாதிரி அவன் மேல எதயாவது கொட்டி விட்டுடு" எனவும் ஏதோ விபரீதம் என்பதை நொடியில் புரிந்து கொண்ட அவளது லாயர் மூலை அதற்கான வேலையில் இறங்கத் தொடங்கியது.
மீண்டும் அஷ்வினியிடம் குனிந்து
"அஷு...பயப்புடாத... பயப்புட்டோம்னா அவனுங்க உஷாராயிடுவானுங்க" என்க டேபிள் அடியிலிருந்த அவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள் கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட கண்களை இறுக்க மூடி திறந்தவன் அவள் கைகளுக்கு தைரியமூட்டும் வகையில் அழுத்திக் கொடுத்தான்.
"அஷு...நா வாஷ் ரூம் போறேன்...பி கேர்புல்...ஓகே?"
"நோ தேவ் என்ன விட்டு எங்கேயும் போகாதிங்க..... உங்களுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கவே முடியாது" என்றவளை வளைத்து இறுக்கி அணைக்கவும் நண்பர் கூட்டம் "ஹோ...."என கூச்சலிட்டது.
அதில் சட்டென அவளை விட்டவன் அஜய் வருகிறானா என கவனமாய் அலச நல்லவேளையாக பக்கத்தில் ஏதோ வேலைக்கென்று வந்திருந்தவன் பதற்றமாய் உள்ளே நுழைந்தான்.
ரிஷி எழுவான் என எதிர்ப்பார்க்காதவர்கள் உஷாராக அதற்குள் அஜய் பக்கத்தில் வரவும் அவனை கூர்ந்து பார்த்தவன் வாஷ்ரூமிற்குச் சென்றான் வேட்டையாடப்போகும் வேங்கையின் வேகத்தில்.....
ரிஷி செல்வதை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை....
தனியாக பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பாள் என யூகித்து வந்தவனுக்கு ரிஷியும் கூடவே இருக்க எதற்காக அழைத்தாள் என்பதில் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது.
தான் வாஷ்ரூம் செல்லும் வினாடி கூட தன்னவளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என யூகித்தே பிரச்சினையை சட்டென சமாளிக்கும் திறன் கொண்ட அவனை வரவழைத்திருப்பது அவனுக்கு எங்கே தெரியப்போகிறது!!!
அவசரமாக அஷ்வினியின் பக்கத்தில் வந்தவன் அவள் தோல் தொடவும் ஏற்கனவே பயந்திருந்தவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
"ஹேய் அஷ்வி...ரிலாக்ஸ்... நான் தான் பயப்படாத" என்றவாறே ரிஷியின் இடத்தில் அமர்ந்து கொள்ள நண்பிகளின் கவனம் இவன் புறம் திரும்பியது போலவே சுற்றி நின்று கொண்டிருந்த எதிரிகளின் கவனமும் அவனிடம் திரும்பியது.
அபியின் தயவில் அங்கு போலி சர்வராக நின்றிருந்தவனுக்கு காபி அபிஷேகம் நடைபெற அவனும் எரிச்சலுடன் அபியிடம் ஏதும் சொல்ல முடியாமல் வாஷ்ரூம் சென்றான்.
தன் உடையில் இருந்ததை துடைத்துக்கொண்டு இருந்தவனின் பின்னால் வந்து நின்ற ரிஷி இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி கால்களை சற்று அகற்றி அவனையே பார்த்தபடி நின்றிருந்தான்.
துடைக்கும் அவசரத்தில் முதலில் கவனிக்காமல் விட்ட அந்த சர்வர் திடீரென ரிஷி அவன் மூக்கை பொத்தவன் அவனைக் கண்ட அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவனிடமிருந்து விடுபட திமிரினான்.
அப்பொழுதென்று பார்த்து வாஷ்ரூமிற்குள் யாரும் வராததும் நம்ம ஹீரோவுக்கு வசதியாய் போயிற்று!!!
அவனை அப்படியே இழுத்துக் கொண்டு சற்று ஒதுக்குப்புறமாய் இருந்த சுவற்று மறைவுக்கு கொண்டு சென்றவன் அவனை விடுவித்து அவன் சுதாரித்து ஓடும் முன் விட்டான் இடது கண்ணத்தில் பளாரென்று....
அவன் விட்ட அறையில் காது ஜவ்வு கிழிந்து இரத்தம் வராத குறையாக அவனின் காதுக்குள் கொய்ங்... எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததென்றால் அது மிகையாகாது....
அவன் தடுமாறி நிற்க அவன் முகத்தில் ஒரு குத்து விட்டவன் இரத்தம் வருவது தெரிந்தும் அடங்காமல் அவனை துவைத்து எடுத்து விட்டான்.
தாமதிக்காமல் கதிருக்கு அழைத்தவன்
"கதிர்... ஹோட்டல் சம்யுக்தாகிட்ட நம்மாளுங்கள அனுப்பு...அதுவும் பின்வழியா..." என்றவன் அவன் பதில் பேசுமுன் துண்டித்து விட்டான்.
பதற்றத்திலிருந்த அஷ்வினிக்கு நண்பர்கள் கேட்டது சீண்டியது எதுவுமே காதில் விழவே இல்லை.... ஏதோ திக்மிரமை பிடித்தவள் போல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க விஷயம் தெரியாத அஜய்க்கு ரிஷியை கொன்று போடும் வெறி....
அவன் சற்றும் எதிர்பாரா விதத்தில் நடை பெற்றது அந்த சம்பவம்!!!
அடுத்தவர்களுடன் பேசிக் கொண்டே இருந்த கவி அஜய்யின் பின்னால் திடீரென ஒருவன்(வாசலில் கத்தியுடன் நின்றிருந்தவன்) கையில் கத்தியை ஓங்கயவாறு குத்துவதற்கு வரவும் "அண்ணா....பின்னால" என கத்தவும் சட்டென தன்னை சுதாரித்தவன் மேசே மேலிருந்த தண்ணீர் க்ளாஸை எடுத்து அவன் மண்டையிலேயே உடைத்தான்.
திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் நிலை தடுமாறிய சமயம் அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டவன் பெண்களை பாதுகாப்பாக ஓரத்தில் நிற்குமாறு கூறி விட்டு அவனிடம் வந்து அவன் உயிர் நாடிக்கே ஓங்கி ஒரு உதை விட அவன் அப்படியே கீழே சரிந்தான்.
அதற்குள் ஏற்கனவே டேபிளில் இருந்த இரண்டு பேரும் அஜய்யின் பின்னால் கத்தியுடன் வந்து நின்றிருக்க வெளியிலிருந்து இன்னும் நான்கு பேர் வேறு தங்கள் ஆயுதங்களுடன் வந்து நிற்க அஷ்வி "அண்ணா" என கத்தவும் சட்டென அவன் திரும்பிய சமயம் பின்னாலிருந்தவன் கத்தியை அவன் கழுத்துக்கு குத்தப் போக அவன் கையை மடக்கி பிடித்தது ஒரு வலிய கரம்....
((வேற யாருங்க....எல்லாம் நம்மாளுதான்....))
வாஷ்ரூமிற்குள் பிடித்தவனை அவன் வந்த அடையாளமே தெரியாதவாறு தங்கள் ஆட்களிடம் ஒப்படைத்தவன் திரும்பி உள்ளே வரும் போது தான் இது நடந்தேறியது...
அவன் கையை கத்தியுடனேயே முறுக்க அவனிலிருந்து கத்தியும் விடுபட்டு கீழே விழுந்த மறுநொடி அஷ்வினி"தேவ்..." என பயத்தில் அலறியபடி ஓரெட்டு முன்னால் வைக்கப் போக
"அஷ்வினி...ஸ்டாப்... டோன்ட் மூவ்...ஸ்டே தேர்..." என்ற ரிஷியின் சீறலில் அபியை இறுக்க கட்டிக் கொண்டாள்.
தன் எதிராலியிடம் திரும்பியவன்
"என் மச்சினன் மேலயே கை வெக்க போறியா?" எனவும் அஜய்யின் முகத்தில் புன்முறுவல் பூத்ததுவோ...
"ஏன்டா...உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல..... இப்போதான் ஒருத்தன உம்முன்னால அந்த காட்டு காட்டியிருக்கான்..... கொஞ்சமும் பயமே இல்லாம அவன் மேல கை வெக்க போற.... உன்ன என்னதான் பண்றது...ஹாங்... இந்த கைய ஒடச்சிடலாம்...ஓகே?"
சிரித்த முகமாய் எள்ளல் வழியும் குரலில் கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென பழிவெறி பளபளக்க அடுத்த நிமிடம் "அம்மா..."என துடித்துக் கொண்டே அவன் கீழே விழுந்தான்.
அதற்குள் அஜய்க்கு முன்னால் இருந்தவர்கள் அடிக்கத் துவங்க அவர்களை அவன் பந்தாடத் துவங்கி விடவும் அஜய்யிற்கு பின்னாலிருந்த மற்றையவனை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி....
அவனையும் அசால்ட்டாக அடித்து துவைத்தெடுத்தவன் அஜய்யின் புறம் திரும்ப உண்மையில் திடுக்கிட்டுத்தான் போனான்.
ஏனெனில் அஜய் அடித்துக் கொண்டிருந்தது அஷ்வினி இருந்த பக்கம்...ரிஷி தற்போது நின்றிருப்பது வாஷ்ரூம் பக்கம்....
இதில் இடையில் பின்னால் இருப்பவர் விளங்காத அளவுக்கு சுவர் வேறு இருக்க அந்த சுவற்றுக்கு பக்கத்தில் புதிதாக ஒருவன் நின்றிருந்ததை அஜய் கண்டிருக்க வாய்ப்பே இல்லை.... ரிஷிக்கு மட்டுமே அவன் தெரிந்திருக்க அவனோ அஜய்யின் முதுகுக்கு கூரிய ஒரு ஆயுதத்தை கொண்டு சென்று கொண்டிருந்தான்.
இப்போது ரிஷி அவனருகில் சென்றாலும் அதற்குள் அந்த கத்தி இறங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்!!!
இப்படியிருக்க என்ன செய்வது என யொசித்தவன் சட்டென தன் அருகிலிருந்த டேபிளில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூஞ்சாடியை எடுத்து அவன் மண்டைக்கே குறி பார்த்து வீச அது சரியாக அவன் பின் மண்டையிலேயே சென்று மோதியது.
பட்ட வேகத்தில் அவன் தலை மட்டுமன்றி அவன் உடலும் முன் செல்ல அடுத்து நடக்கப்போவதை உணர்ந்த ரிஷி
"ஏய் அஜய் மூவ்..." என கத்தவும் அது அவனுக்கு விளங்கித் தொலைத்தால் தானே நகர!!!
கடுப்பான ரிஷி "டேய் அஜய்....மடயா மூவ்" என கத்தவும் தான் அவன் வார்த்தைகளில் கோபம் கொண்டு திரும்பியவன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் கூரிய ஆயுதத்தை கண்டு ஸ்தம்பித்து தன்னிலையை இழுத்துப் பிடித்தவன் சட்டென விலகவும் அவன் முன்னிருந்தவனின் காது மடலை உரசிச் சென்று "ணங்"என்ற சத்தத்துடன் கீழே விழுந்து நர்த்தனமாடியது.
கோபத்தில் இருந்தவனின் முகம் நன்றியுணர்வோடு ரிஷியை பார்க்க அவன் அதை கண்டு கொள்ளாமல் தன்னவளிடம் விரைந்தான்.
அதில் அவனுக்கு இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை... ஆனால் ஏதோ ஒரு சுவாரஷ்யம்....
அவனை பற்றி முழுதாக அறிந்து கொண்டே ஆக வேண்டுமென்கிற ஆவல்!!!
இதில் அவர்களே எதிர்ப்பார்க்காதது தான் கமிஷ்னர் மதன்சிவாவின் வருகை....
எப்படி அந்த நேரத்தில் அங்கு வந்தான் என்பது தெரியாவிட்டாலும் தன்னை சுற்றி ஏதோ நடப்பது போலவே இருந்தது அவனுக்கு....
((அடேய் பக்கி...அவன் தற்செயலா வர்லடா... எல்லாம் கூட்டு கலவானிங்க...ஜாக்கிரத ஆமா))
அஷ்வினியிடம் போனவன் அவளிடம் நெருங்காமலேயே மதனிடம் சென்று விட அஜய் தன் தங்கையை நெருங்கினான்.
ஆறுதல் தேட தாய் மடியை எதிர்ப்பார்த்து இருந்தாளோ என்னவோ அவன் வந்து நின்றதுமே அவனை பாய்ந்து கட்டிக் கொண்டு கதறித் தீர்த்து விட்டாள்.
மதனிடம் கை குழுக்கியவன் நடந்ததனைத்தையும் ஒன்று விடாது கூறிவிட்டு அவர்களை தன்னிடம் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்ளவும்
"இவரு பேசாம போலீசுக்கே படிச்சிருக்கலாம்.... பாவம் எவன் டெட் பாடிய சூஸ் பண்ணி அவனுங்களுக்கு அனுப்ப போறாரோ....." என நினைத்து விட்டு வெளியே விறைப்பாய்
"அண்...அ..அது சார் சம்பவம் நடந்த இடத்துக்கு நாங்க வந்துட்டதால இதுல நிறைய ப்ரொஸீஜர்ஸ் இருக்கு அண்...சார்...அதனால..."
என்றவனை இடை நிறுத்தியவன் அவனை கூர்மையாய் அளவிட்டபடி
"சோ வாட்?கொல முயற்சி நடந்ததுக்கு ஆதாரமா உங்களுக்கு வேனா இவங்க தேவப்படலாம்... பட் எனக்கு இவங்க என் கண்ட்ரோலுக்கு வந்தே ஆகனும்... தட்ஸ் இட்" எதிர்த்து பேச வாயைத் திறந்தவன் அவன் குரல் கடுமையில் கப்பென மூடிக் கொண்டான்.
"ஓகே அண்..சார்" என்றவன் அப்போதுதான் தன்னை புருவம் சுருக்கி பார்த்திருக்கும் தன் ஆருயிர் நண்பியை கண்டான்.
அழுது அழுது சோர்ந்து போயிருந்தாலும் அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாக வெளிப்பட்டதில் எங்கே இருந்தால் பேச வந்தே மாட்டி விடுவாள் என நினைத்தவன் அவசரமாக வெளியேறி விட்டான்...
அவனையே நெற்றி சுருக்கி பார்த்திருந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்தவனுக்கு அப்பொழுதுதான் தன் மனையாள் இருப்பதே மண்டையில் உறைக்க அவளருகில் செல்லவும் அவனை காண நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவனை இறுக்கத் தழுவிக் கொண்டாள்.
நண்பர்களும் அஜய்யும் விடை பெற்று சென்றுவிட அவளை தன் கை வளைவுக்குள்ளேயே வைத்தவாறு வெளியேறினான்.
விதி வலியது....
இரவு....
வீட்டு ஹாலில் நாள்வரும் ஒருவித இறுக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுதும் கூட அஷ்வினி ரிஷியின் கைவைளைவுக்கு உள்ளேயே அமர்ந்து கொண்டு இருந்தாலும் அவளையும் மீறி உடல் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.
அவனை இம்மியளவும் அசையவிடாது அவன் கையை இறுக்கப் பிடித்திருக்க அவள் பயமறிந்து அவனும் அவளை தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தான்.
முதலில் மௌனத்தை கலைக்க விரும்பிய கயல்
"ஏன் மாமா..." என்றுவிட்டு நாக்கை கடித்தவள்
"இல்ல...இவ்வளவு நடந்திருக்கு.... ஏன் நீங்க கால் பண்ணல?"
"நம்ம வீட்டு ஆளுங்கள அவனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு.... அதனாலதான் ஆருவ கண்டாக்ட் பண்ணல"
"மாமா... நா ஒங்கள அண்ணானு கூப்புடட்டுமா?"
"வாட்....?அஷு அக்கா நா அண்ணனா?"
"வேற என்ன பண்றது மாமா... அஷ்விக்கு நா உங்கள மாமான்னு கூப்புட்றது புடிக்கலயாம்.... மீறி கூப்டா ஆருவ தாத்தான்னு கூப்புடுவேன்னு மெரட்றா" எனவும் ரிஷி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்க ஆரவ் அதிர்ச்சியாய் அஷ்வியை முறைத்தான்.
"ஏன் அம்மு உன் அக்காக்கு அவ புருஷன் மேல காதல்னா வேற பேரு சொல்லி கூப்புட சொல்லு.... அத விட்டுட்டு ஏன் இந்த அப்பாவி மேல கொலவெறி"
என்றுவிட்டு தன் நண்பியை மீண்டும் முறைக்க அவள் பயத்தை விடுத்து கலகலத்து சிரிக்க தன்னவள் சிரிப்பில் ரிஷிக்கும் புன்னகை பூத்தது.
"இப்போவே எனக்கு பதில் சொல்லுங்க மாமா" எனவும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளை முறைக்க அவள் தன் மீது எடுத்துக் கொண்ட உரிமையில் அவன் காதல் இன்னும் கூடியது.
"அத்தான்னு கூப்புடு" என்றவனை ஆரவ் முறைக்க விஷயம் புரிந்தவனாய்
"ஓ..அதுல கூட சிக்கல்தானா?என்ன பண்றது கயல்..?ம்..?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது... ஒன்னு அண்ணாண்ணு கூப்புட்றேன்.... இல்லன்னா சார்னு கூப்புடுவேன்.... சொல்லிட்டேன் ஆமா?"
"என்னது..சாரா... அதுக்கு அண்ணனே தேவலை"
"அப்பொ அண்ணான்னே கூப்டலாம்ல?"
"நோ கயல்விழி....அது தப்புமா" பொறுப்புள்ளவனாய் எடுத்துக் கூறவும்
"மாமா....என் ஆரு பாவம்.... உங்க பொண்டாட்டி மானத்தை வாங்காம விடமாட்டா" எனவும் ரிஷி மறுபடி சிரிக்க அஷ்வினி கயலை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தாள்.
"ஆக என் தலதான் உருளப்போகுது....அதானே?"ஆரவ் போலிக் கோபத்துடன் தன் உயிர் நண்பியை முறைக்க
"இல்லங்க ஆரு தாத்தா.... உங்க மேல கை வைக்க யாருக்கு தைரியம்?"என கேட்டு அவனை அலறவிட ரிஷியும் கயலும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"ஏய் ராட்சஸி... மரியாதயா ஒழுங்கா கூப்புடு....இல்லன்னா நானும் உன்ன ராட்சஸின்னே கூப்புடுவேன் பாத்துக்கோ"
"முடியாது போங்க ஆரு தாத்தா...."
"உன்ன...." என்றவாறு அவளை அடிக்கத் துரத்தவும் ரிஷியிடமிருந்து விலகி துள்ளி ஓடினாள் அவள்...
சிரித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மேலும் சிரிப்பு வர சிரித்துக் கொண்டே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்படி வாய்விட்டு சிரித்து எவ்வளவு நாளாயிற்று....
வெறிச்சோடிக் கிடந்த வீட்டுக்கு உயிர்ப்பை கொடுத்துக் கொண்டிருப்பவள் அவள்.....
மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத தன்னலளையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் மேல் இன்னுமின்னும் காதல் பல்கிப் பெருகிற்று!!!
"தேவ்...என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்..."என கத்திக் கொண்டே வந்து அவன் பின்னே மறைய
"ராட்சஸி....மரியாதயா வெளிய வா"
"முடியாது ஆரு தாத்தா....."எனவும் ரிஷி மீண்டும் வாய்விட்டு சிரிக்க அவனையே நிம்மதியாய் பார்த்தான் ஆரவ்.....
எத்தனை நாளாயிற்று இவனை இப்படி சிரித்து பார்க்க.... தன் தோழிக்கு மானசீகமாய் நன்றி உறைத்தவன் வெளியே கோபம் போல் காட்டிக் கொண்டான்.
"அப்போ ஓகே...நீ வர மாட்ட அப்பிடித்தானே?"
"ஆமா தாத்தா.... அதிலென்ன சந்தேகம்?"
"அஷ்வீ...." என உண்மையில் பல்லை கடித்தவன்
"ஓகே ஓகே சரண்டர்.... நீ உன் காதல் புருஷன மாமான்னே கூப்டுகோ... நானே விட்டுத்தறேன்....அம்மு நீ அண்ணாவ அத்தான்னே கூப்புடு"எனவும் விழி விரித்து அவனை பார்த்தாள் கயல்விழி...
"ஆ...அஃது... அந்த பயம் இருக்கட்டும்...." என்ற அஷ்வி சற்று முன்னே வர அவள் தலையில் நங்கென கொட்டி விட்டு ஓட
"பாருங்க தேவ்....ஆருவ.... கொட்டிட்டான்... ரொம்ப வலிக்குது" தலையை தடவிக் கொண்டே தன் கணவனிடம் புகார் வாசித்தாள் அவள்....
"குட் ஜாப் ஆரு...காலைல எனக்கு கொட்டினல்ல...." என பழிப்பு காட்டி விட்டு கயலும் ஆரவ்வை இலுத்துக் கொண்டு தங்களறைக்கு விரைய
"இருடி...மாட்டாமயா போவ...." என்றவள் அப்போது தான் திரும்பி தன்னவனை பார்த்தாள்.
அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் கட்டுண்டு போனாள் பாவையவள்....
இன்னதென்று வர்ணிக்க முடியாதவொரு புதியதோர் உணர்வு மனமெங்கும் வியாபித்திருந்தது அவளுக்கு.....
வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் ஓர் அவஸ்தையான உணர்வு....
இது தான் காதலா???
தன்னை தானே கேட்டுக் கொண்டவளுக்கு புரியாத புதிராய் ஒரு பதில்.....
அவனும் அவளையே இமைக்க மறந்து ரசித்திருக்க அவன் கண்களை சந்திக்க முடியாமல் கண்ணங்கள் சிவப்பேற தலையை குனித்துக் கொள்ளவும் இளம் முறுவலொன்று உதயமானது அந்த கட்டிளம் காளைக்கு!!!
அது அவனுக்காக என்றதில் மனது இன்னுமின்னும் அவள் பால் அடித்துச் செல்லப்பட அதை தடை செய்வது போல் ஒலித்தது அவன் மொபைல்....
முகத்தில் எரிச்சலை அப்பட்டமாக காட்டியவன் அழைப்பது கதிர் என்று தெரிந்ததில் யோசனையாய் அடண்ட் செய்து காதில் வைத்தவன்
"எஸ் கதிர்..." என்றவாறே தள்ளிச் செல்ல விட்டால் போதுமென்று தங்களறைக்கு ஓடியே விட்டாள் அவன் மனையாட்டி.....
ரூமிற்குள் வந்தவளுக்கோ இன்னும் படபடப்பு அடங்கிய பாடாய் இல்லை...
எப்படி உணர்கிறாளென்று அவளுக்கே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க இதில் அவன் வேறு உற்றுப் பார்த்ததில் உண்மையில் இதயம் வேகமாக துடித்த சத்தம் தனக்கே கேட்குமளவுக்கு இருக்கவும் தான் அவன் நகர்ந்ததும் அவசரமாக வந்து விட்டாள்.
இதுவரை எப்படியோ ஆனால் இனி சத்தியமாக அவன் முகத்தை கூட பார்க்க முடியாமல் போகப் போகிறது என்பது மட்டும் தெள்ளென புரிந்து விட்டது அவளுக்கு....
இப்போது என்ன செய்வது?எப்படி அவனை தவிர்ப்பது என தீவிரமாக யோசித்தவள் அவன் வரும் முன் அவசரமாக பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....
கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தவன் இன்டர்காமில் கதிரை அழைத்தான்.
அவன் அனுமதி பெற்று கதிர் உள்ளே நுழைந்த மறு நொடி அவனுக்காகவே காத்திருந்தவன் போல்
"வொய் கதிர்.... எனிதிங் சீரியஸ்?" என்க
"எஸ் சார்... நமக்கு கிடச்ச தகவல்படி பாத்தா அடிபட்டு வந்தவனுங்கள்ள எல்லோருக்குமே ஒரே பூத்ல இருந்து தான் கால் வந்திருக்கு.... அதுவும் ஒரே நேரத்துல..."
"வாட்....பட் ஹௌ இஸ் இட் பாசிபிள் கதிர்?"
"அதான் சார் குழப்புது"
"வெயிட் வெயிட்....அந்த பூத் எந்த ஏரியா?"
"இராமநாதபுரம் சார்"பட்டென பதில் வந்ததில் அவன் கண்கள் இடுங்கியது.
"இராமநாதபுரம்?"
"எஸ் சார்...." எனவும் நெற்றியை சுருக்கி தலையை குனிந்தவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்து
"ஹரிஷ்கு கால் பண்ணது எந்த ஏரியா?"
"அதுவும் இராமநாதபுரம் தான் சார்"
"வாட்...?"அப்பட்டமாக அதிர்ச்சி வெளிப்பட்டது அவன் குரலில்
"எஸ் சார்....இரண்டும் ஒரே பூத் தான்"
"....."
"சார் அனன்யாவோட மொபைல ட்ரேஸ் பண்ண சொல்லியிருந்தீங்க"
"எஸ்...என்னாச்சு...எனி இன்பர்மேஷன்?"
"அதுல இருந்து அஷ்வினி மேடத்துக்கு கத்தி குத்துப்பட்ட அன்றைய நாளுக்கு முன்னால கூட ஒரு தடவ அதே பூத்துக்கு கால் போயிருக்கு..."
"...."
"அப்பறம் அமெரிக்கா கால் ஒன்னு வேற இவங்களோட மொபைலுக்கும் அதே பூத்துக்கும் கணக்ஷன் ஆகியிருக்கு"
என்றவனின் கூற்றிலேயே தெரிந்து போனது அவனுக்கு நிச்சயம் ராகேஷாகத்தான் இருக்க வேண்டுமென்று....
ஆனால் அந்த பூத்தில் பேசுபவன்????
அவன்தான் அவனின் கண்ணுக்கு தெரியா எதிரி!!!!
அடித்து சத்தியமிட்டு கூறியது உள்ளுணர்வு...
ஒருதடவை உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்காமல் பட்ட துரோகம் போதும் அவனுக்கு....
எதிரியை நெருங்கிக் கொண்டிருப்பது புரிந்தாலும் மனதில் ஏதோ இடறியது....
கதிரை பார்த்து
"கதிர்....அந்த பூத் கிட்டவும் நம்ம ஆளுங்கள ஏற்பாடு பண்ணிடு.... அண்ட் நம்ம கம்பெனிய சுத்தியும் ஏற்பாடு பண்ணு... சந்தேகம் வர்றா மாறி எவன் மாட்டுனாலும் நம்ம இடத்துக்கு கூட்டி வா..." என்றவன் இன்னும் சிலபல வேலைகளை பிறப்பித்து விட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
இரவு....
பால்கனியிலிருந்த சாய்வு நாற்காலியில் ஆரவ் அமர்ந்திருக்க அவன் பக்கத்தில் இருந்த நீண்ட பெஞ்ச்சில் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல்விழி.
இருவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி...
எதனால்???
ரிஷியின் சிரிப்பை பார்த்துவிட்டு வந்த நிம்மதி கலந்த பூரிப்பு அது....
"அம்மு..."
"ம்... என்னடா?"
"நா இன்னக்கி எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"
எனறவனை காதலாக பார்த்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அதில் அதே அளவு காதலுடன் அவளை பார்த்தவன்
"ஐ லவ் யூ சோ மச் அம்மு..."எனவும்
"சரி...என்ன சொல்ல வந்த?"
"அண்ணா முகத்துல பாத்த சிரிப்ப கண்டதுமே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமாடி?"
"...."
"அவங்க மனசு விட்டு சிரிக்கிறத பாத்து எனக்கு அப்பிடியே அவங்கள அணச்சிகனும்னு தோனிச்சி அம்மு"
"செஞ்சிருக்க வேண்டியது"
"உன் வயித்தெரிச்சல எதுக்கு கொட்டிக்குவானேன்னு தான் பேசாம இருந்துட்டேன்டி" என்றுவிட்டு கண்ணடிக்கவும் அவனை முறைத்தவள் அவன் முதுக்குக்கே இரண்டு போடு போட்டாள்.
"அவர் எப்பவும் நல்லா இருக்கனும் அம்மு"என்றவனின் குரல் கரகரத்தது.
அதில் பதறிப்போய் அவன் தோலை தொட இலேசாய் முறுவலித்தவன்
"ஹீ இஸ் மய் ஹீரோ அம்மு...ஹீ இஸ் மய் டாட்..." என்றவனின் கண்களிலிருந்து மலுக்கென கண்ணீர் கண்ணத்தை தொட்டது.
அவனை தன் புறம் திருப்பி அவன் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்தவள் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
"ஒனக்கு தெரியுமா அம்மு...டாட் இறந்தப்போ நா ரொம்ப அழுதேன்... என்னால அத ஜீரனிச்சிக்கவே முடியலடி... அப்போ அண்ணா என்ன செய்வார் தேரியுமா?"
"...."
"என்ன அவர் மடியில படுக்க வெச்சி நா தூங்கும் வர என் தலைய தடவிகிட்டே இருப்பாரு....ஆராவ ஏற்கனவே சமாதானம் பண்ணி தூங்க வெச்சிருப்பாரு"
"...."
"அவருக்கு கவல இல்லன்னு நெனக்கிறியா அம்மு... நோ...நா தூங்கும் வர இருந்துட்டு எழுந்து போய் நிலாவ வெறிச்சிகிட்டு மௌனமா அழுகுறத நா எத்தனயோ தடவ கண்டிருக்கேன் அம்மு... அவர் அழுதா நா அழுவேன்னு தெரிஞ்சி என் முன்னால சந்தோஷமாவே காட்டிக்குவாரு...ரியலி ஹீ இஸ் க்ரேட்"
"...."
"டாட்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அம்மு"
"என்னடா சொல்ற?"
"அவர் இறந்தப்போ வந்தாங்க... அது வர அவங்கள நா பார்த்ததே இல்ல...அண்ணாவும் தான்..."
"...."
"எதுக்காக வந்தாங்கன்னு நினைக்கிற?"
"அவங்க அண்ணாவ பாக்க"
"நோ அம்மு...அவங்க வந்தது டாட் ஓட சொத்த எடுக்குறதுக்காக"
"வாட்?"
"அது எல்லாமே அண்ணாவோட பேருலயும் என் பேரு அப்பறம் ஆராவோட பேருல இருக்குறத தெரிஞ்சிகிட்டு கோபமா பொய்ட்டாங்க"
"...."
"அவங்க போகும் போது தவறுதலா என் கை அவங்க மேல பட்டுடுச்சுன்னு எனக்கு அறஞ்சாங்க.... அடுத்த கண்ணத்துல விழ வேண்டிய அடிய என் அண்ணா வாங்கிகிட்டான்"
"...."
"அவரு ரொம்ப மெச்சூட் அம்மு... அத்தய கை நீட்டி எச்சரிச்சாரு அந்த வயசுலயே"
"...."
"டாட் இறந்தப்போ கூட அவர் அப்செட் ஆகி நா பாத்ததில்ல அம்மு...பட் ஆ...ஆராவோட பிணம் வீட்டு முன்னுக்கு வெச்சிருந்தப்போ...."
அவன் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.அதை புறங்கையால் துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.
"ஆ..ஆரான்னா அண்ணாக்கு உயிர் அம்மு... என்ன போல கெடயாது... அண்ணாவ போல ரொம்ப மெச்சூட்"
"ஆரு கஷ்டம்னா விடுடா...உன்ன பாக்க முடியல"அவளும் அழுதாள்.
"ஆ...ஆராவ...ஆராவ.."தொண்டை அடைத்தது அவனுக்கு...
"..."
"அவளுக்கு அப்போ பண்டிரெண்டு வயசு அம்மு....அ...அவள... அவள கசக்கிட்டாங்க அம்மு...மு...மு... முகமெல்லாம் ஆசிட்.... எ... எனக்கு பாக்கவே பயமா இருந்துதுடி"குழுங்கிக் குழுங்கி அழுதான் அவன்....
"ஆரு...ஆரு...வேண்டாம் விடு"
"அ...அண்ணா...அண்ணா அழுதாங்கடி.... என் கண்ணு முன்னால அவள கட்டிபிடிச்சிகிட்டு அ..அழுதாங்க....கதறி துடிச்சாங்கடி... என் ரிஷி அழுதத என்னால தாங்கிக்வே முடியல அம்மு.... நானும் அழுதேன்... அண்ணா அழுதுகிட்டே இருந்தாங்க... சாப்புடாம அவ போட்டோவையே கட்டிபிடிச்சிகிட்டு வெறும் தரைல தூங்குவாங்க அம்மு....ரா...ராத்திரி திடீர்னு ஆ..ஆரான்னு கத்துவாங்க... என்னால அவர பாக்கவே முடில அம்மு..."
"...."
"எ...எனக்கு ரொம்ப லோன்லியா ஃபீல் ஆச்சு... அதுக்கு மேல பொறுத்துக்க முடியாம அவர் கூடவே நானும் தரைல படுப்பேன்...அ... அப்பறம் தான் அ...அவருக்கு என்ன ஞாபகமே வந்துது அம்மு...."
"...."
"அதுக்கப்புறம் டோட்டலா சேஞ்ச் ஆவிட்டாங்க.... எனக்காக வாழ ஆரம்பிச்சாங்க அம்மு... அவங்குளுக்கான எந்த ஆசையையும் நா இது வர பார்த்ததே இல்லடி...."
"...."
"ஒரு அப்பாவோட பொறுப்பு எப்பிடி இருக்குமோ அத தான் எனக்கும் பண்ணினாங்க அம்மு.... எனக்கு அப்பாவா மட்டுமில்லாம அம்மாவாகவும் அரவணைப்பா இருந்தவரு அம்மு என் அண்ணன்..."
"..."
"அவரு என்கிட்ட அண்ணனா பாசத்த பொழிஞ்சத விட ஒரு அப்பாவாதான் கண்டிப்பு காட்டியிருக்காரு"
"ரியலி ஹீ இஸ் க்ரேட் டா..." என்றவளை தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான்.
மனதிலில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி விட்ட நிம்மதி அவனுள்!!!!
........
அவனுக்கு பயந்து பாத்ரூமிற்குள் நுழைந்து ப்ரஷப்பாகிவிட்டு வெளியே வந்தவளை வெற்று அறையே வரவேற்றுக் கொண்டிருந்தது.
ஹப்பாடா என மூச்சு விட்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன ஏமாற்றம் ஒன்று பரவுவதை தடுக்கத்தான் முடியவில்லை....
நேரே பால்கனிக்கு சென்றவள் அதில் இருந்த கூடை நாட்காட்டியில் ஏறி அமர்ந்தபடி தனக்குள் மூழ்கிப் போனாள்.
இன்று ஆரவ் சொன்ன வார்த்தைகளே மீண்டும் மீண்டும் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தது.
அன்று அபி கேட்ட போது இதே வாயால் அவன் மேல் காதல் இல்லையென்ற மனது தான் இன்று காதல் தான் என்று அடித்துக் கூறுகிறது.
அவரும் என்னை லவ் பண்ணுவாரா? என்ற ஒற்றை கேள்வியில் இருந்த சந்தோஷமெல்லாம் காற்றுப் போன பலூன் போல் வடிந்துப் போயிற்று!!!
((அட மக்கே...உனக்கு வர முன்ன ஆள் டோட்டல் அவுட்மா))
அந்த மேனா மினுக்கி அனன்யாவால் பெண்களையே வெறுத்திறுப்பவனுக்கு தன் மீது காதல் வருமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
அவருக்கு வர்லன்னா என்ன...அதான் அவருக்கும் சேத்து லவ் பண்ண நா இருக்கேனே...
தான் காதல் சொல்லப் போகும் அழகிய தருணத்திற்காக காத்திருக்க தொடங்கிய இதே மனது தான் அவனை வெறுத்து ஒதுக்கவும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரந்த பேதைக்கு சொல்லி புரியவைப்பது!!!
தொடரும்......
16-04-2021.