Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34
"எல்லாம் நடிப்பு"வெறுப்பாக சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தான் வருண்....
தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் அப்படி புகார் கொடுத்திருப்பாள் என்றதிலேயே அவன் மனம் உளைக்கலமாக கொதித்துக் கொண்டிருந்தது.
அதுவுமில்லாமல் எல்லாமே செய்துவிட்டு தன்னை அடையாளம் தெரியாமலிருக்க எப்படியெல்லாம் நடித்திருக்கிறாள்....
தான் தான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்...
நினைக்க நினைக்க மனதிலிருந்த வெறுப்பு கூடிக் கொண்டே போனது...
அடுத்தவர்களுக்கு கஷ்டம் கூட கொடுக்காதவனுக்கும் ஒருத்தியின் மேல் வெறுப்பென்றால் விதியை என்ன சொல்லிப் பாராட்டுவது???
..........
தன் டீ-ஷர்ட்டை இறுக்கமாக பிடித்திருப்பவளை பார்த்தவனுக்கு மனம் படபடவென அடிக்கத் துவங்கியது.
நிழற்படங்கள் கண்முன் வராவிட்டாலும் இந்த செய்கையை அவன் ரசித்திருக்கிறான் என்பதை அவன் அப்போது உணர்வு பூர்வமாக உணர்ந்ததில் தவித்துப் போனான் அந்த ஆறடி ஆண்மகன்....
ஒருவேலை இவளை உண்மையில் காதலித்திருப்போமோ என யோசிக்கும் போதே மனம் ஏனோ சாந்தமானது அவனுக்கு...
நேரம் கெட்ட நேரத்தில் பழைய வாழ்க்கைச் சுவடுகள் அவனைத் தாக்கி கல்லாக்க அவள் கையை உதறி விட்டு சென்றான் ரிஷி....
கஷ்டப்பட்டு தன் மொபைலை கண்டெடுத்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!!
அவளே வால்பேப்பராக இருந்ததில் இதயம் ஒரு கனம் நின்று துடித்தது.
அவன் அமர்ந்திருக்க அவன் இடது பக்க தோல் வளைவில் அவள் முகம் தெரியுமாறு சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவனவள்....
இருவரது கண்களிலும் அத்தனை காதல்!!!
வாய் பொய் சொன்னாலும் அதை கண் காட்டிக் கொடுத்துவிடுமே....
இதயம் தடதடக்க அவசரமாக அந்த வால்பேப்பரை மாற்றிவிடவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
அங்கிருப்பது மூச்சடைப்பது போல் இருக்க வெளியே சென்று விட்டான்.
அன்று அப்படி உணர்ந்ததிலிருந்து பால்கனிப் பக்கம் செல்வதை அறவே தவிர்த்திருந்தான்...
அங்கு ஏதோ சொல்ல முடியாத ஒரு பிணைப்பு இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு...
ஹால் சோஃபாவில் தொப்பென அமர்ந்தவனுக்கு அவளை விட்டு ஏன்டா வந்தோம் என்றாகிவிட்ட நிலைதான்....
அவன் முன்னே மீண்டும் சில நிழற்படங்கள்!!!
(அந்தப் பெண் அவன் தோல் வளைவுக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள்....
எதிரில் இன்னொரு பெண்....
அதற்கடுத்ததாக ஆரவ்....
ஆரவ்வுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவள் சட்டென துள்ளிக் குதித்து ஓட அவனை விரட்டுகிறான் ஆரவ்....
அவன் வாய்விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருக்கிறான்....)
அவனா....அவனா அப்படி சிரித்தான்....
தன்னையே நம்பமுடியாமல் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் "நோ......"என கத்தினான் வீடே அதிரும்படி.....
தங்களறையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த அணைவரும் ஒரு நொடி அவன் நிலையை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
ஹாலே அலங்கோலமாக கிடக்க அழகுக்காக வைக்கப்பட்டிருந்த டீபாய் துண்டுத் தூளாகி இருந்தது....
நடுநாயகமாக தலையை பிடித்துக் கொண்டு அவளவன்!!!
அவன் திடீர் ஆக்ரோஷத்தில் உடல் தூக்கிவாரிப்போட அருகிலிருந்த வருணின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்....
சட்டென சுதாரித்த ஆரவ் அவனருகில் சென்று தோலில் கைவைக்க அந்த ஒட்டாத தொடுதலில் நிழற்படங்கள் இன்னுமின்னும் கூடிக் கொண்டே போக அவனை ஆக்ரோஷமாய் தள்ளிவிட்டான்.
விழப்போனவனை பின்னாலிருந்து பிடித்த வருண் நிலைமை சட்டென பிடிபட
"ரிக்ஷி....அவன்கிட்ட போமா.... பயப்படாத ப்ளீஸ்....நீ போகலன்னா நிலம இன்னும் விபரீதமாயிடும்"என கத்த மலங்க மலங்க விழித்தவளுக்கும் ஏதோ புரிவது போல் இருக்கவும் சற்றும் தாமதிக்காமல் அவனை நோக்கி ஓடினாள்.
கீழே குனிந்து தலையை "நோ...நோ...."ஆட்டிக் கொண்டிருந்தவனின் முன் மண்டியிட்டவள் "தேவ்...." என்றவள் அவனை இறுக்க தழுவிக் கொண்டாள்.
நிழற்படங்கள் சட்டென மறைந்து போக தாய் மடி தேடும் கன்றாய் அவள் மீதே சரிந்தான்.
தன்னவனின் நிலையை நினைத்து இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்க அவன் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் அவனவள்!!!
***
அமெரிக்கா....
மெக்சிகோ நகரம்....
"ஹாஹாஹா...."
கொக்கரித்து ரசித்துச் சிரித்தான் அவன்....
ராகேஷ் கண்ணா!!!
அவனின் முன் அதே சிரிப்புடன் ரகு....
"ஏன் ரகு இவன் எவ்வளவு பட்டாலும் திருந்தவே போறதில்லல?"
எகத்தாளமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் குழம்பிப் போனான் அவன் நண்பன்.
"புரியல?"
"நம்மளால அவனுக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சும் டில்லிக்கு தனியா வந்திருக்கான் பாரு.... உண்மைலயே அவன் ஹீரோதான்டா"
"நீயா அவன புகழ்ற?"
"எஸ் நானேதான்....நீ இப்போ சொன்ன விஷயத்துல நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா?"
"பின்ன....சந்தோஷமில்லாம இருக்குமா....அவன் ஒரேடியா செத்திருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்குமாங்குறது சந்தேகம் தான் மச்சான்"
"அதே அதே"
"இப்போ நினைவே இல்லாம பைத்தியம் மாதிரி இருப்பான்ல?"
"நிச்சயமா ரகு....இருப்பான்ல....
இல்ல இருப்பான்..." மீண்டும் வெடிச் சிரிப்பு சிரிக்கத் துவங்கிய ராகேஷை கசப்புடன் பார்த்தான் ரகு!!!
ராகேஷ் மூலமாகவே அறிந்திருந்தவனானாலும் உண்மையாக நட்பை தந்தவன்!!!
இவனுடன் சேர்ந்து நடிக்காவிட்டால் இரண்டு உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப்படும் என்பதை முன்னரே அறிந்தவனுக்கு நடிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை....
"ஓகே மச்சான்....இன்னைக்கு ட்ராவல் பண்ணினதுல எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு....நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்....அப்பறமா பாக்கலாம்" என்ற ரகு அவசரமாக தனதறைக்குள் புகுந்து கொண்டான்.
கதவை தாழிட்டு விட்டு கட்டிலில் தொப்பென விழுந்தவனுக்கு மனம் கணத்துப் போக தான் ஆண்மகன் என்பதையும் மறந்து மௌனமாக கண்ணீர் வடித்தான்.
ராகேஷின் சொல்லுக்கிணங்க அவன்தான் ஆக்ஸிடென்ட் பண்ண வைத்தான்....
ஆனால் அவன் மயக்கமாகவும் ஓரமாக நின்றிருந்தவன் தன் மடிமீது வைத்து மன்னிப்பு கேட்டது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது???
ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்டதும் மனம் துடித்த துடிப்பை அவன் அறிவானா???
அவனை அப்படியே விட்டுச் செல்லவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பு???
கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே கிடந்தான் ரிஷியின் மனதில் துரோகியாகிப் போன அந்த ஆருயிர் நண்பன்!!!
படபடவென கதவு தட்டப்பட வாஷ்ரூம் சென்று முகத்தை அடித்துக் கழுவி விட்டு வந்து கதவை திறந்தவனின் முன்னால் பதற்றமாய் நின்றிருந்தான் ராகேஷ்....
"என்ன மச்சான் என்னாச்சு?" அவனும் பதற்றமாகவே நடித்தான்.
"வெளிய வாடா...." என்றுவிட்டு தன் லேப்டாப் முன்னால் சென்று நின்றவன் அதில் வந்திருந்த ரிஷியின் கண் கானா எதிரியின் வாய்ஸ் நோட்டை தட்டினான்.
"மிஸ்டர்.ராக்கேஷ்....உங்க சித்தப்பா இறந்துட்டாரு" சத்தமே இல்லாமல் இடியை இறக்கிவிட்டு சொல்வது மட்டுமே என்கடமை என்பது போல் அது முடிந்து விட நிலை தடுமாறி அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்தான் ராக்கேஷ்....
தந்தைக்கும் பின் தந்தையாக தாயாக எல்லாமுமாக இருந்தவர் அவர்!!!
அவர் பெயர் ராகவன்!!!
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ் மேல்தளம்.....
ஷாக் கொடுக்கப்பட்டிருந்தவரை வெறித்து நோக்கின அனன்யாவின் கண்கள்....
அந்தப் புதியவனே ராகவன்!!!
தானாகத் தான் வேண்டுமென்றே சுவிட்சை ஆன் பண்ணியிருக்கிறார் என்பது புரியவே அவரை அப்படி பார்ப்பதை தவிர வேறு வழியில்லை அவளுக்கு!!!
பதட்டமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கதிர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்....
நின்றவன் நின்றபடியே இருக்க கண்கள் மூடி கழுத்து ஒரு பக்கம் சாய்ந்திருந்தது.
ரிஷிக்கு இதுவரை தகவல் கொடுக்கப்படவில்லை..வந்தாலும் எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்று அவனாலும் யூகிக்க முடியாமல் போக திடீரென மொபைல் சிணுங்கவும் எடுத்து திரையை பார்த்தான்.
அதில் ஆரவ் சார் என ஒலிரவும் அவனுக்கு பதற்றத்தில் வியர்த்து வழிந்தது.
பதற்றத்திலேயே அடண்ட் செய்து காதில் வைக்க
"கதிர்"
"சொ...சொல்லுங்க சார்"
"ஏன் பதட்டமா இருக்கீங்க?"
"இ...இ..இல்ல இல்ல ஒன்னில்ல சார்" எனவும் மறுபக்கத்திலிருந்த ஆரவ்வின் நெற்றி சுருங்கியது.
"எங்க இருக்கீங்க கதிர்?"
"அ...அது அது ஆபிஸ்லதான் சார்"
"நானும் அங்கதானே இருக்கேன்... நீங்க இங்க இல்லயே"சந்தேகம் அப்படட்மாய் தெரிந்தது அவன் குரலில்.
"ஆ..ஆபீஸ்லதான் சார்....மே... மே... மேல் மாடில" வருவது வரட்டுமென்று சொல்லிவிட்டான்.
"வாட்?" என ஒரு நிமிடம் அதிர்ந்தவன் தன்னை சட்டென மீட்டுக் கொண்டு
"ஓகே ....இருங்க வர்றேன்" எனவும் தடுக்கத் தோன்றாமல் அமைதியாக வைத்துவிட்டான் கதிரவன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து பயத்தில் வெளவெளத்துப் போனவன் கண்களில் அச்சத்தை தேக்கி ஆரவ்வை பார்க்க அவனோ ஷாக்கடித்தவன் போல் வாசலிலேயே நின்றுவிட்டிருந்தான்.
இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்த அனன்யா ஒரு புறமென்றால் இந்த ராகவன் மறுபுறம்!!!
அண்ணா நம்மளவிட ரெண்டு மூனு ஸ்டெப்ஸ் முன்னாடியே போயிருப்பாங்க என்று அவன் சொன்னது அவனுக்கே ரீங்காரமாய் ஒலித்த அதே நேரம் இவ்வளவு தூரம் வந்துட்டாங்களா என்று அதை திருத்தியது மனசாட்சி....
இவங்கள பாத்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது...பட் இருக்குற கோவத்துல கொலகாரனா மாறிட்டாங்கன்னா....
நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்க கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் திரும்பி கதிரவனை பார்த்தான்.
தன்னை கண்டதிலிருந்து அல்லாமல் அதைத்தாண்டிய ஏதோ ஒரு பதற்றம் அவன் முகத்தில் தெரியவும் புருவம் சுருக்கியவன் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி ராகவைனைப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!
***
அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு மருந்தையும் அருந்தக் கொடுத்தவள் அவன் மனம் உணர்ந்து அருகிலேயே அமர்ந்து விட்டாள்.
அவனும் அவள் செய்கையை தடுக்கும் நிலையிலெல்லாம் இல்லவே இல்லை....
மனம் மீண்டும் மீண்டும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்க கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அவனை யோசிக்க விட்ககூடாது என்பது மண்டையில் உறைக்க என்ன செய்வதென தெரியாமல் நின்றவள் வேண்டுமென்றே குஷனை எடுத்து அவனுக்கு வீசினாள்.
திடீரென தன் மேல் ஏதோ விழுந்ததில் திடுக்கிட்டு பார்த்தவன் தன் மடியில் குஷன் இருக்கவும் சோஃபாவில் இருந்து கொண்டு வீட்டு கூரையை பார்த்துக் கொண்டிருந்தவளை முறைத்தான்.
அவன் முறைப்பது தெறிந்தும் அவன் புறம் பார்வையை திருப்பாமலேயே போக்குக் காட்டிக் கொண்டிருக்க அவள் வீசியதையே அவளுக்கு திரும்பவும் வீசினான்.
அது அவள் தலையில் பட்டு கீழே விழ அதை எடுத்து வைத்தவள் அவனை பார்த்து இப்போது தான் முறைக்க
"எதுக்கு முறக்கிற....நீ தானே எனக்கு வீசி அடிச்ச...அதான் திருப்பி தந்துட்டேன்" அவனை அந்த நிலைமையில் பார்த்த பின் இனியும் அமைதியாக இருப்பதில் பயனில்லை என்பது மண்டையில் நன்கு உறைத்து விட்ட பிறகும் அமைதியாக இருக்க அவளென்ன ஊமையா....
அதனால்தான் முதல் முயற்சியாக அவனை சண்டைக்கு இழுத்தாள்.
"நா எப்போ அடிச்சேன் சார்....?" என அப்பாவியாய் கேட்டவளை பார்த்து வாயைப் பிளந்தான் அவளவன்!!!
"அப்பிடியே நம்பிட்டேன் பாரு உன்ன....பொண்ணுங்கன்னாவே பொய்...ஏமாத்துறது...துரோகம்... வேறென்ன தெறியும் உங்களுக்கு?"
"அத தவிற நிறையவே தெரியும் சார்....நீங்க எத எதிர்பாக்குறீங்க?" வார்த்தையாலேயே அவனை அவள் அடக்க இவ இவ்வளோ பேசுவாளா என்பது போல் வ விழி விரித்தவனை பார்த்து அவள் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள்.
"அட நீ ஊமன்னுல்ல நெனச்சேன்" நக்கலாக அவன் கூறவும்
"நீங்க நெனச்சுதுக்கெல்லாம் என்னால பொறுப்பாக முடியாதுங்க சாரே"
"ப்ச்...வெட்டி பேச்சு பேசாம எதுக்கு எனக்கு அடிச்சன்னு சொல்லு?" சட்டென கோபம் மூண்டுவிட்டது அவனுள்....
அவன் மனநிலையை உணர்ந்தவளுக்கு இருந்த உற்சாகம் சடுதியில் மறைய மறுபடியும் அமைதியாகி விட்டாள்.
"நான் கேட்டுகிட்டே இருக்கேன்....
அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" மறுபடியும் எரிந்து விழ அவளுக்கு அனன்யாவை கொன்று போடும் வெறி!!
அவளால் அல்லவா இப்படி ஆகித் தொலைத்தான்...
அவள் அமைதியாகவே இருக்கவும்
"இப்போ சொல்ல போறியா இல்லையா?" அவனின் கோபம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து
"அ...அது...அது...உங்கள யோசிக்க விடக் கூடாதுன்னு டா...டாக்டர்...." இயலாமையில் அவளுக்கு கரகரவென கண்ணீர் கொட்டத் தொடங்க அவசரமாக எழுந்து வெளியில் சென்று விடவும் அவனுக்கு உள்ளுக்குள் திடீரென்று வலித்தது.
***
"ப்ளீஸ் விஷ்வா....நா சொல்றத ஒரே ஒரு நிமிஷம் கேளுங்க ப்ளீஸ்...." அவன் ஆபிஸுக்கே வந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழினி....
அவனோ அவளை திரும்பியும் பார்க்காது லேப்பிலேயே கண்களை பதித்திருந்தான்.
"ஏன் விஷ்வா இப்பிடி இருக்கீங்க... என் பக்க நியாயத்த கூட கேக்க மாட்டீங்களா?"
"...."
"விஷ்வா ப்ளீஸ்....என் சிச்சுவேஷனயும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரையாவது பண்ணுங்க"
"...."
"ப்ளீஸ் விஷு...." எனவும் அவளது அழைப்பில் விலுக்கென அவளை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தவன் அது பொய்யோ என்பது போல் அடுத்த நிமிடம் பார்வையை திருப்பியிருந்தான்.
"நா செஞ்ச பெரிய தப்பு உங்கள பார்த்தது தான் விஷ்வா...."
"...."
"யாரு கிண்டலடிக்கிறாங்கன்னு கூட எனக்கு தெரியாது...பட் யாருன்னு நிமிர்ந்து பாக்குறப்பல்லாம் என் கண்ணுக்கு நீங்கதான் தெரிஞ்சீங்க" அவளுடைய அபாண்டமான குற்றச்சாட்டில் அவனுடைய கை முஷ்டிகள் இறுகின.
"ப்ளீஸ் கோபப்படாதீங்க விஷ்வா....நா முழுசா சொல்லிட்றேன்"
"...."
"பஸ்ல கூட ஒரு தடவ....யா..யாரோ எ..என்ன உரசினாங்க" சொல்லும் போதே அவள் குரல் நைந்து ஒலித்தது.
"அவன் பக்கத்துல தப்பிக்க அப்போ திரும்பி பாத்தப்போவும் நீங்கதான் தெரிஞ்சீங்க"
"...."
"விஷ்வா"
"...."
"என் பக்கத்துல இருந்து ஒரு தடவயாவது யோசிங்க விஷ்வா ப்ளீஸ்..."
"...."
"விஷு....நா சொல்றதுக்காகவெல்லாம் யோசிக்கனுமான்னு பாக்காதிங்க... அட்லீஸ்ட் ஒரு சக மனுஷியா நெனச்சி யோசிங்க விஷு" கண்ணீர் மல்க அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திடீரென தட்டப்பட்டது.
தொடரும்.......
26-04-2021.
"எல்லாம் நடிப்பு"வெறுப்பாக சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தான் வருண்....
தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் அப்படி புகார் கொடுத்திருப்பாள் என்றதிலேயே அவன் மனம் உளைக்கலமாக கொதித்துக் கொண்டிருந்தது.
அதுவுமில்லாமல் எல்லாமே செய்துவிட்டு தன்னை அடையாளம் தெரியாமலிருக்க எப்படியெல்லாம் நடித்திருக்கிறாள்....
தான் தான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்...
நினைக்க நினைக்க மனதிலிருந்த வெறுப்பு கூடிக் கொண்டே போனது...
அடுத்தவர்களுக்கு கஷ்டம் கூட கொடுக்காதவனுக்கும் ஒருத்தியின் மேல் வெறுப்பென்றால் விதியை என்ன சொல்லிப் பாராட்டுவது???
..........
தன் டீ-ஷர்ட்டை இறுக்கமாக பிடித்திருப்பவளை பார்த்தவனுக்கு மனம் படபடவென அடிக்கத் துவங்கியது.
நிழற்படங்கள் கண்முன் வராவிட்டாலும் இந்த செய்கையை அவன் ரசித்திருக்கிறான் என்பதை அவன் அப்போது உணர்வு பூர்வமாக உணர்ந்ததில் தவித்துப் போனான் அந்த ஆறடி ஆண்மகன்....
ஒருவேலை இவளை உண்மையில் காதலித்திருப்போமோ என யோசிக்கும் போதே மனம் ஏனோ சாந்தமானது அவனுக்கு...
நேரம் கெட்ட நேரத்தில் பழைய வாழ்க்கைச் சுவடுகள் அவனைத் தாக்கி கல்லாக்க அவள் கையை உதறி விட்டு சென்றான் ரிஷி....
கஷ்டப்பட்டு தன் மொபைலை கண்டெடுத்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!!
அவளே வால்பேப்பராக இருந்ததில் இதயம் ஒரு கனம் நின்று துடித்தது.
அவன் அமர்ந்திருக்க அவன் இடது பக்க தோல் வளைவில் அவள் முகம் தெரியுமாறு சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவனவள்....
இருவரது கண்களிலும் அத்தனை காதல்!!!
வாய் பொய் சொன்னாலும் அதை கண் காட்டிக் கொடுத்துவிடுமே....
இதயம் தடதடக்க அவசரமாக அந்த வால்பேப்பரை மாற்றிவிடவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
அங்கிருப்பது மூச்சடைப்பது போல் இருக்க வெளியே சென்று விட்டான்.
அன்று அப்படி உணர்ந்ததிலிருந்து பால்கனிப் பக்கம் செல்வதை அறவே தவிர்த்திருந்தான்...
அங்கு ஏதோ சொல்ல முடியாத ஒரு பிணைப்பு இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு...
ஹால் சோஃபாவில் தொப்பென அமர்ந்தவனுக்கு அவளை விட்டு ஏன்டா வந்தோம் என்றாகிவிட்ட நிலைதான்....
அவன் முன்னே மீண்டும் சில நிழற்படங்கள்!!!
(அந்தப் பெண் அவன் தோல் வளைவுக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள்....
எதிரில் இன்னொரு பெண்....
அதற்கடுத்ததாக ஆரவ்....
ஆரவ்வுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவள் சட்டென துள்ளிக் குதித்து ஓட அவனை விரட்டுகிறான் ஆரவ்....
அவன் வாய்விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருக்கிறான்....)
அவனா....அவனா அப்படி சிரித்தான்....
தன்னையே நம்பமுடியாமல் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் "நோ......"என கத்தினான் வீடே அதிரும்படி.....
தங்களறையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த அணைவரும் ஒரு நொடி அவன் நிலையை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டனர்.
ஹாலே அலங்கோலமாக கிடக்க அழகுக்காக வைக்கப்பட்டிருந்த டீபாய் துண்டுத் தூளாகி இருந்தது....
நடுநாயகமாக தலையை பிடித்துக் கொண்டு அவளவன்!!!
அவன் திடீர் ஆக்ரோஷத்தில் உடல் தூக்கிவாரிப்போட அருகிலிருந்த வருணின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்....
சட்டென சுதாரித்த ஆரவ் அவனருகில் சென்று தோலில் கைவைக்க அந்த ஒட்டாத தொடுதலில் நிழற்படங்கள் இன்னுமின்னும் கூடிக் கொண்டே போக அவனை ஆக்ரோஷமாய் தள்ளிவிட்டான்.
விழப்போனவனை பின்னாலிருந்து பிடித்த வருண் நிலைமை சட்டென பிடிபட
"ரிக்ஷி....அவன்கிட்ட போமா.... பயப்படாத ப்ளீஸ்....நீ போகலன்னா நிலம இன்னும் விபரீதமாயிடும்"என கத்த மலங்க மலங்க விழித்தவளுக்கும் ஏதோ புரிவது போல் இருக்கவும் சற்றும் தாமதிக்காமல் அவனை நோக்கி ஓடினாள்.
கீழே குனிந்து தலையை "நோ...நோ...."ஆட்டிக் கொண்டிருந்தவனின் முன் மண்டியிட்டவள் "தேவ்...." என்றவள் அவனை இறுக்க தழுவிக் கொண்டாள்.
நிழற்படங்கள் சட்டென மறைந்து போக தாய் மடி தேடும் கன்றாய் அவள் மீதே சரிந்தான்.
தன்னவனின் நிலையை நினைத்து இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்க அவன் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் அவனவள்!!!
***
அமெரிக்கா....
மெக்சிகோ நகரம்....
"ஹாஹாஹா...."
கொக்கரித்து ரசித்துச் சிரித்தான் அவன்....
ராகேஷ் கண்ணா!!!
அவனின் முன் அதே சிரிப்புடன் ரகு....
"ஏன் ரகு இவன் எவ்வளவு பட்டாலும் திருந்தவே போறதில்லல?"
எகத்தாளமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் குழம்பிப் போனான் அவன் நண்பன்.
"புரியல?"
"நம்மளால அவனுக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சும் டில்லிக்கு தனியா வந்திருக்கான் பாரு.... உண்மைலயே அவன் ஹீரோதான்டா"
"நீயா அவன புகழ்ற?"
"எஸ் நானேதான்....நீ இப்போ சொன்ன விஷயத்துல நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா?"
"பின்ன....சந்தோஷமில்லாம இருக்குமா....அவன் ஒரேடியா செத்திருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்குமாங்குறது சந்தேகம் தான் மச்சான்"
"அதே அதே"
"இப்போ நினைவே இல்லாம பைத்தியம் மாதிரி இருப்பான்ல?"
"நிச்சயமா ரகு....இருப்பான்ல....
இல்ல இருப்பான்..." மீண்டும் வெடிச் சிரிப்பு சிரிக்கத் துவங்கிய ராகேஷை கசப்புடன் பார்த்தான் ரகு!!!
ராகேஷ் மூலமாகவே அறிந்திருந்தவனானாலும் உண்மையாக நட்பை தந்தவன்!!!
இவனுடன் சேர்ந்து நடிக்காவிட்டால் இரண்டு உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப்படும் என்பதை முன்னரே அறிந்தவனுக்கு நடிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை....
"ஓகே மச்சான்....இன்னைக்கு ட்ராவல் பண்ணினதுல எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு....நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்....அப்பறமா பாக்கலாம்" என்ற ரகு அவசரமாக தனதறைக்குள் புகுந்து கொண்டான்.
கதவை தாழிட்டு விட்டு கட்டிலில் தொப்பென விழுந்தவனுக்கு மனம் கணத்துப் போக தான் ஆண்மகன் என்பதையும் மறந்து மௌனமாக கண்ணீர் வடித்தான்.
ராகேஷின் சொல்லுக்கிணங்க அவன்தான் ஆக்ஸிடென்ட் பண்ண வைத்தான்....
ஆனால் அவன் மயக்கமாகவும் ஓரமாக நின்றிருந்தவன் தன் மடிமீது வைத்து மன்னிப்பு கேட்டது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது???
ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்டதும் மனம் துடித்த துடிப்பை அவன் அறிவானா???
அவனை அப்படியே விட்டுச் செல்லவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பு???
கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே கிடந்தான் ரிஷியின் மனதில் துரோகியாகிப் போன அந்த ஆருயிர் நண்பன்!!!
படபடவென கதவு தட்டப்பட வாஷ்ரூம் சென்று முகத்தை அடித்துக் கழுவி விட்டு வந்து கதவை திறந்தவனின் முன்னால் பதற்றமாய் நின்றிருந்தான் ராகேஷ்....
"என்ன மச்சான் என்னாச்சு?" அவனும் பதற்றமாகவே நடித்தான்.
"வெளிய வாடா...." என்றுவிட்டு தன் லேப்டாப் முன்னால் சென்று நின்றவன் அதில் வந்திருந்த ரிஷியின் கண் கானா எதிரியின் வாய்ஸ் நோட்டை தட்டினான்.
"மிஸ்டர்.ராக்கேஷ்....உங்க சித்தப்பா இறந்துட்டாரு" சத்தமே இல்லாமல் இடியை இறக்கிவிட்டு சொல்வது மட்டுமே என்கடமை என்பது போல் அது முடிந்து விட நிலை தடுமாறி அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்தான் ராக்கேஷ்....
தந்தைக்கும் பின் தந்தையாக தாயாக எல்லாமுமாக இருந்தவர் அவர்!!!
அவர் பெயர் ராகவன்!!!
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ் மேல்தளம்.....
ஷாக் கொடுக்கப்பட்டிருந்தவரை வெறித்து நோக்கின அனன்யாவின் கண்கள்....
அந்தப் புதியவனே ராகவன்!!!
தானாகத் தான் வேண்டுமென்றே சுவிட்சை ஆன் பண்ணியிருக்கிறார் என்பது புரியவே அவரை அப்படி பார்ப்பதை தவிர வேறு வழியில்லை அவளுக்கு!!!
பதட்டமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கதிர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்....
நின்றவன் நின்றபடியே இருக்க கண்கள் மூடி கழுத்து ஒரு பக்கம் சாய்ந்திருந்தது.
ரிஷிக்கு இதுவரை தகவல் கொடுக்கப்படவில்லை..வந்தாலும் எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்று அவனாலும் யூகிக்க முடியாமல் போக திடீரென மொபைல் சிணுங்கவும் எடுத்து திரையை பார்த்தான்.
அதில் ஆரவ் சார் என ஒலிரவும் அவனுக்கு பதற்றத்தில் வியர்த்து வழிந்தது.
பதற்றத்திலேயே அடண்ட் செய்து காதில் வைக்க
"கதிர்"
"சொ...சொல்லுங்க சார்"
"ஏன் பதட்டமா இருக்கீங்க?"
"இ...இ..இல்ல இல்ல ஒன்னில்ல சார்" எனவும் மறுபக்கத்திலிருந்த ஆரவ்வின் நெற்றி சுருங்கியது.
"எங்க இருக்கீங்க கதிர்?"
"அ...அது அது ஆபிஸ்லதான் சார்"
"நானும் அங்கதானே இருக்கேன்... நீங்க இங்க இல்லயே"சந்தேகம் அப்படட்மாய் தெரிந்தது அவன் குரலில்.
"ஆ..ஆபீஸ்லதான் சார்....மே... மே... மேல் மாடில" வருவது வரட்டுமென்று சொல்லிவிட்டான்.
"வாட்?" என ஒரு நிமிடம் அதிர்ந்தவன் தன்னை சட்டென மீட்டுக் கொண்டு
"ஓகே ....இருங்க வர்றேன்" எனவும் தடுக்கத் தோன்றாமல் அமைதியாக வைத்துவிட்டான் கதிரவன்.
அடுத்த இரண்டாவது நிமிடம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து பயத்தில் வெளவெளத்துப் போனவன் கண்களில் அச்சத்தை தேக்கி ஆரவ்வை பார்க்க அவனோ ஷாக்கடித்தவன் போல் வாசலிலேயே நின்றுவிட்டிருந்தான்.
இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்த அனன்யா ஒரு புறமென்றால் இந்த ராகவன் மறுபுறம்!!!
அண்ணா நம்மளவிட ரெண்டு மூனு ஸ்டெப்ஸ் முன்னாடியே போயிருப்பாங்க என்று அவன் சொன்னது அவனுக்கே ரீங்காரமாய் ஒலித்த அதே நேரம் இவ்வளவு தூரம் வந்துட்டாங்களா என்று அதை திருத்தியது மனசாட்சி....
இவங்கள பாத்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது...பட் இருக்குற கோவத்துல கொலகாரனா மாறிட்டாங்கன்னா....
நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்க கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் திரும்பி கதிரவனை பார்த்தான்.
தன்னை கண்டதிலிருந்து அல்லாமல் அதைத்தாண்டிய ஏதோ ஒரு பதற்றம் அவன் முகத்தில் தெரியவும் புருவம் சுருக்கியவன் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி ராகவைனைப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!
***
அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு மருந்தையும் அருந்தக் கொடுத்தவள் அவன் மனம் உணர்ந்து அருகிலேயே அமர்ந்து விட்டாள்.
அவனும் அவள் செய்கையை தடுக்கும் நிலையிலெல்லாம் இல்லவே இல்லை....
மனம் மீண்டும் மீண்டும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்க கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அவனை யோசிக்க விட்ககூடாது என்பது மண்டையில் உறைக்க என்ன செய்வதென தெரியாமல் நின்றவள் வேண்டுமென்றே குஷனை எடுத்து அவனுக்கு வீசினாள்.
திடீரென தன் மேல் ஏதோ விழுந்ததில் திடுக்கிட்டு பார்த்தவன் தன் மடியில் குஷன் இருக்கவும் சோஃபாவில் இருந்து கொண்டு வீட்டு கூரையை பார்த்துக் கொண்டிருந்தவளை முறைத்தான்.
அவன் முறைப்பது தெறிந்தும் அவன் புறம் பார்வையை திருப்பாமலேயே போக்குக் காட்டிக் கொண்டிருக்க அவள் வீசியதையே அவளுக்கு திரும்பவும் வீசினான்.
அது அவள் தலையில் பட்டு கீழே விழ அதை எடுத்து வைத்தவள் அவனை பார்த்து இப்போது தான் முறைக்க
"எதுக்கு முறக்கிற....நீ தானே எனக்கு வீசி அடிச்ச...அதான் திருப்பி தந்துட்டேன்" அவனை அந்த நிலைமையில் பார்த்த பின் இனியும் அமைதியாக இருப்பதில் பயனில்லை என்பது மண்டையில் நன்கு உறைத்து விட்ட பிறகும் அமைதியாக இருக்க அவளென்ன ஊமையா....
அதனால்தான் முதல் முயற்சியாக அவனை சண்டைக்கு இழுத்தாள்.
"நா எப்போ அடிச்சேன் சார்....?" என அப்பாவியாய் கேட்டவளை பார்த்து வாயைப் பிளந்தான் அவளவன்!!!
"அப்பிடியே நம்பிட்டேன் பாரு உன்ன....பொண்ணுங்கன்னாவே பொய்...ஏமாத்துறது...துரோகம்... வேறென்ன தெறியும் உங்களுக்கு?"
"அத தவிற நிறையவே தெரியும் சார்....நீங்க எத எதிர்பாக்குறீங்க?" வார்த்தையாலேயே அவனை அவள் அடக்க இவ இவ்வளோ பேசுவாளா என்பது போல் வ விழி விரித்தவனை பார்த்து அவள் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள்.
"அட நீ ஊமன்னுல்ல நெனச்சேன்" நக்கலாக அவன் கூறவும்
"நீங்க நெனச்சுதுக்கெல்லாம் என்னால பொறுப்பாக முடியாதுங்க சாரே"
"ப்ச்...வெட்டி பேச்சு பேசாம எதுக்கு எனக்கு அடிச்சன்னு சொல்லு?" சட்டென கோபம் மூண்டுவிட்டது அவனுள்....
அவன் மனநிலையை உணர்ந்தவளுக்கு இருந்த உற்சாகம் சடுதியில் மறைய மறுபடியும் அமைதியாகி விட்டாள்.
"நான் கேட்டுகிட்டே இருக்கேன்....
அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" மறுபடியும் எரிந்து விழ அவளுக்கு அனன்யாவை கொன்று போடும் வெறி!!
அவளால் அல்லவா இப்படி ஆகித் தொலைத்தான்...
அவள் அமைதியாகவே இருக்கவும்
"இப்போ சொல்ல போறியா இல்லையா?" அவனின் கோபம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து
"அ...அது...அது...உங்கள யோசிக்க விடக் கூடாதுன்னு டா...டாக்டர்...." இயலாமையில் அவளுக்கு கரகரவென கண்ணீர் கொட்டத் தொடங்க அவசரமாக எழுந்து வெளியில் சென்று விடவும் அவனுக்கு உள்ளுக்குள் திடீரென்று வலித்தது.
***
"ப்ளீஸ் விஷ்வா....நா சொல்றத ஒரே ஒரு நிமிஷம் கேளுங்க ப்ளீஸ்...." அவன் ஆபிஸுக்கே வந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழினி....
அவனோ அவளை திரும்பியும் பார்க்காது லேப்பிலேயே கண்களை பதித்திருந்தான்.
"ஏன் விஷ்வா இப்பிடி இருக்கீங்க... என் பக்க நியாயத்த கூட கேக்க மாட்டீங்களா?"
"...."
"விஷ்வா ப்ளீஸ்....என் சிச்சுவேஷனயும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரையாவது பண்ணுங்க"
"...."
"ப்ளீஸ் விஷு...." எனவும் அவளது அழைப்பில் விலுக்கென அவளை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தவன் அது பொய்யோ என்பது போல் அடுத்த நிமிடம் பார்வையை திருப்பியிருந்தான்.
"நா செஞ்ச பெரிய தப்பு உங்கள பார்த்தது தான் விஷ்வா...."
"...."
"யாரு கிண்டலடிக்கிறாங்கன்னு கூட எனக்கு தெரியாது...பட் யாருன்னு நிமிர்ந்து பாக்குறப்பல்லாம் என் கண்ணுக்கு நீங்கதான் தெரிஞ்சீங்க" அவளுடைய அபாண்டமான குற்றச்சாட்டில் அவனுடைய கை முஷ்டிகள் இறுகின.
"ப்ளீஸ் கோபப்படாதீங்க விஷ்வா....நா முழுசா சொல்லிட்றேன்"
"...."
"பஸ்ல கூட ஒரு தடவ....யா..யாரோ எ..என்ன உரசினாங்க" சொல்லும் போதே அவள் குரல் நைந்து ஒலித்தது.
"அவன் பக்கத்துல தப்பிக்க அப்போ திரும்பி பாத்தப்போவும் நீங்கதான் தெரிஞ்சீங்க"
"...."
"விஷ்வா"
"...."
"என் பக்கத்துல இருந்து ஒரு தடவயாவது யோசிங்க விஷ்வா ப்ளீஸ்..."
"...."
"விஷு....நா சொல்றதுக்காகவெல்லாம் யோசிக்கனுமான்னு பாக்காதிங்க... அட்லீஸ்ட் ஒரு சக மனுஷியா நெனச்சி யோசிங்க விஷு" கண்ணீர் மல்க அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திடீரென தட்டப்பட்டது.
தொடரும்.......
26-04-2021.