Haani karthigan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே
அத்தியாயம் 33
வசுமதி, விஷ்ணு இருவருமே அவளுடைய தோழியின் திருமணத்திற்காக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குச் செல்ல அவர்கள் இருவருமே நுழைந்தவுடன் வசு, "நாங்க உள்ள வரோம். நீங்க எங்கே இருக்கிங்க?" என்று மொபைல் மூலம் மற்ற தோழிகளுக்கு அழைத்து வினவ, அவர்களில் ஒருத்தி, "முதல்ல நாங்க சொல்ற ரூமுக்கு நீ உன் ஹஸ்பன்டை அழைச்சிட்டு வா" என்று உரைத்து கிளுக்கிச் சிரித்தனர் தோழிகள்.
இவளும் புரியாது விஷ்ணுவிடம், "203 ரூமூக்கு உங்களை அழைச்சிட்டு வர சொன்னாளுங்க. போலாமா?" என்று வினவ, "சரி" என்றவன் அவளோடு சேர்ந்து அவ் அறைக்குச் சென்றான். அவர்கள் இருவரும் அறைக்கதவைத் திறந்ததும், பலூன் வெடித்து இவர்கள் மேலே துகளாய் விழ, சிரிப்புடன் இருவரும் நுழைந்து அங்கே பார்த்ததில் அதிர்ந்து விழித்தனர்.
மித்ரன், வசுமதி என்ற பெயரை சுவரில் ஒட்டி அதற்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அவர்கள் இருவரது பெயரும் இடப்பட்ட கேக்கையும் எடுத்து வந்து வைத்தனர் முன்னால்.
அத்தோடு யாதவைப் பற்றி பேசும் போதும், யாதவ் என நினைத்து கல்லூரி காலங்களில் இவள் வாங்கிய டெடி என அனைத்தையும் தோழிகள் படம் பிடித்து வைத்திருந்ததை சுவரில் ஒட்டியதோடு வீடியோக்களையும் ஒளிர விட்டு இருந்தனர் இவள் யாதவைத் தான் திருமணம் செய்து இருக்கிறாள் என நினைத்து.
விஷ்ணுவிற்கு சுருக்கென்ற வலி தோன்ற அதை மறைத்து, வசுமதியை பார்த்தான் அவள் தன்னை அறிமுகப்படுத்துவாள் என. ஆனால் விழி நீர் தளும்ப அவற்றையே பார்த்தவள் அருகில் இருந்த விஷ்ணுவை மறந்து போனாள். விஷ்ணுவிற்கு ஏதோ போல் இருக்க அவனே தன்னை அறிமுகப்படுத்தலாம் என முன் வந்த போது தோழிகள் விடாமல் பேசினார்கள்.
"உங்களை ரொம்ப ரொம்ப காதலிச்சா சார். நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். அவளைப் போல உங்களை காதலிக்க யாருமே கிடைக்க மாட்டாங்க மித்ரன் சார். அவளும் உங்களை தவிர புருஷன் அப்படிங்குற இடத்துல யாரையுமே வைக்க மாட்டா. அவளே சொல்லி இருக்கா. ரொம்ப லகியான ஆள் மித்ரன் சார் நீங்க. உங்க இரண்டு பேரோட கல்யாணத்துக்கு நாங்க வரனும்னு நினைச்சோம்.
ஆனால் நாங்க வெளியூர்ல இருந்ததால வர முடியல்லை. மித்ரன் வசுவுக்கு நீங்க தான் உலகமே. அவளை காதலோட சந்தோஷமா பார்த்துக்கொங்க. மித்ரன் இல்லாமல் வசு இல்லை" என்று அவர்கள் சூழ்நிலையை அறியாது பேசிக்கொண்டே போக, ஒவ்வொரு சொல்லுமே அவன் இதயத்தை குறி வைத்துத்துத் தாக்கியது. சிறிதாவது தனக்காக பேசுவாள் என்று இறுதியாகப் பார்க்க அவளோ அதிர்வில் இருந்து மீண்டபாடு இல்லை.
தன்னை ஆழமூச்செடுத்து சமன்படுத்திக் கொண்டவன் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "வசுமதி" என்று அழுத்தமாக அழைக்க, அப்போதே அதிர்வில் இருந்து மீண்டு அவனைப் பார்த்தாள். அவளையே சிறிது நேரம் அழுத்தமாகப் பார்த்தவன் மற்றவர்களைப் பார்த்து, "நான் யாதவ் மித்ரன் இல்லை" என்று உரைத்து எவரையும் பாராது அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அங்கே தோழிகள் மட்டுமின்றி அவர்களுடைய கணவன்கள் குழந்தைகள் என அனைவருமே வந்து இருக்க, அனைவரில் முன்னிலையிலும் அவமானப்பட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமும், உடலும் அவமானத்தால் கொதிக்க நேராக காரிற்கு வந்தான்.
எக் கணவன் தான் தன்னை மனைவி அவளுடைய கணவன் என்று தவறாக எண்ணியவர்களுக்கு அறிமுகப்படுத்ததாது இருக்க, மற்றவர்கள் இன்னொருவன் என நினைத்து பேசும் போது உருவாகும் அவமானத்தை தாங்குவான். முதன் முறையாக ஏனோ இத் திருமணம் தவறோ என்று யோசிக்க வைத்தது விஷ்ணுவுக்கு.
யாதவை மறந்தூ விட்டேன் எனக் கூறியவள் இன்று பழைய நினைவுகளைக் காண்பித்ததும் அனைவரின் முன்னிலையில் கணவனை அல்லவா மறந்து போனாள். அதன்பின்னாவது அறிமுகப்படுத்தலாமே என மனம் கேள்விக் கேட்க, அவன் மனதை அவனே காயப்படுத்திக் கொண்டான்.
"இவரு யாதவ் இல்லை. விஷ்ணுன்னு ஒரே ஒரு வார்த்தை உனக்கு சொல்ல முடியாது இல்லை? அந்த அளவுக்கு என்னை பிடிக்காது உனக்கு" என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டவன், "இந்த அவமானத்தை என்னிக்குமே மறக்க மாட்டேன். இது வரைக்கும் நான் இப்படி அவமானப்பட்டதே இல்லை" என்று பேசியவாறு வேகமாக தனது வீட்டை நோக்கிச் சென்று, அதே ஆடையோடு குளியலறைக்குள் சென்று நின்றுக் கொண்டான் ஷவரின் கீழே.
விஷ்ணுவின் பேச்சிற்குப் பிறகு அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ந்து வசுவைப் பார்த்து, "அவரு உன் மித்து மாமா இல்லையா?" என்று அதிர்வு மாறா குரலில் வினவ, "இல்லை மித்து மாமா வைஷூவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவரு விஷ்ணு கிஷான் சர்ஜனா சொந்த ஹொஸ்பிடல்ள இருக்காரு" என்றாள் அழுகுரலோடு.
தோழியில் ஒருத்தி, "சொரிடி நாங்க உன் மித்து மாமான்னு நினைச்சு பேசிட்டோம்" என்று உரைக்க, "எங்க இரண்டு பேருக்குள்ள இப்போ தான் எல்லாம் சரியாகிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்க ஒரு குண்டை தூக்கி போட்டுட்டிங்கடி. சப்ரைஸ் பண்ண முன்னாடி, உன் ஃபிரன்டோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு கூட சின்னதா விசாரிக்க மாட்டிங்களாடி?
நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. அந்த அதிர்வுல இருந்து நான் மீள முன்னாடி மொத்தமா போயிருச்சு. அவரு இது வரைக்கும் என் விஷயத்துல இப்படி நடந்ததே இல்லை. என்னை எந்த இடத்துலேயுமே விட்டு கொடுத்தது இல்லை. இன்னிக்கு தான் முதல் முறை என் மேலே கோபப்பட்டு போயிருக்காரு" என்று அழ தோழிகளுக்கு சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை.
அதில் ஒருத்தி ஏடாகூடமாக, "சொந்த தங்கச்சியே அக்கா காதலிச்சவனை கைக்குள்ள போட்டுக்கிட்டாளா?" என்று கேட்க, சுள்ளென்று ஏறிய கோபத்தில் வசு, "ஃபிரன்சுன்னு சொல்லி எனக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டிங்க. உன்னைப் போல பேசி நான் இப்போ வைஷூவை இழந்துட்டு படுற பாடே போதும். தயவு பண்ணி என்னை விட்ருங்க. கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டிங்க" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.
வசுமதிக்கு வீட்டிற்குச் செல்லவும் தோன்றவில்லை. அதனால் கோயிலிற்குச் சென்று மாலை வரை இருந்தவள், பின்னரே அவர்களது வீட்டை நோக்கிச் சென்றாள். அங்கே விஷ்ணு அறையில் கண்மூடி சாய்ந்திருக்க, வசுமதி உள்ளே நுழைந்தாள்.
வசுமதி, "விஷ்ணு" என்று அழைக்க, "இப்போ நான் உன் கூட பேசுற மூட்ல இல்லை வசுமதி. வீணா சண்டை போடா வைக்காத" என்று அமர்த்தலாக உரைக்க, "நான் சொல்றதை ஒரு முறை கேளுங்க விஷ்ணு" என்றாள். விஷ்ணு, "நீ என்ன காரணம் வேணூன்னாலும் வச்சிக்கோ, ஆனால் என்னால் இந்த அவமானத்தை ஜீரணிக்க முடியல்லை" என்றவனின் முகமுமே அவமானத்தால் கசங்கியது.
"நான் ஷாக்ல இருந்ததால தான் என்ன பேச முடியல்லை. என் ஃபிரன்ஸ் இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கவை இல்லை" என்று அழு குரலில் கூற, "சரி அப்புறமாவது என்னை நிறுத்தி இவரு என் புருஷன்னு சொல்ல இருந்ததே. அதை பண்ணவே இல்லையே நீ. யாதவைப் பத்தி பேசினதும் என்னை நீ அங்கே மறந்துட்ட. அதான் உண்மை" என்று எழுந்துக் கொண்டான்.
உச்சகட்ட கோபத்திலும், அவமானத்திலும் விஷ்ணு இருக்க அவள் அருகே வசு அழுதவாறு இருந்தாள். "விஷ்ணு" என்று அவள் பேச, "ஸ்டொப் இட் வசு" என்று கத்தி நகர, "என்னை மட்டும் இன்னொருத்தனை காதலிச்சன்னு சொல்லாதிங்க. நீங்களும் இன்னொரு பொண்ணை காதலிச்சிட்டு தனே என்னை ௧ல்யாணம் பண்ணிங்க?" என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
விஷ்ணு கோபத்துடன், "நான் காதலைப் பத்தி சொல்லிக் காட்ட இல்லை வசுமதி. யாதவோட பெயரை எடுத்ததும் என்னை மறந்துட்டன்னு தான் சொன்னேன். என்ட், நான் யாரை காதலிச்சேனோ, அவளை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
அப்படியே வேறு ஒருத்தியை கல்யாணம் பண்ணி இருந்தாலும், எந்த இடத்திலேயுமே அவளை விட்டு கொடுத்து அவமானப்படுத்தி இருக்க மாட்டேன் உன்னைப் போல" என்று சொற்களை கடித்துத் துப்பி விட்டு வெளியே சென்றான்.
வசுவோ அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து விழித்து, அவன் கூறியவற்றை மீண்டும் கிரகித்துப் பார்க்க, 'ஆம். தன்னையே காதலித்தான் என்று அல்லவா மொழிந்தான்? நான் தான் அவ் டாலியா?' என்று தனக்குள் கேட்டவள் அவசரமாக கபோர்டை திறந்து அவனுடைய டயரியை வாசிக்க, இங்கே விஷ்ணுவும் வசுமதி அவனுக்கு டாலியான கதையை சிந்திக்க ஆரம்பித்தான்.
விஷ்ணு பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்து, கோயிலுக்குச் சென்றநாள் அது. அன்று தன் பெற்றோரின் திருமண நாள் என்பதால் அவர்களோடு நேரத்தைக் கழிக்க, அவர்கள் செல்லும் இடம் எல்லாம் சென்றான். அப்போது பதினொரு வயதான ஒரு சிறுமி, ஏழு வயது சிறிய பெண்ணின் கைப் பிடித்தவாறு நடந்து கோயிலுக்குள் வந்தாள்.
அவளுடைய ஒற்றை நீண்ட ஜடையும், அதில் ஒருந்த மல்லிகைப் பூவும், நெற்றியில் கோபுரப் பொட்டு அவள் நாடியில் இருந்த கரிய மச்சம் என்று அவனை ஈர்க்க அவன் அறியாது அவளைப் பின் தொடர்ந்தான். தன் தங்கையை பார்த்துக் கொண்ட விதம், அவள் மீது கொண்ட அக்கறை, பாசம் என்பன அவனை மேலும் ஈர்த்தன.
அப்போது, ஒரு கர்பிணிப் பெண் மயங்கி விழ தன் தங்கையை ஓரிடத்தில் அமர வைத்தவள், அவசரமாக அப் பெண்ணிடம் ஓட விஷ்ணுவும் அவள் பின்னே ஓடினான். இது அப் பெண்ணிற்கு எட்டாம் மாதம் என்பதால் மயங்கி விழுந்ததில் அடிபட, பிரசவ வலியில் துடித்தாள் அப்பெண்.
அவளோடு எவரும் வராமல் இருக்க அச்சிறுமியை தேடி வந்த அவளது தாயும், தந்தையும் தங்கையை அழைத்துக் கொண்டு, அவளிடம் வந்து, "நீ பார்த்துக்கோ. நான் இப்போவே அம்பியூளன்சுக்கு போன் பண்றேன்" என்று உரைத்து அவளுடைய தந்தை அவசரமாக அம்பியூலன்சுக்கு அழைக்க அவளுடைய தாய் கர்பிணிப் பெண்ணுக்கு ஆறுதலை வழங்கிக் கொண்டு இருந்தார்.
அச்சிறுமிக்கு என்ன புரிந்ததோ, "அழாதிங்க ஆன்டி. சீக்கிரமா குட்டி பாப்பா வெளிய வந்துருவான். டாக்டர்ஸ் ரொம்ப நல்லவங்க. எனக்கும் டாக்ராகனும்னு தான் ஆசை. கண்டிப்பா நானே ஃபீரியா உங்களைப் போல ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். இல்லைன்னா, கடவுள் நல்லவங்களை டாக்டராக்கி சேவை பண்ண வைப்பாரு" என்று அவளுக்கு தோன்றியதெல்லாம் பேச, விஷ்ணுவின் மனதில் வைத்தியராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாய் பதிந்து போனது.
அவளுடைய நாடியில் இருந்த மச்சம் அவனுடைய மனதில் ஆழமாய் பதிந்திருக்க, அவளுடைய பெயர் தெரியாமல் இருந்ததால் ஒரு டால் போன்று அவனுடைய கண்களுக்குத் தென்பட்டதால் 'டாலி' என்று பெயரிட்டான். அவளுக்காகவே பதினொராம் வகுப்பில் விஞ்ஞானப் பிரிவை தேரந்தெடுத்து, சிறந்த புள்ளிகளையும் பெற்று மருத்துவ கல்லூரிக்கும் தெரிவு செய்யப்படான்.
பெயர் தெரியா அவனுடைய டாலியின் கனவினை நனவாக்க இரவு பகல் பாராது அயலாது உழைக்க, அவள் மீது இருந்த ஈர்ப்பு நாட்கள் கடக்க காதலாக மாறியது. அவள் முன்னே ஒரு மகப்பேறு மருத்துவரான பின்பே சென்று நிற்க வேண்டும், அதன் பிறகே அவளைத் தேட வேண்டும் என்ற உறுதியோடு படித்தான்.
ஸ்பெஷலாக மகப்பேறு துறையை தெரிவு செய்தவன் முதல் வருடத்தை லண்டனில் முடித்து சென்னைக்கு வர எதிர்ப்பாராத விதமாக அவனுடைய டாலியை அவன் காண நேரந்தது. அவன் டாலியை, அவன் மனமே இவள் தான் என்று கூற, அவளுடைய நாடியின் மச்சம் அதை உறுதிப்படுத்தியது..
அவளோடு பேசாவிடினும், அவளைப் பின் தொடர அப்போதே அவள் தன்னுடைய மாமன் மகனை காதலிப்பதையும், இன்னும் இரண்டு வருடங்களில் திருமணத்தை முடித்து விடுவார்கள் என்று தோழிகளோடு பேசுவதைக் கேட்டவனுக்கு இதயமே நின்ற உணர்வு.
ஆனாலும் அவளுடைய சந்தோஷத்திற்காக இதன் பிறகு அவளைப் பார்கக் கூடாது என்று லண்டன் சென்றவன் மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து தந்தை அவனுக்காக கட்டி இருந்த மருந்துவமனையின் பொறுப்பை ஏற்றான்.
டாலியின் ஞாபகம் வரும் போதெல்லாம் டயரி எழுத லண்டனில் வைத்தே பழக்கப்பட் ஐந்து வருடமாக எழுதிய டயரியே வசுமதியின் கைகளில் இருப்பது. டாலிக்கு திருமணம் முடிந்திருக்கும், குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பாள் என்று கற்பனைக்குச் செல்பவன், தன் மனதை அவளிடம் இருந்து பிரிக்க எடுத்த முயற்சியில் பலன் பூச்சியமாக இருந்தது.
அதன் பிறகே அவளைத் தவிர வேறு ஒருவளை காதலிக்க முடியாது என்று புரிந்துக் கொண்டான். அவனைப் பொருத்த வரையில் டாலி அவனுடைய கனவுக் காதலி. அவனுக்கு மட்டுமே உரிமையானவள். கனவுகளில் அவன் டாலியோடு வாழ ஆரம்பித்தான். அதனாலேயே அவளை காதலிக்க, வேறு ஒருவரையும் அவன் திருமணம் செய்யவில்லை.
வைஷூவை சந்தித்ததும் அவளை சிறு குழந்தையாக பிடித்துப் போக அவளுடன் பாசமாக நடந்துக் கொண்டான். யாதவின் திருமணத்திற்கு அழைத்திருக்க, அங்கே வசுமதியை மணப்பெண்ணாக நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் முடிந்து இருக்கும் என்று நினைக்க, தன் உற்ற தோழனின் மணப்பெண்ணும், டாலி காதலித்த அவளுடைய மாமன் மகன் யாதவாக இருப்பான் என்று கனவிலும், நினைத்துப் பார்க்கவில்லை.
அவளைப் பார்தத்து முதல் அதிர்வு என்றால், அவள் வைஷூவைத் தவறாக பேசியது அடுத்த அதிர்வு. அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்தேற, இறுதியில் விஷ்ணுவையே திருமணம் செய்யுமாறு கூற அவனால் அதை முழு மனதுடன் ஏற்க முடியவில்லை..
அதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலில் இவள் அவன் நினைத்ததைப் போன்று திருமணமாகதவளாக இருக்கிறாள், அதுவும் யாதவைக் உயிருக்குயிராக நேசித்த பெண் என்பதும், அடுத்த காரணம் அவனுடைய கற்பனை டாலிக்கும், வசுமதியிற்கும் மலையளவு வித்தியாசங்கள் இருந்தன.
திருமணத்திற்கு பின்னும் டாலி, வசுமதி இருவரும் ஒரே நபர் என்று அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் டாலியைப் போன்ற குணங்கள் வசுமதியிடம் தென்படும் போது சந்தோஷமாக உணர்வான். நாட்களும் கடக்க வசுமதியின் நற்குணம் அவனுடைய டாலியின் குணத்தை ஒத்திருக்க மெது மெதுவாக இருவரும் ஒருவரே என ஏற்றுக் கொள்ளத் தயாரானான்.
அதற்குள் வசுமதியின் வெட்கத்தை, பிடித்தமின்மை என்று தவறாக நினைத்து ஒதுங்க இன்று அது மிகப் பெரிய பிளவாக மாறியது. ஆனால் இதில் அதிசயம் என்ன என்றால் அவன் அறியாது டாலியை விட வசுமதியை அதிகமாக காதலித்ததையே ஆகும்.
டாலி அவனுடைய கற்பனை. அவனாகவே அவளுக்கான குணங்களை ஏற்படுத்தினான் அவளுடைய சிறு வயது குணத்தை வைத்து. வசுமதி வேறுபட்டவள். மிகப் பெரிய தவறு இழைத்த பின்பும் மன்னிப்புக கேட்டு, தன் தவறை திருத்தியவள், அவளுடைய அனைத்து சந்தோஷ துக்கங்களிலும் விஷ்ணு பங்கேற்று இருக்க, இன்று தன்னை கணவன் என்று அறிமுகப்படுத்தவில்லையே என்ற கோபமே அவளைக் காதலிப்பதை உணர்த்தியது அவனுக்கு.
அப்படி என்றால் அவளை மனைவியாக இவன் முழுமையாக ஏற்றுவிட்டான், அவளும் தன்னைக் கணவனாக அங்கீகரித்து இருக்க வேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்பு இன்று பொய்யாகியது அவனுக்கு வலிக்க அவன் தனியாக இருக்கும் போது அதைப் பற்றிச் சிந்தித்தான்.
அப்போதே நற்குணங்களையும் நிறைகளையும் மட்டுமே கொண்ட டாலியை விட, குறைகள், நிறைகள் இரண்டுமே இருக்கும் வசுமதி அவனது மனதை பாதித்து, டாலியை விட அதிகமாக காதலிக்க வைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான்.
மனைவியைக் காதலிக்கும் கணவனாக, யாதவ் இன்னும் தன் மனைவியைப் பாதிக்கிறாள் என்ற இயல்பான பொறாமைக் குணம் தலைத் தூக்கியதே தற்போதைய சண்டைக்கான காரணம்.
வசுமதி, விஷ்ணு தன்னை பருவ வயதில் இருந்தே காதலித்து இருக்கிறான் என்பதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அவனுடைய காதலின் ஆழம் அவனுடைய எழுத்துக்கள் மூலம் தெரிய, கண்கள் கலங்க நின்றாள். தன்னை காதலிக்காதவனை உருகி உருகி காதலித்து தானே காயப்பட, தன்னை உருகி உருகி காதலித்தவனை தானே காயப்படுத்தி விட்டோமே என்று மனம் வெதும்பினாள்.
விஷ்ணு தன்னை இந்த அளவிற்கு காதலித்ததும், சிறுவயதில் அவளுடைய சிறு பிள்ளைத் தனமான பேச்சிற்கு இணங்கி இலட்சியத்தையே நிறுவி இருக்கிறானே என நினைக்கும் போது மலைப்பாக இருந்தது. இருந்தும் மனம் முழுவதும் ஏதோ ஒன்று நிறைவாய் உணர சந்தோஷத்துடன் குளியல் அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தாள்.
ஆனால் விஷ்ணுவை உண்மை அறிந்த பிறகு நேரடியாக சந்திக்க மனம் தடுக்க, அறையின் பல்கனியில் நின்று தோட்டத்தில் அமர்ந்து இருக்கும் விஷ்ணுவை உரிமையுடன் இரசிக்க, அவனோ அது தெரியாமல் தன்னை வந்து அவள் சமாதானம் செய்யவில்லையே. தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையே என்ற பலவாறான கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு இருந்தான்.
வைஷூவைப் பார்க்க வந்த இரு ஜோடிகளும் பரஸ்பர சுக விசாரிப்புகளிற்குப் பிறகு யாதவ் இருக்கும் போது சாத்விக்கே, நகுலனின் வீட்டில் நடந்தவற்றை மொழிந்தான். அபி, "ஒரு பிரச்சனை முடிய முடிய அடுத்தடுத்த பிரச்சனையா?" என்று சலிக்க, "இதுக்கு அப்புறமா தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பிக்க போகுது. வீட்டை விட்டு போன அஞ்சலி சும்மா இருக்க மாட்டாளே" என்று உரைத்தான் கார்திக்.
சாத்விக், "நாங்க நகுல் பிரோவுக்கு காஞ்சனா மேமை இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க காஞ்சனா மேம் கிட்ட பேசனும்" என்று கூற மூன்று பெண்களுமே அதிர்ந்தனர். கார்த்திக் அமர்த்தலாக, "கண்டிப்பா அவருக்கு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சி, சந்தோஷமா அவரை வாழ வச்சி அந்த அஞ்சலியோட அகங்காரத்தை உடைக்கனும்" என்றான் கோபத்துடன்.
வைஷூ, "நாங்க எப்படி மேம் கிட்ட பேசலாம்?" என்று வினவ, "வாயால தான் நவி பேசனும்" என்ற பதில் யாதவிடம் இருந்து வந்தது. 'எப்போ இருந்து நீ மாறின?' என்ற ரீதியில் சாத்விக்கை தவிற மற்ற அனைவருமே கண்கள் விரிய பார்க்க சாத்விக் சிரிப்பை அடக்கி, "அவன் கரெக்டா தான் சொல்றான். உங்க பேச்சுத்திறமையில தான் நகுல் புரோவோட வாழ்கையே இருக்கு" என நிறுத்தினான்.
அவனே தொடர்ந்து, "இந்த டாஸ்கை கம்பிளீட் பண்ணிங்கன்னா, நீங்க என்ன கேட்டாலும் நாங்க பண்றோம்" என்று மற்ற இரு ஆண்களையும் பார்க்க, அவர்களும் இமை மூடி சம்மதத்தைத் தெரிவிக்க, மூன்று பெண்களும் தங்களுக்குள் பேசி சிறிது நேரத்திற்குப் பிறகு ஒத்துக் கொண்டனர்.
'எப்படியெல்லாம் பேசி கரரெக் பண்ண வேண்டி இருக்கு? மத்தவங்களை விரல் நுனியிலேயே ஆட்டி வைக்கிற எங்களை, இப்படி ஆக்கிட்டாளுங்களே' என்று மூன்று ஆண்களாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டு நாட்கள் இறக்கைக் கட்டிப் பறக்க, இன்று யாதவின் திட்டத்தின் படி சவிதாவை காப்பாற்றச் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அத்தோடு கார்த்திக், சாதவவிக்கிற்கு தெரிந்த அன்டர் கிரவுன்ட் அடியாட்களை வைத்து திட்டத்தின் ஒரு பகுதியை முடிக்க தயாரானான்.
முதல் சரவணன் கூறிய காட்டுப் பகுதியிற்குள், சாத்விக், கார்திக்கின் அடியாட்கள் அனுப்பப்டனர்..அவர்கள் வீட்டை நெருங்கியது தகவல்களை வழங்க ஆரம்பித்தனர். இவர்களைப் போலவே அடியாட்களைக் கண்ட அவ்வீட்டின் காவலுக்கு இருந்தோர், "இங்கே எதுக்கு வந்திங்க?' என்று வினவ, "இது என் ஏரியா. நீங்க எப்பிடிடா என் அனுமதி இல்லாமல் வந்திங்க?" என்று சாத்விக்கின் அடியாளின் தலைவன் வினவினான்.
மற்றவனோ, "யாரு நீ?" என்று எகிற, "குருன்னு சொன்னாலே, சென்னை மொத்த ரௌடியுமே நடுங்கும். நீ என்னையே எதிர்த்து பேசுற" என்று ஓங்கி ஒன்று அரைய குருவின் அடி தாங்காது விழுந்தான் காவலுக்கு நின்று இருந்தவன். சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்களும் வெளியே ஓடிவிர அங்கே கைகலப்பு ஒன்று ஆரம்பித்தது.
இவர்கள் இங்கே சண்டையிடுவதில் மும்முரமாக இருக்க, குருவின் அடியாள் ஒருவன், யாதவின் குழுவினருக்கு தகவலைத் தெரிவிக்க, யாதவின் குழு மொத்தமுமே அங்கே சுற்றி வளைத்தது. பொலிஸைப் பார்த்து அதிர்ந்த காவல் குழு, சிலர் உள்ளே ஓட சிலர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
ஜாமரை பொலிஸ் வரும் போதே பூட்டி இருந்ததால் இங்கே நடப்பவற்றை அவர்களது தலைவனுக்கு கூற முடியாமல் போனது. யாதவை நோக்கி ஒருவன் அடிக்க வர மூக்கில் ஒரு குத்தும், முழங்காலில் ஒரு அடியும் வைக்க அவ் அடியாள் வலி தாங்காது விழுநதான்.
கௌதமை ஒருவன் தாக்க வர, "புரோ எப்படியும் இரண்டு பேரும் அடிச்சிக்க மோறோம். ஒரு வார்ம் அப் பண்ணலாமே" என்று உரைக்க, அடியாள் புரியாமல் அவனைப் பார்த்தான். கௌதம் இரு கால்களையுமவ அகற்றி குனிந்து குனிந்து எழும்ப, 'இவன் சண்டை போட வந்துட்டு எதுக்கு சர்கஸ் காட்டுறான்?' என்று பாவமாய் பார்த்தான்.
இதை தூரத்தில் ஒருவனது வயிற்றுக்கு எட்டி உதைத்த யாதவ் பார்த்தவன், "இவனை" என்று பல்லைக்கடித்து, கௌதம் இருக்கும் இடம் வந்தவன், கௌதமின் சேட்டையைப் பார்த்தவனை யாதவ் ஓங்கி உதைத்து, கௌதமையும் உதைக்க இருவருமே விழுந்தனர்.
"எவன்டா டி.சி.பி மேலேயே கையை வைக்கிறது?" என்று கத்தியவாறே எழ, யாதவ் முறைத்துப் பார்த்ததில், "பார்த்துட்டானே சமாளிப்போம்" என்று மனதுள் நினைத்து, "சேர். நான்..." என்று பேச அதை இடைமறித்த யாதவ், "குரங்கு வித்தை காட்டுறவன் போல நடந்துக்காமல் ஒரு டி.சி.பி போல நடந்துக்கங்க.
உங்களுக்கான பனிஷ்மட் இங்க இருக்கிற அத்தனை பேரையும் கைமா பண்ணிட்டு தான் உள்ள வரனும். மத்தவங்க எல்லாருமே என் கூட உள்ள வருவாங்க" என்று ஆணையிட்டவன், "எல்லாரும் உள்ள போலாம்" என்று கத்தி கட்டடத்துக்குள் நுழைய, "டேய் டேய்" என்ற கௌதமின் கதறல் அவன் செவியை அடையவில்லை.
கௌதம் சண்டையிடுவதில் மிகக் கெட்டிக்காரன், ஆனால் அவனது சேட்டை அதிகமாக இருப்பதால் யாதவினால் கௌதமிற்கு இது போன்ற தண்டனைகள் அடிக்கடி வழங்கப்படும். யாதவின் மீது இருந்த கோபத்தையும் சேர்த்து அடியாட்களின் மீது காட்டி அனைவரையும் பிரட்டி எடுத்தான்.
அத்தோடு குருவின் அடியாட்கள் சிலர் பொலிஸோடு உள்ளே செல்ல, சிலர் வெளியே கௌதமோடு சண்டை இட்டனர். உள்ளே பொலிஸ் மற்றும் சவிதாவை கடத்தியவர்களுக்கு இடையில் மிகப் பெரிய சண்டை நிகழ சீறும் சிங்கமென யாதவ் வேட்டையாடி, சவிதாவை ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தான்.
மூன்றாவது அறையில் இருந்து சவிதாவை கடத்திய குழுவின் தலைவன் அரை மயக்கத்தில் இருந்த சவிதாவின் தலையில் துப்பாக்கியை வைத்தவாறே வெளியே வந்து, "எங்களை போக விட இல்லை இவ தலையில குண்டு இறங்கும். எல்லாரும் பின்னாடி போங்க" என்று கத்தினான்.
பொலிஸாரும், குருவின் ஆட்களும் யாதவைப் பார்க்க, அவனுமே பின்னால் செல்லுமாறு கண்ணசைக்க, அவர்கள் பின்னேர, சவிதாவைக் கடத்தியவர்கள் சவிதாவோடு முன்னேறி கதவிற்கு வெளியே சென்றார்கள். தங்கள் வாகனம் நிறுத்திய இடத்திற்கு அருகே வர, "இவளுக்காக என்னை பிடிக்க முயற்சி பண்ணிங்களா சார்?" என்று சவிதாவை தள்ளி அவள் நெற்றியில் சுட டிரிகரை அழுத்த, பின்னிருந்து அவனை எவரோ உதைத்ததில் குண்டு அவளுடைய வயிற்றைத் துளைத்துச் சென்றது.
அனைவரும் யார் அவர் என்று பார்க்க அங்கே சாத்விக் கோபத்துடன் நின்று இருந்தான். உடனே சவிதை அங்கிருந்து அகற்ற முனைந்த சாத்விக்கை நோக்கி கீழே விழுந்தவன் துப்பாக்கியை எடுத்து சுட முனைய யாதவ் ஓடிச் சென்று அவனை பின்னிருந்து மறைத்ததால் யாதவின் நெஞ்சை ஒரு தோட்டாவும் வயிற்றை இரு தோட்டாக்களும் துளைத்துச் சென்றன.
கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிய, யாதவ், சவிதா இருவரையும் சுட்டதில் கொதித்தெழுந்ந பொலிஸ் அங்கிருந்த அனைவரையுமே இரக்கம் பாராது கொடூரமாக தாக்க கௌதம் ஒருபடி மேலே சென்று யாதவைச் சுட்டவனின் நெற்றிப் பொட்டிலேயே தன் குண்டை இறக்கினான்.
யாதவ் கீழே விழ, சவிதாவை கௌதம் கையிலேந்தி ஓட, யாதவை தூக்கிக் கொண்டு வீதியின் அருகே நின்று இருக்கும் தனது காரை நோக்கி ஓடினான் சாத்விக். கார்திக் அங்கே காரில் காத்திருக்க, இவர்கள் இருவரும் இருவரை தூக்கி ஓடி வருவதைப் பார்த்தவன் அவசரமாக காரை இயக்கி செல்லத் தயாராகினான். நால்வருமே காரில் ஏறி விஷ்ணுவின் வைத்தியசாலையை நோக்கிப் பறந்தனர்.
பொலிஸாரின் அடியைத் தாங்காது அடியாட்கள் துவள, குருவின் அடியாட்கள் அனைவருமே மற்ற கிருமினல்களை தங்கள் கஸ்டடிக்கு அழைத்துச் செல்ல, பொலிஸார் அவசரமாக அவ்விடத்தை பழையது போன்றே சுத்தம் செய்து எதுவுமே நடவாதது போன்று மாற்றி வைத்தவர்கள் ஜாமரையும் எடுத்து யாதவைப் பார்க்கச் சென்றார்கள்.
விஷ்ணுவிற்கு சாத்விக் தகவல் தெரிவித்து இருக்க வைத்தியசாலையின் வாசலிலேயே இரண்டு ஸ்ட்ரெச்சருகள் தயாராக நிற்க யாதவ் மற்றும் சவிதா இருவருமே ஒவ்வொரு ஸ்ரெச்சரில் வைக்கப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர் ஆபரேஷன் தியடருக்கு.
இருவருக்கும் அவசரமாக அறுவை சிகிச்சை நடக்க வெளியே அனைவருமே கலங்கிப் போய் நின்றார்கள் அனைவரும். சாத்விக்கை சுட வரும் போது, யாதவ் இடையில் சென்று அவனைக் காப்பான் என்று யாருமே நினைக்கவில்லை. சாத்விக்கின் அருகில் வந்த கார்த்திக் அவனுடைய தோளில் கைவைக்க அவனுடைய முகத்தைப் பார்த்த சாத்விக்கின் கண்கள் கலங்கி இருந்தன.
அவனிடம் எதையும் கேட்கத் தோனாது கௌதமிடம் செல்ல, கௌதம் கார்திக்கை அணைத்து சிறு பிள்ளை என அழுதவாறு நடந்த அனைத்தையும் கூற, கார்திக்கிற்கும் யாதவின் செய்கை அதிர்ச்சியாகவே இருந்தது.
தகவலை வைஷூவிற்கும், யாதவின் குடும்பத்திற்கும், சவிதாவின் தந்தைக்கும் மட்டும் தெரிவிக்கப்பட வைஷூ அதைக் கேள்வியுற்று மயங்கியே விட்டாள்.
தொடரும்...
அடுத்த பதிவு புதன் கிழமை வரும்
கருத்துக்களைப் பகிர,