வணக்கம் வணக்கம் வணக்கம்... இதோ இதுவரை உங்களை காக்க வைத்த 'வாரியர்ஸ்' 16 கதை, வருகிற திங்களில் இருந்து உங்களோடு பயணிக்க போகிறது. இந்தக்கதை 16 பேர் சேர்ந்து எழுதியிருக்கிறோம். அனைவரும் இக்கதைக்கு தங்களால் ஆன முயற்சியை கொடுத்திருக்காங்க.
ஸ்ரீமா முதல் வணக்கமும், முதல் நன்றியும் உங்களுக்கு..... கேட்ட உடனே நீங்க ரொம்ப சந்தோஷமா கதைத்திரி ஓபன் பண்ணி கொடுத்தீங்க. அதனால இந்த கதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம் ஸ்ரீமா.
தாமரை இல்லேன்னா இந்த கதை இதுவரை முடிவுபெற்றிருக்காது. தாமரை நீங்கதான் தொடர்பாளராக செயல்பட்டீங்க. எல்லாரோடையும் பேசி ஒன்றிணைத்து, நீங்க இந்த கதைக்காக மல்லுக்கட்டினது வார்த்தைகளால் சொல்ல முடியாது. நமக்கு நாமே நன்றி சொல்ல கூடாது. ஆனாலும் எல்லார் சார்பிலும் டான்க்ஸ்குபா...
இந்த கதை ஆரம்பித்தபோது நம்ம கூட சேர்ந்து அப்புறம் வேறு பல காரணங்களால் பயணிக்க முடியாம போனாலும், ஆரம்பத்தில் அவர்கள் தங்களால் ஆன பங்களிப்பை அதிகமாவே கொடுத்தாங்க. மனோலஷ்மி@ஆண்டாள் அருகன் நீங்க ரொம்ப ஆர்வமா நம்ம கூட பயணித்தீர்கள். ஆனா உங்க வேலை காரணமா நம்ம கூட பயணிக்க முடியல. ரிஷா, காருண்யா, ரிஷிவந்தி, நீங்க எல்லாரும் உங்களால் முடிந்த பங்களிப்பை எங்களுக்கு கொடுத்தீங்க. ஆனா உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் எங்க கூட பயணிக்க விடாம தடுத்துடுச்சு. இந்த இடத்தில உங்க நால்வருக்கும் நம்ம நன்றியை கூறிக்கிறோம்.
எழுத்தாளர்கள் இணைந்து எழுதுவது அடிக்கடி நிகழ்வது தான்.. ஆனால் இந்தக் கதைக்கு ஒரு சிறப்பு இருக்கு..
இந்த கதை தனிப்பட்ட ஒருவரின் கதை அல்ல. 16 எழுத்தாளர்களும், அவர்களின் புகழ்பெற்ற கதையின் நாயகர் நாயகிகள்.. கதாபாத்திரங்களாக கைகோர்க்கும் புதிய கதை. மேலும்... ஒவ்வொரு அதிகாரங்களும், 16 எழுத்தாளர்களும் கலந்துதான் எழுதி இருக்கிறோம். நிறைய விவாதங்கள், நிறைய சிந்தனைகள், நிறைய அறிவுபூர்வமான செய்திகள், நிறைய அனுபவம் அபப்டின்னு நாம 16 பேரும் பெற்றுக்கொண்டோம்.. பகிர்ந்துகொண்டோம். உண்மையா... இது ஒரு அழகிய சங்கமம் அப்படின்னே சொல்லலாம். இதில் கதை எழுதியதை விட நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்வது பொருந்தும். எல்லாரும் ஏகமனதாக ஒவ்வொரு அதிகாரங்களையும் செதுக்கினோம் அப்படின்னுதான் சொல்லணும். அதனால் வாசகர்களே... உங்கள் நிறை குறைகளை மறுக்காது மறக்காது கூறுங்கள். அது எங்களை மென் மேலும் செதுக்கும்.
இப்போதைக்கு எந்த எழுத்தாளர்கள், எந்த கதாபாத்திரங்கள் இந்த கதையூடாக பயணிக்க போறாங்க என்கிறதை சொல்றேன். தொடர்ந்து வெள்ளி அன்று முதலாவது அதிகாரத்துடன் உங்களை சாந்திக்கிறோம்.
இதில் ஆர்யன் அறிவுடை நம்பி நாயகனாக வருகிறான். இவன் கற்பனை பாத்திரம்.
தியா நாயகியாக வருகிறாள். இவள் துமியினுடைய 'முரணியல் கவிதை' என்னும் நாவலின் சுட்டிப்பெண்ணாக வந்தவள். இவர்களுடன் அபிராம்- சுவர்ப்னா, ஆனந்தன், சூரஜ் ஆகியோரும் கற்பனை பாத்திரங்கள்.
வாரியர்ஸ் 016
எழுத்தாளர்களும் அவர்களின் நாயக நாயகிகளும் ..
------------------------------
தாமரை:
“உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.”
இராஜா ஜெயவர்மன்(ஜெய்)-மதிவதனா
பானு ரேகா:
“என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன்னை கையணைக்க”
இரத்னவேல்பாண்டியன்- தமிழரசி
ரம்யா (சரணிகா)தேவி:
“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே”
காசிவிஸ்வநாதன் ராயர் (ராயர்)- திகம்பரி
ஆனந்த லக்ஷ்மி( கண்ணம்மா) :
“உன் மனைவியாகிய நான்”
கிருஷ்ணா - கலை
சிவரஞ்சனி:
“நீயின்றி வாழ்வில்லை”
அகிலன்- அமிர்தவர்ஷினி
பிரியா தர்ஷினி :
“மரித்த இதயங்கள்”
ப்ருத்வி,விக்ரம்
ஷா சங்கரி:
“வான்முகிலின் வண்ணம் நீயடி”
ஆதீரநந்தன்- அம்ருதசாகரி
துமி:
“முரணியல் கவிதை”
தியா
பொம்மு :
“விழிகள் தேடும் மொழிகள்”
ப்ரவீன்- நாச்சிமுத்து (வருணிகா)
இனிதா(தமிழினி) :
“உன்னருகில் எனை அறிந்தேன்”
ஆரோன் – நன்விழி
அருணா :
“என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ”
விதார்த் வருண்- மீரா
பிரஷா :
“நீயே என் ஜனனம்”
அக்கண்யன் அருளானந்தம் – ஜனனி
ரேவதி முருகன் :
“ஒரு புன்னகைப் பூவே”
தர்ஷன் - ஷாலினி
தீபாகோவிந் :
“களவறியா காதலன் நான்”
அதீந்திரன்- ஆராத்தியா
தர்ஷி ஸ்ரீ :
“விதையில்லாமல் வேரில்லையே”
ஹரிஷ் -மதி
சிவநயனி முகுந்தன்(விஜய மலர்)
“நிலவே என்னிடம் நெருங்காதே“
அநேகாத்மன்-சர்வாமகி