நினைவு-21
அன்று அஜய்ய்யும்,சஹானாவும் பணி நடைபெறும் இடத்தைப் பார்வையிட வந்திருந்தனர். அப்போது ஷ்யாமும் அங்கே இருக்க, இருவரும் தொழில் நிமித்தமான பேச்சுகளில் இறங்கவே, சஹானாவிற்கு சலிப்பு ஏற்பட அங்கே சற்று உலாவிவிட்டு வருவதற்காக அஜய்யிடம் அனுமதி பெற்று நடந்தாள்.
சற்று தூரம் நடந்தவள், அங்கே சிறுவர்களின் பேச்சுக்குரல் கேட்கவும் அங்கே சென்றாள்.
“டேய், குயிக்கா சாப்பிடு. டைமாகிடுச்சு. அவர் வந்தா அடி தான் விழும்” என்று அவ்விரு சிறுவர்களில் பெரியவன் துரிதப்படுத்த,
இளையவனோ, “நோ, ஐ கான்ட். காலெல்லாம் வலிக்குது. கையில ப்ளட் வருது.” என்று அழவே ஆரம்பித்துவிட்டான்.
அவ்விருவரும் சகோதரர்கள் போலும் என்று யூகித்த சஹானா, ‘ஆனால் இவங்க ஏன் இங்க? பார்த்த ஏழைகள் மாதிரியும் தெரியலயே’ என்று எழுந்த வினாவுடன் அவர்கள் அருகில் சென்று,
“ஹாய் பாய்ஸ், வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?” என்று ஆங்கிலத்திலேயே கேட்க,
பெரியவனோ சற்று உஷாராகி,
“நீங்க யாரு? நீங்க ஏன் இதெல்லாம் கேட்குறீங்க?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“நான் இங்க தான் வேலை செய்றேன். என்னை உங்க அக்கா மாதிரி நினைச்சுக்கோங்க. நீங்க இங்க வேலைப் பார்க்குறீங்களா?” என்று தன் கேள்விக்கணையைத் தொடர்ந்தாள்.
பெரியவனோ, “நீங்க நல்லா தானே இங்கிலீஸ் பேசுறீங்க. தென், ஏன் இங்க வொர்க் பண்ணுறீங்க?” என்க,
அவனை மெச்சியவள், “நீங்க கூட இந்த சின்ன வயசுலயே நல்ல இங்கிலீஸ் பேசுறீங்க. அப்போ நீங்க மட்டும் இங்க வொர்க் பண்ணலாமா?” என்றாள்.
சிறியவனோ சஹானாவின் பேச்சில் முற்பகுதியை மட்டும் காதில் போட்டுக்கொண்டு,
“நாங்க சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல படிச்சோம் தெரியுமா?” என்று பெருமையாகக் கூறினான் தோராயமாக, எட்டு வயதே இருக்கும் அச்சிறுவன்.
“அப்படியா? அப்போ இங்க சும்மா வந்தீங்களா? அம்மா, அப்பா இங்க தான் வொர்க் பண்ணுறாங்களா?” என்று சஹானா கேட்கவும்,
பெரியவன் முந்திக்கொண்டு, “நீங்க ஏன் அதெல்லாம் கேக்குறீங்க? கம் லெட்ஸ் கோ” என்று தன் சகோதரனை மேலும் துரிதப்படுத்திக் கொண்டு சிறியவனையும் அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
இது சஹானாவைத் தேடி வந்த அஜய்யின் காதிலும் விழ,
“சஹி, என்னாச்சுடா? யாரு அந்த கிட்ஸ்?” என்க,
“தெரியல, இங்க வேலைப் பார்க்குறாங்கனு நினைக்குறேன்” என்று கூற,
“என்ன சஹானா சொல்ற?இங்க சைல்டு லேபர்ஸ் டெஃபனைட்டா கிடையாது. இங்க வொர்க் பண்ணுற யாரோட பசங்களா இருப்பாங்க” என்று சிறு கோபத்துடன் கூற,
சஹானாவோ, “அவங்களோட வே ஆஃப் டாக்கிங் ஏழைகள் மாதிரி தெரியல. நானும் பேசிப்பார்த்தேன். ஏதோ மறைக்குறாங்க. ‘அடி விழும்’னு வேற அந்த பெரிய பையன் ஏதோ சொன்னான்” என்று பதற,
“சரி சஹி, ரிலாக்ஸ், நாம விசாரிக்கலாம்." என்று கூறியபடியே ஷ்யாமை அழைத்தவன் சிறுவர்களை பின்தொடர்ந்து சென்று நிறுத்தினான்.
"பாய்ஸ், இங்க என்ன பண்ணுறீங்க? ஸ்கூல் போகலையா? யார் கூட இங்க வந்திங்க?" என்று தன்மையாகவே கேட்டான்.
அந்த பெரியவனோ அஜய் யாரென்றே தெரியாமல்,
"அங்கிள், இந்த ஆன்ட்டி ஏதோ சும்மா சும்மா வந்து எங்ககிட்ட ஏதேதோ கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று புகார் அளித்தான்.
அஜய்யோ ஷ்யாமிடம், "என்னடா இது? சைல்டு லேபர்ஸ்லாம் வச்சு வேலை செய்யக்கூடாதுனு தான் நாம பாண்ட்லயே சொல்லிருக்கோமே. மேஸ்திரிய கூப்பிட்டு என்னனு கேளு" என்று ஆணையிட,
அச்சிறுவர்களில் பெரியவனோ, "அப்போ நீங்க தான் எங்க பாஸா? சாரி சார். நாங்க இங்க தான் வொர்க் பண்றோம். பட், யாருக்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. எங்கள வேலைய விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க சார்..ப்ளீஸ்" என்று அஜய்யின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழ, அஜய்யோ அச்சிறுவர்களின் அளவிற்கு குனிந்து,
"சரி, உங்கள அனுப்பமாட்டேன். பட், இந்த மாதிரி வேலையெல்லாம் நீங்க செய்யக்கூடாது. உங்களுக்கு வேற வேலைக் கொடுக்கிறேன். வாங்க என்கூட" என்று அழைத்துக்கொண்டவன் ஷ்யாமிடம்,
"மேஸ்திரி வந்ததும் செட்டில்மெண்ட் க்ளியர் பண்ணி அனுப்பிடு" என்று உத்தரவிட,
ஷ்யாமோ, "அஜய்,70% வொர்க் முடிஞ்சது. இப்போ போய் எப்படிடா...?" என்று இழுக்க,
அஜய்யோ கோபமாக,
"இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன் எல்லாத்தையுமே அவன்கிட்ட குடுக்காம, முக்கியமான இந்த மாதிரி சில விஷயங்களையாவது நீயே டைரெக்டா ஹாண்டில் பண்ணுனு. இப்போ ரிஸ்க் யாருக்கு?" என்று உறுமிவிட்டு,
"இப்போ ஃபீல் பண்ணி ஒண்ணும் ஆகப்போறது இல்ல. மேஸ்திரிக்கிட்ட நீ தான் பேசுற மாதிரி பேசி எல்லாத்தையும் சால்வ் பண்ணுற. இன்னைக்கு ஈவினிங்குள்ள நம்மோட எல்லா சைட்லயும், வொர்க் பண்ணுற அத்தனை வொர்க்கர்ஸொட ப்ரொஃபைலும் வித் ப்ரூஃப் உடனடியா வேணும்னு சைட் மேனேஜர்க்கு மெயில் பண்ணு. லிஸ்ட்ல, வயசானவங்க கிட்ஸ் இருந்தா, என்ன பண்ணனும்னு உனக்கு தோணுதோ அதைப் பண்ணு. எல்லாத்தையும் நான் உனக்கு எப்பவுமே சொல்லித்தர முடியாது ஷ்யாம்" என்றான் அதிரடியாக.
தன் தவறை உணர்ந்த ஷ்யாமோ அடுத்து செய்ய வேண்டிய வேலைக் குறித்த சிந்தனையில் இறங்க, அஜய்யோ அப்போதுள்ள நினைமையை சீர்படுத்தும் முறையைக் கையாண்டான்.
சிறுவர்களிடம், "நான் தான் இங்க எம்.டி. நான் கேட்குற கேள்விக்கு உண்மையை மட்டும் சொல்லனும். சொல்லுங்க, உங்க நேம் என்ன? ஊர் எங்க? உங்க பேரெண்ட்ஸ் எங்க? நீங்க எப்படி இங்கே வந்தீங்க?" என்று தன் விசாரணையைத் தொடங்கினான்.
பெரியவனோ தாங்கள் ஒரு விழாவிற்காக 7 மாதங்களிக்கு முன்பு திருச்சி சென்றதாகவும், அங்கே விளையாட்டு கவனத்தில் காணாமல் போனதாகவும், பெற்றோரை காணாமல் தவித்த இந்த சிறுவர்களை ஒரு கும்பல் சென்னைக்கு அழைத்து வந்து, இது போன்ற பெரிய கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளில் பணிகளில் அமர்த்தி, அதன் மூலம் வரும் வருவாயில் இவர்களுக்கு உணவு மட்டுமே அளிப்பதாகவும், யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், தங்களைப் போன்று பலர் இருப்பதாகவும் கூறினான்.
உடனடியாக அர்ஜூனைத் தொடர்பு கொண்ட அஜய், அனைத்துத் தகவல்களையும் பரிமாற அடுத்து நடைபெற வேண்டிய பணிகள் துரித வினையில் நடந்தேறியது.
நண்பன் ஆதியை அழைத்தவன் விஷயத்தைக் கூறி,
"நீ வந்து இந்த பசங்கள உன்னோட கூடிட்டு போய்டு.அவங்க பேரெண்ட்ஸ கண்டுபிடிக்குற வரை இவங்க அங்கேயே இருக்கட்டும்" என்று கூற,
சிறுவர்களோ அஜய் கூறியதிலும், அர்ஜூனை காவலர் சீருடையிலும் கண்டதில் பயந்து,
"எங்களை எங்க கூடிட்டு போறீங்க அங்கிள்? அவங்களுக்கு தெரிஞ்சா அடிப்பாங்க. நாங்க வரமாட்டோம்" என்று கூறி அழுதபடியே தான் பெற்ற அடிகளின் பலனாய் கிடைத்த வடுக்களைக் காட்ட, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், அதுவரை ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்த சஹானா அழுதேவிட்டாள்.
அஜய் சஹானாவை சமாதானபடுத்த, ஷ்யாம் அச்சிறுவர்களின் அருகில் சென்றமர்ந்து,
"இல்லடா வாலுகளா, இவ்வளவு பேசுறீங்களே, போலீஸுக்கெல்லாம் பயப்படலாமா? இந்த அங்கிள் ரொம்ப நல்ல அங்கிள்டா. இவங்க உங்கள உங்க பேரெண்ட்ஸோட சேர்த்து வைப்பாங்க. அதுவரைக்கும் நாங்க சொல்ற இடத்தில நீங்க இருக்கனும். வேலைக்குலாம் போகக்கூடாது.அங்கேயும் சில பசங்க இருப்பாங்க, அவங்க கூட சேர்ந்து எல்லா வாலுத்தனங்களையும் பண்ணி, அவங்கள ரெண்டாக்குங்க. ஓகேவா?" என்று கூற, 'பெற்றோர் பற்றி பேசியதுமே உற்சாகத்தில்,
"எங்க அப்பா, அம்மாகிட்ட போகப்போறோமா? ஜாலி" என்று ஷ்யாமுடன் ஹைபை கொடுத்தனர்.
அஜய்யும், "ஆமா, சீக்கிரமே. பட் அதுக்கு நீங்க இந்த அங்கிள் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லனுமே..! அப்ப தான் அவங்களைக் கண்டுபிடிக்க முடியும்" என்று ஆசையைத் தூண்டி அர்ஜூனின் விசாரணைக்கு அவர்களைத் தயார்ப்படுத்தினான்.
ஆதியிடமும், "ஆதி, பசங்க பத்திரம். அந்த கும்பலை அர்ஜூன் அரெஸ்ட் பண்ணினா தான் இவங்க பேரெண்ட்ஸ் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும். என்னோட யூகம் சரின்னா இவங்க பேரெண்ட்ஸ் பற்றி கண்டிப்பா அந்த கும்பலுக்கு தெரிஞ்சிருக்கும்" என்று அஜய் கூற,
அர்ஜூனும், "யா, ஐ திங்க் சோ. ஷ்யாம், நீயே இவங்களை கூட்டிட்டு போய் அங்க விட்டுரு. ஆதி, நான் நைட் முடிஞ்சா தான் வீட்டுக்கு வருவேன். டேக் கேர்" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, சிறுவர்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் கடத்தல் கும்பலை நெருங்கும் முயர்ச்சியில் இறங்கினான்.
ஆதியும், ஷ்யாமும் சிறுவர்களுடன் விடைபெற, சஹானாவோ,
"ரித்து, 'அங்க அங்க'னு பேசுனீங்களே, அது எங்க?" என்று கேட்டாள்.
அஜய்யோ, "அது ஒரு ஹோம் மாதிரிடா. இது பற்றி உன்கிட்ட இப்போ சொல்ல முடியாதுடா. பட், கண்டிப்பா சீக்கிரத்தில் சொல்வேன்" என்று அவளையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
*******
மறுநாள் அஜய்யின் அலுவலக அறையிலிருந்த ஷ்யாம் தன் உதவியாளர் ஸ்ரீராமை அழைத்தான். உள்ளே நுழைந்தவன் முதலில் பார்த்தது அஜய்யின் மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த சஹானாவைத் தான்.
உள்ளே சென்றவனை வரவேற்றது ஷ்யாமின் கோபம் தாங்கிய முகம் தான்.
"என்ன ஸ்ரீ இது, இங்க நீ பார்க்குற வேலைக்கு, வேற யாரும் மற்ற கம்பெனியில எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு கேட்டுப்பாரு. நான் உன்னை ஒரு நல்ல நண்பனா நினைச்சுதான் இவ்வளவு பெரிய முக்கியமான வேலையை உனக்கு கொடுத்தேன்" என்று ஷ்யாம் கோபத்தில் வெடிக்க,
ஸ்ரீ, "இப்ப என்னாச்சு ஷ்யாம்? நானும் உங்களுக்கு உ... உண்மையா தானே இருக்கேன்" என்று திணற,
"நீ தானே? நீ எவ்வளவு உண்மையா இருக்கேனு இதோ இந்த ஃபைல பார்த்து தெரிஞ்சிக்கோ" என்று ஒரு கோப்பை அவன் முன் வீசினான்.
அக்கோப்பில், ஒவ்வொரு கட்டுமான பணி மனையிலும் பணிபுரியும் அனைவரது சுயவிவரம் அடங்கியப் பட்டியலும், விதிமுறைகளை மீறி சிறார்களையும், முதியோர்களையும் கட்டுமான பணியில் அமர்த்த அவன் பெற்ற ஊழல் விவரங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
ஷ்யாமும், "படிச்சுட்டியா? உனக்கு நாங்க... நான் என்னடா குறை வச்சேன். மத்தவங்களை விட உனக்கு எல்லாமே பெட்டரா தானே பண்ணுனேன். இவ்வளவு ஏன், என் லேப்டாப் பாஸ்வேர்டு கூட உன்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். எங்கள ஏமாத்த உனக்கு ஏன்டா மனசு வந்துச்சு?" என்று கேட்க, திடீரென்று தன் வினை வெளியே வருமென்று எண்ணியிராத ஸ்ரீராமும் இதில் விதிர்த்துதான் போனான்.
அதுவரை பார்வையாளராக இருந்த அஜய், "சொல்லுங்க மிஸ்டர்.ஸ்ரீராம். அமைதியா இருந்தா என்னனு நாங்க எடுத்துக்குறது? எங்க பி.ஏவா நீ எங்ககிட்ட இருந்து வாங்கின சாலரிய விட, இந்த தில்லுமுல்லுல நீங்க சம்பாதிச்சது அதிகம். அதுவும் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலைக்கு வர்ற ஏழைகளோட வயித்துல இப்படியா அடிப்ப? நீயும் அப்படி ஒரு நிலைமைல இருந்து வந்தவன் தானே. அவங்க நிலைமைய யோசிச்சுப் பார்த்தியா?" என்று கேட்டான்.
நிலைமை மோசமாவதை யோசித்த ஸ்ரீராம், "சாரி சார் மன்னிச்சிருங்க. ஏதோ பணத்தாசையில இப்படி பண்ணிட்டேன். இனி கண்டிப்பா இப்படி பண்ணமாட்டேன் சார். நம்புங்க" என்று கெஞ்ச,
அஜய்யோ, "தப்பு வெளிபட்ட ஆன் தி ஸ்பாட்லயே யாராலயும் திருந்தமுடியாது ஸ்ரீராம். முழுசா திருந்தனும்னா முதல்ல தப்பு ஆரம்பிச்ச புள்ளியில இருந்து தான் தொடங்கனும். அப்படி பார்த்தால், நீ பாஸ்ட் ஒன் இயர ரீவைண்ட் பண்ணி பார்க்கனும். நீ இங்க வரும்போது நல்லவனா தான் இருந்த... இடையில தான் உன்கிட்ட மாற்றம். எதுனால மாற்றம், எங்கமேல என்ன தப்புனு உன்னால இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை எங்களுக்கு பண்ண முடிஞ்சதுனு யோசி" என்று முடித்துக்கொண்டான்.
ஸ்ரீராம் அமைதியாகவே இருக்கவே, ஷ்யாம் தான்,
“இனியும் யோசிக்க என்னடா இருக்கு? இவன் இங்க உழைச்சு, நமக்கு நல்லது செய்ததெல்லாம் போதும். இனி இவனோட உழைப்பு நமக்கு தேவையில்லை. இனியும்...” என்று ஏதோ சொல்லவந்தவனைத் தடுத்த அஜய்,
“ஷ்யாம், காம் டவுன் டா. சும்மா, கோபத்துல எடுத்தோம் கவிழ்த்தோம்னு டிசைட் பண்ணாத. என்ன ரீசனுக்காக அவன் அப்படி நடந்துக்கிட்டான்னு பொறுமையா பேசலாம்.” என்க, ஷ்யாமோ அவனது சமாதானத்தை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை.
“லுக் அஜய், இந்த கம்பெனில யாரையும் சேர்க்கனும், வெளிய அனுப்பனும்னு டிசைட் பண்ணுற ரைட்ஸ் எனக்கும் இருக்கு. இனி இவன் இங்க வொர்க் பண்ணக்கூடாது” என்று உறுதியாகக் கூற, ஸ்ரீராமோ ஷ்யாமிடம் கெஞ்ச,அதுவரை அமைதியாக இருந்த சஹானாவும் ஷ்யாமுடன் இணைந்து,
“ரித்வி, என்ன பேசுறீங்க நீங்க? என்னைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் ஷ்யாம் மாமா எடுத்த முடிவு தான் ரொம்ப கரெக்ட். இதுக்கு மேலேயும் எப்போ என்ன நடக்கும்னு யோசிச்சு, வொர்ரி பண்ணிக்கிட்டே இருக்கமுடியாது. சோ, இட்ஸ் பெட்டர் டு செண்ட் ஹிம் ஆஃப்" என்க, ஸ்ரீராமோ குரோதத்தில் முறைத்தான்.
அஜய்யும், "கோபத்தில் எடுக்குற எல்லா முடிவும் சரியா இருக்காது. திங்க் வெல் அண்ட் டிசைட்" என்று கூறிவிட்டு ஒதுங்க, ஷ்யாமோ பூஜாவை அழைத்து பணிநீக்க உத்தரவு ஆணையை எடுத்துவர கட்டளையிட்டான்.
ஸ்ரீராம் அறையை விட்டு வெளியேறுகையில் அறையில் இருந்த அம்மூவரையும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டே வெளியேறினான். அந்த பார்வையை சஹானாவும், ஷ்யாமும் அலட்சியப்படுத்த, அஜய்க்கோ ஏதோ தவறு இருப்பது போன்ற உள்ளுணர்வை ஏற்படுத்தியது.
மாலை தன்னவனுடன் மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சஹானா, சில மணி நேரங்களாகவே யோசனையுடன் இருந்த அஜய்யைக் கண்டு,
"ரித்து, பீச்சுக்கு போகலாமே" என்றாள் அவனது தோள்களில் சாய்ந்தவாறே.
அஜய்யோ ஆச்சிரியத்துடன் புருவம் உயர்த்தியபடியே வெளியே பார்த்தவனை ‘மாஷா’வைப் போல் முறைத்த சஹானா,
"இல்ல சஹிபேபி, எப்பவுமே நான் தான் கேட்பேன் வெளியே போகலாமானு, நீ என் அண்ணாகிட்ட பேசனும், ஆட்டுக்குட்டி கிட்ட பேசனும்னு சொல்லுவ. இன்னைக்கு நீயே கேட்டிருக்கியே, அதான் மழை வர்றதுக்கு அறிகுறி இருக்கானு பார்த்தேன்" என்று கூறி, அவள் சாய்ந்த தோளிலேயே அவளிடமிருந்து சில வீர அடிகளையும் பெற்றான்.
"சரி போலாம். அதுக்கு ஏன்டி இப்படி மொத்துற? நீ மொத்துற மொத்துல நாம ரெண்டு பேரும் பீச் போவோமா? இல்ல ஹாஸ்பிடல் போகப்போறோமானே தெரியல" என்று அஜய் கூற, மேலும் இரு அடிகளை பரிசளித்துவிட்டு,
"என்ன பேசுறீங்க நீங்க? போங்கனு சொன்னா போங்க, அத விட்டுட்டு எதுக்கு இந்த விதண்டாவாத பேச்செல்லாம்?" என்று முறுக்கிக்கொள்ள,
"ரிலாக்ஸ், இதோ பீச் வந்துட்டோம்" என்று அவளை சமாதானப்படுத்தினான்.
கடலன்னையைக் கண்டவள் சேயென்று ஓடிச் சென்று கால்களை அலையில் நனைத்து விளையாடிக் கொண்டிருக்க, அஜய்யோ குழந்தை போல் விளையாடும் தன்னவளின் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியையே பார்த்துக் கொண்டு கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான்.
ஒரு உந்துதலில் அஜய்யை திரும்பிப் பார்த்த சஹானா, அவனது யோசனை தாங்கிய முகத்தை கண்ணுற்றவளாக அவனருகில் சென்றமர்ந்து, அவள் தோளில் சாய்ந்து கொள்ள அவனும் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
"என்னாச்சு என் ரித்துக்குட்டிக்கு, அவனோட சஹிபேபி கூட இருக்கும் போது உலகமே மறந்து போகும். இன்னைக்கு என்ன பயங்கரமா திங்கிங் மோட்ல இருக்குற மாதிரி இருக்கு?" என்று கேட்டாள்.
அவளது கேள்வியில் அவனோ இருக்கும் இடம் மறந்து அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன்,
"சஹி, பூஜா-அர்ஜூன் மேரேஜ் நடக்கும் போதே நாம மேரேஜ் பண்ணிக்கலாமாடா?" என்று வினவ, அவ்வளவு தான் சஹானாவோ பொறிய ஆரம்பித்தாள்,
"என்ன ரித்து விளையாடுறீங்களா? அதுலாம் முடியாது. அவங்க மேரேஜ்க்கு இன்னும் ஒன் வீக் தான் இருக்கு. நம்ம மேரேஜ்க்கு நான் என்னல்லாம் ப்ளான் பண்ணிருக்கேன் தெரியுமா? ஷாப்பிங், அப்படி இப்படின்னு நான் பெருசா ப்ளான் வச்சிருக்கேன். அதுக்கெல்லாம் எப்படியும் மினிமம் ஒரு மாசமாவது தேவைப்படும். போங்க ரித்து. ஆமா, இப்போ எதுக்கு இந்த மொக்கை கேள்வி?" என்றாள்.
"ஏதோ தோணுச்சு. சரி விடு, நம்ம மேரேஜ்க்கு இன்னும் 43 நாள் தான் இருக்கு. சோ, இனி நீ ஆஃபிஸ் வர வேண்டாம்." என்று கூற,
"இன்னைக்கு உங்களுக்கு என்னவோ ஆச்சு. ஏதேதோ உளறுறீங்க? போங்க ரித்து, ஆல்ரெடி இப்போ மிது வரல. பூஜாவும் 20 நாள் லீவ்... நானும் வரலைன்னா எப்படி? ரீனுவும் பாவம். நான் வருவேன்" என்று சிறு குழந்தை போல் அடம்பிடிக்க,
"ரீனாவையும் வேணும்னா கொஞ்சம் நாள் மிதுனாக்கு துணைக்கு ஊருக்கு அனுப்பிடலாம்" என்க,
"ரித்து, உங்கள பார்க்காம என்னால இருக்க முடியாது. நான் வர்றேன்" சிணுங்க,
"டெய்லி, ஆஃபிஸ் முடிஞ்சதும் நானே உன்னை வீட்டுக்கு வர்றேன்டா" என்று அதற்கும் தடை விதிக்க,
"நான் ஆஃபிஸ் வருவேன். நான் உங்ககூடவே எப்பவுமே இருக்கனும் ரித்து, ப்ளீஸ். இப்ப உங்களுக்கு என்னதான் ப்ராப்ளம்? எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க?" என்று அவனது சட்டையின் கழுத்துப்பட்டையைப் பிடித்தவாறே கண் கலங்க,
"ஹே லூஸு, இப்ப எதுக்குடி அழற? என்னைக்குனாலும் நீ தான் என் வைஃப். உன்னை எதுக்காகவும், யாருக்காகவும், ஏன் உனக்காகவும் கூட உன்னை விட்டுக் கொடுக்கமாட்டேன். ஆனா, ஏதோ தப்பா நடக்கப்போற மாதிரி ஒரு இன்ஸ்டிங்ட். அதான் சொல்றேன்." என்று தன்னுணர்வை முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் பாதியில் நிறுத்தினான்.
"சரி வா, பூஜா இனி கொஞ்ச நாள் ஆஃபிஸ் வர மாட்டா. சோ, நானே உன்னை வீட்டுக்கு வந்து பிக் பண்ணிடுறேன்." என்க,
"அப்போ, ரீனு?"
"ரீனுவ,ஆதியை கொண்டுவந்து விட சொல்றேன், என்ன கொஞ்சம் பிகு பண்ணுவான். அதெல்லாம் அர்ஜூன் பார்த்துக்குவான். இனி உனக்கு டிரைவர் கூட நான் தான்" என்று கூறி அவளை சகஜ நிலைக்கு திருப்பினான்.
"ஏன் ரித்து, நீ என்ன இவ்வளவு கஞ்ஜூஸா? ‘பொண்டாட்டி பொண்டாட்டி’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றியே தவிர, பீச்சுக்கு கூடிட்டு வந்துட்டு ஏதாவது வாங்கிக் கொடுக்கனும்ன்னு உனக்கு தோணுச்சா?" என்று அங்கலாய்க்க,
அவனோ, "உன்னைப் பார்த்தாலே எனக்கு ஏதேதோ கொடுக்கனும், அதுவும் நிறைய நிறைய கொடுக்கனும்னு தான் தோணுது. இப்போ நீயே வேற கேட்டுட்ட. நானும் எவ்வளவு நேரம் தான் நல்ல பையனாவே நடிக்குறது" என்று பார்வையை அவளது இதழில் வைத்தபடி நெருங்க,
சஹானாவோ, "உங்களுக்கு எப்பவுமே இதே நினைப்பு தானா? நான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு எதாவது வாங்கிக்கொடுங்கன்னு தான் கேட்டேன்" என்று அவனைத் தள்ளிவிட்டாள்.
அவனும், "இங்கயெல்லாம் ஹைஜெனிக்கா இருக்காதுடா. நான் ஸ்விக்கில ஆர்டர் பண்ணுறேன்" என்றவாறு தன் அலைபேசியை எடுக்க,
சஹானாவோ அவனிடமிருந்து அலைபேசியை பறித்து தன் கைப்பையில் போட்டவள்,
"டெய்லியும் ஹைஜெனிக்கா தானே சாப்பிடுறோம். அந்த பெரிய ஹோட்டல்ஸ்ல எல்லாம் ஹைஜெனிக்கா தான் பண்ணுறாங்கனு நீங்க போய் பார்த்துட்டு வந்தீங்களா? இவங்க எல்லாம் அன்றாட பிழைப்புக்காக இந்த மாதிரி வேலை செய்றாங்க. சோ, ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது. எனக்கு பசிக்குது, பஜ்ஜி வாங்கிக்குடுங்க" என்று சிணுங்கினாள்.
அவனோ அவளையும் உடன் அழைத்துச் சென்று அவள் கேட்ட மாவேச்சியை (பஜ்ஜி) வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்ப வந்தமர்கையில் வயதான மூதாட்டி ஒருவர் பூச்சரம் விற்றுக் கொண்டிருக்கவே அவரிடம் சென்று அதையும் வாங்கி வந்தான்.
சஹானாவின் கூந்தலில் அந்த மல்லிகைப் பூச்சரத்தை சூடிவிட்டவனைப் பார்த்து,
"என்ன ரித்து, நான் உங்க பொண்டாட்டினு எல்லா வழியிலும் நிரூபிச்சுட்டே இருக்கனுமா? கழுத்தில் செயின் போட்டாச்சு, என்கேஜ்மெண்ட் அன்னைக்கு எல்லார் மத்திலயும் கிஸ் பண்ணுனீங்க, டெய்லி மார்னிங் பொட்டு வச்சு விடுறீங்க, இப்போ பூவுமா? இன்னும் மெட்டி மட்டும் தான் பாக்கி. உங்க அலும்பு தாங்கலப்பா" என்றாள் பொய்யாக சலித்தவாறே.
"அந்த குறையையும் தீர்த்திடுவோம்" என்றவன், தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பொதியைப் பிரித்து அதிலிருந்த ஒரு குட்டி வைரக்கல் பதித்த மோதிரத்தை எடுத்து அவளது கால் விரலில் மெட்டியாக மாட்டிவிட்டான்.
"ஷ்யாம் என்கேஜ்மெண்ட் அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, அம்மா என்னோட சின்ன வயசு திங்க்ஸ் எல்லாம் உன்கிட்ட காட்டினாங்களாமே. அதுல நீ இத விரும்பிப் பார்த்ததா அண்ணி சொன்னாங்க. இது நான் சின்ன வயசுல போட்ட மோதிரம்... இப்போ தான் இது சரியான இடத்திற்கு வந்திற்கு" என்று தன் காதலை அனைத்துப் பரிணாமங்களிலும் தன்னவளிடம் காட்டினான் அந்த காதலன்.
"எல்லாமே பண்ணியாச்சு... ஒரு புருஷனா இன்னும் ஒண்ணே ஒண்ணு தான் பாக்கி..." என்று இழுக்க அவனது மனதைப் படித்தவளோ,
"சீ பேட் பாய், உங்களுக்கு வேற பேச்சே தெரியாதா? எப்போ பார்த்தாலும் அதே பேச்சு தானா?" என்று அவனைச் சீண்ட,
அவனும் பதிலுக்கு, "ஏன்டி, அதுல என்னடி பேட் பாய பார்த்த? ஊரக் கூட்டி உன் கழுத்துல தாலியைக் கட்டுறது மட்டும் தான் பாலன்ஸ்னு சொன்னேன். ஏன் நீ என்ன நினைச்சா?" என்று ஒரு கள்ளச்சிரிப்பை அவளிடம் வீச, அந்த மாயோளோ தன் காதல் தலைவனின் நெஞ்சிலே அடித்துவிட்டு, மருந்தாக அங்கேயே சாய்ந்து கொண்டாள்.
அவனோ சிரிப்புடன் தன்னவளை அணைத்துக் கொள்ள, அவர்களை மனதால் இணைத்த விதியும் அவர்களைப் பார்த்து சிரித்தது....!
"ஆணிடம் இருக்கும்
தாய்மையுணர்வை
வெளிக்கொணர்வதே
காதலென்று
யாரோ சொன்னார்கள்.....
நீ என்னை
தாயாக மட்டுமின்றி
சமயத்தில்
சேயாகவும்
மாற்றிவிடுகிறாயே
இதை என்னவென்று
சொல்வது?!!!!!!!!"
நினைவுகள் தொடரும்....!