பானுரதி துரைராஜசிங்கம்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18
மாமரத்து இலைகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.
இரண்டு பச்சைக் கிளிகள் சற்றே நிறத்துக் கொண்டிருந்த மாமரத்தின் செங்காய் ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்தன.
மாமரத்துக்குக் கீழே அமர்ந்திருந்த காயத்ரியின் தலையில் மாங்காயின் சிறுசிறு துகள்கள் சிதறிக் கிடந்தன.
அதைத் தட்டி விடக் கூடத் தோன்றாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
தன்னைத் தானே நொந்து கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள் ஏஞ்சலினா.
தான் அமர்ந்ததைக் கூட அறியாமல் அமர்ந்திருந்த காயத்ரியைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் ஏஞ்சலினாவைப் பார்த்தவளின் விழிகள் லேசாகக் கலங்கியது.
“ஏன் காயு ஏதேனும் விஷயமா? உன் முகமே சரியில்லையே”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”
“ஒன்றுமில்லை என்று உன் வாய் தான் சொல்கிறது”
“…....................”
“நான் உன் தனிமையில் குறுக்கிட்டுக் குறுக்கு விசாரணை செய்கிறேன் போல. நான் கிளம்புகிறேன்”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை ஏஞ்சல். நிறைய நாட்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கிறேன் அது தான் லேசாகக் கண் கலங்கி விட்டது.”
“நிறைய நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் நீ சந்தோசம் அல்லவா அடைய வேண்டும். அதை விட்டுக் கண் கலங்குகிறாய் என்றால் என்னவோ உனக்குக் கவலை முளைத்திருக்கிறது என்று தானே அர்த்தம்”
“என் கவலை என்னோடு போகட்டும் ஏஞ்சல் நீ எப்படி இருக்கிறாய்? அம்மா நலமாக இருக்கிறார்களா?”
“ஏன் காயு இப்படித் தான் என்னை ஒதுக்கி வைப்பாயா?”
“நான் எங்கே உன்னை ஒதுக்கினேன் ஏஞ்சல்”
“என் கவலை என்னோடு போகட்டும் என்பதற்கு என்ன அர்த்தம்”
“அது… உன்னையும் எதற்காகச் சங்கடப் படுத்த வேண்டும் என்று…”
“போதும் உன் விளக்கம் என்னை உயிர்த் தோழி என்று சொல்வது எல்லாம் சும்மா வாய் வார்த்தை தான் இல்லையா?”
“ஐயோ ஏஞ்சல் நீ வந்த உடனேயே எதற்காக மற்றதைப் பேசி உன்னையும் சங்கடப் படுத்த வேண்டும் என்று தான் நான் ஒன்றும் சொல்லவில்லை”
“………………………..”
“இங்கே என்னைப் பார் ஏஞ்சல் நான் செய்து வைத்த வேலையைக் கேட்டால் நீ கூட என் மேல் கோபம் கொள்வாயோ என்று தான் கொஞ்சம் தயங்கினேன் மற்றபடி உன்னிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை”
என்றபடி தான் ஆதித்யவர்மனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை எடுத்தெறிந்து பேசியதையும் அதன் பின்னர் உண்மை தெரிந்ததும் குற்றவுணர்வுடன் இருப்பதையும் ஏஞ்சலினாவிடம் ஒப்புவித்தாள்.
“அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏஞ்சல். ஆனால் பயமாக இருக்கிறது.”
“ஏய் பைத்தியம். உன் கணவரிடம் மன்னிப்பு கேட்க நீ ஏன் பயந்து சாக வேண்டும்”
“நான் செய்து வைத்த வேலை அப்படி இருக்கிறதே ஏஞ்சல். அவரை நம்பாமல் இருந்து விட்டேன். அதோடு அவராகவே நொந்து போகும் வரையில் கூட நான் அவரை நம்பவில்லை தானே”
“சரி நடந்தது நடந்து முடிந்து விட்டது. அதற்காகப் பேசாமலே இருந்து விடுவாயா? இந்த விடயத்தில் நீ தான் முதலில் போய்ப் பேச வேண்டும்”
“ஆமாம் நான் தான் போய்ப் பேச வேண்டும். ஏனெனில் அவராக வந்து என்னிடம் பேச மாட்டார்”
“எல்லாம் சீக்கிரமாகச் சரி ஆகி விடும் காயு. அதையே நினைத்துக் கொண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே”
“சரி சரி உள்ளே போகலாம் வா ஏதாவது குடிக்கத் தருகிறேன். வீட்டுக்கு வந்தவளை வெளியே வைத்து அலட்டிக் கொண்டு இருக்கிறேன்”
“அப்பாடா ஒரு வழியாகப் புரிந்து கொண்டாயே. எங்கே ஒரு வாய்த் தண்ணீர் கூடத் தராமல் வாசலோடு அனுப்பி விடுவாயோ என்று பயந்து விட்டேன்”
“அனுப்பி இருக்கலாம் தான் ஆனால் மனது கேட்கவில்லை.”
“நீ அனுப்பினதும் நான் அப்படியே போய் விடுவேன் பார்”
“போடி போக்கிரி”
“எல்லாம் உன்னோடு சேர்ந்து வந்தது தான்”
“அது சரி”
“அப்புறம் ஒரு விடயம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் காயு. உனக்குப் பல்லவி பற்றித் தெரியுமா? ”
“ஆமாம் ஏஞ்சல் அது பற்றி உன்னிடம் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்று சொல்கிறேன். வா எதையாவது அருந்தி விட்டு ஆற அமர இருந்து பேசுவோம்”
எனப் பேசியபடி தோழிகள் இருவரும் வீட்டினுள்ளே சென்றார்கள்.
மாடி அறையில் சில கோப்புகளைப் பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
அப்போது அறையை யாரோ லேசாகத் தட்டும் ஓசை கேட்கவே நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே தயங்கியபடி கஸ்தூரி நின்றிருந்தாள்.
காலையில் இருந்தே இறுகிய முகத்துடன் வலம் வந்தவனைப் பார்த்தவளுக்கு அவனிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.
எப்படியாவது பேசி விட வேண்டும் என்று வந்தும் விட்டாள். அவனது முகத்தைப் பார்த்ததும் தயங்கி நின்று விட்டாள்.
ஆனால் கஸ்தூரியைப் பார்த்ததும் இறுகிப் போய் இருந்த ஆதித்யனின் முகம் இளகத் தொடங்கியது.
“ஏன் வாசலிலேயே நிற்கிறாய் உள்ளே வா கஸ்தூரி”
என்றான் இறுக்கம் இல்லாத குரலில்.
தயங்கித் தயங்கி உள்ளே வந்து அவன் முன்னால் நின்றவளை ஏறிட்டவன்
“என்ன விஷயம் கஸ்தூரி. என்னிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா?”
“ஆமாம் அது வந்து…”
என அவனை எவ்விதம் அழைப்பது எனத் திணறினாள் கஸ்தூரி.
“அத்தான் என்றே என்னை அழைக்கலாம் கஸ்தூரி. அல்லது உனக்கு அப்படி அழைப்பது சங்கோஜமாக இருந்தால் நீ அண்ணா என்று கூட அழைக்கலாம்.”
என்றான் கனிவான குரலில் ஆதித்யன்.
அவன் அவ்விதம் சொன்னதும்
“என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா”
என்று கண் கலங்கினாள் கஸ்தூரி.
“நீ அண்ணா என்று அழைப்பது சந்தோஷமாக இருக்கிறது கஸ்தூரி. ஆனால் நீ ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாய்.”
“அது வந்து அண்ணா. நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்து விட்டேன். பிறகு தான் அக்கா எல்லாம் என்னிடம் சொன்னாள்”
“ஓ அதாவது வந்து பல்வியைத் திருமணம் செய்து வீட்டில் வைத்திருந்தபடி உன் அக்காவுக்குத் தாலி கட்டி விட்ட கிராதகன் என்று நினைத்து இருப்பாய்”
“தவறு தான் அண்ணா அதனால் தான் மன்னிப்புக் கேட்க வந்தேன்”
"அப்படி என்றால் கிராதகன் என்று தான் நினைத்து இருக்கிறாய்"
"அப்படி இல்லை..."
என்று இழுத்தாள்.
கஸ்தூரி அவனை விட எட்டு வயது குறைந்த சின்னப் பெண். எப்போதுமே அவள் மேல் ஒரு தனிப் பாசமே அவனுக்கு உண்டு.
அவள் தானாகவே வந்து மன்னிப்புக் கேட்கவும் அவனுக்கு உடனேயே லேசாகச் சிரிப்பு வந்தது.
ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
“நான் மன்னிக்கவில்லை என்றால்…”
என வேண்டும் என்றே முகத்தை இறுக்கமாக வைத்தபடி கேட்டான்.
ஆதித்யன் கோபமாக நடந்து கொள்வானோ என வந்தவளுக்கு அவன் முதலில் கனிவாகப் பேசியதே தென்பாக இருந்தது.
அந்தத் தென்பு அவளது கலகலப்பான சுபாவத்தை மீட்டுக் கொடுத்தது.
“மன்னிப்புக் கேட்பது தெய்வ குணம் மன்னிப்பது மனித குணம். உங்களுக்கு மனிதனாக இருக்க விருப்பம் இல்லையா?”
என்றாள் சிறு சிரிப்புடன்.
“அடிப்பாவி அது மன்னிப்புக் கேட்பது மனித குணம் என்றல்லவா வரும். நீ என்ன இப்படிச் சொல்கிறாய்”
“எப்பொழுதுமே எதையாவது சொதப்பி வைத்து விட்டு மன்னிப்புக் கேட்பது தான் என் வாடிக்கை. அதனால் எனக்கு ஏற்றவாறு அந்த வரிகளை மாற்றிக் கொண்டு விட்டேன்.”
என்றவளை மீண்டும் அடிப்பாவி என்பது போலப் பார்த்து வைத்தான் ஆதித்யன்.
“அண்ணா அப்புறம் இன்னொரு விஷயம். நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்தேன் என்பதை நான் சொல்லாமல் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நேர்மையாக நடந்து கொண்டதற்காக நீங்கள் என்னை மன்னித்துத் தான் ஆக வேண்டும்.”
“அது சரி உன்னுடன் பேசி வெல்ல முடியுமா? உன்னைக் கட்டிக் கொள்ள வரப் போகும் மகாராஜன் பாவம் தான்”
என்று சொல்லிக் கொண்டே போனவன் சட்டென்று நாக்கைக் கடித்தபடி மன்னிப்புக் கேட்டான்.
அவன் சங்கடப் படுவதை உணர்ந்தவள்
“அண்ணா எப்போதுமே எனக்கு மட்டும் தான் தெய்வ குணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனித குணத்துடன் மன்னிப்பு மட்டும் கொடுங்கள்”
என்றாள் லேசாகப் புன்னகைத்தபடி
அவளது கள்ளமற்ற சிரிப்பைப் பார்த்தவனது புன்னகையும் விரிந்தது.
“போனால் போகட்டும் பிழைத்துப் போ”
என்றவனைப் பார்த்து
“அண்ணா இன்னொரு விஷயம். என்னையே சட்டென்று மன்னித்த உங்களுக்கு அக்காவை மன்னிக்க மனது வரவில்லையா?”
என்று மெதுவாகக் கேட்டாள்.
அதற்கு அவன் மௌனமானான்.
“மன்னித்து விடுங்கள் அண்ணா. ஏதோ ஒரு உரிமையில் கேட்டு விட்டேன்.”
“ஐயோ மன்னிப்பு எல்லாம் வேண்டாம் கஸ்தூரி. உன் விஷயம் வேறு உன் அக்காவின் விஷயம் வேறு. அதை எப்படி உனக்குப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.”
“எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்கள் அண்ணா. அக்காவின் மீது உங்களுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை தானே”
“அடப் பைத்தியமே உன் அக்காவை வெறுப்பது என்னை நானே வெறுப்பது போல. எந்தக் காலத்திலும் உன் அக்காவை நான் வெறுக்கவே மாட்டேன் போதுமா?”
“இது போதும் அத்தான். இந்த வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்”
என்றவள் அந்த மகிழ்ச்சி தந்த துள்ளலோடு வெளியே ஓடினாள்.
அவளது செய்கையைப் பார்த்த ஆதித்யனுக்கு நிஜமாகவே ஆச்சரியம் தான்.
தன் சந்தோஷத்தை விடவும் தமக்கையின் சந்தோஷத்தைப் பெரிதாகப் பார்க்கிறாளே என்றிருந்தது.
இத்தனைக்கும் இவள் அவளுக்கு உடன் பிறந்த சகோதரி கூடக் கிடையாது. அற்புதமான பெண்.
இவள் மட்டுமா அற்புதமான பெண் அந்த ராட்சசி கூட அற்புதமான பெண் தான்.
என்று நினைத்தபடி தன் வேலையில் மூழ்கிப் போனான் ஆதித்யன்
பேசிய படியே வீட்டினுள் நுழைந்த காயத்ரிக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் கையில் எலுமிச்சைச் சாறுடன் கஸ்தூரி காத்திருந்தாள்.
“பரவாயில்லையே தோழிக்கு அக்கறை இல்லை என்றாலும் தங்கைக்காவது என் மேல் அக்கறை இருக்கிறதே”
என்றபடி எலுமிச்சைச் சாற்றினை இரசித்துப் பருகினாள் ஏஞ்சலினா.
அந்த நேரத்தில் மாடியில் இருந்து வந்த ஆதித்யன் ஏஞ்சலினாவைப் பார்த்து லேசாகப் புன்னகைத்துத் தலையசைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.
அவளருகில் நின்றிருந்த காயத்ரியை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“பார்த்தாயா ஏஞ்சல் நீ இருக்கிறாயே அதற்காக என்றாலும் என்னைப் பார்த்துத் தலையை அசைத்து இருக்கலாம் தானே”
“சரி விடு காயு நீயாகப் போய்ப் பேசினால் எல்லாம் சரி ஆகி விடும்”
என்றவாறு தோழியை அணைத்துக் கொண்டாள்.
“நான் செய்தது பெரிய தவறு தானே ஏஞ்சல் அவரது கோபத்திலும் நியாயம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அனு இவரது மனைவி என்று நினைத்தது மட்டும் இல்லாமல் அதை அவரிடமே கேட்டது பெரிய பிழை”
“காயு... அனு என்பது பல்லவியா? பல்லவியையா ஆதித்யனின் மனைவி என்று நினைத்தாய். இதைத் தான் தோட்டத்தில் வைத்தும் கூறினாய் அப்போதே ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாரேன் பேச்சு வாக்கில் மறந்து விட்டேன்”
“ஆமாம் ஏஞ்சல் அனுபல்லவியைத் தான் அவரின் மனைவி என்று நினைத்தேன். அதை மட்டுமா நினைத்தேன். அவளது இந்த நிலைக்குக் கூட இவர் தான் காரணம் என்றும் நினைத்தேன்.”
“அட ஆண்டவரே! பல்லவி இந்த வீட்டு மருமகள் தான் ஆனால் அவளது கணவர் ஆதித்யவர்மன் இல்லை மகேந்திர வர்மன்... அதாவது சூரியனின் இன்னொரு அண்ணா. பல்லவிக்குத் தாலி கட்டிய இரண்டு நாளிலேயே அவர் இறந்து விட்டார்.”
“ஐயோ இறைவா! என்ன ஏஞ்சல் சொல்கிறாய் “
“ஆமாம் காயு… பல்லவிக்குத் தாலி கட்டிய பிறகு அவளை அழைத்துக் கொண்டு மகேந்திரனும் அவருடைய அம்மா அப்பாவும் குலதெய்வக் கோவிலுக்குப் போன போது ஒரு பெரிய விபத்து. அந்த இடத்திலேயே மற்ற மூவரும் இறந்து விட்டார்கள். பல்லவிக்கு அதிர்ச்சியில் இப்படி ஆகி விட்டது.”
என்று ஏஞ்சலினா அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்து விட்டாள்.
அவள் சொன்னதை எல்லாம் கேட்ட கஸ்தூரியும் காயத்ரியும் விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தனர்.
அதிலும் காயத்ரி வெடித்து அழத் தொடங்கினாள். கஸ்தூரி அழக் கூடத் தோன்றாமல் தமக்கையையே பார்த்திருந்தாள்.
எழுந்து சென்று அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை. அவளது மனது அந்தளவிற்கு மரத்துப் போய் விட்டிருந்தது.
தான் கூறிய சம்பவத்தைக் கேட்டதும் சாதாரணமாக மனிதாபிமான முறையில் தான் இருவரும் வருந்துகிறார்களோ என்று நினைத்த ஏஞ்சலினாவுக்கு அப்படி இல்லை இதற்கு மனிதாபிமானம் மட்டும் காரணம் இல்லை என்பது போலத் தங்களது பழைய கதையைச் சொல்லத் தொடங்கினாள் காயத்ரி.
“அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்"
மாமரத்து இலைகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.
இரண்டு பச்சைக் கிளிகள் சற்றே நிறத்துக் கொண்டிருந்த மாமரத்தின் செங்காய் ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்தன.
மாமரத்துக்குக் கீழே அமர்ந்திருந்த காயத்ரியின் தலையில் மாங்காயின் சிறுசிறு துகள்கள் சிதறிக் கிடந்தன.
அதைத் தட்டி விடக் கூடத் தோன்றாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
தன்னைத் தானே நொந்து கொண்டு அமர்ந்திருந்தவளின் அருகே மெதுவாக வந்து அமர்ந்து கொண்டாள் ஏஞ்சலினா.
தான் அமர்ந்ததைக் கூட அறியாமல் அமர்ந்திருந்த காயத்ரியைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் ஏஞ்சலினாவைப் பார்த்தவளின் விழிகள் லேசாகக் கலங்கியது.
“ஏன் காயு ஏதேனும் விஷயமா? உன் முகமே சரியில்லையே”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”
“ஒன்றுமில்லை என்று உன் வாய் தான் சொல்கிறது”
“…....................”
“நான் உன் தனிமையில் குறுக்கிட்டுக் குறுக்கு விசாரணை செய்கிறேன் போல. நான் கிளம்புகிறேன்”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை ஏஞ்சல். நிறைய நாட்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கிறேன் அது தான் லேசாகக் கண் கலங்கி விட்டது.”
“நிறைய நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் நீ சந்தோசம் அல்லவா அடைய வேண்டும். அதை விட்டுக் கண் கலங்குகிறாய் என்றால் என்னவோ உனக்குக் கவலை முளைத்திருக்கிறது என்று தானே அர்த்தம்”
“என் கவலை என்னோடு போகட்டும் ஏஞ்சல் நீ எப்படி இருக்கிறாய்? அம்மா நலமாக இருக்கிறார்களா?”
“ஏன் காயு இப்படித் தான் என்னை ஒதுக்கி வைப்பாயா?”
“நான் எங்கே உன்னை ஒதுக்கினேன் ஏஞ்சல்”
“என் கவலை என்னோடு போகட்டும் என்பதற்கு என்ன அர்த்தம்”
“அது… உன்னையும் எதற்காகச் சங்கடப் படுத்த வேண்டும் என்று…”
“போதும் உன் விளக்கம் என்னை உயிர்த் தோழி என்று சொல்வது எல்லாம் சும்மா வாய் வார்த்தை தான் இல்லையா?”
“ஐயோ ஏஞ்சல் நீ வந்த உடனேயே எதற்காக மற்றதைப் பேசி உன்னையும் சங்கடப் படுத்த வேண்டும் என்று தான் நான் ஒன்றும் சொல்லவில்லை”
“………………………..”
“இங்கே என்னைப் பார் ஏஞ்சல் நான் செய்து வைத்த வேலையைக் கேட்டால் நீ கூட என் மேல் கோபம் கொள்வாயோ என்று தான் கொஞ்சம் தயங்கினேன் மற்றபடி உன்னிடம் எதையும் மறைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை”
என்றபடி தான் ஆதித்யவர்மனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை எடுத்தெறிந்து பேசியதையும் அதன் பின்னர் உண்மை தெரிந்ததும் குற்றவுணர்வுடன் இருப்பதையும் ஏஞ்சலினாவிடம் ஒப்புவித்தாள்.
“அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஏஞ்சல். ஆனால் பயமாக இருக்கிறது.”
“ஏய் பைத்தியம். உன் கணவரிடம் மன்னிப்பு கேட்க நீ ஏன் பயந்து சாக வேண்டும்”
“நான் செய்து வைத்த வேலை அப்படி இருக்கிறதே ஏஞ்சல். அவரை நம்பாமல் இருந்து விட்டேன். அதோடு அவராகவே நொந்து போகும் வரையில் கூட நான் அவரை நம்பவில்லை தானே”
“சரி நடந்தது நடந்து முடிந்து விட்டது. அதற்காகப் பேசாமலே இருந்து விடுவாயா? இந்த விடயத்தில் நீ தான் முதலில் போய்ப் பேச வேண்டும்”
“ஆமாம் நான் தான் போய்ப் பேச வேண்டும். ஏனெனில் அவராக வந்து என்னிடம் பேச மாட்டார்”
“எல்லாம் சீக்கிரமாகச் சரி ஆகி விடும் காயு. அதையே நினைத்துக் கொண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே”
“சரி சரி உள்ளே போகலாம் வா ஏதாவது குடிக்கத் தருகிறேன். வீட்டுக்கு வந்தவளை வெளியே வைத்து அலட்டிக் கொண்டு இருக்கிறேன்”
“அப்பாடா ஒரு வழியாகப் புரிந்து கொண்டாயே. எங்கே ஒரு வாய்த் தண்ணீர் கூடத் தராமல் வாசலோடு அனுப்பி விடுவாயோ என்று பயந்து விட்டேன்”
“அனுப்பி இருக்கலாம் தான் ஆனால் மனது கேட்கவில்லை.”
“நீ அனுப்பினதும் நான் அப்படியே போய் விடுவேன் பார்”
“போடி போக்கிரி”
“எல்லாம் உன்னோடு சேர்ந்து வந்தது தான்”
“அது சரி”
“அப்புறம் ஒரு விடயம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் காயு. உனக்குப் பல்லவி பற்றித் தெரியுமா? ”
“ஆமாம் ஏஞ்சல் அது பற்றி உன்னிடம் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்று சொல்கிறேன். வா எதையாவது அருந்தி விட்டு ஆற அமர இருந்து பேசுவோம்”
எனப் பேசியபடி தோழிகள் இருவரும் வீட்டினுள்ளே சென்றார்கள்.
மாடி அறையில் சில கோப்புகளைப் பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
அப்போது அறையை யாரோ லேசாகத் தட்டும் ஓசை கேட்கவே நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே தயங்கியபடி கஸ்தூரி நின்றிருந்தாள்.
காலையில் இருந்தே இறுகிய முகத்துடன் வலம் வந்தவனைப் பார்த்தவளுக்கு அவனிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.
எப்படியாவது பேசி விட வேண்டும் என்று வந்தும் விட்டாள். அவனது முகத்தைப் பார்த்ததும் தயங்கி நின்று விட்டாள்.
ஆனால் கஸ்தூரியைப் பார்த்ததும் இறுகிப் போய் இருந்த ஆதித்யனின் முகம் இளகத் தொடங்கியது.
“ஏன் வாசலிலேயே நிற்கிறாய் உள்ளே வா கஸ்தூரி”
என்றான் இறுக்கம் இல்லாத குரலில்.
தயங்கித் தயங்கி உள்ளே வந்து அவன் முன்னால் நின்றவளை ஏறிட்டவன்
“என்ன விஷயம் கஸ்தூரி. என்னிடம் ஏதேனும் கேட்க வேண்டுமா?”
“ஆமாம் அது வந்து…”
என அவனை எவ்விதம் அழைப்பது எனத் திணறினாள் கஸ்தூரி.
“அத்தான் என்றே என்னை அழைக்கலாம் கஸ்தூரி. அல்லது உனக்கு அப்படி அழைப்பது சங்கோஜமாக இருந்தால் நீ அண்ணா என்று கூட அழைக்கலாம்.”
என்றான் கனிவான குரலில் ஆதித்யன்.
அவன் அவ்விதம் சொன்னதும்
“என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா”
என்று கண் கலங்கினாள் கஸ்தூரி.
“நீ அண்ணா என்று அழைப்பது சந்தோஷமாக இருக்கிறது கஸ்தூரி. ஆனால் நீ ஏன் என்னிடம் மன்னிப்புக் கேட்கிறாய்.”
“அது வந்து அண்ணா. நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்து விட்டேன். பிறகு தான் அக்கா எல்லாம் என்னிடம் சொன்னாள்”
“ஓ அதாவது வந்து பல்வியைத் திருமணம் செய்து வீட்டில் வைத்திருந்தபடி உன் அக்காவுக்குத் தாலி கட்டி விட்ட கிராதகன் என்று நினைத்து இருப்பாய்”
“தவறு தான் அண்ணா அதனால் தான் மன்னிப்புக் கேட்க வந்தேன்”
"அப்படி என்றால் கிராதகன் என்று தான் நினைத்து இருக்கிறாய்"
"அப்படி இல்லை..."
என்று இழுத்தாள்.
கஸ்தூரி அவனை விட எட்டு வயது குறைந்த சின்னப் பெண். எப்போதுமே அவள் மேல் ஒரு தனிப் பாசமே அவனுக்கு உண்டு.
அவள் தானாகவே வந்து மன்னிப்புக் கேட்கவும் அவனுக்கு உடனேயே லேசாகச் சிரிப்பு வந்தது.
ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்
“நான் மன்னிக்கவில்லை என்றால்…”
என வேண்டும் என்றே முகத்தை இறுக்கமாக வைத்தபடி கேட்டான்.
ஆதித்யன் கோபமாக நடந்து கொள்வானோ என வந்தவளுக்கு அவன் முதலில் கனிவாகப் பேசியதே தென்பாக இருந்தது.
அந்தத் தென்பு அவளது கலகலப்பான சுபாவத்தை மீட்டுக் கொடுத்தது.
“மன்னிப்புக் கேட்பது தெய்வ குணம் மன்னிப்பது மனித குணம். உங்களுக்கு மனிதனாக இருக்க விருப்பம் இல்லையா?”
என்றாள் சிறு சிரிப்புடன்.
“அடிப்பாவி அது மன்னிப்புக் கேட்பது மனித குணம் என்றல்லவா வரும். நீ என்ன இப்படிச் சொல்கிறாய்”
“எப்பொழுதுமே எதையாவது சொதப்பி வைத்து விட்டு மன்னிப்புக் கேட்பது தான் என் வாடிக்கை. அதனால் எனக்கு ஏற்றவாறு அந்த வரிகளை மாற்றிக் கொண்டு விட்டேன்.”
என்றவளை மீண்டும் அடிப்பாவி என்பது போலப் பார்த்து வைத்தான் ஆதித்யன்.
“அண்ணா அப்புறம் இன்னொரு விஷயம். நான் உங்களைப் பற்றித் தவறாக நினைத்தேன் என்பதை நான் சொல்லாமல் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நேர்மையாக நடந்து கொண்டதற்காக நீங்கள் என்னை மன்னித்துத் தான் ஆக வேண்டும்.”
“அது சரி உன்னுடன் பேசி வெல்ல முடியுமா? உன்னைக் கட்டிக் கொள்ள வரப் போகும் மகாராஜன் பாவம் தான்”
என்று சொல்லிக் கொண்டே போனவன் சட்டென்று நாக்கைக் கடித்தபடி மன்னிப்புக் கேட்டான்.
அவன் சங்கடப் படுவதை உணர்ந்தவள்
“அண்ணா எப்போதுமே எனக்கு மட்டும் தான் தெய்வ குணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனித குணத்துடன் மன்னிப்பு மட்டும் கொடுங்கள்”
என்றாள் லேசாகப் புன்னகைத்தபடி
அவளது கள்ளமற்ற சிரிப்பைப் பார்த்தவனது புன்னகையும் விரிந்தது.
“போனால் போகட்டும் பிழைத்துப் போ”
என்றவனைப் பார்த்து
“அண்ணா இன்னொரு விஷயம். என்னையே சட்டென்று மன்னித்த உங்களுக்கு அக்காவை மன்னிக்க மனது வரவில்லையா?”
என்று மெதுவாகக் கேட்டாள்.
அதற்கு அவன் மௌனமானான்.
“மன்னித்து விடுங்கள் அண்ணா. ஏதோ ஒரு உரிமையில் கேட்டு விட்டேன்.”
“ஐயோ மன்னிப்பு எல்லாம் வேண்டாம் கஸ்தூரி. உன் விஷயம் வேறு உன் அக்காவின் விஷயம் வேறு. அதை எப்படி உனக்குப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.”
“எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்கள் அண்ணா. அக்காவின் மீது உங்களுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை தானே”
“அடப் பைத்தியமே உன் அக்காவை வெறுப்பது என்னை நானே வெறுப்பது போல. எந்தக் காலத்திலும் உன் அக்காவை நான் வெறுக்கவே மாட்டேன் போதுமா?”
“இது போதும் அத்தான். இந்த வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்”
என்றவள் அந்த மகிழ்ச்சி தந்த துள்ளலோடு வெளியே ஓடினாள்.
அவளது செய்கையைப் பார்த்த ஆதித்யனுக்கு நிஜமாகவே ஆச்சரியம் தான்.
தன் சந்தோஷத்தை விடவும் தமக்கையின் சந்தோஷத்தைப் பெரிதாகப் பார்க்கிறாளே என்றிருந்தது.
இத்தனைக்கும் இவள் அவளுக்கு உடன் பிறந்த சகோதரி கூடக் கிடையாது. அற்புதமான பெண்.
இவள் மட்டுமா அற்புதமான பெண் அந்த ராட்சசி கூட அற்புதமான பெண் தான்.
என்று நினைத்தபடி தன் வேலையில் மூழ்கிப் போனான் ஆதித்யன்
பேசிய படியே வீட்டினுள் நுழைந்த காயத்ரிக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் கையில் எலுமிச்சைச் சாறுடன் கஸ்தூரி காத்திருந்தாள்.
“பரவாயில்லையே தோழிக்கு அக்கறை இல்லை என்றாலும் தங்கைக்காவது என் மேல் அக்கறை இருக்கிறதே”
என்றபடி எலுமிச்சைச் சாற்றினை இரசித்துப் பருகினாள் ஏஞ்சலினா.
அந்த நேரத்தில் மாடியில் இருந்து வந்த ஆதித்யன் ஏஞ்சலினாவைப் பார்த்து லேசாகப் புன்னகைத்துத் தலையசைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.
அவளருகில் நின்றிருந்த காயத்ரியை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“பார்த்தாயா ஏஞ்சல் நீ இருக்கிறாயே அதற்காக என்றாலும் என்னைப் பார்த்துத் தலையை அசைத்து இருக்கலாம் தானே”
“சரி விடு காயு நீயாகப் போய்ப் பேசினால் எல்லாம் சரி ஆகி விடும்”
என்றவாறு தோழியை அணைத்துக் கொண்டாள்.
“நான் செய்தது பெரிய தவறு தானே ஏஞ்சல் அவரது கோபத்திலும் நியாயம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அனு இவரது மனைவி என்று நினைத்தது மட்டும் இல்லாமல் அதை அவரிடமே கேட்டது பெரிய பிழை”
“காயு... அனு என்பது பல்லவியா? பல்லவியையா ஆதித்யனின் மனைவி என்று நினைத்தாய். இதைத் தான் தோட்டத்தில் வைத்தும் கூறினாய் அப்போதே ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாரேன் பேச்சு வாக்கில் மறந்து விட்டேன்”
“ஆமாம் ஏஞ்சல் அனுபல்லவியைத் தான் அவரின் மனைவி என்று நினைத்தேன். அதை மட்டுமா நினைத்தேன். அவளது இந்த நிலைக்குக் கூட இவர் தான் காரணம் என்றும் நினைத்தேன்.”
“அட ஆண்டவரே! பல்லவி இந்த வீட்டு மருமகள் தான் ஆனால் அவளது கணவர் ஆதித்யவர்மன் இல்லை மகேந்திர வர்மன்... அதாவது சூரியனின் இன்னொரு அண்ணா. பல்லவிக்குத் தாலி கட்டிய இரண்டு நாளிலேயே அவர் இறந்து விட்டார்.”
“ஐயோ இறைவா! என்ன ஏஞ்சல் சொல்கிறாய் “
“ஆமாம் காயு… பல்லவிக்குத் தாலி கட்டிய பிறகு அவளை அழைத்துக் கொண்டு மகேந்திரனும் அவருடைய அம்மா அப்பாவும் குலதெய்வக் கோவிலுக்குப் போன போது ஒரு பெரிய விபத்து. அந்த இடத்திலேயே மற்ற மூவரும் இறந்து விட்டார்கள். பல்லவிக்கு அதிர்ச்சியில் இப்படி ஆகி விட்டது.”
என்று ஏஞ்சலினா அனைத்து விடயத்தையும் போட்டு உடைத்து விட்டாள்.
அவள் சொன்னதை எல்லாம் கேட்ட கஸ்தூரியும் காயத்ரியும் விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தனர்.
அதிலும் காயத்ரி வெடித்து அழத் தொடங்கினாள். கஸ்தூரி அழக் கூடத் தோன்றாமல் தமக்கையையே பார்த்திருந்தாள்.
எழுந்து சென்று அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை. அவளது மனது அந்தளவிற்கு மரத்துப் போய் விட்டிருந்தது.
தான் கூறிய சம்பவத்தைக் கேட்டதும் சாதாரணமாக மனிதாபிமான முறையில் தான் இருவரும் வருந்துகிறார்களோ என்று நினைத்த ஏஞ்சலினாவுக்கு அப்படி இல்லை இதற்கு மனிதாபிமானம் மட்டும் காரணம் இல்லை என்பது போலத் தங்களது பழைய கதையைச் சொல்லத் தொடங்கினாள் காயத்ரி.
“அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்"