Rishi24
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15
வெற்றிவேல் யுனிவர்சிட்டி.......
வகுப்பில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு வருணை பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை ஆரவ் சொன்ன செய்தியில்.....
எவ்வளவு வாதாடியும் இன்று காலேஜ் போயே ஆக வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டான் ஆரவ்...
இன்று முக்கியமான அஸைமண்ட் சப்மிட் பண்ண வேண்டியிருந்ததால் அவளும் அடம் பிடிக்காமல் கிளம்பி வந்து விட்டாள்.
அருகில் அமர்ந்திருந்த ரித்துவை சோகமாக திரும்பிப் பார்க்க அவளோ வேறு ஏதோ யோசனையில் இவளை கண்டகொள்ளவே இல்லை....
அன்று இரண்டு கேங்கையும் சஸ்பெண்ட் செய்ததிலிருந்து இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறாள்.கேட்டதற்கு கூட எதுவும் சொல்லாமல் திரும்பவும் விட்டுப்பிடிப்போம் என இவளும் விட்டு விட்டாள்.இன்று கேட்டே ஆக வேண்டும் என தீர்மானித்தவள் அவள் தோல் தொட்டு
"ரித்து...." என அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போகவும்
"ரித்திகா...." என அவளை உலுக்கி கத்த திடுக்கிட்டு திரும்பி முறைத்தவள்
"எதுக்குடி இப்பிடி கத்துற?"
"நா ஒழுங்கா கூப்டப்பவே என்னன்னு கேட்டிருந்தீன்னா....நா எதுக்குடி கத்த போறேன்"
"ஹி...ஹி....கூப்டியா செல்லம்.... எனக்கு கேக்கவே இல்லயே....."
"கேக்காது கேக்காது...அது எப்பிடி கேக்கும்"
"சாரிடி செல்லம்....சரி எதுக்கு கூப்ட?"
"சொல்லமுடியாது போடி..."
"என் செல்லம்ல....சாரிடி" என காதை பிடிக்கவும்
"சரி சரி கால்ல விழுந்துடாத...."
"என்கிட்ட மாட்டாமயா போயிருவ.... சரி என்னன்னு சொல்லு"
"ம்...அத நீதான் சொல்லனும்"
"புரியிறா மாறி பேசவே மாட்டியா நீ?"
"ப்ச்...எதுக்கு எப்போ பாரு ஏதோ யோசிச்சிகிட்டே இருக்க?"
"யாரு...நா..?"
"நடிக்காத ரித்து..... சொல்ல புடிக்கலன்னா வேணாம்"
"ஹே....அப்பிடி இல்ல கயு...."
"....."
"அது..." என்றவளை முறைக்க
"கோவப்படாதடி...." என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது தன் தோழியிடம் கூறியவள் கண் கலங்க கீழே குனிந்து கொள்ளவும் அவளை தன் புறம் திருப்பி கண்ணீரை துடைத்து விட்டவள்
"ரித்து...."
"....."
"என்ன பாருடி...."
"......"
"ஆரு என்கிட்ட சித்தார்த் அண்ணாவ பத்தி சொல்லி இருக்காங்கடி... அவங்களுக்கு லவ்னாலே புடிக்காதாம்.... யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டாங்களாம்.... அப்படி இருக்குறவங்க உன்ன சீண்டியிருக்காங்கன்னா நீ அவங்கள ஏதோ ஒரு வகைல பாதிச்சிருக்கேன்னுதானே அர்த்தம்?"
"பட்...எம்மேல லவ் வரவே வராதுன்னு சொன்னாருடி... அதுதான் என்னால தாங்கிக்க முடில...."
"அது சும்மா சொல்லியிருப்பாங்கடி"
"இல்ல கயு..."
"ப்ச்...சொன்னா கேக்கனும்டி"
"இப்போ என்னதான் பண்ணனும்குற?"
"அவங்கள சும்மா விட்டா அவங்க விலகி தான் போவாங்க....நீ என்ன பன்றன்னா.... அவங்கள எப்பவும் டிஸ்டர்ப் பண்ணிட்டே இரு"
"அப்போ என்ன லவ் பண்ணுவாங்கல்ல கயு....?" எதிர்பார்பாய் கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள் கயல்விழி.
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....
கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க அங்கே முகம் முழுதும் இரத்தக் கரையுடன் இளைத்தவாறு நின்றிறுந்தாள் அனன்யா.
அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஷ்வினி அவளையுமறியாமல் தேவ்வின் கைகளை இறுக்க பற்ற அவள் அதிர்ச்சியறிந்து அவளை திரும்பி பார்த்தவன் அவள் கைகளை அழுத்த.... அவன் கொடுத்த அழுத்தத்தில் அவனை பார்த்து விட்டு மீண்டும் அனன்யாவை ஏறிட அவளோ இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு
"ரி....ரிஷி....ப்ளீஸ்...எ...என்ன காப்பாத்து...." என்றவள் மயங்கி விழப்போக அஷ்வினி ஓடிச் சென்று அவளைப்பிடிக்க தன் கையை உதறியதில் ஏற்கனவே கோபத்திலிருந்தவன் அவள் அனன்யாவை தாங்கிப் பிடிக்கவும்
" அஷ்வினி" என கத்த அவன் கத்தியதில் உடல் துக்கிவாரிப் போட சடாரென திரும்பியவளிடம்
"என்ன பண்ணிட்டிருக்க நீ?அவ யாருன்னு தெரியுதா இல்லயா?"
"பட் தேவ்....உயிருக்கு போராடிட்டு இருக்கறவங்க கிட்ட மனசாட்சி இல்லாம என்னால நடந்துக்க முடியாது.... அது எதிரியா இருந்தாலும்....."
"அவ எதிரி இல்லடி துரோகி"
"தேவ் ப்ளீஸ்.....என்ன தடுக்கனும்னு நெனக்காதீங்க.." என்றவள் அவன் மேலும் பேசும் முன் கயலுக்கு அழைத்து
"கயல்....நீயும் ஆரவ்வும் உடனே ஆபீஸ் வந்துடுங்க.... நா ஹாஸ்பிடல் போறேன்....என்கிட்ட இப்போ எதுவும் கேக்காத... நா வந்து பேசறேன்..." என்று அவளே பேசிவிட்டு கட் பண்ணவள் அவனிடம்
"தேவ்...இப்போ அவங்க ரெண்டு பேரும் வந்துடுவாங்க... அதுக்குள்ள நா ஹாஸ்பிடல் பொய்ட்டு வந்தட்றேன்...."
"......"
"கதிர் அண்ணா கூட போறேன்" என்றவள் கதிரின் உதவியுடன் அவளை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்திருந்தவனுக்கு நெஞ்சில் ஒரே ஒரு கேள்வியே மோதிக்கொண்டிருந்தது.
"உனக்கு என்ன விட அவதான் முக்கியமா பொய்ட்டால்ல அஷு....?"
***
ஹாஸ்பிடல்......
அது ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் எந்த விதமான விசாரணைகளுமின்றி உள்ளே அனுதிக்கப்பட்டாள் அனன்யா...
வயிற்றில் கத்தி குத்தியிருந்ததில் அதிகமான இரத்தம் வெளியேறியிருக்க அஷ்வினி பதறியபடியே வர அவள் பதற்றம் கதிரையும் தொற்றிக் கொள்ள அவசரமாகவே வண்டியை செலுத்தியிருந்தான்.
.......
ஆபீஸ்......
ஆரவ் வேலையை முடித்துவிட்டு வெளியில் வரவும்தான் கயல் கால் பண்ணி கூறியது.... அவளை தனியாக வர சொன்னவன் தன் அண்ணனுக்கு தான் என்னவோ ஏதோவென்று பயந்து வந்திறங்கவும் கயலும் ரித்திக்காவுடன் காலேஜிலிருந்தே வந்திறங்கவும் சரியாக இருக்க மூவரும் சற்று பதற்றத்துடனேயே உள்ளே நுழைந்தனர்.
அங்கு ரிஷி மட்டுமே தனித்திருக்க வெகுவாய் குழம்பிய ஆரவ் "இவ அண்ணாவ விட்டுட்டு எங்க போய்த்தொலஞ்சா..... அண்ணா எதுக்கு இவ்வளோ கொபமா இருக்காங்க...... என்னத்த பண்ணித் தொலச்சாளோ...." என நினைத்தவன் எதுவும் பேசாமல் நின்று கொள்ள கயல்
"மா....மாமா...அஷ்வி எங்க.... நீங்க மட்டும் இருக்கீங்க? எதுக்கு ஹாஸ்பிடல் போனா?" எனவும் எதுவும் பேசாமல் அவளை முறைத்த முறைப்பில் கயல் வாயை கப்பென மூடிக்கொள்ள ரித்திக்காவொ பயந்து கயலின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
அவள் ரிஷியை இதுவரை பார்த்ததேயில்லை......
டிவி , மகஸின்களில் மட்டுமே அவனை கண்டிருந்தவள் இன்று கண்கள் சிவக்க பெட்டில் படுத்திருப்பவனின் தோற்றத்தில் பயந்தே போனாள்.
ஆரவ்விற்கு யாரிடம் கேட்பதென்றே புரியவில்லை... ஹாஸ்பிடல் போயிருக்கிறாள் என கயல் சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர படபடப்பாகவே இருந்தது.
எங்கே என்று இவனிடம் கேட்கவும் முடியாது.... அவளிடம் கேட்கவும் முடியாது எனும் நிலையில் கதிர் ஞாபகம் வரவும் " ஒரு நிமிஷம் " என்றுவிட்டு வெளியில் வந்தவன் கதிருக்கு அழைத்தான்.
"சார்....சொல்லுங்க சார்..."
"எங்க இருக்கீங்க கதிர்?"
"சார் மேடத்தோட ஹாஸ்பிடல் வந்திருக்கேன்"
"ஓஹ்....நீங்களுமா..?அஷ்வினி எங்க?"
"மேடத்துகிட்ட குடுக்கட்டுமா சார்?"
"இல்ல... இல்ல வேணாம்...எதுக்கு ஷாஸ்பிடல் போயிருக்கீங்க?"
"அது சார் ஒரு பொண்ணுக்கு வயித்துல கத்தி குத்தியிருக்காங்க...."
"வாட்....எப்பிடி நடந்துது?பட் அது எப்பிடி அஷ்விக்கு தெரியும்?"
"அந்த பொண்ணு நா சொல்ல சொல்ல கேக்காம அதுபாட்டுக்கு கதவ தொறந்துகிட்டு போயிடுச்சி சார்....பேசிட்டிருக்கும் போதே திடீர்னு மயங்கிடுச்சு... மேடம் தான் பதறிட்டாங்க... பட் மாறன் சார் ரொம்ப கோபமா மேடத்துக்கு திட்னாரு..."
"அவ பேரு ஏதாவது?"
"அது....ஆ...அனன்யான்னுதான் மேடம் சொல்லிட்டிருந்தாங்க சார்...."
"வாட்...டேமிட்.... அனன்யா.... அவ எப்பிடி?"
"தெ...தெ...தெரியல சார்..."
"இப்போ எங்க அவ?"
"ஐ.சி.யு ல அட்மிட் ஆக்கியிருக்கு சார்"
"ஓகே கதிர்...."என்றவன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை அலுத்தக் கோதிக் கொண்டான்.
"இடியட் என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கா.....பட்....அந்த அனன்யா எப்பிடி...?" அவனுடைய சி.பி.ஐ மூளை அவசரமாக யோசிக்க தொடங்க அதை தடை செய்வது போல் உள்ளிருந்து கேட்டது கயலின் பதற்றமான குரல்....
"மாமா...என்ன பன்றீங்க?" என மறுபடியும் அவள் கேட்கவும் அவசரமாக உள்ளே நுழைந்தவன் அங்கே ரிஷி எல்லா பொருட்களையும் விசிறி அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து
"அண்ணா என்ன பண்றீங்க? உங்க உடல் பலவீனமா இருக்கு... ரிலாக்ஸ்ணா..." என்றவாறே அவனை தடுக்கப்போக ஏதோ உடைக்க கையிலெடுத்தவன் அப்படியே அதை போட்டு விட்டு " இடியட் " என்று மெத்தையில் குத்த அவனருகில் வந்த ஆரவ்
"அண்ணா ப்ளீஸ்... ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.... அவ மறுபடி எதுக்கு வந்திருக்கான்னு பாக்கலாம்.... அதுக்கப்பறம் அஷ்வினி கிட்ட பேசலாம்... ரிலாக்ஸ்....." எனவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள
"இவருக்கு மட்டும் காய்ச்சல் இல்லாம இருந்துது இன்னக்கி கன்பார்மா ஒரு கொல விழுந்திருக்கும்...." என நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று யோசிக்கத் தொடங்கினான்.
***
ஹாஸ்பிடல்......
முகத்தை மூடியபடி அமர்ந்திருந்த அஷ்வினி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அவரருகே சென்று
"டாக்டர்.....என்னாச்சி பொழச்சிகிட்டாங்கல்ல....?"
"கிரிடிகல் ஸ்டேஜ தாண்டிட்டாங்க.... பட் இன்னும் சுயநினைவு இல்லாமதான் இருக்காங்க... ஒன் அவர் கழிச்சிதான் சொல்ல முடியும்...." என்றவர் சென்றுவிட
"இன்னும் ஒன் அவரா..?தேவ் ரொம்ப கோபத்துல இருப்பாரே...." என நினைத்தவள் தொப்பென அமர்ந்து விட்டாள். அவளையே பார்த்திருந்த கதிர் அருகில் வந்து
"மேடம்...ஆரவ் சார் கால் பண்ணாரு...ரொம்ப கோவப்பட்டாரு"
"மேடம்னு சொல்லாதீங்கண்ணா... ஏற்கனவே எதிர்பாத்தது தான் விடுங்க..."
"பட்...."
"எண்ணண்னா பன்றது... இன்னும் ஒன் அவர் ஆகுமாமே....தேவ்வ நெனச்சாதான் பயமா இருக்கு"
என்றவளை பார்த்து "கோவத்துக்கு இலக்கணமா இருக்குறவருக்கு இப்பிடி ஒரு பொண்டாட்டியா..." என நினைத்தவன் அமைதியாக இருந்துவிட்டான்.
அவள் கண் விழித்து விட்டதாக தாதி ஒருவர் வந்து சொல்ல டாக்டர் அனுமதிக்கவும் உள்ளே சென்று
"அனன்யா... ஐ ஆம் மிஸிஸ்.அஷ்வினி தேவமாறுதன்.... என்ன அடையாளம் தெரியும்னு நெனக்கிறேன்... உங்களுக்கு உதவி பண்ணது மனிதாபிமான அடிப்படைலதான்... உங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா நானே விட்டுடுவேன்..." என்றவள் அனன்யாவை பார்க்க அவளோ மௌனமாக கண்ணீர் வடிக்கவும்
"ஐ...ஐ...ஐ ஆம் சாரி அனன்யா..."
"பரவல்லங்க... செஞ்ச தப்புக்கு தண்டனையா நினச்சிக்குறேன்... தேங்ஸ்....நீங்க போங்க...."
"பட் எப்பிடி போவீங்க?"
"எனக்குன்னு யாரும் இல்லங்க...நா சமாளிச்சிக்குறேன்..."
"வாட்...என்ன சொல்றீங்க?"அவள் அமைதியை பார்த்து கொஞ்ச நேரம் யோசித்தவள்
"உங்களுக்கு உடம்பு சரியாகும்வர எங்க வீட்ல தங்கிகோங்களேன்?"
"இல்லங்க வேணாம்...ரிஷி ஏற்கனவே உங்க மேல கோபத்துல இருப்பான்.... என்னால பிரச்சினை வேணாம்.."
"தேவ்வ நா சமாளிச்சிகுறேன் அனன்யா.... நீங்க என்கூடதான் தங்குறீங்க" என்றவள் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் ஒரு அறையில் விட்டுவிட்டு நேரே ஆபீஸுக்கு சென்றாள்.
ஆபீஸ்......
ரித்துவும் கயலும் உள் அறையில் இருக்க ஆரவ் கேபினில் நின்று கொண்டு அதன் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான்
என்ன யோசித்தும் அனன்யா எப்படி திடீரென்று ரிஷியை தேடி வந்திருப்பாள் என்பதை யூகிக்க கூட முடியவில்லை அவனால்.....
திடீரென கதவு திறக்க சட்டென திரும்பியவன் அங்கே அஷ்வினி நுழையவும் கோபத்துடன் அவளருகில் சென்று
"அஷ்வினி " எனவும் அவனை பார்த்து பயந்தாலும் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்து
"நீ என்ன கேக்க வரன்னு எனக்கு தெரியும் ஆரவ்.... நா மனிதாபிமான அடிப்படைல தான் உதவி செஞ்சேன்.... செய்வேன்...." என்றவளை புருவம் சுருக்கி பார்த்து
"செய்வேன்னா.....?"
"நம்ம வீட்லதான் குணமாகும் வர தங்க போறா?"
"யூ... ஸ்டுப்பிட்... யார கேட்டு முடிவெடுத்த?அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?"
"அத பாத்துக்கலாம் மிஸ்டர்.ஆரவ்.... இப்போ வழி விடுங்க...." என்றவள் அவன் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைய அவசரமாக எழுந்த கயல் அருகில் வந்து பேசப்போக
"நா உன்கிட்ட அப்பறம் பேசுறேன் கயல்...." எனவும்
"சரி அஷ்வி...."என்றவாறே வெளியேறி விட அறையை சுற்றுமுற்றும் அலசியவள் என்ன நடந்திருக்கும் என யூகிக்கவும் பயத்தில் மனது திக்திக்கென அடித்துக் கொண்டது.
தன் கையை மடித்து கண்களுக்கு மறைவாக வைத்து படுத்திருந்தவன் அஷ்வினி வந்தது தெரிந்தும் அசைந்தானில்லை....
அவன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தன்னை கண்டுகொள்ளாதது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.பேசினால் கோபப்படுவான் என தெரிந்திருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
"தேவ்...."என கையை பிடிக்க அவளை தள்ளிவிட்டு சடாரென எழுந்தமர்ந்து அவளை கண்கள் சிவக்க பார்த்தவன்
"பேசாத....மீறி பேசின கொண்ணுருவேன்"
"தேவ்...நா சொல்றத கொ...."
"கெட்டவுட்..."
"தே...."
"ஐ செட் கெட் அவுட்...இடியட்"
"முடியாது...."
"முடியாதூ......அப்போ நா போறேன்" என எழுந்தவன் தடுமாறி விழப்போக அவசரமாக எழுந்து அவனை பிடித்தவளை சுவற்றில் சாய்த்து கழுத்தை பிடித்து இறுக்க அவன் பிடியில் வலித்தாலும் கண்களை இறுக்க மூடி கட்டுப்படுத்த அதுவும் முடியாமல் போகவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அதை கண்டு என்ன நினைத்தானோ கையை எடுத்தவன் "ச்சேஹ்...." என்றுவிட்டு உடல் ஒத்துழைக்காமல் போக கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
அவன் விட்டவுடன் இறுமியவாறே இருந்தவள் அவன் அமரவும் அவன் காலை பிடித்துக் கொண்டு
"ஐ...ஆம் சாரி தேவ்....ப்ளீஸ்...அவ உயிருக்கு போராடிட்டு இருந்தா.... என் கண் முன்னால ஒரு உயிர் துடிக்கும் போது என்னால எப்பிடி தாங்க முடியும் சொல்லுங்க... அவ செத்திருந்தான்னா கடவுள் என்ன மன்னிச்சே இருக்க மாட்டாரு.....அவ எப்பிடி பட்டவளாவும் இருந்திருக்கலாம்.. பட் இப்போ அவ திருந்திட்டான்னு தோனுது....ப்ளீஸ் தேவ்.."
"....."
"தேவ்....அவ குணமாகும் வர நம்ம வீட்லதான் தங்க போறா...." என்றவளது பேச்சில் அவளை கூர்ந்து பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பெசவில்லை....
"தேவ்.....ஏதாவது பேசுங்க ப்ளீஸ்...."
"......."
"தேவ்...." என்றவள் அவன் நெற்றியை தொடப்போக மறுபக்கம் திரும்பிவிட்டான்.மனம் வலித்தாலும் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவள் எழுந்து ஆரவ் வாங்கி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து வாயருகே கொண்டு செல்ல சாப்பாட்டுடன் அவள் கையை தட்டிவிட அதில் கீழே விழுந்து சிதறியது.
இதை உன்னிடம் நான் எதிர்பார்தேன் என்பது போல் பார்த்தவள் மீண்டும் இன்னொரு கவளத்தை நீட்ட
"ப்ச்...." என்றவன் அதையும் தட்டிவிட்டான்.
ஒரு பெருமூச்சுடன்
"தேவ்....என் மேலுள்ள கோவத்த எதுக்கு சாப்பாட்டுல காட்றீங்க....? ம்...சாப்புடுங்க" என்றவள் மறுபடி நீட்ட அவள் கையிலுள்ள தட்டை பறித்து விசிறி அடிக்க அது அறை முழுவதும் தெரித்து விழுந்தது.
அவள் எதுவும் பேசவுமில்லை...... அதிர்ச்சியாகவுமில்லை.... நிதானமாக நடந்து சென்று அவன் மாத்திரையை எடுத்தவள் தண்ணீர் க்ளாஸுடன் அவனிடம் வந்து
"என் கையால நா தர்றது தானே புடிக்கல.... பக்கத்துல வெச்சாலும் குடிக்க போறதில்ல....சோ...." என்றவள் வெளியில் சென்று அனைவரையும் அழைத்தவள் ஆரவ்விடம் திணித்து விட்டு ஓரமாக நின்று விட்டாள்.
உள்ளே வந்தவர்கள் அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்திருக்க அஷ்வினி ஆரவ்விடம் மாத்திரையை திணிக்கவும் அவளை முறைத்துவிட்டு வேறு வழியில்லாமல் ரிஷியிடம் நீட்ட அனைவர் முன்னிலையிலும் ஏதும் செய்ய இயலாமல் அவளை பார்த்துக் கொண்டே குடித்தான்.
விதி வலியது........
............
வீடு வந்து சேரும் வரை எவரும் எதுவும் பேசவில்லை..... அனைவருக்கும் மௌனமே மொழியாகிப் போக ரித்துவை அவள் வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
வந்ததும் வராததுமாக யாரையும் கண்டு கொள்ளாமல் அனன்யாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைய ரிஷிக்கு வந்ததே கோபம்....
அனைவரும் இருந்தபடியால் எதுவும் செய்யமுடியவில்லையாயினும் அவன் கண்கள் சிவந்திருப்பதிலிருந்தே அவன் கோபம் புரிந்தது ஆரவ்விற்கு....
அவனிற்குமே எரிச்சலாகத்தான் இருந்தது அஷ்வினியின் செய்கை... ஏன்தான் இப்பிடி நடந்துக்குறாளோ என சலித்துக் கொண்டவன் ரிஷியை கைத்தாங்கலாக கொண்டு போய் ரூமில் விட்டு வந்தான்.
அனன்யாவின் அறை.....
வலியில் முகத்தை சுழித்துக் கொண்டு படுத்திருப்பவளை கைகட்டி நின்று ஒரு கணம் பார்த்திருந்தாள்.
அவளுக்குமே அவள் செய்கை பிடிக்கவில்லை தான்.... இருந்தும் என்னதான் செய்வது?
மனம் முழுவதும் அனன்யாவின் மேல் வெறுப்பு இருந்தாலும் இப்போது அதை காட்டும் நேரமல்லவே!
உயிருக்கு போராடிக்கொண்டிரும் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாள் அவ்வளவே..... மற்றபடி அவள் திருந்தியிருந்தாலும் திருந்தப்போவதில்லை என்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலையில்லை....
இதை யாவற்றையும் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் காட்டினால் அவளும் என்னதான் செய்வது???
அனன்யா இந்த வீட்டிலிருந்து போகும் வரை அவளிடம் யாரும் பேசப்போவதில்லை என்பதுவும் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இருந்தும் அவளாய்த்தான் பேசுகிறாள்....
இப்போது ரிஷியிடம் நிற்காமல் வந்ததற்கு காரணம் அவன் உதாசீனம்தான்.... அவள் ஏதாவது செய்யப்போக அவன் கோபம் இன்னுமே கூடுமே ஒழிய குறையப் போவதில்லை என்பது அவளுக்கு தெரியாதா என்ன?!!.....
((ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று...அவள் அருகில் வந்தால் கோபப்படுபவன் தான் அவள் இல்லாமல் போகவும் கோபப்படுவான் என்பது.....))
வீடு வந்து சேரவே மாலையாகியிருந்தது....
ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே சமையலறை சென்று காபியை போட்டு எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.
இரண்டு கப்புகளை கயலிடம் கொடுத்தவள் மற்றையதை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள்.
ரிஷி பெட்டில் அமர்ந்தவாறு கண்களை மூடி சாய்ந்திருக்கவும் அவனருகே சென்று "தேவ்..." எனவும் கண்களை திறந்து அவளையும் காபி கப்பையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது.
இதற்காகத்தானே விலகி இருக்கிறாள்.... தன் விதியை நொந்தவள் அவனருகில் இருந்த மேசையில் கப்பை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று நின்றுகொண்டாள்.
அவன் அமைதியில் மனது வலிக்க கண்களிலிருந்து அருவியாய் இறங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.....
அருகில் அரவமில்லாமல் போக கண்களை திறந்தவன் அவள் பால்கனியில் நிற்பது கண்டு புருவ முடிச்சுடன் நெற்றி சுருங்க பார்த்துவிட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அழுது கொண்டிருந்தவளையும் யோசனையில் ஆழ்ந்திருந்தவனையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அஷ்வினியின் மொபைலின் சிணுங்கல்.....
இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அது ஒருமுறை அதிர்ந்து அடங்கி மறுபடியும் அழைக்க மறுபக்கம் திரும்பி கண்களை துடைக்க அதை கண்டுகொண்டான் ரிஷி....
அவசரமாக வந்து அதை எடுத்து காதில் வைத்தவளையே தொடர்ந்தது அவன் ஆராய்ச்சிப் பார்வை......
"சொல்லு அண்ணா" அவள் அழைப்பிலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என யூகித்து விட்டான் போலும்
"என்ன ப்ராப்ளம் ரிக்ஷி?" என்றான் அஜய்..... அவன் ரிக்ஷி என எப்போது அழைப்பான் என்று அவளுக்கா தெரியாது.....
"ஒன்னுமில்ல அஜய் " என்றாள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு
"ஒன்னுமில்லன்னா எதுக்கு அழுதிருக்க? உண்மய மறெக்க ட்ரய் பண்ணாத"
"இல்லடா....எனக்கு ஒன்னுமில்ல...."
"சரி.....இன்னக்கி கயல்கூட வருவல்ல?" என்றதும்தான் அவளுக்கு வருண் நிணைவே வந்தது.....
எவ்வளவு ஆசையாக வந்தாள் தன் கணவனிடம் விஷயத்தை பகிர..... எல்லாம் கனவாய் போனதோ!!!
அழுகை முட்டிக் கொண்டு வந்தது....ஃபோனை கையிலிருந்து எடுத்து வாய் பொத்தி கேவலை அடக்கியவள்
"இல்ல அஜய்.....கயல்... ஆரவ் அப்பறம் தேவ் மூனு பேரும் வருவாங்க.... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேல இருக்கு"
"நீயும் கட்டாயம் வர...."
"முடியாது அஜய்...." அவன் ஃபோனை வைத்திருந்தான். அதை ட்ரஸ்ஸிங் டேபிளில் வைத்தவள் ரிஷியிடம் வந்து நின்று தலை குனிந்தவாறே
"இன்னக்கி....அ... அம்மா வீட்டுக்கு பொய்ட்டு வரீங்களா?" அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.
"இந்த நிலமைல போறது கஷ்டம்னு எனக்கு தெரியும்....பட் ப்ளீஸ்...." என்றவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
இருவர் கண்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதோ!!!! அவளின் கண்கள் இறைஞ்சுதலாய்... அவனதோ குற்றம் சாட்டுவதாய்...
அவன் வெடுக்கென தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ளவும் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது.திரும்பி பார்த்தவள் அங்கே கயல் நின்றிருக்கவும்
"வா...கயல்...எதாவது வேணுமா?" என கேட்டவாறே அவளிடம் செல்ல
"இல்ல அஷ்வி....அம்மா கால் பண்ணாங்க... அதான்...."
"ஓஹ்....நா வர்ல... தேவ்வ கூட்டிட்டு போறியா?" எனவும் அவளை அங்கிருந்தே முறைத்தவன் கயலிடம்
"நீங்க போய்ட்டு வாங்க கயல்...நா வர்ல" எனவும் அஷ்வி கயலிடம் வருணுக்காக பார்வையால் கெஞ்ச அதை புரிந்து கொண்டவளாய்
"மாமா ப்ளீஸ்.... முக்கியமான விஷயத்துக்காகதான் அம்மா கூப்டிருக்காங்க.... ப்ளீஸ் மாமா...."எனவும் அஷ்வி முறைத்தாளே ஒரு முறைப்பு.....
"இவ எதுக்கு நம்மல மொறக்கிறா... சரியாத்தானே பர்ஃபோமன்ஸ் குடுக்குறோம்...பத்தாது போல" என யோசித்தவள்
"ப்ளீஸ்...மாமா...ப்ளீஸ்.."
"இல்ல கயல்...நீங்க போ..."
"முடியாதுன்னு சொல்லாதீங்க மாமா... அக்காவும் வர்ல...நீங்களும் வர்லன்னா எப்பிடி?"
"உன் அக்காவ கூட்டிட்டு போக வேண்டியது தானே?"
"அவக்கு வேலன்னு சொல்றா"
"அப்படியென்ன நெட்டி முறிக்கிற வேல?" சற்று கடுப்புடனே கேட்டான்
"அத உங்க பொண்டாட்டிகிட்டயே கேக்க வேண்டியது"
எனவும் அவன் மௌனமாகிவிட அஷ்வினியின் உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பியது.
"மாமா....ப்ளீஸ்...." எனவும்
"உன் அக்காவயும் வர சொல்லு கயல்..." என்றான் எங்கோ பார்த்தபடி...அதில் சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுக்கு கோபம் வரும் என தெரிந்தும்
"நா அனன்யா கூட இருக்கனும்" என்றாள். அவளை கண்கள் சிவக்க பார்த்து முறைத்தவன் கயலிடம்
"நீ போ கயல் நா குளிச்சிட்டு வந்தட்றேன்..." உடம்பிலுள்ள சூடு சற்று மட்டுப்பட்டு தெம்பாக இருக்கவும் சரி என்றான்.
"தேங்ஸ் மாமா...."என்றவள் சிட்டாய் பறந்து விட வாசலிலேயே நின்றுவிட்டாள்.பின்னே அவனிடம் யாரு வாங்கி கட்டிக் கொள்வது...
மெதுவாக எழுந்து குளியலறை சென்று கதவடைக்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவனுக்கு துணியை எடுத்து வைத்தவள் அனன்யாவை பார்க்கச் சென்றாள்.
அனைவரும் ஹாலுக்கு வந்திருப்பது கண்டு தானும் வெளியே வந்தவள் அவளை இரு ஆண்களும் முறைத்துக்கொண்டு நிற்பதை கண்டு கொள்ளாமல் கயலிடம் மட்டும் விடை பெற்றாள்.
அவர்கள் மூவரும் வெளியேறிய அடுத்த நிமிடம் அனன்யாவின் அறையிலிருந்து " அம்மா..." என சத்தம் வரவும் அங்கு ஓடியவள் அறையில் அவள் அமர்த்திவிட்டு போன கமலம் அம்மா கீழே இரத்த வெள்ளத்தில் கிடக்க அவருக்கு முன் கையில் கத்தியுடன் குரூரமாய் நின்றிருந்த அனன்யாவை பார்த்து உறைந்து போனாள் அஷ்வினி....
தொடரும்.........
05-04-2021.
வெற்றிவேல் யுனிவர்சிட்டி.......
வகுப்பில் அமர்ந்திருந்த கயல்விழிக்கு வருணை பார்க்கும் வரை இருப்புக் கொள்ளவில்லை ஆரவ் சொன்ன செய்தியில்.....
எவ்வளவு வாதாடியும் இன்று காலேஜ் போயே ஆக வேண்டுமென்று அனுப்பி வைத்துவிட்டான் ஆரவ்...
இன்று முக்கியமான அஸைமண்ட் சப்மிட் பண்ண வேண்டியிருந்ததால் அவளும் அடம் பிடிக்காமல் கிளம்பி வந்து விட்டாள்.
அருகில் அமர்ந்திருந்த ரித்துவை சோகமாக திரும்பிப் பார்க்க அவளோ வேறு ஏதோ யோசனையில் இவளை கண்டகொள்ளவே இல்லை....
அன்று இரண்டு கேங்கையும் சஸ்பெண்ட் செய்ததிலிருந்து இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறாள்.கேட்டதற்கு கூட எதுவும் சொல்லாமல் திரும்பவும் விட்டுப்பிடிப்போம் என இவளும் விட்டு விட்டாள்.இன்று கேட்டே ஆக வேண்டும் என தீர்மானித்தவள் அவள் தோல் தொட்டு
"ரித்து...." என அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போகவும்
"ரித்திகா...." என அவளை உலுக்கி கத்த திடுக்கிட்டு திரும்பி முறைத்தவள்
"எதுக்குடி இப்பிடி கத்துற?"
"நா ஒழுங்கா கூப்டப்பவே என்னன்னு கேட்டிருந்தீன்னா....நா எதுக்குடி கத்த போறேன்"
"ஹி...ஹி....கூப்டியா செல்லம்.... எனக்கு கேக்கவே இல்லயே....."
"கேக்காது கேக்காது...அது எப்பிடி கேக்கும்"
"சாரிடி செல்லம்....சரி எதுக்கு கூப்ட?"
"சொல்லமுடியாது போடி..."
"என் செல்லம்ல....சாரிடி" என காதை பிடிக்கவும்
"சரி சரி கால்ல விழுந்துடாத...."
"என்கிட்ட மாட்டாமயா போயிருவ.... சரி என்னன்னு சொல்லு"
"ம்...அத நீதான் சொல்லனும்"
"புரியிறா மாறி பேசவே மாட்டியா நீ?"
"ப்ச்...எதுக்கு எப்போ பாரு ஏதோ யோசிச்சிகிட்டே இருக்க?"
"யாரு...நா..?"
"நடிக்காத ரித்து..... சொல்ல புடிக்கலன்னா வேணாம்"
"ஹே....அப்பிடி இல்ல கயு...."
"....."
"அது..." என்றவளை முறைக்க
"கோவப்படாதடி...." என்றவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது தன் தோழியிடம் கூறியவள் கண் கலங்க கீழே குனிந்து கொள்ளவும் அவளை தன் புறம் திருப்பி கண்ணீரை துடைத்து விட்டவள்
"ரித்து...."
"....."
"என்ன பாருடி...."
"......"
"ஆரு என்கிட்ட சித்தார்த் அண்ணாவ பத்தி சொல்லி இருக்காங்கடி... அவங்களுக்கு லவ்னாலே புடிக்காதாம்.... யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டாங்களாம்.... அப்படி இருக்குறவங்க உன்ன சீண்டியிருக்காங்கன்னா நீ அவங்கள ஏதோ ஒரு வகைல பாதிச்சிருக்கேன்னுதானே அர்த்தம்?"
"பட்...எம்மேல லவ் வரவே வராதுன்னு சொன்னாருடி... அதுதான் என்னால தாங்கிக்க முடில...."
"அது சும்மா சொல்லியிருப்பாங்கடி"
"இல்ல கயு..."
"ப்ச்...சொன்னா கேக்கனும்டி"
"இப்போ என்னதான் பண்ணனும்குற?"
"அவங்கள சும்மா விட்டா அவங்க விலகி தான் போவாங்க....நீ என்ன பன்றன்னா.... அவங்கள எப்பவும் டிஸ்டர்ப் பண்ணிட்டே இரு"
"அப்போ என்ன லவ் பண்ணுவாங்கல்ல கயு....?" எதிர்பார்பாய் கேட்டவளிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள் கயல்விழி.
ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்.....
கதவு தட்டும் சத்தத்தில் இருவரும் ஒருசேர திரும்பிப் பார்க்க அங்கே முகம் முழுதும் இரத்தக் கரையுடன் இளைத்தவாறு நின்றிறுந்தாள் அனன்யா.
அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஷ்வினி அவளையுமறியாமல் தேவ்வின் கைகளை இறுக்க பற்ற அவள் அதிர்ச்சியறிந்து அவளை திரும்பி பார்த்தவன் அவள் கைகளை அழுத்த.... அவன் கொடுத்த அழுத்தத்தில் அவனை பார்த்து விட்டு மீண்டும் அனன்யாவை ஏறிட அவளோ இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டு
"ரி....ரிஷி....ப்ளீஸ்...எ...என்ன காப்பாத்து...." என்றவள் மயங்கி விழப்போக அஷ்வினி ஓடிச் சென்று அவளைப்பிடிக்க தன் கையை உதறியதில் ஏற்கனவே கோபத்திலிருந்தவன் அவள் அனன்யாவை தாங்கிப் பிடிக்கவும்
" அஷ்வினி" என கத்த அவன் கத்தியதில் உடல் துக்கிவாரிப் போட சடாரென திரும்பியவளிடம்
"என்ன பண்ணிட்டிருக்க நீ?அவ யாருன்னு தெரியுதா இல்லயா?"
"பட் தேவ்....உயிருக்கு போராடிட்டு இருக்கறவங்க கிட்ட மனசாட்சி இல்லாம என்னால நடந்துக்க முடியாது.... அது எதிரியா இருந்தாலும்....."
"அவ எதிரி இல்லடி துரோகி"
"தேவ் ப்ளீஸ்.....என்ன தடுக்கனும்னு நெனக்காதீங்க.." என்றவள் அவன் மேலும் பேசும் முன் கயலுக்கு அழைத்து
"கயல்....நீயும் ஆரவ்வும் உடனே ஆபீஸ் வந்துடுங்க.... நா ஹாஸ்பிடல் போறேன்....என்கிட்ட இப்போ எதுவும் கேக்காத... நா வந்து பேசறேன்..." என்று அவளே பேசிவிட்டு கட் பண்ணவள் அவனிடம்
"தேவ்...இப்போ அவங்க ரெண்டு பேரும் வந்துடுவாங்க... அதுக்குள்ள நா ஹாஸ்பிடல் பொய்ட்டு வந்தட்றேன்...."
"......"
"கதிர் அண்ணா கூட போறேன்" என்றவள் கதிரின் உதவியுடன் அவளை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்திருந்தவனுக்கு நெஞ்சில் ஒரே ஒரு கேள்வியே மோதிக்கொண்டிருந்தது.
"உனக்கு என்ன விட அவதான் முக்கியமா பொய்ட்டால்ல அஷு....?"
***
ஹாஸ்பிடல்......
அது ஒரு தனியார் மருத்துவமனை என்பதால் எந்த விதமான விசாரணைகளுமின்றி உள்ளே அனுதிக்கப்பட்டாள் அனன்யா...
வயிற்றில் கத்தி குத்தியிருந்ததில் அதிகமான இரத்தம் வெளியேறியிருக்க அஷ்வினி பதறியபடியே வர அவள் பதற்றம் கதிரையும் தொற்றிக் கொள்ள அவசரமாகவே வண்டியை செலுத்தியிருந்தான்.
.......
ஆபீஸ்......
ஆரவ் வேலையை முடித்துவிட்டு வெளியில் வரவும்தான் கயல் கால் பண்ணி கூறியது.... அவளை தனியாக வர சொன்னவன் தன் அண்ணனுக்கு தான் என்னவோ ஏதோவென்று பயந்து வந்திறங்கவும் கயலும் ரித்திக்காவுடன் காலேஜிலிருந்தே வந்திறங்கவும் சரியாக இருக்க மூவரும் சற்று பதற்றத்துடனேயே உள்ளே நுழைந்தனர்.
அங்கு ரிஷி மட்டுமே தனித்திருக்க வெகுவாய் குழம்பிய ஆரவ் "இவ அண்ணாவ விட்டுட்டு எங்க போய்த்தொலஞ்சா..... அண்ணா எதுக்கு இவ்வளோ கொபமா இருக்காங்க...... என்னத்த பண்ணித் தொலச்சாளோ...." என நினைத்தவன் எதுவும் பேசாமல் நின்று கொள்ள கயல்
"மா....மாமா...அஷ்வி எங்க.... நீங்க மட்டும் இருக்கீங்க? எதுக்கு ஹாஸ்பிடல் போனா?" எனவும் எதுவும் பேசாமல் அவளை முறைத்த முறைப்பில் கயல் வாயை கப்பென மூடிக்கொள்ள ரித்திக்காவொ பயந்து கயலின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
அவள் ரிஷியை இதுவரை பார்த்ததேயில்லை......
டிவி , மகஸின்களில் மட்டுமே அவனை கண்டிருந்தவள் இன்று கண்கள் சிவக்க பெட்டில் படுத்திருப்பவனின் தோற்றத்தில் பயந்தே போனாள்.
ஆரவ்விற்கு யாரிடம் கேட்பதென்றே புரியவில்லை... ஹாஸ்பிடல் போயிருக்கிறாள் என கயல் சொன்னது அப்போதுதான் ஞாபகம் வர படபடப்பாகவே இருந்தது.
எங்கே என்று இவனிடம் கேட்கவும் முடியாது.... அவளிடம் கேட்கவும் முடியாது எனும் நிலையில் கதிர் ஞாபகம் வரவும் " ஒரு நிமிஷம் " என்றுவிட்டு வெளியில் வந்தவன் கதிருக்கு அழைத்தான்.
"சார்....சொல்லுங்க சார்..."
"எங்க இருக்கீங்க கதிர்?"
"சார் மேடத்தோட ஹாஸ்பிடல் வந்திருக்கேன்"
"ஓஹ்....நீங்களுமா..?அஷ்வினி எங்க?"
"மேடத்துகிட்ட குடுக்கட்டுமா சார்?"
"இல்ல... இல்ல வேணாம்...எதுக்கு ஷாஸ்பிடல் போயிருக்கீங்க?"
"அது சார் ஒரு பொண்ணுக்கு வயித்துல கத்தி குத்தியிருக்காங்க...."
"வாட்....எப்பிடி நடந்துது?பட் அது எப்பிடி அஷ்விக்கு தெரியும்?"
"அந்த பொண்ணு நா சொல்ல சொல்ல கேக்காம அதுபாட்டுக்கு கதவ தொறந்துகிட்டு போயிடுச்சி சார்....பேசிட்டிருக்கும் போதே திடீர்னு மயங்கிடுச்சு... மேடம் தான் பதறிட்டாங்க... பட் மாறன் சார் ரொம்ப கோபமா மேடத்துக்கு திட்னாரு..."
"அவ பேரு ஏதாவது?"
"அது....ஆ...அனன்யான்னுதான் மேடம் சொல்லிட்டிருந்தாங்க சார்...."
"வாட்...டேமிட்.... அனன்யா.... அவ எப்பிடி?"
"தெ...தெ...தெரியல சார்..."
"இப்போ எங்க அவ?"
"ஐ.சி.யு ல அட்மிட் ஆக்கியிருக்கு சார்"
"ஓகே கதிர்...."என்றவன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை அலுத்தக் கோதிக் கொண்டான்.
"இடியட் என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கா.....பட்....அந்த அனன்யா எப்பிடி...?" அவனுடைய சி.பி.ஐ மூளை அவசரமாக யோசிக்க தொடங்க அதை தடை செய்வது போல் உள்ளிருந்து கேட்டது கயலின் பதற்றமான குரல்....
"மாமா...என்ன பன்றீங்க?" என மறுபடியும் அவள் கேட்கவும் அவசரமாக உள்ளே நுழைந்தவன் அங்கே ரிஷி எல்லா பொருட்களையும் விசிறி அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து
"அண்ணா என்ன பண்றீங்க? உங்க உடல் பலவீனமா இருக்கு... ரிலாக்ஸ்ணா..." என்றவாறே அவனை தடுக்கப்போக ஏதோ உடைக்க கையிலெடுத்தவன் அப்படியே அதை போட்டு விட்டு " இடியட் " என்று மெத்தையில் குத்த அவனருகில் வந்த ஆரவ்
"அண்ணா ப்ளீஸ்... ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க.... அவ மறுபடி எதுக்கு வந்திருக்கான்னு பாக்கலாம்.... அதுக்கப்பறம் அஷ்வினி கிட்ட பேசலாம்... ரிலாக்ஸ்....." எனவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள
"இவருக்கு மட்டும் காய்ச்சல் இல்லாம இருந்துது இன்னக்கி கன்பார்மா ஒரு கொல விழுந்திருக்கும்...." என நினைத்தவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்று யோசிக்கத் தொடங்கினான்.
***
ஹாஸ்பிடல்......
முகத்தை மூடியபடி அமர்ந்திருந்த அஷ்வினி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்து அவரருகே சென்று
"டாக்டர்.....என்னாச்சி பொழச்சிகிட்டாங்கல்ல....?"
"கிரிடிகல் ஸ்டேஜ தாண்டிட்டாங்க.... பட் இன்னும் சுயநினைவு இல்லாமதான் இருக்காங்க... ஒன் அவர் கழிச்சிதான் சொல்ல முடியும்...." என்றவர் சென்றுவிட
"இன்னும் ஒன் அவரா..?தேவ் ரொம்ப கோபத்துல இருப்பாரே...." என நினைத்தவள் தொப்பென அமர்ந்து விட்டாள். அவளையே பார்த்திருந்த கதிர் அருகில் வந்து
"மேடம்...ஆரவ் சார் கால் பண்ணாரு...ரொம்ப கோவப்பட்டாரு"
"மேடம்னு சொல்லாதீங்கண்ணா... ஏற்கனவே எதிர்பாத்தது தான் விடுங்க..."
"பட்...."
"எண்ணண்னா பன்றது... இன்னும் ஒன் அவர் ஆகுமாமே....தேவ்வ நெனச்சாதான் பயமா இருக்கு"
என்றவளை பார்த்து "கோவத்துக்கு இலக்கணமா இருக்குறவருக்கு இப்பிடி ஒரு பொண்டாட்டியா..." என நினைத்தவன் அமைதியாக இருந்துவிட்டான்.
அவள் கண் விழித்து விட்டதாக தாதி ஒருவர் வந்து சொல்ல டாக்டர் அனுமதிக்கவும் உள்ளே சென்று
"அனன்யா... ஐ ஆம் மிஸிஸ்.அஷ்வினி தேவமாறுதன்.... என்ன அடையாளம் தெரியும்னு நெனக்கிறேன்... உங்களுக்கு உதவி பண்ணது மனிதாபிமான அடிப்படைலதான்... உங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா நானே விட்டுடுவேன்..." என்றவள் அனன்யாவை பார்க்க அவளோ மௌனமாக கண்ணீர் வடிக்கவும்
"ஐ...ஐ...ஐ ஆம் சாரி அனன்யா..."
"பரவல்லங்க... செஞ்ச தப்புக்கு தண்டனையா நினச்சிக்குறேன்... தேங்ஸ்....நீங்க போங்க...."
"பட் எப்பிடி போவீங்க?"
"எனக்குன்னு யாரும் இல்லங்க...நா சமாளிச்சிக்குறேன்..."
"வாட்...என்ன சொல்றீங்க?"அவள் அமைதியை பார்த்து கொஞ்ச நேரம் யோசித்தவள்
"உங்களுக்கு உடம்பு சரியாகும்வர எங்க வீட்ல தங்கிகோங்களேன்?"
"இல்லங்க வேணாம்...ரிஷி ஏற்கனவே உங்க மேல கோபத்துல இருப்பான்.... என்னால பிரச்சினை வேணாம்.."
"தேவ்வ நா சமாளிச்சிகுறேன் அனன்யா.... நீங்க என்கூடதான் தங்குறீங்க" என்றவள் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் ஒரு அறையில் விட்டுவிட்டு நேரே ஆபீஸுக்கு சென்றாள்.
ஆபீஸ்......
ரித்துவும் கயலும் உள் அறையில் இருக்க ஆரவ் கேபினில் நின்று கொண்டு அதன் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான்
என்ன யோசித்தும் அனன்யா எப்படி திடீரென்று ரிஷியை தேடி வந்திருப்பாள் என்பதை யூகிக்க கூட முடியவில்லை அவனால்.....
திடீரென கதவு திறக்க சட்டென திரும்பியவன் அங்கே அஷ்வினி நுழையவும் கோபத்துடன் அவளருகில் சென்று
"அஷ்வினி " எனவும் அவனை பார்த்து பயந்தாலும் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்து
"நீ என்ன கேக்க வரன்னு எனக்கு தெரியும் ஆரவ்.... நா மனிதாபிமான அடிப்படைல தான் உதவி செஞ்சேன்.... செய்வேன்...." என்றவளை புருவம் சுருக்கி பார்த்து
"செய்வேன்னா.....?"
"நம்ம வீட்லதான் குணமாகும் வர தங்க போறா?"
"யூ... ஸ்டுப்பிட்... யார கேட்டு முடிவெடுத்த?அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?"
"அத பாத்துக்கலாம் மிஸ்டர்.ஆரவ்.... இப்போ வழி விடுங்க...." என்றவள் அவன் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைய அவசரமாக எழுந்த கயல் அருகில் வந்து பேசப்போக
"நா உன்கிட்ட அப்பறம் பேசுறேன் கயல்...." எனவும்
"சரி அஷ்வி...."என்றவாறே வெளியேறி விட அறையை சுற்றுமுற்றும் அலசியவள் என்ன நடந்திருக்கும் என யூகிக்கவும் பயத்தில் மனது திக்திக்கென அடித்துக் கொண்டது.
தன் கையை மடித்து கண்களுக்கு மறைவாக வைத்து படுத்திருந்தவன் அஷ்வினி வந்தது தெரிந்தும் அசைந்தானில்லை....
அவன் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் தன்னை கண்டுகொள்ளாதது தெரிந்தும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.பேசினால் கோபப்படுவான் என தெரிந்திருந்தாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
"தேவ்...."என கையை பிடிக்க அவளை தள்ளிவிட்டு சடாரென எழுந்தமர்ந்து அவளை கண்கள் சிவக்க பார்த்தவன்
"பேசாத....மீறி பேசின கொண்ணுருவேன்"
"தேவ்...நா சொல்றத கொ...."
"கெட்டவுட்..."
"தே...."
"ஐ செட் கெட் அவுட்...இடியட்"
"முடியாது...."
"முடியாதூ......அப்போ நா போறேன்" என எழுந்தவன் தடுமாறி விழப்போக அவசரமாக எழுந்து அவனை பிடித்தவளை சுவற்றில் சாய்த்து கழுத்தை பிடித்து இறுக்க அவன் பிடியில் வலித்தாலும் கண்களை இறுக்க மூடி கட்டுப்படுத்த அதுவும் முடியாமல் போகவும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அதை கண்டு என்ன நினைத்தானோ கையை எடுத்தவன் "ச்சேஹ்...." என்றுவிட்டு உடல் ஒத்துழைக்காமல் போக கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
அவன் விட்டவுடன் இறுமியவாறே இருந்தவள் அவன் அமரவும் அவன் காலை பிடித்துக் கொண்டு
"ஐ...ஆம் சாரி தேவ்....ப்ளீஸ்...அவ உயிருக்கு போராடிட்டு இருந்தா.... என் கண் முன்னால ஒரு உயிர் துடிக்கும் போது என்னால எப்பிடி தாங்க முடியும் சொல்லுங்க... அவ செத்திருந்தான்னா கடவுள் என்ன மன்னிச்சே இருக்க மாட்டாரு.....அவ எப்பிடி பட்டவளாவும் இருந்திருக்கலாம்.. பட் இப்போ அவ திருந்திட்டான்னு தோனுது....ப்ளீஸ் தேவ்.."
"....."
"தேவ்....அவ குணமாகும் வர நம்ம வீட்லதான் தங்க போறா...." என்றவளது பேச்சில் அவளை கூர்ந்து பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பெசவில்லை....
"தேவ்.....ஏதாவது பேசுங்க ப்ளீஸ்...."
"......."
"தேவ்...." என்றவள் அவன் நெற்றியை தொடப்போக மறுபக்கம் திரும்பிவிட்டான்.மனம் வலித்தாலும் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவள் எழுந்து ஆரவ் வாங்கி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து வாயருகே கொண்டு செல்ல சாப்பாட்டுடன் அவள் கையை தட்டிவிட அதில் கீழே விழுந்து சிதறியது.
இதை உன்னிடம் நான் எதிர்பார்தேன் என்பது போல் பார்த்தவள் மீண்டும் இன்னொரு கவளத்தை நீட்ட
"ப்ச்...." என்றவன் அதையும் தட்டிவிட்டான்.
ஒரு பெருமூச்சுடன்
"தேவ்....என் மேலுள்ள கோவத்த எதுக்கு சாப்பாட்டுல காட்றீங்க....? ம்...சாப்புடுங்க" என்றவள் மறுபடி நீட்ட அவள் கையிலுள்ள தட்டை பறித்து விசிறி அடிக்க அது அறை முழுவதும் தெரித்து விழுந்தது.
அவள் எதுவும் பேசவுமில்லை...... அதிர்ச்சியாகவுமில்லை.... நிதானமாக நடந்து சென்று அவன் மாத்திரையை எடுத்தவள் தண்ணீர் க்ளாஸுடன் அவனிடம் வந்து
"என் கையால நா தர்றது தானே புடிக்கல.... பக்கத்துல வெச்சாலும் குடிக்க போறதில்ல....சோ...." என்றவள் வெளியில் சென்று அனைவரையும் அழைத்தவள் ஆரவ்விடம் திணித்து விட்டு ஓரமாக நின்று விட்டாள்.
உள்ளே வந்தவர்கள் அதிர்ந்து இருவரையும் மாறி மாறி பார்த்திருக்க அஷ்வினி ஆரவ்விடம் மாத்திரையை திணிக்கவும் அவளை முறைத்துவிட்டு வேறு வழியில்லாமல் ரிஷியிடம் நீட்ட அனைவர் முன்னிலையிலும் ஏதும் செய்ய இயலாமல் அவளை பார்த்துக் கொண்டே குடித்தான்.
விதி வலியது........
............
வீடு வந்து சேரும் வரை எவரும் எதுவும் பேசவில்லை..... அனைவருக்கும் மௌனமே மொழியாகிப் போக ரித்துவை அவள் வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
வந்ததும் வராததுமாக யாரையும் கண்டு கொள்ளாமல் அனன்யாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைய ரிஷிக்கு வந்ததே கோபம்....
அனைவரும் இருந்தபடியால் எதுவும் செய்யமுடியவில்லையாயினும் அவன் கண்கள் சிவந்திருப்பதிலிருந்தே அவன் கோபம் புரிந்தது ஆரவ்விற்கு....
அவனிற்குமே எரிச்சலாகத்தான் இருந்தது அஷ்வினியின் செய்கை... ஏன்தான் இப்பிடி நடந்துக்குறாளோ என சலித்துக் கொண்டவன் ரிஷியை கைத்தாங்கலாக கொண்டு போய் ரூமில் விட்டு வந்தான்.
அனன்யாவின் அறை.....
வலியில் முகத்தை சுழித்துக் கொண்டு படுத்திருப்பவளை கைகட்டி நின்று ஒரு கணம் பார்த்திருந்தாள்.
அவளுக்குமே அவள் செய்கை பிடிக்கவில்லை தான்.... இருந்தும் என்னதான் செய்வது?
மனம் முழுவதும் அனன்யாவின் மேல் வெறுப்பு இருந்தாலும் இப்போது அதை காட்டும் நேரமல்லவே!
உயிருக்கு போராடிக்கொண்டிரும் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறாள் அவ்வளவே..... மற்றபடி அவள் திருந்தியிருந்தாலும் திருந்தப்போவதில்லை என்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலையில்லை....
இதை யாவற்றையும் புரிந்து கொள்ளாமல் அவள் மீது கோபம் காட்டினால் அவளும் என்னதான் செய்வது???
அனன்யா இந்த வீட்டிலிருந்து போகும் வரை அவளிடம் யாரும் பேசப்போவதில்லை என்பதுவும் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. இருந்தும் அவளாய்த்தான் பேசுகிறாள்....
இப்போது ரிஷியிடம் நிற்காமல் வந்ததற்கு காரணம் அவன் உதாசீனம்தான்.... அவள் ஏதாவது செய்யப்போக அவன் கோபம் இன்னுமே கூடுமே ஒழிய குறையப் போவதில்லை என்பது அவளுக்கு தெரியாதா என்ன?!!.....
((ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று...அவள் அருகில் வந்தால் கோபப்படுபவன் தான் அவள் இல்லாமல் போகவும் கோபப்படுவான் என்பது.....))
வீடு வந்து சேரவே மாலையாகியிருந்தது....
ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் நேரே சமையலறை சென்று காபியை போட்டு எடுத்துக்கொண்டு மாடியேறினாள்.
இரண்டு கப்புகளை கயலிடம் கொடுத்தவள் மற்றையதை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள்.
ரிஷி பெட்டில் அமர்ந்தவாறு கண்களை மூடி சாய்ந்திருக்கவும் அவனருகே சென்று "தேவ்..." எனவும் கண்களை திறந்து அவளையும் காபி கப்பையும் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது.
இதற்காகத்தானே விலகி இருக்கிறாள்.... தன் விதியை நொந்தவள் அவனருகில் இருந்த மேசையில் கப்பை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று நின்றுகொண்டாள்.
அவன் அமைதியில் மனது வலிக்க கண்களிலிருந்து அருவியாய் இறங்கிக் கொண்டே இருந்தது கண்ணீர்.....
அருகில் அரவமில்லாமல் போக கண்களை திறந்தவன் அவள் பால்கனியில் நிற்பது கண்டு புருவ முடிச்சுடன் நெற்றி சுருங்க பார்த்துவிட்டு தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அழுது கொண்டிருந்தவளையும் யோசனையில் ஆழ்ந்திருந்தவனையும் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அஷ்வினியின் மொபைலின் சிணுங்கல்.....
இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அது ஒருமுறை அதிர்ந்து அடங்கி மறுபடியும் அழைக்க மறுபக்கம் திரும்பி கண்களை துடைக்க அதை கண்டுகொண்டான் ரிஷி....
அவசரமாக வந்து அதை எடுத்து காதில் வைத்தவளையே தொடர்ந்தது அவன் ஆராய்ச்சிப் பார்வை......
"சொல்லு அண்ணா" அவள் அழைப்பிலேயே ஏதோ நடந்திருக்க வேண்டும் என யூகித்து விட்டான் போலும்
"என்ன ப்ராப்ளம் ரிக்ஷி?" என்றான் அஜய்..... அவன் ரிக்ஷி என எப்போது அழைப்பான் என்று அவளுக்கா தெரியாது.....
"ஒன்னுமில்ல அஜய் " என்றாள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு
"ஒன்னுமில்லன்னா எதுக்கு அழுதிருக்க? உண்மய மறெக்க ட்ரய் பண்ணாத"
"இல்லடா....எனக்கு ஒன்னுமில்ல...."
"சரி.....இன்னக்கி கயல்கூட வருவல்ல?" என்றதும்தான் அவளுக்கு வருண் நிணைவே வந்தது.....
எவ்வளவு ஆசையாக வந்தாள் தன் கணவனிடம் விஷயத்தை பகிர..... எல்லாம் கனவாய் போனதோ!!!
அழுகை முட்டிக் கொண்டு வந்தது....ஃபோனை கையிலிருந்து எடுத்து வாய் பொத்தி கேவலை அடக்கியவள்
"இல்ல அஜய்.....கயல்... ஆரவ் அப்பறம் தேவ் மூனு பேரும் வருவாங்க.... எனக்கு கொஞ்சம் முக்கியமான வேல இருக்கு"
"நீயும் கட்டாயம் வர...."
"முடியாது அஜய்...." அவன் ஃபோனை வைத்திருந்தான். அதை ட்ரஸ்ஸிங் டேபிளில் வைத்தவள் ரிஷியிடம் வந்து நின்று தலை குனிந்தவாறே
"இன்னக்கி....அ... அம்மா வீட்டுக்கு பொய்ட்டு வரீங்களா?" அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அமைதியாகவே இருக்க அவள் மேலும் தொடர்ந்தாள்.
"இந்த நிலமைல போறது கஷ்டம்னு எனக்கு தெரியும்....பட் ப்ளீஸ்...." என்றவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
இருவர் கண்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதோ!!!! அவளின் கண்கள் இறைஞ்சுதலாய்... அவனதோ குற்றம் சாட்டுவதாய்...
அவன் வெடுக்கென தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ளவும் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது.திரும்பி பார்த்தவள் அங்கே கயல் நின்றிருக்கவும்
"வா...கயல்...எதாவது வேணுமா?" என கேட்டவாறே அவளிடம் செல்ல
"இல்ல அஷ்வி....அம்மா கால் பண்ணாங்க... அதான்...."
"ஓஹ்....நா வர்ல... தேவ்வ கூட்டிட்டு போறியா?" எனவும் அவளை அங்கிருந்தே முறைத்தவன் கயலிடம்
"நீங்க போய்ட்டு வாங்க கயல்...நா வர்ல" எனவும் அஷ்வி கயலிடம் வருணுக்காக பார்வையால் கெஞ்ச அதை புரிந்து கொண்டவளாய்
"மாமா ப்ளீஸ்.... முக்கியமான விஷயத்துக்காகதான் அம்மா கூப்டிருக்காங்க.... ப்ளீஸ் மாமா...."எனவும் அஷ்வி முறைத்தாளே ஒரு முறைப்பு.....
"இவ எதுக்கு நம்மல மொறக்கிறா... சரியாத்தானே பர்ஃபோமன்ஸ் குடுக்குறோம்...பத்தாது போல" என யோசித்தவள்
"ப்ளீஸ்...மாமா...ப்ளீஸ்.."
"இல்ல கயல்...நீங்க போ..."
"முடியாதுன்னு சொல்லாதீங்க மாமா... அக்காவும் வர்ல...நீங்களும் வர்லன்னா எப்பிடி?"
"உன் அக்காவ கூட்டிட்டு போக வேண்டியது தானே?"
"அவக்கு வேலன்னு சொல்றா"
"அப்படியென்ன நெட்டி முறிக்கிற வேல?" சற்று கடுப்புடனே கேட்டான்
"அத உங்க பொண்டாட்டிகிட்டயே கேக்க வேண்டியது"
எனவும் அவன் மௌனமாகிவிட அஷ்வினியின் உதட்டில் கீற்றாக புன்னகை அரும்பியது.
"மாமா....ப்ளீஸ்...." எனவும்
"உன் அக்காவயும் வர சொல்லு கயல்..." என்றான் எங்கோ பார்த்தபடி...அதில் சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுக்கு கோபம் வரும் என தெரிந்தும்
"நா அனன்யா கூட இருக்கனும்" என்றாள். அவளை கண்கள் சிவக்க பார்த்து முறைத்தவன் கயலிடம்
"நீ போ கயல் நா குளிச்சிட்டு வந்தட்றேன்..." உடம்பிலுள்ள சூடு சற்று மட்டுப்பட்டு தெம்பாக இருக்கவும் சரி என்றான்.
"தேங்ஸ் மாமா...."என்றவள் சிட்டாய் பறந்து விட வாசலிலேயே நின்றுவிட்டாள்.பின்னே அவனிடம் யாரு வாங்கி கட்டிக் கொள்வது...
மெதுவாக எழுந்து குளியலறை சென்று கதவடைக்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவனுக்கு துணியை எடுத்து வைத்தவள் அனன்யாவை பார்க்கச் சென்றாள்.
அனைவரும் ஹாலுக்கு வந்திருப்பது கண்டு தானும் வெளியே வந்தவள் அவளை இரு ஆண்களும் முறைத்துக்கொண்டு நிற்பதை கண்டு கொள்ளாமல் கயலிடம் மட்டும் விடை பெற்றாள்.
அவர்கள் மூவரும் வெளியேறிய அடுத்த நிமிடம் அனன்யாவின் அறையிலிருந்து " அம்மா..." என சத்தம் வரவும் அங்கு ஓடியவள் அறையில் அவள் அமர்த்திவிட்டு போன கமலம் அம்மா கீழே இரத்த வெள்ளத்தில் கிடக்க அவருக்கு முன் கையில் கத்தியுடன் குரூரமாய் நின்றிருந்த அனன்யாவை பார்த்து உறைந்து போனாள் அஷ்வினி....
தொடரும்.........
05-04-2021.